Freitag, 18. Januar 2019

சுவிற்சர்லாந்து தமிழர்களின் குடியேற்ற வரலாறும் எனது பயணமும்- வரலாறு - 3


சுவிற்சர்லாந்து தமிழர்களின் குடியேற்ற வரலாறும் எனது பயணமும்- வரலாறு - 3
- கணபதிப்பிள்ளை சுதாகரன்


மறைக்கபட்ட அல்லது மறந்துவிட்ட சுவிற்சர்லாந்து தமிழர்களின் வரலாறும் வரலாற்று கதாநாயர்களும்


கடந்த இரண்டு தொடர்களை வாசித்த நண்பர்கள் வாசகர்கள் இத்தொடரை தொடர்ந்து எழுதுமாறு என்னை ஊக்கவித்தனர். தமிழ்வாசிக்க கூடிய இளையோரும் ஆர்வத்துடன் வாசிப்பதும் மேலும் எனக்கு ஓர் உத்வேகத்தினை தருகின்றது. பதிவில் பல எழுத்துப்பிழைகள் வசனப்பிழைகள் உள்ளதனையும் பல நண்பர்கள் எனக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

அனைத்து நண்பர்களிற்கும்  வாசகர்களிற்கு நன்றிகள். இப்பதிவினை மீள் பிரசுரம் செய்கின்ற அனைத்து இணையக்களங்களிற்கு மற்றும் பல தனிப்பட்ட நண்பர்களிற்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
இப்பதவினை எனக்கு நேரம்கிடைக்கும் பொழுது எவ்வித செழுமைப்படுத்தலையும் செய்யாது பதிவு செய்கின்றேன். எனது மொழிப்பற்றாக்குறையினை நான் ஓர் பெரிய குறையாக கருதாது என் பாணியிலேயே பதிவிட விரும்புகின்றேன்.
முதலாவது பகுதியில் நான் குறிப்பிட்டது போல் 82-90 காலப்பகுதியில் சுவிற்சர்லாந்து தமிழர் குடியேற்றம் ஆரம்பமானது. இன்று இந்த பதிவு தனியே ஓர் சில ஞாபக மூட்டலாக இருந்தாலும் அடுத்த சந்ததிகளிற்கான ஓர் வரலாற்று பதிவு.
வரலாறுகள் பன்முகப்பார்வைகளைக் கொண்டவை. இப்பதிவுகள் தனியே எனது பார்வையிலேயே எழுதப்படுகின்றது. இதனைப்போல் இந்நாட்டில் ஆரம்பத்தில் குடியேறிய தமிழர்கள் சமூகத்தின் இருப்புக்கு போராடியவர்கள் தமது பார்வையில் வரலாறுகளை பதிவு செய்யும் பொழுதுதான் சுவிற்சர்லாந்து வாழ் தமிழர்களின் குடியேற்ற வரலாறு ஓரளவு முழுமை பெறும்.

மிழீழ விடுதலை இயக்கங்களின் சுவிற்சர்லாந்து கிளைகள்.

முதலாவது பகுதியில் குறிப்பிட்ட படி அன்று சுவிற்சர்லாந்தில் ஆரம்பமான விடுதலை இயக்கங்களின் கிளைகளின் அமைப்பாளர்கள் மிக புரிந்துணர்வுடன் செயற்பட்டார்கள் என்பது உண்மையான வரலாறு.

தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிற்சர்லாந்து கிளை (LTTE)

விடுதலைப்புலிகளின் சுவிற்சர்லாந்து முதல் அமைப்பாளராக வசந்தன் கடைமையாற்றி இருந்தார். ஆக்காலகட்டத்தில் அனைத்து விடுதலை இயக்கங்களும் பெரிய தாக்குதல்களை ஆரம்பிக்காத காலகட்டம். ஆதரவாளர்களை இயக்க செயற்பாட்டிற்கு இணைப்பது எனபது மிக கடினமான காலகட்டம். விடுதலைப்பலிகளினதும் ரெயோவின் தாக்குதலிற்கு பின்னர் பலர் தம்மை இயக்கங்களில் இணைத்துகொள்ள முன்வந்தனர். விடுதலைப்புலிகள் நிர்வாகத்தில் கிருஸ்னா அம்பலவாணர் இணைந்த பிற்பாடு விடுதலைப்புலிகளின் சுவிசர்லாந்து கிளை அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்தது



