Montag, 15. Februar 2021

சொலத்துாண் மாநிலத்தில் வாழும் சுவிறசர்லாந்து பிராஜா உரிமைபெற்ற தமிழர்காளிற்கான வேண்டுகோள

 

இம் மாநிலத்தில் 100 மாநில சபை உறுப்பினரிற்கான தேர்தல் நடைபெறுகின்றது. இம் மாநிலத்தேர்தல் 5 பிரதேச பிரதேச பிரிவில் வாக்களார்கள் நிறுத்தபட்டுள்ளனர். பின்வரும் நான்கு பிரிவில் 4 தமிழர்கள் வேட்பாளர்களாக களம் இறங்கி உள்ளனர். சாதரணமாக போட்டிபோடும் வேட்பாளர்களிற்கு துணைநிக்கும் பொருட்டு ஓர் ஒத்துழைப்பு குழு உள்ளது. இவர்கள் குறிப்பிட்ட வெட்பாளரின் தேர்தல் பிரச்சார வேலைகளை பொறுப்பெடுத்து கொள்கின்றனர். இதனால் வெற்றியும் சாத்தியமாகின்றது. எம்வர்களில் இவ்வகையான மும்முயற்சி ஒரு விகிதம் கூட இல்லாதுள்ளது கவலை அளிக்கின்றது.

இந்நாட்டில் பல சந்ததிகளாகவாழப்போகும் சமுகம் அரசியலிலும் தம்மை பிரதிநிதித்துவதற்கான தேவை உள்ளது. இந்நாட்டில் நிறவாத ஒடுக்குமுறைகள் ஒனறும் குறைந்துவிடவில்லை. சாதரணமாக ஓர் தொழில் கல்வியை மேற்ெகாள்ள விரும்பும் மாணவர்கள் அவர்களின் பெயரை கொண்டு இனங்கண்டு வாய்ப்புக்கள் பின்தள்ளபடுகின்றது. அதே போல் தொழில் செய்யும் இடங்களில் எம்மவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலைக்கமர்த்தபடுகின்றனர். அயலவர்கள் வெளிநாட்டவர் அல்லது இரண்டாம் தர  பிஜைகளாக பார்க்கும் பல உதாரணங்கள் எம்மிடத்தில் உள்ளன. இவற்றிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமாயின் எமதுஅரசியல் அங்த்துவம் முக்கியமானது. எதற்கும் தமிழ் தமிழ் என்று குரல் கொடுப்பவர்கள் மேடைகளில் உணர்சிவசப்படுகின்றனர். ஆனால் தாம் வாழும் பகுதியில் ஒர் அடையாளத்திற்கேனும் அரசியல் அங்கத்துவத்திற்காக போட்டி போடும் வேட்பாளர்களிற்கு எவவித ஒத்தாசையும் புரியமால் வேடிக்கைபார்ப்பது ஆச்சரியம் தருகின்றது.

எனது தேர்தல் அரசியலை ஏப்பிரல் மாதத்துடன் முடிவிற்கு கொண்டு வருகின்றேன். என்னுடன் பயணிக்கும் அரசியல் நண்பர்களிற்கும் இனி வர இருக்கும் புதிய தலைமுறை அரசியல் வாதிகளிற்கு தங்களால் இயன்ற ஒத்துழைப்பை  வழங்கி எமது அங்கத்துவங்களை தக்கவைத்து கொள்ளுங்கள். அதனடிப்படையில் இத்துடன் இணைக்கபட்டுள்ள விடியேவை பார்த்து நீங்கள் தெரிவு செய்யும் வேட்பாளரிற்கு இரண்டு வாக்குகளை அளித்து அவர்களின் வெற்றிவாய்ப்புக்கு வழிசமையுங்கள்.

தேர்தல் அரசியலானது தனக்கே உரித்தான பல குறைபாடுகளுடன் கூடியதே அதனை மறுப்பதற்கல்ல. என்னுடன் பயணிக்கும் பல தமிழ் அரசியல்வாதிகள் கட்சிக்கு உள்ளும் வெளியிலும் இனவாதரீதியில் பல்வேறுபட்ட தடைகளின் மத்திலேயே வேலை செய்துருகின்றனர். இவைபற்றியும் எமது நாட்டு கட்சி அரசியலிற்கும் சுவிற்சர்லாந்து கட்சிஅரசியற்கும் என்ன வெறுபாடுகள் உள்ளன ஒற்றுமைகள் உள்ளன பற்றி தேர்தல் முடிந்த பின்னர் விளக்காமான கட்டுரையுடன் சந்துக்கின்றேன். தயவு செய்த நான் குறிப்பிட்ட விடயத்தினை பகிர்ந்து தமிழ் வேட்பாளர்களிற்கு தங்களது ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டு கொள்கின்றேன்.