Sonntag, 20. März 2016

அகவிருப்பங்களும் கருத்துரிமை மறுப்பும்



ரு கூர் வாளின் நிழலில் என்ற தமிழனியின் போராட்ட அனுபவபகிர்வு நூல் பற்றி கடந்த 2 நாட்களாக முகநூலில் இரு வேறுபட்ட அணிகளின் வாதப்பிரதிவாதங்கள் முன்வைத்து  ஆக்கிரமித்துள்ளனர். 
ஓரு தரப்பு இடைச்செருகள் நடந்திருக்கலாம் எனவும் மற்றைய தரப்பு தமிழினியுடனான  இறுதிக்ககலங்களில் இருந்த தொடர்ரின் அடிப்படையில்  ஆதாரத்துடன் அந்நூலில் பதிவுசெய்த கருத்துடனே தமிழினி இறுதியில் இருந்தார் என தெரிவப்பது மட்டுமல்லாது தமது தரப்பில் தமிழினியுடன் உரையாடல் ஆதாரத்துடன் பேட்டிகளையும் பதிவுகளையும் ஆதாரப்படுத்தியுள்ளனர்.

பெரும்பாண்மையாக இடைச்செருகள் நடந்திருக்கலாம் என்று கூறும் தரப்பு தமிழினி தலைமைபற்றியும் இயக்கத்தின் அரசியல் முடிவுகள் பற்றிய விமர்சனங்களை அவர் முன்வைத்திருக்கமாட்டார் என மறுக்கின்றது.
தமிழினி விமர்சனத்துடனே தனது போராட்ட வாழ்வினை எதிர்கால சந்ததியின் நன்மை கருதி வெளியிட்டுள்ளார் என தமது உறுதியான கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளில் இறுதிப்போர்வரை இருந்தவர்கள் தமது தலைமைபற்றியும் போராட்டம் பற்றியும் ஓர் விமர்சன கண்ணோட்டத்துடன் பார்க்க முனையும் செயலே ஓர் ஆரோக்கியமான போக்கு. புலத்தில் வேலைசெய்த புலி ஆதரவாளர்களிற்கும் கண்மூடித்தனமான விசுவாசிகளிற்கும் தமிழனியின் விமர்சனம் கசப்பானதே. ஆனால் தமிழ் மக்களின் போராட்டத்தினை விமர்சனக் கண்ணோட்டத்தினுடாக பார்க்கும் தரப்பினர் தமிழமக்களின் உரிமைபோரட்டத்தினை சரியான பாதை ஊடக எதிர்காலத்தில் வழிநடத்துவதற்கு உதவும்; என்று கருதுகின்றனர்.
துரோகிகள் ஓத்தோடிகள் அரசாங்க ஆதரவாளர்கள் புலி எதிர்ப்பாளர்கள் என வகைப்படுத்தி கருத்து சுதந்திரத்திதை குரல்வழையில் நசுக்கும் நடவடிக்கையில் ஈடுபடாது. மேலும் இவ்வகையான சுயசரிதைகளே நடைபெற்ற உண்மை நிலைமைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும்.
விடுதலை புலிகளை கண்மூடித்தனமாக ஆதரித்தவர்களும் 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் புலிகளின் அரசியலிற்கு முண்டு கொடுப்பவர்களின்; அகவிருப்பத்திற்கு வெளியீட்டாளர்களின் அட்டைப்பட குழறுபடிகள் வழிவகுத்துள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவரின் அரசியலை விமர்சிப்பது ஓர் பெரிய குற்றமாகவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதுவது இவர்களின் குறுகிய அரசியல் பார்வையே மீண்.டும் உறுதுpப்படுத்துகின்றது.
சயந்தன் தமழினி தன்னுடன் முகநூலின் உட்தகவல் பெட்டியில் நடைபெற்ற உரையாடலையும் காரணம் காட்டி அவர் தனது சுயசரிதையில் குறிப்பிட்ட போன்று விடுலைப்புலிகளைபற்றுpயும் போராட்டம் பற்றியும் தன்னகத்தில விமர்;சனங்களை வைத்திருக்;கின்றார் என்பதனை தெளிவுபடுத்தியுள்ளார். அதேபோன்று அ.இராமசாமியும் மிக தெளிவாக தனக்கும் தமிழினியுடன் இடம்பெற்ற உரையாடலை காரணப்படுத்தி தமிழினியின் மனநிலையை தெளிவுபடுத்தியுள்ளார். என்னைப்பொறுத்த வரையில் இவர்களுடன் கருத்துக்களிற்கு பிற்பாடு இச்சந்தேகம் முற்றுபெற்றுள்ளது.