தமிழீழ மக்கள் விடுதலைக்கழக சுவிற்சர்லாந்து கிளை (PLOT)

நான் எவ்வித அரசியல் செயற்பாடும் அற்று தனியே சுவிற்சர்லாந்தில் தமிழ்மக்களின் இருப்புக்கான போரட்டங்களிலேயே முக்கிய கவனம் செலுத்தி வந்தேன். இதன் பொழுது தான் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் கிளையை சுவிற்சர்லாந்தில் ஆரம்பிக்க வேண்டும் எனறும் அதன் முக்கியத்துவத்தினையம் எனது நண்பன் பிரதாபன் வலுயுறித்தியிருந்தார். அந்நியாத்தினை ஏற்று நானும் இன்னும் சில நண்பர்களும் சேர்ந்து கிளையினை ஆரம்பித்திருந்தோம். இதன்போது இராஜரட்னம் சுண்ணாகம் மனோ சண் கருணாமூhத்தி செங்காலன் மூர்த்தி சண் என பல நண்பர்கள் இணைந்து கொண்டனர். இதன் பின்னர் சுவிஸ் இரஞ்சன் பாரிஸ் கிளையிலிருந்து எம்முடன் வந்து இணைந்து கொண்டார்.

இவர்களது அனைவரினதும் ஓண்றினைந்த செயற்பாடுகள் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் சுவிற்சர்லாந்து செயற்பாடுகளை வலுப்பெற வைத்தது.
 

அன்றை தமிழீழ மக்கள் விடுதலைக்கழக சுவிற்சர்லாந்து கிளை ஓர் கூட்டு நிர்வாகத்தினையே கொண்டிருந்தது. சுண்ணாகம் மனோவும் இந்நாட்டு மக்களுடன் இணைந்து செயற்பட்ட ஓர் முக்கிய உறுப்பினர். இவரது தொடர்புகளும் செயற்பாடுகளும் எமது செயற்பாடுகளிற்கு மேலும் வலுசேர்த்தது.





இந்த செயற்குழு தனியே தமிழீழ மக்கள் விடுதலைக்கழக அரசியலைமட்டும் செய்யவில்லை. சுவிற்சர்லாந்து மக்களிற்கு தமிழர்கள் பற்றிய பல தகவல்களையும் Tamileelam Information Bureau என்ற பிரிவின் கீழ் வழநங்கி வந்தோம்.

அன்று சுவிற்சர்லாந்தில் இருந்த அனைத்து முகாம்களிற்கு நிதிசேகரிப்பதற்கும் தொடர்புகளிற்குமாக ஓருவர் தெரிவு செய்ப்பட்டு நியமிக்கபட்டிருந்தார்கள். ஓவ்வெரு முகாம்களிற்கும் குறைந்தபட்சம் மாதத்திற்கு ஓரு முறை ஆயினும் சந்திப்பினை ஓழுங்குபடுத்தி பிரச்சாரங்களை மேற்கொண்டோம். அன்று தமிழீழ மக்கள் விடுதலைக்கழக தனது பிரச்சாரங்கள் மூலமாகவே தனக்கு பல ஆதரவாளர்களை திரட்டியது.

