Dienstag, 12. März 2024

இமாலய பிரகடனமும் அதி தீவிர தமிழ் தேசியவாத மீழ் தோற்றமும்.

 12.03.2024 /கணபதிப்பிள்ளை சுதாகரன்

மாலய பிரகடத்தினை இலங்கைத் தமிழ்க்களின் தீர்வு பொதி என புலம்பெயர்  அதி தீவிர தமிழ் தேசியவாதிகள் நம்பியதன் விளைவினாகவே துவாராகவின் தோற்றமும் இலங்கைத் தமிரசுக்கட்சியின்  தலைவர் தெரிவியினையும் பார்க்க வேண்டி உள்ளது.

இமாலய பிரகடத்தினை புலிகளின் ஆதரவு தரப்பாக  செயற்பட்ட Global Tamil Forum மினாலும் கனடிய தமிழ் காங்கிரசினாலேயே கொண்டுவரப்பட்டது.

புலத்தில் வாழும் பழைய புலிகள் ஆதரவாளர்களும் அமைப்புக்களும் இன்றும் ஈழவிடுதலைக் கனவிலேயே  வாழும் சமூகமாகவே உள்ளது. தமிழ் தேசியம் என்பதனை ஓர் புனிதக்கோட்பாடகவும் தாம் நம்பும் ஈழமே சாத்தியம் என நினைப்பவர்ககளுமே பெரும்பாண்மையாக உள்ளனர். இக்கருத்துக்களையும் விமர்சிப்பவர்களும் சாத்தியபாடுகள் பற்றி ஆய்வு செய்பவர்களும் துரோகியாக கணிக்கும் பண்பே மேலோங்கி உள்ளது.

இலங்கை வாழ் தமிழ்மக்களிற்கான ஒரு அதிகார பரவாலக்கத்தின் அவசியத்தினையும் அரசியல் உரிமைகளை பற்றி சிந்திக்காது தனியே தமிழ் ஈழம் தான் சர்வ விமோர்சனமாக நம்பி வாழ்ந்துள்ள சமூகமாகவே பல புலம்பெயர் மக்கள் உள்ளனர். மாற்றுத் தீர்வுகளை முன்வைப்பவர்களை துரோகிகளாக இனங்கண்டு ஒதுக்கியதன் விளைவாக ஓர் ஆரோக்கியமான அரசியல் விவாதங்கள் நடைபெறவில்லை. மாறாக விடுதலை புலிகினால்  முன்வைக்கபட்ட தமிழ் ஈழ கோரிக்கையை நியாயப்படுத்தும் கருத்து உருவாக்கத்தினை மட்டுமே ஓருதலைபட்சமாக ஊடகங்கள் புலத்து மக்களிடம் விதைத்துள்ளது. இந்த ஊடகங்கள் விடுதலைப்புலிகள் போராடிய காலத்தில் அவர்களின் நிதி ஒத்தாசையுடன் முழங்கின. 

புலிகளின் தமிழ் தேசியம் புலத்தில் ஒரு பிராண்டாக (Trade Mark or Brand) மாறின. தமிழ் தேசியமும் தமிழ் ஈழத்தினை ஆதரித்தாலே புலத்து சமூகத்தில் ஏற்றுகொள்பவர்களாக மதிக்கபட்டனர். இதனால் புலத்தில் இருந்த பெரும்பாண்மையான வியாபாரிகள் விடுதலை புலிகளிற்கு நிதியை வாரி இறைத்தனர். இதன் எச்சசொச்ச பண்பு இன்றும் தொடர்கின்றது. மாற்று கருத்துக்களை முன்வைத்த அணியினர் சிறு பத்திரிகைகள் ஆகவும் முகநூல் இணைய செய்திகளாக குறுகிப்போயின. சிறு பத்திரிகைகளின் வாசகர் சுற்றும் கேள்வியும் குறைந்து சென்றது. இது மட்டுமல்லாது புலிகள் கோயில்கள், கலைநிகழ்வுகள், தமிழ் பாடசாலைகள், தாம்சார்ந்த இலக்கியங்களையும், தன்னகப்படுத்தியிருந்தது. அதன் விளைவாகவே ஒற்றைப்பரிணாமமான கருத்துக்களை கொண்ட சமூகமாக முடக்கபட்டுள்ளது.

இதனால் இந்த சமூகத்தினை ஆட்கொண்டிருக்கும் கருத்தினால் இன்று ஆயுத போராட்டமற்ற நிலையிலும் தாம் நம்பிய தீர்வே ஓரே வழிமுறை என நம்புகின்றது. இந்த கருத்திற்கு மாற்றீடாக தமது ஆதரவு சக்திகளே முன்வைக்கும் போது தம்முடன் பயணித்தவர்களிற்கே தூரோகிப்பட்டம் கொடுக்க தயாராகின்றது.

இலங்கையை ஆட்சி செய்யும் முக்கிய மூன்று கட்டமைப்புக்கள் உள்ளன. 1. பெளத்தபீடாதிபதிகள்

2. மக்களால் தெரிவு செய்யபட்ட பாராளுமன்றம்.

3. இராணுவம்


தமிழ் மக்களிற்கான தீர்வுப்பொதிகள் வரும்பொது முதலில் முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் பொளத்த பீடாதிபதிகள். இதுவரைகாலமும் தமிழரிற்கான தீர்வு திட்டங்களில் இந்திய நோர்வே அரசுகள் தனியே இலங்கை அரசுடனே பேச்சுவார்த்தை நடாத்தி இருந்தன.