ஆனால் மேலும் சிலர் எப்படியாவது தமிழினி இப்படி எழுதியிருக்கமாட்டார் அல்லது எழுதியிருக்க கூடாது என்ற தமது அகவிருப்பங்களை நூலின் அட்டை சர்ச்சை மூலம் சாதிக்க முயலுகின்றனர். மேலும் ஓர் படிமேல் சென்று இன்னமும் தமது அனுபவ பதிவினை முன்iவாக்காத போராளிகளிற்கு ஓர் கட்டுப்பாட்டினை திணக்கமுயலுகின்றனர். ஓடுக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு இவரின் நூல் எவற்றை எடுத்து கூறுகின்றது என புலிகளுக்கு புலத்தில் பொறுப்பாக இருந்தவர் தனது கேள்வியை பதிவிடுகின்றார். வரலாற்று அனுபவங்களும் வேறுபட்ட பார்வைகளுமே நடைபெற்ற போராட்டத்தினை புடம்போட்டு பார்க்க உதவும் என்ற விடயம் இவர்களிற்கு புரயாமல் போனது ஆச்சரியமற்றதொன்றாகும்.

சந்தேகப்படல் வேண்டியது ஓர் அவசியமானது. எமது அகவிருப்பத்திற்கு அப்பால் ஓரு சில விடயங்கள் கசப்பாக இருப்பினும் ஏற்று கொள்ளல் வேண்டும்.

தமிழீழ விடுதலை போராட்;ட இயக்கங்கள் கடந்த காலத்தில் ஓரு நபரை துரோகிபட்டம் சூட்டுவதற்கு மூன்று மலிவான விவாதங்களை முன்வைப்பர். 1. பெண்தொடர்பு 2. நிதிமோசடி 3. காட்டிக்கொடுப்பு. இதே போன்று புலி எதிர்ப்பு அரசசார்பு ஓத்தோடிகள் என்ற சொற்கள் மூலம் முத்திரை குத்த முயலுகின்றது.

எல்லோருடனும் அனைத்து கருத்துகளுடனும் உடனபடமுடியாது. ஆனால் உடன்பட கூடிய பல விடயங்களுடன் கைகோர்த்து வேலைசெய்யமுடியும் என்பதனை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.
மேலும் இவ்வாறான போராட்த்தில் ஈடுபட்ட போராளிகள் தமது அனுபவ பகிர்வை வெளிப்படத்துவது மூலம் இலங்கைவாழ் தமிழ் சமுகம் தமது உரிமைபோராட்டங்களை சரியான பாதை ஊடாக வழிநடத்தி செல்ல உதவும் என நம்புகின்றேன்.

G.Suthakaran / 21.03.2016

Dienstag, 15. März 2016

புலம்பெயர் தமிழர்களும் பாராளுமன்ற அரசியலும்


இரண்டாவது தலைமுறை

புலத்தில் வாழும் இரண்டாவது தலைமுறை தமிழர்கள் பலர் தாம் வாழும் நாட்டு அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது. இவ் எண்ணம் ஆனது  தவறு அன்று. ஆனால் இவ்வகையில் அரசியலில் குதித்திருக்கும் பலரின் அரசியல் பின்னணியே பிரச்சினையாக உள்ளது. சுவிற்சர்லாந்தில் பெரும்பாண்மையான இளையோர் சோசலிச ஜனநாயக கட்சிக்குள்ளேயே தம்மை இணைத்துள்ளனர். இந்நாட்டில் வாழும் குடியேறிகளின் உரிமைகளிற்காகவும் மற்றும் மனிதாபிமானம் கருத்து சுதந்திரம் பெண்விடுதலை ஓரினபாலியல் வாதிகளின் உரிமை மற்றும் ஓர் கலப்பு பொருளாதார முறையை ஆதரிக்கும் இடதுசாரி நோக்கங்களை கொண்ட கட்சியாகும்.