அந்த காலகட்டத்தில் தாயக செய்திகளை அறிந்து கொள்வது மிக கடினமாக இருந்தது. தமிழீழ மக்கள் விடுதலைக்கழக இங்கிலாந்து கிளையினால் ஓர் தொலைபேசி செய்திசேவை ஆரம்பிக்கபட்டிருந்தது. அதனை சுவிற்சர்லாந்தில் தொலைபேசி அழைப்பின் மூலம் பெற்றுகொள்ளும் முறையில் ஏற்பாடு செய்திருந்தோம். இச் செய்தி சேவை மிக வேகமாக பல தமிழர்களிடம் சென்ற அடைந்தது. இச்செய்தி தமிழீழ மக்கள் விதலைக்கழகத்தின் அரசியல் கலந்து இருந்தாலும் பல பொது தகவல்களையும் வழங்கியது குறிப்பிடதக்கது. இந்த செய்தயில் ஒலித்த குரல்களிற்கு சொந்தக்காரரான இலண்டன் செவ்சேள் நடா மோகன் மிக பிரபல்யமாக இருந்தனர். இன்றும் நடா மோகனால் இலண்டனில் இருந்து தமிழ் வானொலியை திறம்பட நடாத்தி வருகின்றார்.

இவை மட்டும்  கழகத்தின் கிளையின் பிரச்சாரத்திற்கு போதுமானதாக இருக்கவில்லை. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உத்தியயோக பூர்வமன பிரச்சார சஞ்சிகையான புதியபாதை தளத்திலிருந்து வெளிவந்திருந்தது. சுவிற்சர்லாந்து கிளை இந்நாட்டு இயக்கசெயற்பாடுகளை இணைத்து விடுதலைப்பாதை என்ற பெயரில் மூன்று மாதங்களிற்கான அல்லது இரண்டுமாதங்களிற்கான சஞ்சிகையை வெளிக்கொண்டு வந்தது. அதேபோல் மற்றைய இயக்கங்கள் ஆன விடுதலைப்புலிகள், ஈழ மக்கள் விடுதலை முண்ணணி, தமீழீழ விடுதலை இயக்கம், தத்தமது தமது வெளியீடுகளை கொண்டு வந்திருந்தன.


தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சுவிஸ் கிளையின் காரியாலயமானது எனது வீட்டிலேயே அமைந்திருந்து.

இக்காலகட்டத்திலும் புதிதாக தஞ்சம் அடைந்தவர்கள் பேர்ண் புகையிரதநிலயத்திற்கு வந்து தமது நண்பர்களை அல்லது உறவினர்களை இனம்கண்டுகொள்வது அல்லது சந்திப்புகளை மேற்கொள்வது வழமை. சிலரிற்கு முகாம்கள் கொடுக்காது விடுதிகளில் தற்காலிகமாக தங்க வைக்கபட்டிருந்தனர். இவர்கள் சோறு கறி இன்றி அல்லது உணவுக்கு பணம் போதமலும் நேரங்களை புகையிரத நிலையத்தில் களித்தனர்.இவர்களை இனங்கண்டு எனது நண்பர் பிராதபனே பலரை எமது காரியாலத்திற்கு புதியவர்களை அழைத்து வருவது வழமை. எமது அலுவலகத்தில் சமைக்கும் பொழுது யன்னலை பார்த்து பார்த்தே சமைப்பது வழமையான விடயமாக இருந்தது. தாயிரிக்கபட்ட உணவிற்கு மேலே ஆட்கள் வருபார்களானால் சமையலில் ஈடுபடுவர் கூடுதலானாக ஆட்கள் வரும் எண்ணிக்கையை பொறுத்து கறிகளிற்கு தண்ணீரை ஊற்றும் சுவாரஸ்யமான சம்பவங்களும் நடந்தன.

இவ்வகையில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் முதல் முதலாக தமிழ் கல்வி சேவையையும் ஆரம்பித்திருந்தது. போர்ணில் இருக்கும் கத்தோலிக்க தேவாலயத்திலேயே பிரத்தியேமாக தரப்பட்ட கட்டத்திலேயே  பாடசாலை நடைபெற்றது.