பல தேசிய இனங்கள் வாழும் நாடுகளில் முரண்பாடுகளை முடிவிற்கு கொண்டுவருவதற்கு இனங்களிற்கிடையான புரிந்துணர்வே அடிப்பையாக உள்ளது. பேரினவாதத்தின் உயிர்நாடியாக இருந்த பொளத்த பீடங்களை அழைத்து முதலில் சிறுபாண்மை மக்களின் உரிமைக்கான நியாயப்பாட்டினை முன்வைத்து சிங்களமக்கள் மத்தியில் கலந்துரையாடலினை  மேற்கொள்வது ஓர் மிக முக்கிய நகர்வாகும். இதனடிப்படையில் இமாலய திட்டத்தினை முன்மொழிந்திருந்தால் நான் இதனை ஓர் சரியான நகர்வாகவே பார்க்கின்றேன். ஆனால் தமிழ் ஈழமே நிரந்தர தீர்வு எனும் சக்திகள் இம் இமாலய முனைப்பினை தமிழ்மக்களிற்கு செய்யும் தூரோகமாகவும் பேரினவாதத்திற்கு அடிபடியும் செயலாககருதியது.

2009 இற்கு பின்னர் புலத்தில் பல பிரிவுகளாக உடைந்து கிடந்த புலிகள் ஆதரவு அமைப்புக்கள். இமாலய திட்டங்களிற்கும் முன்னெடுப்பிற்கு முட்டுகட்டையாக ஒண்று திரண்டனர். இம்முன்னெடுப்பினை ஓர் தீர்வுதிட்டம் என திரிபுபடுத்து தமிழ்மக்களை ஓர் தேசிய இனமாக வரையறுக்கவில்லை என போர் கொடி தூக்கினர். இம் முன்னெடுப்பிற்கு தமிழ் அரசுகட்சியின் (Illankai Tamil Arasu Kachchi, Tamil Federal Party) பேச்சாளரான சுமந்திரனும் ஆதரவாக செயற்பட்டிருந்தார். இவர் மீது துரோகிப்பட்டம் குடுப்பதற்கான முழு வேலைத்திட்டமும் புலத்தில் இருந்து வழங்கபட்ட நிதி முலமாக நன்கு திட்டமிடப்பட்டு நடாத்தபட்டிருந்தது.

இக்காலப்பகுதியிலேயே தமிழ் அரசுக் கட்சிக்கான தலைவர் தேர்தல் நடைபெற்றிருந்தது. இக் கடசிக்குள் நடைபெற்ற தேர்தலில் பங்கு பற்றிய வேட்பாளர்களை சிறீதரனை தமிழ் தேசியத்திற்கு ஆதரவானவராகவும் சுமந்திரனை தமிழ்தேசியத்திற்கு எதிரானவர்களாக சித்தரித்து இருந்தனர். ஒருகட்சியின் உட்கட்சி தேர்தலிற்கு புலத்தின் நிதியும் மேடியாவும் இணைந்து புலத்தில் உள்ள தமிழ் தேசியவாதிகளிற்கு ஆமா போடும் நபரான சிறீதரனை அக்கட்சிக்கு தலைவராக்கியது. 

அது மட்டுமல்லாது  இமாலய திட்டத்திற்கு கனேடிய தமிழ்காங்கிரசும் ஆதரவு தெரிவித்திருந்தது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக கனடாவில் உள்ள அதி தீவிர தேசியம் பேசும் ஆதரவாளார்களால் அக்கட்சி காரியாளயம் தாக்கபட்டது.

இன்னுமொரு பிரிவினராகிய விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிராபகரனும் அவரது மனைவியும் மகள் துவாராகவும் உயிருடன் இருப்பதாக கூறும் கூட்டமும் தமது பங்கிற்கு போலி துவாராகவை தமிழ் மேடியாக்களிறகு அழைத்து வந்தது. மக்களை நம்பவைக்கும் முயறற்சியில் ஈடுபட்டனர். உயிருடன் இருக்கின்றார்கள் என்ற வதந்தியின் போது பல தனிப்பட்டவர்கள் வியாபாரிகளிடமிருந்து பல தொகை பணங்களை சேகரித்து இருந்தனர். இன்னமும் இந்த நிதியை பெருக்குவதற்கும் சிதறி உள்ள பல பழைய புலிகளின் பிரிவுகளையும் ஒன்றணைப்பதற்கும் துவராகவின் வருகை அமையும் என கற்பனை செய்தனர். ஆனால் பல எதிர்மறைவான சம்பவங்களே நடந்தேறின.

இமாலய பிரகடத்தின் மூலம் சிங்கள பேரினவாத கருத்தியல்களை அதற்கு முண்டு கொடுப்பவர்களை வைத்தே, சிங்கள மக்களிடையே சிந்தனை மாற்றத்தினை தேர்தல் காலத்தில் முன்வைத்து ஓர் சிறிய நகர்வாக அமையலாம் என Global Tamil Form எண்ணியது.  Global Tamil Form உடன் ஏற்கனவே அரசியலில் பயணித்தவர்களே எதிராளியானர்கள்.

முதலில் தமிழ் தேசியம் என்றால் என்ன?

இலங்கைவாழ் தமிழர்கனிற்கு எவ்வகையான தீர்வு அவசியமானது? அவ்வகை தீர்வினை அடைவதற்காண வழிமுறை என்ன?

இனங்களிற்கிடையான சமாதனம் இன்றி எந்த தீர்வும் சாத்தியம் இல்லை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள கட்சிகள் மட்டும் தமது வேட்பாளர்களை தமிழ் சிங்கள பகுதிகளில் முன்னிறுத்துகின்றது.

