Samstag, 1. Februar 2020

வெறுப்புக்களிற்கு எதரான பாதுகாப்பு சட்டமூலத்திற்கு ஆம் (JA zum Schutz vor HASS -09.02.2020)

அனைத்து விதமான பாலியர்களிற்கும் (LGBTI) இனவெறித்தனத்திற்கும் பாலியல் ஓடுக்குமுறைக்கும் ஓர் பாதுகாப்பினை கொடுப்பதற்கான  சட்டமூல மாற்றத்திற்கான ஓர் அபிப்பிராய வாக்கெடுப்பு வருகின்ற 9 திகதி (09.02.2020) சுவிற்சர்லாந்தில் தேசியரீதியில் நடைபெற இருக்கின்றது.

உலகம் பூராகவும் பாலியல்ரீதியான அடையாளத்தினை முன்னிலைப்படுத்தி சமூகரீதியான ஓடுக்குமுறைகள் அன்றாடகாட்சியாக நடைபெற்றுவருகின்றது. ஓரு சில நாடுகள் ஓரு சில பாலினர்களின் இணைவிக்கும் உறவுகளிற்கும் எதிராக மரணதண்டனையும் வழங்கப்பட்டு வருகின்றது.

உலகில் மனிதனின் நிறம் தோற்றம்  இனம் மொழி மதம் கலாச்சாரம் அடிப்படையில் ஓர் சிறுபாண்மை பிரிவினர் ஓடுக்குமுறைக்கு உள்ளாக்க படுகின்றனரோ  அதேபோல் பாலியல் பாலியல் உறவுமுறைகளிற்கும் அடையாளங்களிற்கு  எதிராகவும் ஓடுக்குமுறைகள் நடைபெற்று வருகின்றது.

சுவிற்சுர்லாந்து 49 ஐரோப்பிய நாடுகளில் LGBTI பாலியல் பிரிவிகர்ளிற்கு எதிரான இனவெறியை வெளிப்படுத்தும் நாடுகளின் வரிசையில் 27வது இடம் வகிக்கின்றது.

ஏற்கனவே சுவிற்கர்லாந்தில் நடைமுறையில் இருக்கும் இனவாதத்திற்கு எதிரான 261 வது சரத்தினை மேலும் கூர்மையாக்கும் வகையில் பாலியல் வேறுபாடுகளிற்கு எதிரான விடயங்களையும் இணைத்து சட்ட மூலத்தினை திருத்துவதற்கான அனுமதியை கோரும் முகமாகவே அபிப்பிராய வாக்கெடுப்பு நடைபெறுகின்றது.

261ம் சரத்தில் ஓரு குறிப்பிட்ட இனமோ அல்லது ஓர் குறிப்பிட்ட கலாச்சர விழுமயங்களை கொண்ட பிரிவினரையோ நிற மத ரீதியல் வேறுபட்ட இனக்குழு மக்களையோ தனிப்பட்ட நபர்களையோ வன் சொல்லாடல்கள் மூலமோ வன்முறை தாக்குதலினால் சிறுமைப்படுத்தவோ அல்லது ஓடுக்குவதனை தடுப்பதற்கான சட்டரீதியான பாதுகாப்பினை கொடுக்கின்றது.

சுவிற்சர்லாந்தில் வாழ் தமிழ் சமூகத்தில் நிலவும் சாதியரீதியான வேறுபாடுகளுடன் கூடிய ஓடுக்குமுறைக்கும் இச்சட்ட மூலம் ஓர் பாதுகாப்பினைக்கொடுககின்;றது. பேர்ண் தமிழ் பாடசாலை ஆசிரியை ஓருவர் ஓர் புத்தக வெளியீட்டடில் பின்வரும் சம்பவத்தினை சுவிற்சர்லாந்து வாழ் தமிழ் மக்களிற்கு ஓர் ஞாபகமூடட்டலை ழேற்கொண்டிருந்தார்.

சுவிற்சர்லாந்து பாடசாலையில் இரு வேறுபட்ட சாதிய அடிப்படையான தமிழ்பேசும் குழந்தைகள் கல்விகற்று வந்துள்ளனர். இக்குழந்தைகளின் ஓர் சாதியப்பிரிவினை சார்ந்த பெற்றோர் மற்றைய தமிழ் குழந்தை குறைந்த சாதிப்பிள்ளை எனவும் அக்குழந்தையுடன் சேரவேண்டாம் என நஞ்சினை விதைத்துள்ளனர். இவ்வடிப்படையில் தன்னுடன் சக கல்வி பயிலும் மாணவரை சிறுமைப்படுத்தும் வகையிலும் மனதினை காயப்படுத்தும் வகையிலும் பல்வேறு தொந்தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் நீதிமன்று வரைக்கும் சென்றதாக குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் சமூகம் இன்னமும் மனித குலத்திற்கு எதிரான சாதிய சிந்தனையில் இருந்தே இன்னமும் முழுமையாக விடுபடவில்லை. மனித குலத்தில் பெரும்பாண்மையாக காணப்படும் ஆண் பெண் பாலியல் அடையானங்களை தவிர ஏனைய பாலியங்கள் அடையாளங்களுடன் இருக்கும் எனைய திருநங்கையர்கள் திருநம்பிகளின் அடையாளங்களை ஓர் நகைப்புக்குரியதும் எள்ளிநகையாடும் வகையிலேயே புரிந்து கொண்டுள்ளது. எமது சமூகம் டுபுடீவுஐ பாலியல் உறவுகளை புரிந்து கொண்டு இவைகளும் மனிதர்களிற்கிடையான ஓர் பாலியல் உறவுமுறை என்பதனை அங்கீகரிக்க இன்னமும் பல விவாதங்களும் வாசிப்புக்ளும் மற்றும் கலாச்சார மாற்றங்களும் நடைபெற வேண்டி உள்ளது.

