Dienstag, 29. November 2016

எனது உள் வன்னி பயணப்பதிவு


SUPPORT  'ஆதரவு' வினை தவிர வேறு எந்தவொரு புலம்பெயர்ந்த அமைப்புகளும் உள் வன்னியில் உள்ள பாதிப்புற்ற முன்னால் போராளிகனை பார்க்கவுமில்லை உதவியும் செய்யவில்லையும் என உறுதியாக கூறுகின்றார் - ஓர் முன்னால் போராளி

SUPPORT 'ஆதரவுபழைய மனிதம் பத்திரிகை குழு வினராலும் ஓர் சில நண்பர்களாலும் உருவாக்கப்பட்ட ஓர் சிறிய உதவி நிறுவனமாகும்.

உள் வன்னியில் பல போராளி குடும்பங்கள் பழைய புலிகளால் அமைக்கபட்ட குடியமைப்பிற்குள் குடியமர்த்தபட்டுள்ளனர். வீட்டுத்திட்டங்கள் ஓர் சில இடங்களில் நடைமுறைப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு கொடுக்கப்பட்ட நிதியினை முழுமையாக பயன்படுத்தாது தமது அன்றாட வயிற்றுபசியை தீhக்க பலர் பயன்படுத்தி உள்ளனர். இதன் விளைவாக பலரது வீடுகளிற்கு கதவுகள் இல்லை. நிலங்கள் சரிவர சீர்செய்யாது கரடு முரடாக உள்ளன.  அடுப்படிகளை மூடும் பிளாட்டுக்கள் அன்றி மழைக்கு சமைக்க இயலாது உள்ளது.

அவர்களின் முகங்களில் பயம் மட்டுமே மிஞ்சி உள்ளது. யுத்த காலகட்டத்தில் பல போராளிகள் அவசர அவசரமாக திருமணம் செய்துள்ளனர். அதுமட்டுமல்லது விசாரணை காலகட்டத்தில் தமது பாதுகாப்பு கருதி பயிற்சியம் அற்ற நபரை தமது துணைவன் துணைவி என இனம்காட்டியுள்ளனர். இதன் விளைவு பல பெண்கள் இன்று விதைவகள் ஆக்கப்பட்டுள்ளனர். அல்லது வாழ்நிலை காரணமாக விபச்சாரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அது மட்டுமல்லாது தெற்கில் இருந்து படை எடுத்துள்ள பல வங்கிகள் மேசைமீது பணத்தினை வைத்து இம்மக்களிற்கு ஆசையை வளர்த்து கடன் பத்திரத்தில் கையொப்பத்தினை மட்டும் பெற்றுகொண்டு கடளை கொடுக்கின்றனர். பல முகவர்கள் தனியே பெண்கள் மீதே தமது விற்பனை சாதுரூயித்தினை காட்டுகின்றனர். அப்பத்திரத்தில் உள்ளவிபரங்கள் ஓன்றும் வாசித்தோ அல்லது தெளிவுபடுத்தும் வழமையோ கிடையாது. இதற்கு பின்னர் மாதந்த தவணைப் பணம் கட்டமுடியாது போது இவர்களை வெருட்டி தாமே தொழில் எடுத்து தருவதாக கூறி விபச்சார தொழில் இற்குள் தள்ளிவிடுகின்றனர்.

பல அங்கவீனமுற்ற அல்லது பாதிப்பிற்கு உள்ளாகிய பல போராளிகள் தமது பதிவுகளை கூட செய்து அரச பத்திரங்களை பெற இயலாது ஓடுங்கி போயுள்ளனர். அதற்கு பின்வரும் விடயங்களே காரணமாக உள்ளது.



1.            அரச அதிகாரிகளை சந்திக்க பயம்
2.            பல் வேறுபட்ட திணைக்களங்களிற்கு செல்ல பண வசதியின்மை
3.            எப்படி செய்வது என்று பலர் அறியாது உள்ளனர்.

அரசோ நடமாடும் பத்திரங்களை ஓழுங்கு செய்து கொடுக்கும் வாகனத்துடன் கூடிய அதிகாரிகளை ஓழுங்கு செய்து கொடுத்துள்ளது. அதில் வலமிடும் அதிகாரிகளை பொறுத்தே அவர்களது செயற்பாடும் உள்ளது.

பல சர்வதேச  NGO க்கள் கிளிநொச்சியை நோக்கி வலம் வருகின்றனர். அவர்களுடைய உள் நோக்கமே இந்த மக்கள் என்றும் கையேந்தியாக இருக்க வேண்டுமென்பதே ஆகும். ஓரு சில அதிகாரிகள் இவற்றை இனம் கண்டு கொண்டு மக்களிற்கு நலம் தரும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். நான் எனது பயணத்தின் பொழுது கிளிநொச்சியில் ஓர் விடுதியில் தங்கியிருந்தேன் அவ்விடுதியில் பல NGO க்கள் தங்கியிருப்பதனை அவ்விடுதியை முகாமைப்படுத்துவர் தெரிவித்திருந்தார். ஜரோப்பிய தமிழர்கள் போலே அவர்களது உடைநடை பாவனை இருந்தது. காலையில் ஓவ்வொரு அறைகளில் இருந்தும் ஆண் பெண்களாக வெளியில் வந்தனர். இதில் வந்த ஓர் பெண் NGO முகாமையாளருடன் குறைப்பட்டுகொண்டார். தமக்கு றூம் விலை அதிகமாக கணக்கிடப்பட்டுள்ளதாக விடுதி முகாமையாளருடன் குறைபட்டு கொண்டார். அது மட்டுமல்லாது தனக்கு கிளிநொச்சி மூளைமுடக்குகள் எல்லாம் தெரியும் அனைத்து விடுதிகளின் றூம் வாடகை விபரமும் தெரியும் தான் ஓர் NGO என பெருமையாக விலாகித்தார்.; இங்கு பல Nபுழு வருவார்களா என நான் முகாமையாளரிடம் கேட்டேன் அதற்கு அவர் தினமும் ஓருசிலர் வருவதாக கூறியதுமட்டுமல்லாது தமது விடுதிக்கு மேலுள்ள கலியாண மண்டபம் வருகின்ற 29 ம் திகதி மூன்று நேர சாப்பாட்டுடன் கூடிய சந்திப்பு நடக்க இருக்க உள்ள தகவலையும் எனக்க வழங்கி இருந்தார். கிட்டதட்ட 50 பேர் மேல் சந்நிக்க உள்ளதாகவும் ஓருவருக்கு 1600 ருபாய்களுக்கான உணவுகளும் ஓடர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். கலந்து கொள்ளப்போது இலங்கையர்கள் என்பதனையும் குறிப்பிட்டிருந்தார்.

உள்வன்னிப்பகுதிக்கு என்னை இரண்டு முன்னால் போராளிகளே அழைத்து சென்றிருந்தனர். இன்று வரை எம்மை போன்ற போராளிகளிற்கு உதவ SUPPORT  'ஆதரவுஅமைப்பினை தவிர எந்தவொரு புலம்பெயர் அமைப்புகளும் வரவில்லை என்பதை புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு எடுத்த சொல்லுமாறு உறுதியாக கூறியிருந்தார்கள்.

