Samstag, 6. November 2021

ஐெய் பீம் திரைப்படமும் கம்யுனிச இய்கங்களின் போரட்டங்களும் - க.சுதாகரன் (06.11.2021)

கம்யனிசம் மார்க்சிசம் தோற்று விட்டது என்று முதலாளித்துவம் கொக்கரிக்கின்றது. ஆனால் வரலாறுகள் இச்சமூக விஞ்ஞானத்தின் அடிப்படையில் செயற்பட்ட கட்சிகளும் இயக்கங்களும் சிறுபாண்மை மக்களிற்கானதும் மனித உரிமை மீறல்களிற்கு எதிராக போராட்டங்களையும் செய்து ஒடுக்கபட்ட மக்களிற்கு ஆதராவாக இருந்துள்ளனர். இவற்றை வரலாறுகளும் திரைப்படங்களும் மீளபதிவு செய்வது காலத்தின் தேவையாகும். இந்த வகையில் ஐெய்பீம் Jai Bhim (https://en.wikipedia.org/wiki/Jai_Bhim) கதை சினிமாவிற்காக பல மாற்றங்களை செய்த போதும் ஒரு சிறுபாண்மை சமுகத்திற்கு நடந்த அநீதியை உணர்வு பூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளது. பொலிஸ் அரச இயந்திரத்தின் அராஐகத்தினை அம்பலப்படுத்த போராடிய கம்யூனிஸ்கட்சித்தோளர்களிற்கு ஒரு சலூட். இதற்கு ஒத்துளைத்த மார்க்சிச கருத்துக்களில் ஈடுபாடு கொண்டுள்ள வழக்கறிஞர் சந்துருவிற்கும் ஓர் சலுட். இதே போல் பல வழக்குகளை மனிதம் சாகது இருக்கின்ற சட்ட  நுணுக்கங்களை பயன்படுத்தி பாதிக்க பட்டவர்களிற்கு நிாயங்களை வழக்கறிஞர் பெற்று கொடுத்துள்ளார்.

இதேபால் பல சிறுபாண்மை சமுகங்களை பெரும்பாண்மை சமுகங்ளும் ஆதிக்க சமூகமும் திருடர்கள் சமூகவிரோதிகள் என குற்றம்சாட்டிய வரவாறுகள் உலக நாடுகளில் பல உள்ளன. புலம் பெயர் தமிழர்கள் பலர் தாம தஞ்சம் அடைந்த நாட்டிலும் ஆரம்பத்தில் ஊத்தை தமிழன் ஆடுகளவெடுப்பவர்கள் என மேடியாக்களும் வலது சாரிகளும் முத்திரைபதிக்க முயன்றத. அனாலும் 90 களில் குறைந்த ஊதிய தொழிலாளர்களின்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தொழில்வாய்ப்புக்களும் நிரந்தர இருப்பிட வசததிகளும் வழங்கப்பட்டது. இவ்வகைில் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்து தமது நிரந்தர இருப்பினை தமிழர்கள் உறுதிப்படுத்தி கொண்டனர்.

இன்றும் பல நுற்றுகணக்கான வருடங்களிற்கு முன்னர் இந்தியாவில் இருந்து நிர்ப்பந்தித்தின் பெயரில் புலம் பெயர்ந்த ஐராப்பிய அமெரிக்க நாடுகளில் நாடோடிகளாக தமது வாழ்வை ஆரம்பித்த சிந்தி அல்லது ஐிப்சி அல்லது றோனிய சிறுபாண்மை சமுகம்.  ஐெய் பீம் திரப்படத்தில் காண்பிக்க பட்ட இருளர் அல்லது ஆதிவாசி சமுகம் போன்று சொல்லணாத்துயரத்தினை அனுபவித்து வருகின்றது. இவர்களிற்கும் ஐராப்பிய பெரும்பாண்மை ஆதிக்க சமுகம் திருடர் ஊத்தயர்கள் வன்முறையாளர்கள என்றே வகைப்படுத்தி உள்ளனர்.

பிரான்சில் வாழும் நான்கு மில்லியன் வெளிநாட்டவர்களில் சிந்து றொமானியர்கள் 15000 இருந்து 20000 வாழ்விடமின்றி தெரக்கில் பிச்சை எடுத்து வாழ்கின்றனர். இதேபோன்று உங்கான் பல்கேரியா றுமேனியா என்று பல கிழக்கு  ஐராப்பிய நாடுகளில் ஒதுக்கப்பட்டு அடிப்படை வசதி இன்றி வாழுகின்றனர்.  இத்துடன் இணைக்கப்ட்டுள்ள காணொலியில் இலர்களின் அவலவாழ்வினை புரிந்து கொள்ளலாம். ஐேர்மன் மொழி தெரிந்தவர்கள் மொழி குறிப்பின் மூலமாகபுரிந்து கொள்ளமுடியும்.

https://www.youtube.com/watch?v=buLf3h4YktI


இருளர் அல்லது ஆதிவாசிகள் ஆதிக்க சமூகத்தினால் தரப்படும் கடினமானதும் சுகாதரமற்ற தொழில்களே வழங்கப்படுகின்றது.அவ்வகையிலேயே சிந்து றேமானிய சமூகமும் ஐரோப்பிய மேலாதிக்க சமூகத்தினால் ஒடுக்கபடபடுகின்றது. 1971 ம் தம்மை ஒர் றோனிய தேசிய இனமாகவும் தமக்கான தேசியகொடியுடன் பிரகடனப்படுத்தியதாலும் எவ்வித முன்னேற்றங்களை அடையவில்லை.

கிழக்கு ஐரோப்பவில் கமயூனிசகட்சியின் அரசு இருந்தபோது தமக்கு தொழில்களும் உணவுபற்றாக்குறையும் இருக்கவில்லை என கூறுகின்றனர். எப்பொழுது ஐனநாயகம் என்ற போர்வையில் ஆட்சி மாற்றத்திற்கு தமது வாழ்நிலை அதள பாதளத்தில் விழுந்துள்ளதாக குப்பிடுகின்றனர்.

இன்றும் உலகம் பூராகவும் ஒடுக்கபட்ட சமூகங்களிற்கானதும் மனித உரிமைகளிற்கான உரிமைக்ககுரலும் இடது சாரி அரசியல் பாரம்பரியத்திலிரிந்தே ஒலிக்கின்றது.