இவ்வளவு வேகமாகவும் பலரை உள்வாங்கிய அமைப்பு நீண்ட காலம் தொடர முடியாமல் சென்றது. விடுதலைப் புலிகளினது தமிழீழ விடுதலை இயக்கத்தினதும் தாக்குதல்களும் தமிழீழ மக்கள்விடுதலைக்கழத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆயுதபோராட்ட மோகம் இக்காலகட்டத்திலேயே புலம்பெயர் தமிழர்களிடம் வலுப்பெற்றது. தமிழீழ மக்கள் விடுதலைக் பிரச்சாரக்கூட்டங்களில் கழகம் எப்பொழுது தாக்குதல் நடாத்தும் என்ற கேள்வியோ சுவிற்சர்லாந்து தமிழர்களிடம் மேலெழுந்ததுஇதற்கு நாமம் தளத்திலிருந்து கிடைக்கும் தகவலைப்பெற்று நியாப்படுத்துவது உண்டு. ஓரளவு அரசியல் மயப்படுத்தபட்ட அமைப்பாக கழகம் இருந்தாலும் மற்றைய இயக்கங்களளை போல் உட்கொலைளும் மாற்று இயக்க கொலைகளையும் நடாத்தியதில் கழகமும் முன்நிலை வகுத்தது. இதனால் கட்சிக்குள் உட்கட்சி ஜனநாயகம் தலைமை வழிபாடு உட்பூசல்கள் அனைத்தும் தலைதூக்கியது.

இக்காலப்பகதியிலேயே சந்ததியார் கொல்லப்பட்டார் என்ற செய்தி பரவலானது. இதைப்பற்றி சுவிஸ் கிளை சார்பிலே நாம் தளத்துடன் தொடர்பு கொண்டு விளக்கங்களை பெற முயன்றோம். அவர்கள் எமது கேள்விக்கு பதிலளிக்காது பல நொண்டிசாட்டுக்களை தெரித்து எம்மை சமாதானப்படுத்த முயன்றனர்.

சுவிற்சர்லாந்து கிளை இவ்விடயத்தில் பெருத்த நம்பிக்கையீனத்தினை தன்னகத்தில் கொண்டிருந்நதது. இதேபோல் மற்றைய புலம்பெயர் தேசத்தில் இருந்த கிளைகளிடம் அதேவகைப்பட்ட சந்தேகமும் நம்பிக்கையீனமும் வலுப்பெற்றது.

இந்நிலைமையை சமாளிப்பதற்கு கழகத்தின் செயலதிபர் உமாமகேஸ்வரனை நெரடியாக சுவிற்சர்லாந்திற்கு அழைத்துவரப்பட்டு எமக்கு விளக்கமளிப்பதன் மூலமே தொடர்ந்தும் எம்மை செயற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் எமது கிளைக்கு செயலதிபர் உமாமகேஸ்வரன் வருகைத்தந்திருந்தார். அதே வினாக்களையம் சந்தேகத்தினையும் நேரடியாக கேட்டிருதந்தோம். சுவிற்சர்லாந்து செயற்குழுக்கு செயலதிபரின் திருப்தி அளிக்கும் வகையில் பதில்கள் அமையவில்லை.

மேலும் தளத்திலும் உட்கட்சி போராட்டத்தின் காரணமாக கழகத்தில் பல உடைவுகள் ஏற்பட்டது. சுவிற்சர்லாந்து கிளைக்கு ஜேர்மனியிலிருந்து தாஸ் என்பவர் அனுப்பிவைக்கபட்டிருந்தார். இவரது சூறாவலிப்பிரச்சாரங்களும் நியாயப்படுத்தலாலும் மக்களது கேள்விக்கு இடமளிக்காது வாய்கள் மூடப்பட்டன.

ஓருகட்டத்தில் சுவிற்சர்லாந்து கிளை உறுப்பினர்கள் கழகத்துடன் இணைந்து வேலை செய்ப்போவதில்லை ஓர் ஓருமித்த முடிவெடுத்தனர்.  எமது முடிவுகளை எல்லோரும் கையெழுதது இட்டு துண்டுபிரசுரங்கள் மூலம் ஆதரவாளர்கிளிற்கு ஆறியப்புடுத்தி ஓதுங்கி இருந்தோம். இப்படி ஓர் முடிவினை எடுப்பதற்கான துணிவு எமது உறுதியானதும் உண்மையான செயற்பாட்டின் விளைவழனாலே சாத்தியமானது.