இவர்களது அபிலாசைகளும் சமூகத்திற்காக அற்பனித்த தம்மை போன்ற பல போராளிகளின் நிலைமையை கண்டு செய்வதாறியாது உள்ளனர். எந்த திட்டத்தினைப்பற்றி பேசும்போது அவர்கள் தம்மோடு இருந்த அல்லது தம்மைபோல் உள்ளவர்களின் வீடுகளிற்கு அழைத்து சென்று அவர்களிற்கு செய்யுமாறு கோரிக்கைகள வழங்கியள்ளனர். இது வரை 24 குடும்பங்களிற்கு SUPPORT 'ஆதரவு' வாழ்வாதர உதவிகளை வழங்கியுள்ளது. இம்மக்களின் தேவைகளை சிறிய அமைப்பான ளரிpழசவ 'ஆதரவு' இனால் மட்டும் நிவர்த்தி செய்யமுடியாது என்பது தெளிவானது. ளுரிpழவட்  இனால் உதவி செய்ப்பட்டுள்ள பல போராளிகளை சந்தித்த போது உதவிப்பணம் தம்மால் சிறு தொழிலை செய்வதற்கு வழவகுத்துள்ளதாக தெரிவித்திருந்தனர். சில போராளிகள் எழுந்து நின்று கைகூப்பி வணங்கி நின்றனர். வணங்கப்பட வேண்டியவர்கள் நீங்களே முதல் வெடியுடன் நாட்டை விட்டு சென்றவர்களை அல்ல என்று தெரிவித்திருந்தேன். யாரைக்கண்டும் கைகூப்பாதீhகள் என்றும் கூறிவந்திருந்தேன். இப்போராளிக்கு ஓர் கால் இன்றி பொய்காலுடனே ஓர் சிற்றுண்டி கடையை நடாத்தி வருகின்றார். இந் நிகழ்வு எனது கண்ணகளை கலங்கவைத்து விட்டது. ஓர் சமூகத்திற்காக எவ்வித பலாபலனும் எதிர்பாக்காது போராடிய ஓர் போராளி எதுவுமற்று ஆனாதரவாக நிறுத்தபட்டுள்ளதை எண்ணி புலம்பெயர் தமிழ் தேசிய வாய்வீச்சர்களை நோக்கியே எனது கோபம் பாய்ந்தது.

ஓர் நேர்மையான அரச அதிகாரியை சந்தித்தேன் அவர் மற்ற அதிகாரிபோல் அல்லது ஓர் இடது சிந்தனைக்குரியவர் என்பதனை அவருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அறிந்துகொண்டேன். பல பெண் போராளிகள் போலி திருமணம் செய்ததின் விளைவாக கணவன் காணமல் போயுள்ளனர் அல்லது விடடு சென்றுள்ளனர். இவர்கள் மறுமணம் செய்யதயராக உள்ள போதும் அங்குள்ள ஆண்கள் தயாராக இல்லை எனவும் இந்த சமூகமும் ஏற்று கொள்ள வில்லை என்பதனையும் குறிப்பிட்டிருந்தார். அவர் அவ்வாறு பேசிக்கெண்டிருந்தபோது ஓர் பெண் அவரை பார்க்க வந்திருந்தார். உடனே அப்பெண்ணை என்னிடம் அறிமுகம் செய்து போலி திருமணத்தின் விளைவாக கணவன் விட்டு சென்றுவிட்டார் எனவும் இவருக்கான தனிப்பதிவினை கோருவத்திற்கான விண்ணப்பத்தில் கையொப்ப மிட வந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். போரின் போது ஓர் கட்டுப்பாடனா முன்மாதிரியான சமூகம் ஏன் இன்று மறுமணத்தினை ஏற்று கொள்ளவில்லை என்ற கேள்வியை என்னிடம் எழுப்பியிருந்தார். மேலும் இச்சமூகத்தினை வழிநடத்த மதங்களும் இல்லை எனவும் அரசியல்வாதிகள் தமது இருப்புக்களில் மட்டுமே அக்கறைப்படுவாதாக ஆதங்கத்தினை தெரிவித்திருந்தார். தனக்கு முன் இருந்த அதிகாரிகள் தற்போது நடைமுறைக்கு தேவைப்படாத பல திட்டங்களிற்கு முதலீடுகளை செய்து வந்துள்ளதாகவும் பல சனசமூகநிலையங்கள் கட்டப்பட்டு இன்னமும் திறக்காமல் கட்டடங்களாக காட்சி தருவதாக தனது அலுவலகத்திற்கு முன்னால் உள்ள சனசமூகநிலையத்தினையும் காட்டியிருந்தார். பல கோயில்களும் புனருத்தானம் செய்யப்பட்டு யொலிக்கின்றன. கோயில்கள் பலவற்றிற்கு எமது புலம்பெயர் சமூகமே முன்னின்று செய்துள்ளது என்ற செய்தியையும் சொல்லத்தவறவில்லை. நான் வீட்டிற்கு ஓர் குழாய்க்கிணறு திட்டத்தினை குறிப்பிட்ட போது அவர் குறுக்கிட்டு 5 அல்லது 6 வீடுகளிற்கு ஓர் கிணறு என்று அமைத்து கொடுங்கள் என்றார். இதன் போது குறுக்கிட்ட முன்னால் போராளி அப்படி அமைப்பதாயின் ஓர் போராளியின் வீட்டிலேயே அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்தார். அப்படி என்றால் தான் முன்னால் போராளிகள் சமூகத்தில் இருந்து ஓதுக்கபடமாட்டார்கள் என்பதையும் தெரிவித்திருந்தார்.

இதை போன்று இம்மக்களின் வாழ்வாதரங்களை வியாபரப்படுத்தி வயிருவளர்க்கும் ஓரு கும்பல் போல் இம் மக்களின் வழங்களையும் சுரண்டவும் ஓர் உள்ளுர் கும்பல் கிழம்பியிருக்கும் தகவல்களையும் அவ் அரச அதிகாரி தெரிவித்திருந்தார். அதாவது மணல்களை சட்டéர்வமற்று கபளீகரம் செய்து விற்கப்படுகின்றது. இதனை தடுக்க வெளிக்கிட்ட பொழுது அரச அதிகாரிகளும் பொலிசாரும் மக்கள் பெற்றுள்ள வங்கிகடனின் தவணைப்பணத்தினை தாம் கட்டுவதாக கூறி அவர்களிடம் இவ்விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்குமாறு கோரிய சம்பவத்தினையும் என்னிடம் தெரியப்படுத்தியிருந்தார்.

இது மட்டுமல்லாது எவ்வித பொருளாதார அறிவுமற்ற அரசியல் கட்சிகள் தனியே வரவு செலவு விவாதத்தின் போது ஓரு சில விடயங்களை தெரவித்து தமது ஆதரவினை வழங்கியுள்ளனர். தமது சமூகம் பிரதேசம் அபிவிருத்தி சார்ந்த சொந்த ஆய்வின்றி தாம் சார்ந்த ஓர் மாற்று வரவு செலவுதிட்டத்தினை கூட வழங்கமுடியாத ஓர் அறிவிலிகளாக இருப்பதனை தெரியப்படுத்தியிருந்தார்.

பழைய புள்ளி விபரத்தின் போது கிளிநொச்சியின் சனத்தொகை பரம்பலிற்கும் புதிய கணிப்பிட்டீன் அடிப்படையிலுள்ள சனத்தொகை வளர்ச்சிவீதம் தனிளே 15-20 விகிதமே அதிகரத்துள்ளதாகவும். நாட்டின் தெற்கிலுள்ள சனத்தொகை வளர்ச்சி வீதம் மூன்றுமடங்களாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனை கூட எந்தவொரு தமிழ் அரசியல் வாதிகளும் கவனத்தில் எடுத்துகொள்ளது உள்ளது பற்றியும் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார். இன்றும் இருவருக்கு ஓருவர் அல்லது இருவர் என்ற குடும்பகட்டுப்பாட்டு விழப்புணர்வுகள் ஓடுங்கிவரும் ஓர் சிறுபாண்மை இனத்துக்கு இது சார்த்தியமானதா என்ற கேள்வியை என்னிடம் கேட்டிருந்தார்.