புலம்பெயர் தமிழ் ஈழ ஆதரவாளர்களின் கனவு

இக்கட்சியில் உட்புகுந்துள்ள பல இளையதலை முறைத்தமிழர்களும் முதல் தலைமுறைத்தமிழர்களும் கடந்த காலத்தில் தமிழ் ஈழம் என்ற நோக்கத்துடன் தமிழ் ஈழம் விடுதலைப்புலிகளிற்கு ஆதரவாக செயற்பட்டோரே அதிகம். 2009 ஆம் ஆண்டு போராட்டம் முள்ளிவாய்க்களில் முடக்கபட்டபின்னர் இவர்கள் இந்நாடுகளில் தீவிரமாக புலத்து அரசியலில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர். இவர்களை புலத்து அரசியலில் ஈடுபடுமாறு ஊக்குவிப்பது பல துருவங்களாக புலத்தில் சிதறிப்போன பழைய தமிழ் ஈழம் விடுதலைப்புலிகளின் அமைப்புகளே. இவர்களின் கனவு புலம்பெயர்ந்து வாழ்ந்த யூதர்கள் புலத்தில் தமது அரசியல் பலத்தின் மூலம் இஸ்ரேல் என்ற நாட்டை எவ்வாறு உருவாக்கினார்களோ அதேபோல் தமது புலம்பெயர்ந்த நாட்டு அரசியலில் நுளைவது மூலம் தமிழீழம் என்ற நாட்டை உருவாக்கலாம் என கனவு காணுகின்றனர்.

வலதுசாரி அரசியலும் கலாச்சார காவலரும்

கடந்தகாலங்களில் வலதுசாரி அரசியல் எண்ணங்களையும் அதிதீவிர கலச்சார இறுக்கத்தினையும் தீவிர மத அடிப்படை வாதிகளாக இருந்துவந்துள்ளனர். எவ்வித சுயவிமர்சனமும் இன்றி ஓர் முற்போக்கான கலச்சார விழுமியங்களை ஆதரிக்கும் கட்சிக்குள் தம்மளவில் எவ்வித மாற்றங்களை ஏற்படுத்தாது தம்மை இணைத்துள்ளனர். ஓரினபாலியலையோ  ஓரினபால் திருமணங்களையோ கலப்பு திருமணங்களையோ இவர்கள் அங்கீகரிப்பார்களா? இன்றும் தமிழ் கலாச்சாரம் என்று கூறி ஓர் அதிதீவிர கலாச்சாரகாவலர்களாகவும் மதகாவலர்களாகவே வலம்வருகின்றனர்.
அரசியல் பிரவேசத்திற்கு பின்னராவது தம்மை அரசியல் சமூக விடயங்களை கற்றுகொள்வதில் அல்லது தேடலில் ஈடுபடுத்துகின்றனரா என்ற கேள்வி பலரிடம் எழுகின்றது. புலத்தில் உள்ள பல பெற்றோர் தமிழ் கல்வியாகட்டும் கலைகளாகட்டும் இவற்றை தமது பிள்ளைகளிடம் திணித்தே வழர்த்துள்ளனர். இதே போக்கு இன்று தமது பிள்ளைகளை அரசியலில் ஈடுபடுத்தி பிரபல்யம் ஆக்கலாம் என கனவு காண வைக்கின்றது. இவை எல்லவற்றிற்கும் உறுதுணையாக தமிழ் ஈழ விடுதலைபுலகளுக்கு ஆதரவழித்து வந்த இந்த பல ஓருபக்கபார்வை கொண்ட தமிழ் ஊடகங்கள் இவர்களை பிரமுகர்கள் ஆக்கும் பணியை செவ்வண செய்து வருகின்றது.

இலங்கை வாழ் தமிழர்களின் அபிலாசைகள்


உதைபந்தாட்ட அணிக்கு காலம் காலமாக ஆதரித்துவந்தவர்கள் இறுதி போட்டியின் போது ஓரு கோலையாவது போடாது தோற்று போன மனநிலையில் பல புலத்து தமிழர்கள் உள்ளனர். இதனால் இனியோர் போட்டி நிகழ்ச்சியினை ஓழுங்குசெய்து எப்படியாவது வெல்லவேண்டும் என்ற மனப்பாண்மையுடன் காணப்படுகின்றனர். இவர்கள்; இவ் எண்ணத்தினை விளையாட்டு போட்டியில் மட்டும் செலுத்தினால் குற்றம் ஏதும் இல்லை. இது ஓர் மக்களின் விடுதலைக்காண போரட்டம். விடுதலையை வேண்டி தமது சொந்த மண்ணில் வாழ்ந்து வரும் மக்களின் அபிலாசைகளே முக்கியமானது. புலத்தில் சுகபோக வாழ்கையை வாழ்ந்துவரும் எமது விருப்பமும் நோக்கமும் இலக்கும் அவர்களது அபிலாசைகள் பற்றி நாம் முடிவெடுப்பது அபத்தமானதாகும்.

இலங்கை வாழ் தமிழ்மக்களின் போராட்டங்களுக்கு எமது ஆதரவினையும் சொலிடாரிட்டியை வழங்குவதே புலத்தில் வாழும் தமிழர்களின் நோக்காக இருக்கமுடியும்.