தமிழ்கட்சிகள் தனியே தமிழ் பகுதிகளுடன் நிற்பது இனங்களிற்கிடையான சமாதனத்தினை உண்டுபண்ணுமா?

சமஷ்டியை தீர்வாக பேசும் கட்சிகள் சமஷ்டி ஆட்சி நடைமுறையில் உள்நாட்டில் உள்ள பல தேசிய இனங்களை ஒன்றிணைக்கும் விதமாக கட்சிகள் எவ்வாறு வடிவமைக்க வேண்டும்?

தற்பொழுது உள்ள சூழலில் தேசிய இனங்கள் தமது சுய நிர்ணய உரிமையை எவ்வாறு பெறுவது சாத்தியம்

போன்ற பல கேள்விகளிற்கும் விடைகள் தேடவேண்டும். கடந்த காலங்களில் பல முன்னெடுப்புக்களிற்கு தனியே பேரினவாதம் மட்டுமே தடையாக அமையவில்லை. தமிழ் மக்களது பிழையான முடிவுகளும் அமைந்துள்ளது என்பதே கசப்பான உண்மை ஆகும். அவ்வகையான பிழையான நகர்வுகள் பேரினவாதம் மீண்டும் சிறுபாண்மை இனங்கள் மீது சந்தேகம் கொள்வதற்கும், வன்முறையை கட்ட அவிழ்பதற்கும், அரசியல் தீர்வுகளை  நடைமுறைப்படுத்துவதில் தடையாகவே  அமைந்துள்ளது.


Sonntag, 18. Februar 2024

தலைமைபண்பும் அரசியலும்

 - கணபதிப்பிள்ளை சுதாகரன் 18/02/2024

நெலசன் மண்டேலா ஒருமுறை கூறினார், "நல்ல விஷயங்கள் நடக்கும் போது நீங்கள் வெற்றியைக் கொண்டாடும்போது பின்னால் இருந்து வழிநடத்துவதும் மற்றவர்களை முன்னால் வைப்பதும் நல்லது. ஆபத்து வரும்போது நீங்கள் முன் வரிசையில் நிற்கிறீர்கள். அப்போது உங்கள் தலைமைத்துவத்தை மக்கள் பாராட்டுவார்கள். பல வழிகளில், மண்டேலா ஒரு கவனமுள்ள தலைவராக இருந்தார், அவர் தனது சுய விழிப்புணர்வை வளர்த்து, உணர்ச்சிகளை நிர்வகிப்பதில் பெரும் முதலீடு செய்துள்ளார். உண்மையான கவனமுள்ள தலைவர் மற்றவர்களும் இலக்கை நோக்கி நகரும்படி அறிவுறுத்தி வந்துள்ளார். இலக்குகளிற்கான தலைமைத்துவத்திைன பொறுப்பெடுவதற்கு முன்னர் முதலில் தங்கள் வாழ்க்கையை ஒழுங்கமைத்துள்ளார்.

நீங்கள் நேசிப்பவர்களின் இதயங்களில் நீங்கள் வாழும்போது, ​​நீங்கள் ஒருபோதும் இறக்க மாட்டீர்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

தலைமைத்துவம் என்றால் என்ன? தலைமைத்துவம் என்பது ஒரு நல்ல நோக்கத்திற்காக மற்ற தனிநபர்கள், குழுக்கள், நிறுவனங்கள் அல்லது சமூகத்தை மாற்றுவதற்கு, வழிநடத்துவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும் மற்றும் வழிகாட்டுவதற்கும் ஒரு தனிநபரின் திறன் ஆகும்.

ஒரு அரசியல் தலைவர் யார்

ஒரு அரசியல் தலைவர் என்பது சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் பொது ஊழியர். அவர்/அவள் வாக்கு மூலம் சமூகத்தின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரு அரசியல் தலைவருக்கு 'அரசியல் திறமை' தேவை; வெறும் 'அரசியல்வாதி'யாக இருப்பதற்கு மாறாக - இது  ஒரு பதவியை ராஜினாமா செய்தாலும் அல்லது தேர்தலில் தோல்வியடைந்தாலும் கூட, நேர்மை மற்றும் சரியானவற்றிற்காக நிற்கும் விருப்பத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.

ஒரு நல்ல அரசியல் தலைவராக இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஒரு நல்ல அரசியல் தலைவர், முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டவர், முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார், பிரச்சினைகளை நிர்வகிப்பதற்கும் சரிசெய்வதற்கும் விருப்பம் உள்ளவர் மற்றும் முக்கியமாக சரியான நிலைபாடுகளை  நிறுத்துபவர். ஒரு அரசியல் தலைவர் தனது பதவி, அதிகாரம், அதிகாரம் பற்றிக் கவலைப்படக் கூடாது. அவர் எப்போதும் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும் மற்றும் தனது மக்களை மதிக்க வேண்டும். ஒவ்வொரு அரசியல் தலைவரும் எதிர்கால வளர்ச்சியை நோக்கி சிந்திக்கவும் செயல்படவும் திறன்கள் மற்றும் ஆராய்ச்சி திறன்களைப் பெற வேண்டும். ஒரு வெற்றிகரமான தலைவர் ஐந்து முக்கிய நற்பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்: ஒழுக்கம், நம்பகத்தன்மை, தைரியம், மனிதநேயம், புத்திசாலித்தனம்,

ஒரு நல்ல அரசியல் தலைவரை உருவாக்குவது எது?