இன்னமும் ஓரு சிலர் எதற்கு எடுத்ததலும் இலகுவான முறையில் இனவாதம் என முத்திரை பதிப்பதாகவும் அத்துடன் தம்மை ஓர் அரசால் தேடப்படும் நிலைவரையும் சென்று நாட்டைவிட்டு இலகுவாக வெளியேற முயற்சிப்பதகவும் குறிப்பிட்டிருந்தர்ர்.

ஓரு வீட்டில் இரு பிள்ளைகள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தபட்டதால் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து பிள்ளைகள் காப்பு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இப்பிள்ளைகளின் தாய் விழுந்து கை முறிந்துள்ளது. வைத்தியசாலைக்கு செல்லாமல் அப்படியே வைத்திருந்து கை எலும்பு தானகவே சொத்தியாக இணைந்துள்ளது. ஏன் இப்படி இருகின்றீர்ள் என கேட்டதற்கு வார்த்தைகள் இன்றி மௌனமாக உள்ளனா.

மழைக்கு அடுப்பிலிருந்து சமைக்கமுடியாது அடுப்பு புகைêட்டி அடைக்கபடவில்லை. இவ்வீட்டில் ஓர் குழந்தை உள்ளகு காது கேளாது ஊமையாக உள்ளது. இப்பிள்ளைக்கு வைத்தியம் செய்ய இயலாது இக்குழந்தை பராமரிப்பு அற்றுள்ளது. அப் பெண் பிள்ளைக்கு காதில் மட்டுமே பிரச்சினை உள்ளதாக நான் அறிகின்றேன். காது கேட்குமாயின் அப்பிள்ளை பேசுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எண்ணுகின்றேன்.

கிளிநொச்சியில் உள்ள துயலும் இல்லம் பெற்றோர்களினால் துப்பரவு செய்யும் காட்சியை பார்த்தபோது என்னை அழைத்து சென்ற போராளிகள் படம் எடுப்பதற்கும் நிறுத்தாது அழைத்து சென்றனர். இவ்வருட மாவீரர் தினங்களும் மிக அமோகமாக விமரிசையாக புலம்பெயர் நாடுகளில் நடைபெற்றதை அறிந்துகொண்டேன். வழமைபோல் மண்டப அலங்கார செலவு என பல கோடிகளை முதலீடு செய்தே நிகழ்ச்சிகளை நடாத்தி இருப்பார்கள். இதனால் யாருக்கு என்ன பயன்? அவ் மாவீரர்களுடன் வாழ்ந்த போராளிகள் இன்றும் சாட்சிகளாக அனாதரவாக்கபட்டு நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர். இவர்களிற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? இனிமேல் மாவீரர் தினங்களை அங்கு கோலாகலமாக செய்யாமல் இந்த நாட்களிலாவது வாழும் வீரர்கள் வயிராற உண்ண வழவகுங்கள். மனச்சாட்சி உள்ள அனைத்து புலம்பெயர் சமூகமும் சிந்திக்க வேண்டுகின்றேன்.

இந்த மக்களின் வாழ்வாதரங்களை உயர்த்துவததற்கு பல திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. இதுற்கு அனைவரது ஓத்துழைப்பு அவசியமானது. எனது பார்வையில் பின்வரும் திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டியதாக கணிப்பிட்டுள்ளேன்.

1. சுய தொழில் முயற்சிகளை ஏற்படுத்தி கொடுத்தல். இப்பகுதியல் கோழி ஆடுவளர்த்தல்களிற்கான முழுவாய்ப்புக்களும் உள்ளன.

2.  வீடுகளுக்கான குழாய் கிணறுகள் அமைத்து கொடுத்தல். இதன் மூலம் ஓர் சிறிய மரக்கறி தோட்டத்தினை உருவாக்கி அன்றாடம் உணவிற்கு வழிவகுத்தல்.

3. சிறிய கைத்தொழில் பட்டறைகளை ஏற்படுத்தி கொடுத்தல. தொழில்நுட்ப பட்டறைகளை புலம்பெயர் நாடுகளில் கைத்தொழில்களில் தேர்ச்சிபெற்றவர்களை கொண்டு நடாத்துதல். அதன் மூலம் புதிய தொழில் வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தல்;.

4. சமூக உதவி சேவை நிலையங்களை உருவாக்குதல். இதன் மூலம் புலம்பெயர் நாடுகளில் இருந்து சேகரிக்கப்படும் பாவித்த ஆடைகள், சைக்கில்கள், பாவிக்ககூடிய கணணிகள் போன்றவற்றை வருமானம் அற்றவர்களிற்கு வழங்கி அவர்களின் வாழ்வாதரங்களை உயர்த்துதல்.

5. அரை குறையில் அமைக்கப்பட்ட வீடுகளை முழுமையாக திருத்தி கொடுத்தல்.

6. குளங்களில் நன்நீர் வளர்ப்புத்திட்டங்களிற்கான தொழில்நுட்ப அறிவை வழங்கி புதிய தொழில்களை அறிமுகப்படுத்துதல். (அக்கராயன் குளம்)

அம் மக்களின் பல தேவைகளை éர்த்தி செய்ய பல சக்கதிகளின் ஓன்று கூடிய வேலைத்திட்டமே அவசியமானது என்பதை உறுதியாக நான் ஏற்றுகொள்ளுகின்றேன். ஆதலால் SUPPORT  'ஆதரவுஉடன் இணைந்து வேலை செய்ய முன்வருபவர்கள் முன்வாருங்கள். அல்லது தனியே மேற்குறிப்பிட்ட சில வேலைத்திட்டங்களை தனியே முன்னெடுக்க விரும்புபவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். இன்றுள்ள பசிக்கு இன்றே தீhவு அவசியமானது. எமது அமைப்பின் இயலாமையை காரணம்காட்டி செய்யமுடியாத வேலைகளை எம்மிடத்தில் மட்டும் வைத்திருக்கமுடியாது. இது ஓர் வாழ்வு சம்பந்தப்பட்டது.


என்னை அழைத்து சென்ற இரு பழைய போராளிகளும் என்னை அவதானமாக அழைத்து சென்றது மட்டுமல்லாது என்மீது அவர்கள் காட்டிய அக்கறை என்னை மெய்சிலிர்க்கவைத்தது. அவர்களின் அன்பு கோரிக்கையின் விளைவாகவே இக்கட்டுரையை நான் இங்கு பிரசுரிக்கின்றேன். இந்த நாட்கள் விடுதலைப்போராட்ட விடுதலைக்கு அர்பனித்த அனைத்து போராளிகளிற்குமான ஓர் உண்மையான நினைவுதினங்களாக அமைந்திருந்தது.
http://aatharavu.com
கணபதிப்பிள்ளை சுதாகரன்  29.11.2016

Dienstag, 8. November 2016

அணு மின் உற்பத்தி நிறுத்தலுக்கான கால வரையறை மசோதாக்கான அபிப்பிராய வாக்கெடுப்பு- சுவிற்சர்லாந்து

கணபதிப்பிள்ளை சுதாகரன் / 08.November 2016


Tschernobyl, Fukushima போன்று சுவிற்சர்லாந்தில்உள்ள Beznau அணு மின் நிலைமையும் உலகத்தில் உள்ள அணு உலைகளில் மிக பழமை வாய்ந்தவை ஆகும். பல பழமை வாய்ந்த அணு உலைகள் பாதுகாப்பு சிக்கல்களை முகம்கொடுத்து வருகின்றன.  Beznau உலை திருத்தும் வாய்ப்புக்களையும் இழந்துவிட்டது. மீண்டும் இவ் அணு நிலையத்தினை மின்சார உற்பத்தியில் ஈடுபடுத்துவது மக்களின் பாதுகாப்பில் பரிசோதனை செய்வாத அமைந்துவிடும். இதே போன்று Mühleberg க்கும்  Beznau ம் உலகத்தில் மிக பழமை வாய்ந்த அணு உலைகளாகும். முக்கியமான Reactor களை புதுப்பிப்பது மேலும் ஆபத்துக்களையும் சூழல் மாசடைதலையுமேயே ஏற்படுத்தும்.