வேண்டுகோள்

ஆரசியலில் ஈடுபட்டுள்ள முதலாம் தலைமுறை அரசியல் வாதிகளிற்கான எனது வேண்டு கோள் நீங்கள் வேட்பாளராக நிற்கும் முன் உங்களது இந்நாட்டு மொழி தறமையை வளர்த்து கொள்ளுங்கள். மக்கள் தொடர்பு மற்றும் பல சட்ட அமுலாக்க மசோதாவை புரிந்து விளங்கிகொண்டு உங்கள் தரப்பு விவாதங்களை முன்வைக்க உதவும்.

புலத்தில் புதிதாக உருவடுத்திருக்கும் இணர்டாவது தலைமுறை அரசியல்வாதிகளை நான் வேண்டிக்கொள்வது யாதெனில் நீங்கள் வாழும் நாட்டு அரசியலில் ஈடுபடுங்கள். ஆந்நாடுகளில் வாழும் அனைத்து மக்களிற்காக அரசியலில் ஈடுபடுங்கள். தனியே தமிழ்மக்களை பிரதிநிதித்துவ படுத்துவதை மாத்திரம் அரசியல் நோக்கமாக கொண்டு வேட்பாளர் ஆகாதீர்கள்;. முதலில் இந்நாட்டு கலாச்சாரங்கள் மக்களின் தேவை போன்றவற்றை சரி வர புரிந்து கொள்ளுங்கள். மக்களின் அனைத்து நீதியான போராட்டங்களுடன் உங்களை இணைத்து கொள்ளுங்கள். ஆரசியலை கற்று கொள்ளுங்கள் தேடுதலில் ஈடுபடுங்கள். பிள்ளையார் தந்தையையும் தாயையும் வலம்வந்து உலகத்தினையே வலம் வந்ததாக எண்ணி பெருமிதமடைந்தது போல் அல்லாது. தனித்தமிழ் ஊடகங்களில் உங்களின் பெயர்களையும் அறிக்கைகளை வெளியிட்டு பெருமையடைதீர்கள். இந்நடவடிக்கை உங்களிற்கு தமிழ் மக்கள் மத்தியில் ஓர் பிரபல்யத்தினை தரும். ஆனால் நீங்கள் பிரதிநிதித்துவப்போகும் ஏனை மக்களிற்கு என்ன செய்யப்போகின்றீர்கள்? உங்களுடைய அரசியல் நிலைப்பாடு என்ன?

சுவிற்சர்லாந்தை பொருத்தவரையில் நாடு éராகவும் குடியுரிமை பெற்ற தமிழர்கள் அண்ணளவாக 25000 பேர்கள். இந்ந 25000 தமிழர்கள் 26 மாநிலங்களில் சிதறி வாழ்கின்றனர். ஓர் மாநிலத்தில் அண்ணளவாக 1000 அல்லது 2000 தமிழர்களே இருப்பார்கள். இவர்களிற்கு ஓர் சுவிற்சர்லாந்து பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அவசியமா? நீங்கள் நடத்தும் அரசியல் இந்நாட்டு éர்விக குடிகளிற்கும் அனைத்து குடியேற்றவாதிகளிற்கானதாகவே இருத்தல் வேண்டும். சிறப்பு திறமையற்ற அரசியல் வாதிகள் பத்தில் ஓன்றாக இருக்க முடியுமே தவிர எதையும் சாதிக்கமுடியாது. இவ்வாறு தகமையற்ற அரசியல் வாதிகளால் அம்மக்களிற்கு எவ்வித பலனுமில்லை. இவ்வகையான அரசியல் அற்ற வெற்று வேட்டிஅரசியல்வாதிகளினாலே பல நாடுகளில் மக்கள் எவ்வித பயனுமின்றி தவிக்கின்றனர்.

உங்களுக்கு கிடைத்த இந்த சந்தர்பங்களை பயன்படுத்தி இன்று ஓங்கி வளர்ந்துவரும் இனவாதத்திற்கும் வலதுதீவிரவாத அரசியலிற்கு எதிராகவும் செயற்படுங்கள். உங்கள் செயற்பாடுகள் பெரும்பாண்மை மக்களை உங்கள் கருத்துகளிற்கு ஆதரவாக அணிதிரட்டுங்கள். மாறாக உங்கள் குறும் நோக்கங்களின் செயற்பாட்டால் இனவெறிக்கும் அதிதீவர வலது சாரி அரசியலிற்கு வித்திடாதீர்கள்.