நல்ல அரசியல் தலைமைத்துவ திறன் கொண்ட ஒருவர் வெற்றி தோல்வியை எளிதில் பிரித்தறியும் ஒரு வெற்றிகரமான தலைவராக நிரூபிப்பார். ஒரு வெற்றிகரமான தலைவருக்கு தொலைநோக்கு கனவு உள்ளது மற்றும் நவீன உலகில் தனது பார்வைகளை வெற்றிக் கதைகளாக மாற்றுவது எப்படி என்பதைப் புரிந்துகொள்கிறார். அரசியல் தலைமைத்துவத்தில் வெற்றிபெறத் தேவையான சில திறன்களைப் பார்ப்போம்.

1. நல்ல தொடர்பாளர்

ஒரு தலைவர் தனது பார்வையை தொலைநோக்கு இலக்கை  மக்களிடம் தெளிவாகத் முன்வைக்க வேண்டும்.  தலைவர் தனது இலக்கை திறம்பட தெரிவிக்க முடியாவிட்டால், அவர் ஒரு நல்ல தலைவராக இருக்க முடியாது. நல்ல வார்த்தைகளும் கருத்துக்களும்  மக்களை ஊக்குவித்து மக்களை இலக்குகளை நோக்கிபயணிக்க வைக்கும்.

2. நேர்மை மற்றும் திறமை

நேர்மையும் திறமையும் ஒரு வலுவான தலைவரை உருவாக்கும். அத்தகைய குணங்களை ஒருவர் புறக்கணித்தால், அவர் தனது ஆதரவாளர்களிடமிருந்து எவ்வாறு நேர்மையைக் கோரமுடியும்? சிறந்த தலைவர்கள் ஏன் பாற்ற படுகின்றார்கள் ஏனென்றால், அவர்கள் தங்கள் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளை வைத்திருக்கிறார்கள், மேலும் அவற்றை நெறிமுறைபடுத்தி  சாத்தியமாற்றுவதற்காக போராடுகின்றனர்.

3. முடிவெடுப்பவர்

ஒரு தலைவர் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கக்கூடியவராக இருக்க வேண்டும். மக்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தலைவர்கள் மேற்கொள்கின்றனர். ஒரு தலைவர் ஒரு முடிவை எடுப்பதற்கு முன் நீண்ட நேரத்தினை எடுத்து  ஆழமாக சிந்திக்க வேண்டும், ஆனால் முடிவெடுத்தவுடன் அதனை நேர்தியாக கடைப்பிடிக்க வேண்டும். Einstein குறியது போல் If I had an hour to solve a problem I'd spend 55 minutes thinking about the problem and five minutes thinking about solutions, உங்களிற்கு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு 60 நிமிடங்கள் இருந்தால் பிரச்சினையை புரிந்து கொள்வதற்கு 55 நிமிடங்களை செலவளித்தாலே 5 நிமிடங்களில் பிரச்சினைகளை தீர்பதற்கான வழிமுறையை கண்டுபிடித்து விடலாம்.

4. மக்களிடம் நியாய பூர்வமான  கருத்துக்களை  எடுத்து சென்று  ஊக்கப்படுத்தக்கூடியவராக இருக்க வேண்டும்,

ஒரு தலைவர் செய்ய வேண்டிய கடினமான விஷயம், அவர்களைப் பின்பற்றுவதற்கான நியாய பூர்வமான கருத்துக்களை  மக்களை ஏற்றுகொள்ள  வைக்கவேண்டும்.  ஒரு தலைவராக, நீங்கள் நம்பிக்கையுடன் சிந்திக்க வேண்டும், மேலும் உங்கள் நேர்மறையான அணுகுமுறை உங்கள் செயல்களிலில் தெளிவு இருக்க வேண்டும். அவர் சக உறுப்பினர்களை அல்லது நிர்வாகத்தினை ஊக்குவிப்பதில் சிறந்து விளங்கினால், மட்டுமே தலைவராக இருக்க முடியும். புதிய தலைமைத்துவம் என்பது ஒருவர் சொல்வது எப்பவும் சரி என்று நம்பி மந்தைகள் போல் பின் தொடர்வது அல்ல. மக்களை ஒருங்கிணைத்து தலைவரும் இணைந்து பயணிப்பதே நவீன தலைமைத்துவ பண்பாக இருக்க முடியும்.

5.பணிகளை திறம்பட பகிர்ந்தளிக்க வேண்டும்

முக்கிய கடமைகளை திறமையான உறுப்பின தலைமைக்கு பகிர்வதும், சில விடயங்களில்  விட்டுகொடுப்புகளை செய்வதும் தலைவர்கள் மீது  தலைபண்பும் நம்பிக்கைகளும் வலுப்பெறும்.   உங்கள் உறுப்பினர்களிற்கு சுயசெயற்பாட்டு இடைவெளி கொடுக்காது எல்லாவற்றினை தலைவர்கள் தமது கையில் வைத்திருக்க முற்படும்போது Micromanagement நம்பிக்கையீனங்கள் எதிர்ப்புக்கள் மேலோங்கும். மைக்ரோமேனேஜ் செய்ய நீங்கள் முயற்சிக்கும்போது, நம்பிக்கையின்மை வளரக்கூடும்,