வருகின்ற 27 ம் திகதி நவம்பர் 2016 ஆம் ஆண்டு அபிப்பிரயா வாக்கெடுப்பிற்கு கொண்டு வந்துள்ள மசோதாவில் தவிர்க்கபட்ட விடயங்களுக்கான தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது. பழமைவாய்ந்ததும் ஆபத்தானதுமானமான  அதிக உற்பத்தி செலவினை கொண்ட அணு உலைகளிற்கு இவ் அபிப்பிராய வாக்கெடுப்பு தீhமானகரமான உற்பத்தியை நிறுத்தும் காலவரையறையை கொடுத்துள்ளது. இவ் அபிப்பிரயா வாக்கெடுப்பில் ஆம் என்று வாக்களிப்பதன் மூலம் சுவிற்சர்லாந்து மக்களின் பாதுகபப்பினையும் மாற்று மின் உற்பத்தி தொழில்நுட்பத்தினையும் வலுப்படுத்தலாம்.

மற்றைய நாடுகளை விட மாற்று மின் உற்பத்தியில் தனக்கொரு காத்திரமான இடத்தினை சுவிற்கர்லாந்து பெற்றுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு மின்வலுவினை மாற்று தொழில்நுட்பம் மூலமே பெற்றுகொள்கின்றது. மூன்றில் ஓரு பங்கு மின்சாரம் அணுமின் நிலையம் பெறப்பட்டு வருகின்றது. வருகின்ற 13 வருட காலத்திற்குள் மாற்று தொழில்நுட்பத்தின் துணையுடன் மின்சாரத்தினை உற்பத்தி செய்து கொள்ளலாம்.

அணு உலைகளை செயல் இழக்க செய்வதன் மூலம் மாற்று மின் உற்பத்திக்கான தொழில்நுட்பத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் வேலைவாய்ப்புக்ளையும் இயற்கை வளத்தினை கொண்டு மலிவான மின்சார உற்பத்தியையும் அதிகரித்துகொள்ளலாம். அபிப்பிரயா வாக்கெடுப்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ள மசோதா புதிய அணு நியைங்களை நிறுவுவதற்கான தடையயையும் பழைய அணு உலைகள் 45 வருட முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்பதனையும் வரையறுத்துள்ளது.

2011 ம் ஆண்டு Fukushima வினால் ஏற்பட்ட ஆபத்தினை தொடர்ந்து சமஷடி அரசு புதிதாக அணு உலைகளை அமைப்பதற்கான தடையை விதித்துள்ளது. ஆனால் தற்பொழுது செயற்பாட்டில் உள்ள பழைய அணு உலைகளுக்கான செயல் இழக்கம் செய்வதற்கான காலவரையறையை நிர்ணயிக்க தவறியுள்ளது. இதனாலே இவ்விடயத்தினை கவனத்தில் எடுத்து அபிப்பிரயா வாக்கெடுப்பிற்கான குழு காலவரையறையுடனான செயல் இழக்கத்தினை வலியுறுத்திய மசோதவினை வாக்கெடுப்பிற்கு கொண்டு வந்துள்ளனர். இத்தீhமானத்திற்கு ஆம் என சுவிற்சர்லாந்து பசுமைக்கட்சியினரும் சமூக ஐனநாயக கட்சியும் மும்மொழிந்துள்ளனர். வுழமை போல் அனைத்து வலதுசாரிக்கட்சிகள் இம் மசோதவினை எதிர்த்து வாக்களிக் உள்ளனர்.

ஓர் அணு உலையின் பாதிப்பு கிட்டதட்ட 50 கிலோமீற்றர் தூரத்தில் பகுதிகள் அனைத்தையும் பாதிப்புக்குள்ளாக்கும். சுவிற்சர்லாந்தில் அணு உலைக்கு 50 கிலோமீற்றர் அருகாமையில் உள்ள அனைத்து கிராம நகர மக்களிற்கு Jodtablets (Kaliumioid 65 AApot) இலவசமதாக விநியோகிக்க படுகின்றது என்பதனை சுவிற்சர்லாந்தில் வாழும் அனைத்து தமிழர்கள் அறிந்திருப்பார்கள்.


சுவிற்சர்லாந்தில் வாக்களிக்க தகுதிபெற்ற அனைத்து தமிழர்களும் ஆம் என வாக்களித்து எதிர்கால சந்தியினரை அணு மின் ஆபத்திலிருந்து காப்பாற்றுங்கள். உலகத்தில் எந்த பகுதிகளிலும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள அனைத்த அணு உலைகளுக்கான எதிர்ப்பு குரல்களையும் வலுப்படுத்துங்கள். அணு மின் உற்பத்தியினால் உருவாக்கப்படும் கழிவுகள் பல வளர்ந்துவரும் நாடுகளில் மிக குறைந்த செலவிலேயே வீசப்படுகின்றது அல்லது மறைத்து வைக்கபடுகின்றது. இக்கழிவுகளும் மக்களிற்கு கதிர்வீச்சு ஆபத்தினை ஏற்படுத்தும். மக்களின் ஆரோக்கியத்தினையும் சுகாதாரத்தினையும் எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கு உள்ளாக்கும் என்பது நாம் அறிந்தது உண்மையாகும்.

Samstag, 29. Oktober 2016

சுவிற்சர்லாந்தில் வாழும் தமிழர்களினால் மீண்டும் தொடரப்படும் வன்முறைகலாச்சாரம்

இவ்வாரம் சொலத்தூண் புகையிரத நிலையத்தில் நடைபெற்ற துப்hhக்கி சூட்டு சம்பவம் பல தமிழர்களிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது. பல ஆண்டுகளாக வாழும் தமிழர்கள் இந்நாட்டிலுள்ள ஐனநாயக கலாச்சரத்தினை கற்று கொள்ளாது அல்லது இணைவாக்கமடையாது தமக்கென ஓர் வட்டத்தினை உருவாக்கி வாழ்வதன் விளைவாகவே இச்சம்பவத்தினை பார்க்க முடிகின்றது.

இது ஓர் வியாபர போட்டியின் விளைவாக நடைபெற்ற வன்முறை சம்பவமாகவே அவதானிக்க முடிகின்றது. கடந்த சில காலங்களில் சுவிற்சர்லாந்தில் ஓரு குழு தாமே எல்லாவிடயங்களையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திரிக்கவேண்டும் அல்லது சகல நிதிகளும் தமக்கே வந்து சேரவேணும் என மீறாப்படன் செயற்பட்டு வருகின்றனர். இக்குழுவினர் தன்னிச்சையாக செயற்படும் புகைப்பட விடீயோ தொழில் வியாபாரிகளை முடக்க வேண்;டுமென கங்கணம் கட்டி செயற்படுகின்றனர். திட்டமிட்ட விலைக்குறைப்பு அல்லது தாதா போல் வெருட்டும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வியாபாரிகளை முடக்க முயலுகின்றனர்.

எது எப்படி இருப்பினும் முரண்பாடுகளை ஆயுதம் மூலம் தீர்த்துகொள்வதை எக்காரணம் கொண்டும் ஏற்றுகொள்ள முடியாது. இவ் ஆத்திர செயற்பாடு இவ்விபதத்தினை தடுக்க முயன்ற ஓர் இளைஞனின் உயிரைப்பறித்தது கொடூரமானது.