அதன் எம்முடன் இணைந்து பிரிந்தவர்களில் ஓருவரான இரஞ்சனை வைத்து கழகம் மீண்டும் சுவிற்சர்லாந்தில் கிளை செயற்பட்டை ஆரம்பித்தது. கழகத்தின் பின்னையை செயற்பாட்டிற்கும் பழைய சுவிற்சர்லாந்து தமிழீழ மக்கள் விடுதலை சுவிற்சர்லாந்து கிளை செயற்பாடுகளிற்கும் எவ்வித சம்பந்தம் இருக்கவில்லை.

ஆனால் இன்றும பலர் எனனை தமிழீழ விடுதலைக் கழகத்தின் உறுப்பினர் அடையளப்படுத்தும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.



முதல் அரசியல் சமூக சுயாதீன சஞ்சிகை

இயக்க செயற்பாடுகள் நடை பெறும் காலப்பகுதியில் ஓன்றியம் எனும் சஞ்சிகை எவ்வித விடுதயை இயக்க சார்பும் அற்று வெளிவந்தது. இச்சஞ்சிகை சர்வதேசம் சமூக ஓடுக்குமுறைகள் விடுதலை இயக்கங்கள் மீதான விமர்சனங்களையும் தாங்கி வெளிவந்திருந்தது. இதன் ஆசிரியர்களாக யோகராஜாவும் (யோகா மாஸ்டர்) அம்பலம் கண்ணன் இருந்திருந்தனர். இச்சஞ்கிகை ஓர் சிறுசஞ்சிகை உள்ளடக்கத்துடனும் வடவமைப்புடன் சுவிற்சர்லாந்தில் வெளிவந்த முதல் சுயாதீன சிறு சஞ்சிகை ஆகும்.

Zentrum 5

இயக்க செயற்பாடுகள் முடிவுக்க கொண்டுவரப்பட்ட பொழுதும் எனது செயற்பாடுகள் வேறுவடிவில் தொடர்ந்தன. ணுநவெசரஅ என்ற அமைப்பு ஆரமஇபத்தில் Fishermäteli என்ற இடத்தில் ஆரம்பகாலப்பகுதியில் இருந்து செயற்பட்டு வந்தது. இந்த நியையம் Flurastrasse விற்கு மாற்றபட்டது.

இந்நிலையத்தில் தமிழ்பாடசாலைகள் பரதநாட்டிய வகுப்புக்கள் யேர்மன் மொழிவகுப்புக்கள் நடாத்தபட்டு வந்தது. இந்நிலையத்திலேயே முதல் முதலாக சுவிற்சர்லாந்தில் பல மொழி நுலகம் அமைக்கபட்டிருந்தது. தமிழ்பிரிவினையே நானே ஆரம்பித்து நிர்வகித்திருந்தேன்.

திருப்பி அனுப்ப இருந்த தமிழர்களிற்கானதும் வேலை இழந்தோருக்கானதுமான ஓர் ஆலோசனை மையத்தினையும் பல தகவல் வழங்கும் நிகழ்வுகளையும் நடாத்தி வந்திருந்தேன்.

இயக்கங்களின் உடைவினாலும் தனி ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை இழந்த பலரும் மீண்டும்மொரு புதிய தளத்தில் வேலைசெய்யும் நிலமை சாத்தியமானது. இத்தளத்தில் அரசியல் கலை கலாச்சார ஆர்வலர்கள் என பல தரப்புக்களும் ஒன்றிணைந்தனர்.


சுவிற்சர்லாந்து தமிழரின் குடியேற்ற வரலாற்றில் எனது பங்களிப்பும் மேலும் நடந்தேறிய சம்பவங்களின் தொகுப்பும் தொடரும்….