ஒரு அரசியல் தலைவரின் முதல் குறிக்கோள் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்க வேண்டும், தன்னை மட்டுமல்ல. அரசியல் சிக்கலானதாகவும், பெரும்பாலும் குழப்பமானதாகவும் இருக்கும் என்ற யதார்த்தத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும், ஒரு வலிமையான தலைவர் தனது செயல்களை ஒரு தேசத்திற்கு எது சரியோ அதைச் நடமுறைப்படுத்த முற்பட வேண்டும். மற்றும் "தனக்கு முன் தேசம்" என்ற கொள்கையின்படி வாழ வேண்டும். இவ்வாறு செயல்படுவதின் மூலமாகவே, ஒரு அரசியல் தலைவரால் தேவைப்பட்டால் நாட்டின் நலனுக்காக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியும். ஒரு தலைவர் தன்னம்பிக்கை கொண்ட தனித்துவமான துறை நிபுணர்களை அங்கீகரிக்க வேண்டும். சரியான தீர்ப்பின் அடிப்படையில் உடனடி மற்றும் நியாயமான நடவடிக்கைகளை எடுக்க தலைவர்களுக்கு சரியான நிபுணத்துவம் இருக்கவேண்டும்.

சமூக மாற்றத்திற்கு தலைமைத்துவம் முக்கிய கருவியாக உள்ளது. சமூக பிரச்சனைகளை சமாளிப்பது அல்லது சமூக நெறிமுறைகளை நவீனமயமாக்குவது மற்றும் ஒழிப்பது சரியான தலைமை இல்லாமல் சாத்தியமற்றது.

நெலசன் மண்டேலாவின் தலைமைத்துவம்

நெல்சன்மண்டலே  தனது உயர்ந்த இலட்சியங்களை நிலைநாட்ட அமைதியான கண்ணியம் கொண்ட மனிதராக இரந்துள்ளார். எப்போதும் பிரகாசமான புன்னகை மற்றும் மகத்தான மற்றும் அடக்கமான நகைச்சுவை உணர்வு கொண்ட ஒரு மனிதன். மண்டேலா போராட்டங்கள் மற்றும் வலிகளுக்கு அப்பால் பார்க்கும் ஒரு அரிய தொலைநோக்கு பார்வையாளராக இருந்துள்ளார். ஒரு நாள் மனிதகுலத்தின் சிறந்த பகுதிகள் மோசமான பகுதிகளை விட மேலோங்கும் என்று அவர் உறுதியாக நம்பினார். மன்னிப்பு மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் அவர்கள் இருந்ததை விட அவர் தனது எதிரிகளை சிறப்பாக கையாண்டார். அவர் நிறுவிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, மனித உரிமை மீறல்கள்,பற்றி முன்னெடுப்புக்கள் தற்பொழுதும் உலகில் நடைபெறும் மனித உரிமை மீறல்களிற்கு எதிராகவும் அனைத்து நாடுகளிலும் நீதியை அடைவதற்கு ஒரு சிறந்த முன் மாதிரியாகும்.

சட்டவல்லுணர்களும் அரசியலும்

சட்டத்தை உருவாக்குவதற்கு வழக்கறிஞர்கள் மிகவும் பொருத்தமானவர்கள். சட்டத்தின் மீதும், அதைச் சரியாகச் செயல்படுத்துவது குறித்தும் முழுப் பிடிப்புடன் உள்ளவர்கள். அதுமட்டுமின்றி, அது ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான தாக்கங்களையும் அவர்கள் நன்கு அறிவார்கள். மேலும், அவர்கள் தங்கள் நிலையைப் பாதுகாப்பதில் போதுமான அறிவாளிகள் மற்றும் அவர்களின் கருத்திற்கு பொருத்தமாக இருந்தால் மற்ற தரப்புடன் இணைந்து பணியாற்றத் தயங்க மாட்டார்கள்.

உலகில் பல நாடுகளில் சட்டவல்லுணர்கள் அரசியலில் மக்காளால் தெரிவு செய்யபட்ட பாராளமன்ற உறுப்பினர்களாக இருந்து வந்துள்ளனர். இதனடிப்படையில் ஆஸ்திரியாவில் தெரிவுசெய்யப்பட்டுள்ள 30 பிரதமர்களில் 11 பேர் சட் வல்லுணர்காக இருந்துள்ளனர். 

ஒடுக்கபட்ட இனத்தின் தலைமை

ஓடுக்கபட்டுள்ள ஓர் தேசிய இனங்களிற்காக போராடும் கடசிதலைமைகள் உள்நாட்டில் வாழும் மற்றை தேசியனங்களுடனும்  சர்வதேசத்துடனும் நல்ல தொடர்பாடலராக இருக்க வேண்டும். இதற்கு பல் மொழி ஆளுமை முக்கியத்தவம் பெறுகின்றது. தம்மை தாமே ஆளும் வலுமை பெற்ற இனம் அல்லது அரசுகளிற்கு பல் மொழியின் தலைமைத்துவம் இரண்டாம் பட்சமாக அமைகினறது.

Montag, 22. Januar 2024

தமிழ் அரசு கட்சியின் தேர்தலும் விசிறி தேசியவாதமும் (Fans Nationalism)

G. Suthakaran / 23.01.2024

தமிழ் அரசுக்கட்சி தனது தலைவரிற்கான தெரிவினை தேர்தல் மூலமாக நடாத்தியது பாராட்டதக்கது. இது ஓர் முனமாதிரியான செயல். மற்றும் இலங்கை இந்திய அரசியல் கட்சிகளிற்கும் முன்மாதிரியாக அமைந்தள்ளது என்பதனை மறுக்கமுடியாது.