நீதியற்று நடைபெறும் விடயங்கனை முதலில்; அனைத்து தரப்பினர்களிற்கு தெரியப்படுத்துதல வேண்டும். அல்லது இந்நாட்டு சட்டங்களின் வசதிகளுடாக பிணக்குகளை தீர்க்க முயற்சிக்க வேண்டும். 
பேசித்தீர்க்க வேண்டிய விடயங்களிற்கு வன்முறையை கையிலெடுப்பது எமது வாழ்வில் உறைந்து போன ஓர் கலாச்சாரமாகவே உள்ளது. இதன் வெளிப்பாட்டினை யாழ் மண்ணிலும் காணக்கூடியதாக உள்ளது. அரசியல் சமூக ஐனநாயகத்திற்கு மட்டும் போராட்டம் நடாத்தாது கலாச்சார மாறுதலுக்கான போராட்ங்களிற்கான தேவையும் இன்று எழுந்துள்ளது.

புலத்தில் இன்றும் தமது இனத்துடன் மட்டுமே தொடர்புகளை குறுக்கி வைத்து கொண்டு இருப்பதனலால் எமது அருகில் வாழ்ந்து வரும் ஏனைய சமூகங்களில் காணப்படும் நல்ல குணாம்சங்களை கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையோ அல்லது அறிந்து கொள்ளவதற்கான வாய்ப்புக்களையோ மறுப்பதின் விளைவாகவே இவ்வகையான குறுகியமனோபாவத்தின் வளர்ச்சி அதிகரிக்கின்றது.

ஓவ்வெரு மனிதனும் தனது வாழ்காலம் முழுதும் கற்றுகொள்ள வேண்டிய பல விடயங்கள் நிறைவே உள்ளது. சுவிற்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் ஓரே இடத்தில் கூடி வாழ்வதற்கான வசதிகள் பெரும்பாலும் அமையபெறவில்லை. ஓரே இன வெளிநாட்டு சமூகங்கள் ஒன்று கூடி வாழும் பல ஐரோப்பிய நாடுகளில் இன்னமும் வன்முறைச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

ஓருவரை கண்டித்து பேச வேண்டும் என்றால் நாம் பலவிதமாக கண்டிக்கலாம். சம்பந்தபட்டவரை ஆத்திரம் ஊட்ட கூடியவாறும் கண்டிக்கலாம் அல்லது அறிவுறுத்துவது போலும் கண்டிக்கலாம். இந்நாட்டவர் தமது குழந்தைக்கு கட்டுபாடுகளையும் கண்டிப்புக்களையும் எவ்வாறு குழந்தையை புண்படுத்தாது கையாள வேண்டுமென்பதனை அறிந்து வைத்துள்ளனர். சரியான முறையில் குழந்தையிடம் தொடர்பாடுபளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக பயிச்சியையும் பெற்றுகொள்கின்றனர். ஐரோப்பியர் பல இளம் தம்பதிகள் குழந்தை வழர்ப்பு சம்பந்தமான பல புத்தகங்களை வாசிக்கின்றனர். எம்மில் பலர் இவ்வகையான வாசிப்புக்களை செய்வதில்லை மாறாக தனியே தென்னிந்திய தனிநபர் சகாச சினிமாக்களில மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்தினர்; பலர் வாசிப்பதனையே முற்றாக நிறுத்திவிட்டனர்.  வுhசிப்பிற்கான முன்தேவை இன்று எழுந்துள்ளது. தனியே அரசியல் இலக்கிய வாசிப்புகளுடன் நின்றுவிடாது இன்று சமூகத்திற்கு தேவையான சாதாரன பல விடயங்கள் அடங்கிய புத்தகங்களை வாசிப்பதற்கான ஓர் வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்க வேண்டிய கடமை புலத்து தமிழ் புத்திஜீவிகளிற்கு உருவாகியுள்ளது.
ஓர் சரியான உரையாடல்களை தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கான வளம் தமிழ் மொழியில் நிறையவே உள்ளது. தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்படும் சரியானதும் பிழையான உரையாடல் வடிவங்களே இன்று பல தமிழர்களது நாவில் ஆதிக்கம் செலுத்துகின்றது.
தனியே இசை நாட்டிய போட்டி நிகழ்ச்சிகள் மட்டும் ஓர் சிறந்த சமூகத்தினை வளம்படுத்த முடியாது. புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் தமிழ்பாடசாலைகள் கூட இன்றும் பழமையான கற்றுகொடுக்கும் நடைமுறையையே கடைப்பிடித்து வருகின்றனர். இன்றும் யாரோ எழுதிக்கொடுக்கும் விடயங்களை மனப்பாடம் செய்து பேச்சுபோட்டி நிகழ்வுகளில் ஓப்புவிக்கும் கருவிகளாகவே குழந்தைகள் 
பயன்படுத்தப்படுகின்றனர். 

இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களுடன் தம்மை இணைத்துகொண்டு அங்குள்ள போட்டிகளில் கலந்து கொள்ளாது. மேடையேறும் வாய்ப்புக்கள் தமிழ் மேடைகளில் அதிகமாக உள்ளதால் பெற்றோரும் தமது பிள்ளைகளை தமிழ்வட்டத்திற்குள் மாத்திரம் சுழலவிடுகின்றனர். இதற்கு பல தமிழ் போட்டி நிகழ்ச்சிகளை ஆதாரப்படுத்தலாம். கலை கலாச்சார நிகழ்ச்சிகளிலும் எவ்வித மாற்றமற்று கடந்த இரண்டு மூன்று சகாப்தங்களிற்கு முன்னர் எவ்வாறு நடந்ததோ உள்ளடக்கத்தில் மாற்றமற்று தனியே தொழில் நுட்பமாற்றங்களுடன் மாற்றங்களுடன் மேடையேறிவருகின்றது. ஓரு சிலர் மாற்றத்தினை கொண்டுவந்தாலும் அதற்கு மக்களின் ஆதரவு மட்டமாகவே உள்ளது.

புலம் பெயர்ந்து வாழும் சமூக அனைத்து தலைமுறையினரும் இந்நாட்டு அரசியல் கலை கலாச்சாரத்துடன் இணைவாக்கமடைய வேண்டும். தமக்கன மட்டும் கோடு போட்டு இந் நாடுகளில் தம்மை ஓர் தனி அலகாக பேணுவது ஆபத்தனதாகும். முக்கியமாக இரண்டாவது தலைமுறையினர் தத்தமது நாடுகளில் ஓர் அமைதியான வாழ்வை நடத்த வேண்டும் என்றால் மூடிய வாழ்வுநிலையில் இருந்து வெளியில் வரவேண்டும்.

க.சுதாகரன்

30.10.2016

Sonntag, 11. September 2016

சுவிற்சர்லாந்து போலி தமிழ் தேசியவாதிகள் ஓர் அம்பலப்படுத்தல்


சுவிற்சர்லாந்து தமிழர் ஓருங்கிணைப்பு குழு (STCC) எனும் பெயரில் இன்றும் புலிகளின் தலை இல்லாத பின்னரும் அதே பெயரில் இயங்கிவரும் இவ் அமைப்பும். தமிழ் தேசியமே தமது குறிக்கோல் என்று பிதற்றி திரியும் மற்றைய சில அமைப்புகளும் சீறிலங்கா சுவிற்சர்லாந்து வர்த்தக சமூகத்தினால் நடாத்தபட்ட கலாச்சார உணவு விழாவினை நிகழ்வை கண்டித்து எதிர்ப்பை தெரியப்படுத்தியிருந்தனர்.

விடுதலைப்புலிகளிற்காக புலத்தில் வேலை செய்த பலர் இன்று இலங்கை அரசுடன் மிக நெருக்கமாக கைகோர்த்து தமது வியாபாரத்தினை நடாத்துவதை யாரும் மறக்கமுடியாது. இவர்கள் இன்றும் இலங்கைக்கு ராஜமரியாதையுடன் சென்றுவருகின்றனர். 