எமது இரண்டாவது தலைமுறையும் இந்நாட்டில் காலுண்றி உள்ளது. எமது பிள்ளகைள் அல்லது இன்னுமொரு அடுத்த சந்ததிகள் இவ்வகையில் பாலியல் அடையாளங்களுடன் பிறக்கும் குழந்தைகளிற்கும் அல்லது இவ்வகையில் டுபுடீவுஐ அடிப்படையில் ஓர் பாலியல் உறவினை மேற்கொள்ள விரும்பும் சந்ததிகளிற்கும் பெரும்பாண்மை பிரிவினர்களினால் ஓடுக்குமுறைக்கு உள்ளாகமல் இச் சட்டமூலங்கள் மூலங்களை அமுல்படுத்துவது மூலம் தம்மை பாதுகாத்து கொள்;ள எம்மால் உதவமுடியும்.

பன்முறையான பாலியல் அடையாளங்களுடனான உறவுமுறைகளும் உள்ளன. இது ஓவ்வொரு மனிதனின் தனிப்பட்ட உரிமை என்பதளை அடிப்படையில் ஏற்றுகௌ;வதனால் பல விடயங்களை இலகுவாக கடக்க உதவும். பாலியல் முறமை அதனால் ஏற்படப்போகும் சரியான பிழையான விடயங்களை தம்மகத்தில் கொண்டிருப்பதும் விவாதப்பொளாக்குவதும் ஓவ்வொரு தனிமனிதனின் உருமையுமாகும். ஆனால் அப்பாலின அடையாளங்களுடன் உள்ளவர்களையும் அல்லது அவ்வகையில் உறவுமுறமையயைப் பேணுவர்களை கொச்சைபடுத்தி மனதிiனை புண்படுத்தாது இருந்தால் சிறப்பு.

இனறும் எமது சமூகத்தில் ஓர் இன பாலில் உறவுகள் பற்றி வெளிப்படையாக பேசுவதற்கான சமூக சூழல் புலத்திலும் இல்லாதது எமது சமூகத்தின் போலித்தனமான இறுக்கத்தினை புலப்படுத்துகின்றது. ஆனாலும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் பல் வேறு பாலியல் அடையளத்துடன் வாழும் ஓரு சிலர் தம்மை எவ்வித தயக்கமும் இன்றி தமது பாலியல் அiயாளத்தினை அடையாளப்படுத்துவதும் மேலும் தமது பாதுகாப்பிற்கான அமைப்புக்களையும் தோற்றுவித்துள்ளனர் எனபது ஓர் துணிச்சலான செயல்முறை.


இந்தியாவில் 2018 ம் ஆண்டு 377 சட்டத்தின் மூலம் இதுவரைகாலமும் சட்டவிரோதமாக கருதப்பட்ட உறவுமுறைகள் சட்டத்தின் முன்னர் அங்கீகரிக்கப்பட்டதும் ஓர் மைல்கல் சம்பவமாகும்.

LGBTI என்பதற்கான விளக்கங்கள் மேல் குறிப்பிட்ட விடயங்களை மேலும புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

Lesbian: பெண் பெண்ணுடன் உடலுறவை மேற்கொள்பவர்கள்
Gay: ஆண் ஆணுடன் உடலுறவை மேற்கொள்பவர்கள்
Bisexual: ஆண் பெண் இருபாலருடனும் உடலுறவை மேற்கொள்பவர்கள்
Transexuell/Transgender: திருநங்கை திருநம்பிகள். இவர்களில் பலர் ஆண்பெண் இருபாலருக்குரிய அடையளங்களை விரும்புவர்கள்.
Intersexual: இவர்கள் பிறப்பில் ஓர் பாலியல் அடையாளத்தினை கொண்டிருந்திருப்பார்கள். பின்னர் தமது விருப்பத்தின் பெயரில் மருத்துவ சிகிச்சi மூலம் தமது பாலியல் அடையாளத்தினை மாற்றி கொண்ட பிரிவினர்.

புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் சமூகம் இன்று வரை ஓர் பேசாப் பொருளாகவும் பேச கூடதா வியங்களை எவ்வித கட்டுப்பாடும் அன்றி பேசுபொருளாக்கப்டல் வேண்டும். எமது சமூகத்தில் பாலியலே இன்றும் பேசாப் பொருளாக இருந்து வருகின்றது. ஓர் வகை போலி இறுக்கபோக்கினை பின்பற்றிவருவது சமூகத்தின் வளர்ச்சிக்கு ஓர் முட்டுகட்டையாகும்.

நாமும் புலத்தில் ஓர் சிறுபாண்மை பிரிவினராக இருப்பதால் மேலும் மத இன நிற பாலியல் ரீதியில் சிறுபாண்மையாக இருக்கும் மனித குழுமங்களின் அடிப்படை மனித உரிமைகளிற்கும் குரல்கொடுப்பதும் இவற்றிற்கு சாதகமான அடிப்படையில் கொண்டுவரப்படும் சட்டமூலங்களிற்கு இந்நாட்டில் பிராஜா உரிமைபெற்ற தமிழர்கள் தமது வாக்குகள் மூலம் சட்டமூலத்தினை அமுல்படுத்தி சிறுபாண்மை இனங்களிற்கிடையான ஓர் சொலிடாரிட்டடியை உருவாக்க முடியும்.