ஆனால் தமது கட்சி சக வேட்பாளர்கள் மீது அதே கட்சியை சேர்ந்த அங்கத்தவர்களும் வேட்பாளர்களும் சுமந்திரன் மீது ஆதாரமற்ற குற்றசாட்டுக்ளை அள்ளி வீசியது அருவருக்கத்தக்தும் ஏற்றுக்கொள்ளமுடியாத செயற்பாடுகளாக அமைந்திருந்தது. ஆனாலும் சுமந்திரன் தரப்பிலிருந்து தன்னுடன் இருந்த சக வேட்பாளர்களிற்கு எதிராக எந்த ஒரு மலிவான பிரச்சாரங்கள் இடம்பெறவில்லை. தேர்தல் முடிவுகளை மதித்து வெற்றி பெற்ற வேட்பாளரை உட்சாகப்படுத்தி தனது தோல்வியை கெளரவமாக ஏற்றுக்கொண்டது அவரது தலைமைத்துவ பண்பின் சிறப்பினை எடுத்துரைக்கின்றது.


புலத்தில் உள்ள தமிழ்தேசியம் என்ற போர்வையில் தமது விசிறி தமிழ் தேசியவாதிகள் (Fans Nationalism) சுமந்திரனை தமிழ் தேசியத்திற்கு எதிரானவர் சித்தரித்து இருந்தனர். தமது வித்தைகளிற்கும் தாம்போடும் தாளத்திற்கு தலை அசைப்பவராக சிறிதரன் இருப்பார் என்பதனை புலத்து விசிறிகள் கணிப்பிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் வாக்களிற்கும் தகுதிபெற்ற தமிழ் அரசுக்கட்சியுடன் தமது விருப்பு வேட்பாளரை தெரிவு செய்வதற்கான அளுத்தங்களை கொடுத்திருந்தனர். இச்செயற்பாடுகளை பல்வேறுபட்ட சமூகவலைத்தளங்களில் பார்க்கூடியதாக இருந்தது.

ஒரு ஆளுமையான ஒருவரை தம்மால் நிர்வாகிக்க முடியாது என்பதனை புலத்து விசிறிகளும் மற்றும் உணர்ச்சி பேச்சுக்களிற்கு காலம் காலமாக அடிமையாக இருந்த இலங்கை வாழ் தமிழர்களும் நன்கு அறிந்து இருந்தனர். இவர்களிற்கு இரத்தபொட்டு வேண்டி நிற்கும் தலையாட்டி பொம்மை தேவைப்பட்டது. இதற்கு நன்கு பொருத்தமானவர் சிறீதரன். இவ்வகையாக பல பொம்மைகள் மற்றைய தமிழ் கட்சியிலும் உள்ளனர். இவ்வகையில் உதாரணபுத்திரராக உள்ளவர்கள் ஐயா விக்கினேஸ்வரன், கயேந்திரன், சிவாஜிலிங்கம்......போன்றோர் உள்ளனர்.

தமிழ் சமுகமூம் தலைமைகளும் பல தடவைகள் தமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை தாம் நம்பும் மற்றும் தமக்கே உரித்தான விசிறி தேசியத்தினால் (Fans Nationalism) பயன்படுத்தாது விட்டு்ளனர்.

தமிழ் அரசுகட்சி வருகின்ற தேர்தலில் மீண்டும் தமக்கு இரத்த பொட்டினையையும் வாக்குகளை தமதுபக்கம் குவிப்பதற்கு தகுதியான தலைவரையே தெரிவு செய்துள்ளனர். இந்த தலைமைக்கு சுமந்திரனை தெரிவு செய்து இருந்தால் மற்றைய தமிழ்கட்சிகளின் வாக்குவங்கி தானாகவே நிரம்பி இருக்கும். அதுமட்டுமல்லாது தமிழரசுகட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பல விழுக்காடுகளை காணவேண்டி நிலை ஏற்பட்டிருக்கும். வரப்போகின்ற நெருக்கடியில் இருந்து தமிழ் அரசு கட்சி தன்னை பாதுகாத்து கொண்டதாகவும் பார்க்க வேண்டி உள்ளது. மேலும் வருகின்ற தேர்தலில் சுமந்திரன் வெல்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாகவும் எதிர்வு கூறலாம்.

வாய்வீச்சு வீரர்களிற்கு வழங்கப்பட்ட ஓர் வாய்பாகவும் பார்க்கலாம். அல்லாது விடில் இது அழகான கனவாக மட்டும் இருந்துவிடும். வசிறிகளின் கனவு நனவாகி உள்ளது. இனி எந்த மேடை சரி இல்லை என்று கூறப்போகின்றனர்? ஆனால் இவர்களிற்கு ஓர் சிறீதரனையும் தேசியத்திற்கு எதிரானவர் என முத்திரை குத்தி தப்பிப்பதற்கான பென்னாண வாய்ப்பு மட்டும் எஞ்சி உள்ளது.

இலங்கையில் எப்போது  தமிழ்தரப்பபில் அதிதீவிர தேியவாதிகள் ஆளுமை பெறுகினறன்றதோ, அது சிங்கள பேரின தேசியவாதிகிற்கு பால்சோறு கிடைக்கின்ற மாதிரியான சம்பவங்களாகவே வரலாற்று ரீதியில் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தல் சிங்கள தேசியத்தினை இன்னும் பல ஆண்டுகள் வலுவூட்டவே செய்யும். இதனையே புலத்து விசிறிகளும் யாகம் செய்து காத்துள்ளனர்.

ஏன் புலத்தில் உள்ளவர்கள் நாட்டில் வாழ்பவர்களை விட ஒருபடி மேல் தம்மை கலாச்சார, தேசிய காவளராக அடையாளப்படுத்துகின்றனர்?