புலம் பெயர் மக்களை ஓன்றினைத்து தமது வியாபரத்தினை பெருக்குவதற்கு ஓர் ஆயுதாமாகவே தமிழ் தேசியத்தினை கையில் எடுக்கின்றனர். இவ்வகையில் கடந்த தமிழ் தேசியத்தின் ஆதரவுடன் செயற்பட்ட பல வியாபர ஸ்தாபனங்கள் இன்று பெரிய வெற்றிகரமான நிறுவனங்களாக வலம்வருவதை யாரும் மறுக்க இயலாது.

விடுதலைப்புலிகள் தளத்தில் போராடிய போது அவர்களுக்காக நிதி சேகரித்தவர்கள் தலைமை அழிந்த பின்னரும் நிதியில் ருசி கண்ட éணைகளான இவர்கள் இன்றும் தமிழ் தேசியத்தின் பெயரில் புலம்பெயர் மக்கள் வியர்வை சிந்திய பணத்தினை கபளீகரம் செய்து வருகின்றனர். இவ்வகை கபளீகரங்களை செய்வதற்கு தமிழ்தேசியத்தின் காவலர் எனும் அங்கி இவர்களிற்கு அத்தியவசிமாகின்றது. தாம் சேகரிக்கும் நிதிக்கான பிரச்சார யுக்கதிக்காகவே பல போலிபோரட்ட நிகழ்வுகளை காலத்திற்கு காலம் நிகழ்த்திவருகின்றனர்.

  • ஐ.நா விற்கு படையெடுப்பது

  • மாவீரர்களின் பெயரை கூறி விளையாட்டு போட்டிகளை நடாத்தி இலட்சக்கணக்கான சுவிஸ்பிராங்குகளை திரட்டுவது
  • கல்விசேவை என்ற பெயரில் தமிழ் கல்வி கலாச்சார கல்வி என்ற பெயரில் சுவிற்சர்லாந்து அரசிலிருந்தும் நிதியை பெறுவது மட்டுமல்லாது பெற்றோரிடமும் பணத்தினை கறந்து மிக குறைந்த கூலியை ஆசிரியர்களிற்கு வழங்குவது.
  • அத்துடன் நின்று விடாது வருமானத்தினை அள்ளி வழங்கும் கோயில்களை தமது பினாமிகளை கொண்டு போலி நிர்வாக்த்தினை உருவாக்கி கோலில் நிதியை தேசியத்தின் பெயரில் கையாள்வது.
  • சுயாதீன அமைப்புகள் நாடாத்தும் கலாச்சார நிகழ்ச்சிகளில் சேகரிக்கும்நிதியை தேசியத்தின் பெயரில் கப்பம் பெறுவது. 



என பல அட்டூளியங்களை செய்து வந்தவர்கள் இறுதி யுத்ததின் போது அவசர நிதி சேகரிக்கும் போது போதுமான வருமானமற்ற குடும்பங்களின் பெயரில் தமது சுவிற்சர்லாந்து வங்கி தரகர்கள் மூலம் போலி ஆதாரங்களை சமர்பித்து ஓரு இலட்சம் சுவிஸ்பிராங்குகளை வசூலித்து இந்த கடன்களை அடைக்க இயலாது பலர் இன்று மதுவுக்கும் குடும்ப பிளவுக்கும் உள்ளாகியுள்ளனர். 

கல்வி சேவை பொறுப்பாளர்களிற்கு இவர்கள் கொடுத்த சம்பளம் சுவிற்கர்லாந்தில் ஓர் உயர்மட்ட உத்தியோகத்தினர்களிற்கு வழங்கும் ஊதியத்திற்கு நிகரானது. இந்நாட்டில் வாழும் பல தமிழர்கள் மிக குறைந்த ஊதியத்திலேயே தொழில்சாலைகளிலும் உணவுவிடுதிகளிலும் வேலை செய்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

2009 ற்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமை உயிரிடன் இருக்கும் போது அவர்களிற்கு சேகரித்த நிதி விபரங்கள் காட்டவேண்டும் என்ற நிhபந்தம் இருந்தது. 2009 இற்கு பிற்பாடு நடத்திய மாவீரர் தினம் விளையாட்டுபோட்டிகளில் சேகரித்த பணவிபரத்தினை மக்கள் முன் ஏன் இந்ந முகவர்கள் முன்வைக்கவில்லை.

  • சுவிற்சர்லாந்து வாழ் மக்கள் இவர்களிடம் கணக்கு விபரங்களை ஏன் கேட்க மறந்தனர். 
  • இவ்வாறு சேகரிக்கபடும் நிதிகள் தளத்தில் தலைமையற்ற நிலையில் எங்கு செல்கின்றது.
  • நிhவாகத்திற்கு தேரியாமல் போலி நிர்வாகத்தினை உருவாக்கி கோயில் பணத்தினை ஏன் சூறை ஆடுகின்றனர்.


ஏற்கனவே கல்வி சேவையை மேலும் STCC யுடன் சேர்ந்து செய்ய விரும்பாத சுயாதீன அமைப்புகள் தனியே கல்விசேவையை தொடர்ந்த போது கீரைக்கடைக்கு எதிர்கடை போடுவது போல் அதே பெயரில் புதிய வகுப்புக்களை ஆரம்பிப்பதற்காக செய்யபட்ட விளம்பரத்தினை பாருங்கள்.

யுத்தின் பின்னர் இவர்களால் கைவிடப்பட்ட போராளிகளும் பொதுமக்களும் வழ்வாதரம் அற்று தவிக்கின்றனர். இவ் அமைப்புகள் புலம்பெயர் மக்களிடம் இருந்து சேகரக்கபட்ட நிதியே அம்மக்களின் கண்ணீரை துடைப்பதற்கு. இவர்களால் திரட்டபட்ட நிதி எங்கே? இம் மக்களின் வாழ்வாதரத்திற்கும் கல்வி மேம்பாட்டிற்கு பல தன்னார்வ குழுக்களே முன்வந்து உதவிவருகின்றனர்.

இன்று ஓரளவு மூச்சு விடும்  நிலைமையிலுள்ள பழைய விடுதலைப்புலிப் போராளிகளை மீண்டும் ஓர் போராட்டத்தினை நடாத்துமாறு நெருக்கடிகளை கொடுத்துவருவது பற்றி போரளிகள் பலர் உதவி வழங்கசென்றவர்களிடம் முறைப்பாடு செய்துள்ளனர். புலம்பெயர் நாடுhளில் வசதியாக வாழ்ந்து கொண்டு அம்மக்களை மேலும் நிர்பந்ததிற்கு உள்ளாக்காது. போரட விருப்பமாயின் நீங்கள் நேரடியாக களத்தில் குதியுங்கள் அல்லது உங்கள் பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்புங்கள். உங்கள் வெற்று அறிக்கை போராட்டங்களும் கோரிக்கைகளும் மேலும் இலங்கையில் வாழும் தமிழ்மக்களிற்கே ஆபத்தனதாகும். அந் நடே தஞ்சம் என வாழும் மக்களால் நடாத்தும் போராட்டங்களிற்கு உங்கள் சொலிடாரிட்டியை தெரவியுங்கள் மாறாக உபத்திரவம் செய்யாதீர்கள்.