இது புலம் பெயர்ந்து வாழும் பல சமூகங்களிற்கு உரிய பொது பண்பாக உள்ளது. குறிப்பிட்ட கலாச்சாரத்தில் வாழ்ந்த மனிதன் பிறிதொரு கலச்சார சமூகத்துடன் வாழும் போது தனக்காண அடையாளம் இழப்பதாக உணர்கின்றான். இதனாலேயே தமது சொந்த நாட்டில் வாழ்பவர்களை விட இறுக்கமான கலாச்சார காவலர்களாகவும் தேசியவாதிகளாகவும் வாழ முனைகின்றனர். அத்துடன் இவர்கள் நின்றுகொள்ளாமல் தமது சொந்தநாட்டின் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றனர்.

புலம்பெயர் தமிழர்கள் பலர் இன்னமும் தனி நாட்டு கோரிக்கையில் உறுதியாக உள்ளனர். இவர்கள் தமது சொந்த நாட்டிற்கு போய் வாழப்போவதில்லை. அங்கு வாழும் மக்கள் தமது அரசியலை தீரமாணிக்கட்டும் என விட்டுவிடும் மனோபவமும் அற்றவர்களாகவே உள்ளனர். இதனால் இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைகளிற்கு முட்டுகட்டையாக சிங்கள தேசியம் உள்ளதோ அதேபோன்று புலத்தில் உள்ள விசிறி தேசியமும் ( Fans Nationalism) விடாப்பிடியாக இருக்கப்போகின்றது. இது ஓர் கசப்பான தொடர் வரலாறு.

நெல்சன் மண்டலா போன்ற ஓர் தமிழ் தலமை எப்பெழுது உருவாகும்?

Samstag, 20. Januar 2024

தமிழ் தேசியமும் தலைமத்துவ அவலங்களும்

தேசியம் பற்றிய புரிதல் அற்று இலங்கை தமிழர் அரசியல்வாதிகள் பலர்  இருப்பதை பார்க்கும் பொழுது கவலை அளிக்கின்றது. முதலில் தேசியம்பற்றி பேசுபவர்கள் மற்றைய தேசிய இனங்களை ஏற்றுக்கொள்ளவும் அங்கீகரிக்கவும் பக்குவப்படல் வேண்டும். தனியே தனது இனமே பல சிறப்பு அம்சங்களை கொண்டதாக தாமே நினைத்து பெருமை கொள்வது முட்டாள் தனமாது. தேசியம் கற்பிதமானதும் காலத்துக்கு ஏற்ப மாறுபாடுகளை கொண்டது என்பதனை மார்க்சிலிருந்து பல அரசியல் புத்தியீவிகள் விவாதித்து வந்துள்ளனர். இலங்கைத்தமிழரிடம் விடுதலைப்புலிகளும் தமிழ் மிதவாத கட்சிகளும் இந்தியாவில் சீமான் போன்ற அரசியல்வாதிகளும் தாம் சார்ந்த இலக்குகளை அடைவதற்கும் தேசியத்தினை ஆயுதமாக பயன்படுத்தி மக்களை அணிதிரட்ட பயன்படுத்த பட்டுள்ளது. இதனையே சிங்களத்தேசியமும் செய்கின்றது.


இன்று புலத்தில் தமிழர்கள் இடம் விடுதலைப்புலிகளால் விதைக்கபட்ட தமிழ்தேசியம் அவர்களின் இலக்கை நோக்கி மக்களை அணிதிரட்டவும் நிதிசேகரிக்கவும் நன்கு பயன்பட்டது. விடுதலைப்பபுலிகள் தளத்தில் இல்லாதபோதும் பலர் புரளிகளை பரப்பி விடுதலைப்புலிகளின் தேசியத்தினை உயிர்பித்து பணம்பறிப்பதில் பல பிரிவுகள் புலத்தில் உலாவருகின்றனர்.


இலங்கையில் உள்ள மிதவாத தமிழ்கடசியின் தலைவருக்கான தேர்தலில் மீண்டும் ஓர் தமிழ்தேசியம் பேசுபொருளாக எழுந்துள்ளது. தமிழ் அரசுகட்சி மூன்று வேடபாளர்களை கட்சித்தலைவர் தேர்வில் நிறுத்தி உள்ளனர். இந்த வேட்பாளர்களில் இருவர் சைவசமயத்தவரகள். ஒருவர் கிறுஸ்துவ மதத்தினை சார்ந்தவர். இப்பொழுது சில தமிழ் தேசியம் பேசும் அறப்படித்ததுகள் தாம் ஆதரிக்கும் சைவசமய வேட்பாளரிற்கு ஆதரவாக தமிழ் தேசியம் வரையறுக்கபடுகின்றனர்.


தலைமைத்துவம் என்பது இலகுவானதல்ல. வழிநடத்தல்களிற்காண பண்பும் அனைத்து விவாதங்களயும் பல்வேறுபட்ட விடயங்களை கூர்ந்து செவி சாய்க்கும் பண்புகளகொண்ட ஒருவராக இருக்கவேண்டும்.


இலங்கை இந்திய நாடுகளில் தலைமைத்துவம்பற்றிய விவாதங்கள் குறைவாகவே உள்ளது. இராணுவம்போல் மறுபேச்சு அற்று பின்தொடர்வது மட்டுமே தலைமை என்ற பழமைவாத சிந்தனை முறையே உள்ளது.


ஓர் சமூகம் எப்பொழுது ஆராக்கியமான கருத்துபரிமாற்றங்களையும் புதிய கருத்துக்களையும் மாற்றங்களையும் ஏற்க மறுக்கினறாதோ அந்த சமூகம் இந்த புதிய புவியியல் மாற்ற அரசியலில் இரையாகிவிடும் வாய்ப்பே அதிகமாக உள்ளது.


முதலில் இலங்கையில் வாழும் தமிழர்களும் புலத்தில் வாழும் தமிழர்களும் நடந்துமுடிந்த ஆயுதபோராட்டம் ,மற்றும் அரசியல் நகர்வுகளில் நடைபெற்ற தவறுகள் சரிகள் பற்றி பக்க சார்பற்ற விமர்சனங்களிற்கு தயாராக வேண்டும். அதற்கான அரசியல் புவியியல் சூழல்பற்றிய அறிவை வளர்த்து கொள்ளல் வெண்டும்.மாறாகா நாம் பிறப்பிலையே அறிவுயீவிகள் உலகத்தினையே ஆணடவர்கள் என்ற மமதையில் இருந்தால் இலங்கைத்தமிழர்கள் காணாமல் ஆட்கப்படுவர் என்பது நிட்சயமானதாக மாறிவிடும்.


அதுமட்டுமல்லாது உணர்ச்சிகளிற்கும் தம்பட்ங்களிற்கும் அடிமையாகாது கசப்பாண உண்மைகளை அறிந்துகொள்வதற்கும் ஏற்றுகொள்வதற்கு தயார் ஆகவேண்டும்.

Mittwoch, 1. März 2023

தமிழ்நாட்டில் கிட்லர் உயிருடன்? அவதானம் தமிழ் நாட்டு மக்களே !

 

சீமானின் தமிழ் தேசிய இனவாதம் உச்சத்தைதொட்டுள்ளது. தனது அரசியல் பிழைப்பிற்காக விடுதலைப்புலிகளின் ஆதரவு அலையை குத்தைகக்கு எடுத்து அரசியல் செய்யும் ஓர் நடிகன்.நடைபெறஇருக்கும் தேர்தல் பிரச்சாரங்களின் போது எவ்வித அரசியல் தெளிவும் அற்று கிட்லரின் அகங்கார தேசிய வெறி பேச்சுக்களை கோட்பாடாக எடுத்து பேசுகின்றார். அதுமட்டுமல்லாது நாஜிகளது சின்னத்தையும் தனது கட்சியின் அடையாளமாக பயன்படுத்துகின்றார். இதனை வேடிக்கை பார்க்கும் புலத்திலுள்ள ஈழத்து தம்பிகளும் மொளனம் சாதிக்கின்றனர். வடக்கிலிருந்து குறைந்த கூலிக்கு தமிழ் நாட்டிற்கு வேலைக்குவரும் வறுமைகாட்டிற்கு கீழுள்ள மக்கள் மீது அவிழ்துவிட்ட தீ.  இன்று வெளி மாநிலங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களிற்கு இனவாத தீ திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த பெருமை இவ்வகையில் தேசியம் என்ற பெயரில் அரசியல் நடத்தும் அறிவிலி சீமானுக்கே உரித்தாகும். எத்தனை பொய்களையும் தான் முன்வைத்த விடயங்களை மறுதலிக்கும் வகையில் எத்தனை பேச்சுக்களை எவ்வித கூச்சமும் இன்றி பேசுகிறாரே? தமிழ் அரசியலிற்கு ஓர் மாற்று அரசியல் தரப்பு  வேண்டும் என்பதில் எனக்கு கருத்து இல்லை. ஆனால் இவர் அல்ல அந்த மாற்று என்பதனை தமிழ் நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

தான் ஆட்சிக்கு வந்தவுடன் அதை மாற்றுவேன் என்பது அனைத்து தமிழ்நாட்டு அரசியல் வாதிகளினால் வழங்கப்படும்ெவற்று வாக்குறுதிகள். ஆனால் இந்த அறிவிலி தமிழ்நாடு  ஒரு தனி நாடு என்ற மமதையில் மாநில அரசிற்கு அதிகாரமற்ற பல விடயங்களைமாற்றுவேன் என வெடிக்காத வாணவேடிக்கை காட்டுகின்றார். இவரை தமிழ் நாட்டுமக்கள் நிராகரிக்க வேண்டும் அல்லது மிகப்பெரும்பாண்மை வாக்குகளை கொடுத்து ஆட்சிக்கட்டிலில் அமர்த்தவேண்டும். அதன் பின்னர் சென்ன வாக்குறுதிகளில் எதனை நமுறைப்படுத்தினார் என்பதைன பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டும்.இவர் பல நச்சுக்களை மனித சமுதாயம் மீது வீசுகின்றார். மிக ஆபத்தானது. 

புலம்பெயர் நாடுகளில் இவரைப்போல் பல இனவாத வலதுசாரிகள் பலம் குன்றி இருந்ததால் புலத்தில் அகதிகள் வெளிநாட்டவர்கள் இந்நாடுகளில் உயிர்வாழக்கூடியதாக உள்ளது. இதனை மறந்து இந்த அறிவிலியின் பேச்சுக்களை பார்த்து புள்ளரிக்கும் தம்பிகையும் பார்த்துள்ளேன். தமிழ்நாட்டுமக்களே இந்த அறிவிக்கு எதிராக குரல் எழுப்பும் நேரம் வந்துவிட்டது. இதனை அனுமதுப்பீர்களானால் மற்றைய மாநிலங்களல் உள்ள இனவாதிகளை தட்டி எழுப்பி உங்கள் சுதந்திரங்களை பதம்பார்க்கும் நிலை மிகவிரைவில் ஏற்படும்.