இலங்கையில் வாழும் மக்கள் இன்று மிக குறைந்த எண்ணிக்கையை கொண்ட ஓர் தேசிய இனமாக மாறியதற்து எமது தமிழ் மிதவாத தலைமைகள் எப்படி காரணமாகியிருந்தார்களோ அதே போல் யுத்தமும்; பலரை புலம்பெயர் வைத்தது. போட்டியில் தோற்று போனோம் மீண்டும் ஓர் போட்டியை ஏற்படுத்தி வெல்லுவோம் என்ற மன நிலையில் இருந்து சிந்திக்காது. இலங்கை வாழ்வாதரங்களை உயர்த்துவதிலும் சுய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு உதவுங்கள். அவர்களின் வாழை;வாதார உயர்வு ஓர் காத்திரமான அரசியல் உரிமைக்கான போரட்டத்தினை நோக்கி நகர்த்தும். இலங்கை வாழ் தமிழர்களின் வெளியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கiயும் சிங்கள பேரினவாதத்திற்கு கிடைக்கும் போனஸ் ஆகும்.
  • புலம் பெயர் வாழ் தமிழ் மக்களே போலி தேசியவாதிகளை இனங்காணுங்கள். தேசியத்தின் பெயரில் சேகரக்கும் நிதி விபரங்களை பெதுவெளியில் முன்வைக்க கோருங்கள்.

  • புலம்பெயர் மக்களே 2009 இறுதியுத்ததிற்காக சேகரித்த நிதிக்கான விபரங்களை  முன்வைக்குமாறு கோருங்கள்.
  • 2009 ஆண்டிற்கு பின்னர் சோத்த நிதிக்கான கணக்கு விபரங்களை கோருங்கள்.

இவர்களின் வியாபார உத்திக்காக பயன்படும் தமிழ்தேசியம் என்ற போர்வையில் இவர்கள் நடாத்தும் போலிப்போரட்டங்களிற்கு எடுபடாதீர்கள்.

வாழ்வாதாரமின்றியும் போரட்டத்தில் ஊனமுற்ற மக்களிற்கும் போராளிகளிற்கும் உங்களிற்கு தெரிந்த தன்னார்வகுழக்களுடன் இணைந்து உதிவிகளை வழங்கி அம்மமக்களிற்கு ஓர் நிரந்தர வாழ்வாதர  வழிவகைகளை ஏற்படுத்தி கொடுக்க முன்வாருங்கள்.

க.சுதாகரன்

11.09.2016

Sonntag, 5. Juni 2016

சுவிஸ் தமிழர் ஓருங்கிணைப்பு குழுவினரின் (Swiss Tamil Coordinating Committee STCC) அடாவடித்தனமும் தன்;னார்வகுழுக்கள் மீதான உரிமை மறுப்பும்

புலிகளின் பினாமி அமைப்புக்களில் ஒன்றாகச் செயற்பட்டிருந்த உலகத்தமிழர் ஓருங்கிணைப்பு குழு (World Tamil Coordinating Committee WTCC), புலம்பெயர் நாடுகள் பூராவும் தன்னார்வக் குழுக்களாக உருவாகிய -கல்விகலை, கலாச்சாரம் மற்றும் ஆலயம் சார்- சமூக அமைப்புக்கள் அனைத்தையும் தமது கட்டுக்குள் உட்படுத்தியிருந்தமை அனைவரும் அறிந்த பழைய சங்கதிதான்! புலம்பெயர்ந்து வாழ், பெரும்பான்மைத் தமிழர்கள் தமிழ்தேசியத்தின் மீதான பற்றுதலிலும், அதீத நம்பிக்கையிலும் தாமே உருவாக்கிய தமது அமைப்பின் சுயாதீனத்தை இவர்களிடம் தாரைவார்த்திருந்தனர் என்பதும் உண்மையே! அவ்வகையில் இவ்வமைக்களின் மூலமும் மக்களிடம் இருந்து பணத்தைச் சேகரித்துஅனைத்தையும் „தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்திற்கே செல்லும்' என்ற நம்பிக்கையில் அதனையும் சேர்த்து புலிகளுக்கு தாரைவார்த்து வந்தனர்.

ஆனால் இன்று அதே அமைப்பு (உலகத்தமிழர் ஓருங்கிணைப்பு குழு WTCC)  „சுவிஸ் தமிழர் ஓருங்கிணைப்பு குழு (STCC)' என்ற பெயரில் சுவிற்சர்லாந்தில் தோற்றம் பெற்றுள்ளதுடன்;, மீண்டும் பொதுமையாக இயங்கத் துடிக்கும் ஆலயங்கள், மற்றும் கல்வி, கலை கலாச்சார அமைப்புக்களுக்குள் புகுந்து, ஒன்றாக இயங்குவதுபோல் நடித்து அவர்களின் நிம்மதியைக் குலைத்து வருவதுடன், அவ் அமைப்புக்களின் செயற்பாட்டுக்கு அவசியமான நிதியையும் அபகரிக்கும் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

2009 ம் ஆண்டு போரட்டம் முடக்கப்ட்டு விடுதலைப்புலிகளின் தலைமை அழிக்கப்பட்ட போது தன்னார்வகுழுக்கள் தமது தனித்துவத்தினை நிலைநாட்ட முனைந்துள்ளனர். அத்தகையதொரு நோக்கில்  சொலத்தூண் தமிழர் நலன்புரி சங்கமும்(Tamil Welfare Association Solothurn TWAS) இவர்களிடம் இருந்து பிரிந்து கடந்த ஓராண்டு காலமாக தனித்துவத்துடன் செயற்பட்டும் வந்தது. ஆனால் உருசிகண்ட பூனைகளாகிய சுவிஸ் தமிழர் ஓருங்கமைப்புக் குழு, கடந்த ஏப்பிரலில் நிகழ்ந்த இசைக்குயில் போட்டி நிகழ்ச்சிக்கு உதவும் நோக்கில்  உள்நுழைந்தனர். நிகழ்ச்சி முடிந்ததுதான் தாமதம்! சுவிற்சர்லாந்து சொலத்தூண் மானிலத்தில்; செயற்பட்டு வந்த சொலத்தூண் நலன்புரி சங்கத்தினதும், அதன் செயற்திட்டத்தின் கீழ் இயங்கி வருகின்ற துர்கை அம்மன் கோவிலினதும் நிதியிலும் தமது கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளனர்.  

சோலத்தூண் நலன்புரி சங்கம் (Tamil Welfare Association Solothurn TWAS) இப்பிரதேசத்தில் வாழும் தழிழ் மக்களின் கலை, கலச்சாரம் மற்றும் ஆன்மீக வழிமுறைகளை கருத்தில் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட ஒன்று. அக்காலகட்டத்தில் தமிழ் தேசியத்தினை பெரும்பான்மை தமிழ்மக்கள் ஆதரத்தது மட்டுமல்லாது விடுதலைப்புலிகளுக்கு பெரும் நிதிப்பங்களிப்பினையும் செய்துவந்துள்ளனர். அவ்வேளையில் இச்சங்கத்தினால் பெரும் நிதி திரட்டக்கூடிய வேலைத்திட்டங்கள் பல முன்வைக்கப்பட்டு அவை வெற்றிகரமாக செயலாற்றிக்கொண்டுமிருந்தன. இவற்றில் சுவிற்சர்லாந்தில் உள்ள அனைத்து மானிலங்களில் வாழும் தமிழ் இளையோர்களுக்கிடையிலான நடன, இசை போட்டிகள் (இசைக்குயில், நாட்டியமயில்) முக்கிய இடத்தைப் பெற்றன.





ஓருங்கிணைப்பு குழுவினால்  (STCC)' முன்னெடுக்கப்பட்ட மக்கள் கடை போன்ற வேலத்திட்டங்கள் நட்டத்தைத் தழுவியபோது, அதனை ஈடுசெய்வதற்கும் சொலத்தூண் நலன்புரி சங்கத்தின் நிதி பாரிய அளவில் உதவியது. ஆரம்பத்திலிருந்தே இத்தகைய நடவடிக்கைகளில் திருப்பியற்றிருந்த பல நிhவாக உறுப்பினர்கள், „பரவாயில்லை, பணம் தேசியவிடுதலைக்கே பயன்படுத்தப்படுகின்றது' என நினைத்து அமைதியடைந்தனர். புலம்பெயர் புலிகளினால் ஓவ்வொரு தனிநபர்களிடம் இருந்து ஓரு இலட்சம் சுவிஸ்பிராங்குகள் வங்கிக் கடனூடாக போர் நிதியாக வசூலிக்கப்பட்டது. இது போர் முடிவுக்கு வரும் தறுவாயிலும் தொடர்ந்தது! 2009 ஆம் ஆண்டு போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்ததையடுத்து சொலத்தூண் நலன்புரிசங்கம் நாட்டியமயில், இசைக்குயில் நிகழ்ச்சிகளை நடாத்தி போரில் அங்கவீனமுற்ற போராளிகளிற்கும் போரினால் பாதிக்கபட்ட அல்லது வாழ்வாதரங்களை இழந்த மக்களுக்கும் வழங்குவதாக தீhமானித்திருந்தனர்.

அதேவேளை கடனெடுத்துக் கொடுத்த அப்பாவிகள் பலர் பணத்தினை வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்தமுடியாத முடியாத நிலையில் திண்டாடினர். பாவம்;, இன்றும் திண்டாடுகின்றனர். இச்சந்தர்பத்தில் ஓருங்கிணைப்பு குழுவினர், நலன்புரிச் சங்கத்திடம் அப்போதிருந்த பணத்தை, கடன் எடுத்துக் கொடுத்தவர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதற்குப் பதிலாக தமது சகபாடிகளுக்கும், தமக்கு நெருங்கியவர்களுக்கும் மட்டும் கொடுக்கும் படி நிர்பந்தித்தனர்.
இதன் விளைவாக காலம்காலமாக, சிறுகச் சிறுக திரட்சிபெற்ற சங்க நிர்வாகிகளுக்கிடையிலான முரண்பாடுகள் ஒரேதடவையில் வெளிப்பட்டன. ஒரு சிறு பகுதினர் நலன்புரிச் சங்கத்தினை, உலகத்தமிழர் ஒருங்கிணைப்புப்புக் குழுவுக்கு ஆதரவாக நகர்த்துவதற்கும் முனைப்பட்டனர்.

இந் நிலைமையில், (பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட) நலன்புரிச் சங்கம் அதன் முதல் நடவடிக்கையாக 2015 செப்டம்பரில் பொது கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இது தமக்கு பாதகமாக அமையும் என கருதிய ஓருங்கிணைப்பு குழு இப்பொது கூட்டத்தினை குழப்பும் முகமாக வேறொரு கூட்டத்தை ஒழுங்குசெய்து, பொதுக் கூட்டத்திற்கு வந்தவர்கள் சிலரை தனது கூட்டத்திற்கு வருமாறு அழைத்தது. ஓருங்கிணைப்புக் குழுனால் நடாத்தபட்ட அக் கூட்டத்தில் சங்கத்துககு அப்பாற்பட்ட, சொலத்தூண் மாநிலத்தைச் சாராததவர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இவர்களால் போலியாக உருவாக்கபட்ட நலன்புரிசங்கத்தினதும் கிறென்கன் துர்கை அம்மன் கோவிலது போலி பதிவின் ஆதாரங்கள். 













இதேவேளை பெரும்பான்மை செயற்குழு உறுப்பினர்களை கொண்ட உண்மையான நலன்புரிச் சங்கம் தமது நிர்வாகத்தினை இளையோரிடம் ஓப்படைப்பதாக முடிவெடுத்தது. பெரும்பான்மை பலத்தினை கொண்ட தம்மை சட்டரீதியில் பதிந்து, இசைக்குயில் போட்டி நிகழ்ச்சியை நடாத்துவதற்கும் தயாரானது.

நலன்புரிச் சங்கத்திற்கு எதிராகவும் அடாத்தாகவும் ஓருங்கிணைப்புக் குழுவின் ஆதரவுடன் கூடிய பிரிவும் சட்டத்திற்கு விரோதமான முறையில் தாமும் புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்து அதே பெயரில் தன்னையும் பதிவு செய்தது. இசைக்குயில் போட்டி நிகழ்ச்சியை தாமும் நடாத்தபோவதாக அறிவித்திருந்தது. 
ஆனால் போட்டியில் கலந்து கொள்ளும் பிள்ளைகளின் பெரும்பான்மையினரான பெற்றோர்களும் ஆசிரியர்களும பெரும்பான்மை நிர்வாக உறுப்பினர்களை கொண்ட நலன்புரிச்சங்க நிர்வாகத்துக்கே ஆதரவாக இருந்தனர். ஓருங்கிணைப்பு குழு தம்மால் இசைக்குயில் நடத்துவது சாத்தியமற்றது என கருதியபோது பெரும்பான்மை பலத்தினை கொண்ட சொலத்தூண் நலன் புரிச்சங்கத்தின் நிர்வாக சபையுடன் ஓர் சமரசத்திற்கு வந்து தாமும் இணைந்து இசைக்குயில் நிகழ்ச்சியை நடாத்துவதாக உடன்பாட்டிற்கு வந்தனர். இவற்றை உண்மை என நம்பி பெரும்பான்மை பலத்தினை கொண்ட நலன்புரி சங்கம் ஏமாந்து போனது.
நிகழ்ச்சி முடிந்தவுடன் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஆதரவுடன் மீண்டும் நலன்புரி சங்கத்தையும் கோவிலையும் கையகப்படுத்தும் நடவடிக்கைள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டன. இச்சூழ்சியின் உட்சக் கட்டமாக கோயில் நிர்வாகத்துக்கு சொந்தமான பணம் இருபது ஆயிரம் பிராங் -சந்தாபணம்- சூறையாடப்பட்டதுடன், நலன்புரிசங்கத்தின் வங்கிக்கணக்கும் முடக்கபட்டுள்ளது. 

இந் நடவடிக்ககை ஓர் பக்கா கிறிமினல் நடவடிக்ககை ஆகும். ஓருங்கிணைப்பு குழு விடுதலையை விட பணத்தினையே நேசித்தனர் என்பதற்கு இந்த நடவடிக்ககை ஓர் சிறந்த சாட்சியமாகிறது! சுவிஸ் தமிழர் ஓருங்கிணைப்பு (Tamil Welfare Association Solothurn TWAS)  அமைப்பின் கீழ் தனியார் பாதுகாப்பு படை (Verein Tamil Guard Swiss) ஒன்று இயங்கிவருகின்றது. இப்பதிவில் தாம் அரசியல்கட்சி மற்றும் மதசார்பற்றவர்கள் என குறிப்பிட்டுள்ளது உலகை ஏமாற்றும் நடவடிக்கை.
சுவிஸ் தமிழர் ஓருங்கிணைப்பு குழு வின் செயற்பாட்டுடனான செயற்பாடுகள் இலங்கையில் தடைசெய்யபட்டுள்ளது.ஆதலால் இவ்வமைப்பிற்கு நிதி சேர்த்தமையினாலும் ஊர்வங்களில் பங்குபற்றியதாலும் இரண்டாவது அகதி தஞ்சம் கோரியுள்ள சம்பவங்களும் நடந்தேறியுள்ளன. 


























இந் நிலைமைகளில், பெரும்பான்மை பலத்தினை கொண்ட நலன்புரிசங்க உறுப்பினர்களின் கைகளை பலப்படுத்துங்கள்! தமிழ்த் தேசியத்தினை வாய்கிழிய கத்தி, மக்களின் சொத்துகளையும் சுயாதீனத்தினையும் முடக்குவதற்கு முனையும் சக்திகளை மக்கள் இனங்கண்டு, உடனடியாக இவர்களின் அடவாடிதனங்களுக்கு முற்றுபுள்ளி வைப்பதற்கு முன்வரவேண்டும்!!!
க.சுதாகரன் 5.06.2016