Freitag, 30. Oktober 2015

ருசிகண்ட பூனையும் சுவிற்சர்லாந்து தமிழர் நலன்புரி சங்கம் சொலத்தூண் (Tamil Welfare Association Solothurn)

புலிகள் கொடிகட்டி பறந்த நாட்களில் புலம்பெயர் நாடுகளில் எந்த வொரு சுயாதின அமைப்புகளையும் விட்டுவைக்கவில்லை. கோயில்கள் பத்திரிகைகள் கலை கலாச்சார மற்றும் விளையாட்டுதுறை எதனையும் விட்டுவைக்காது தமது பினாமி அமைப்பாக்கி தன்னகப்படுத்தி கொண்டனர். இவ்வமைப்புகளினால் சேகரிக்கப்படும் அனைத்து நிதியினையும் போராட்ட நிதியென அபகரித்து கொண்டனர். மேலும் ஓர் படி மேலாக தமது பினாமிகளை கொண்டு பல நிறுவனங்களையும் முதலீட்டு நிறுவனங்களையம் நடாத்திவந்தனர். இவ்விடயங்களை புலம்பெயர் வாழும் எந்த தமிழரும் நன்கு அறிவர்.

முள்ளிவாய்காலிற்குள் போரட்டம் முடக்கப்பட்டபின்னர் பல பினாமிகள் நிறுவனங்களை தமேக்கே சொந்தமாக்கி கொண்டனர். சேகரித்த பெரும்தொகை தனிநபர்களிடமே சொந்தமான பல ஆதாரங்களும் உள்ளன. இவ்வகையில் பொது அமைப்பினால் பெறப்பட்ட பெருந்தொகை நிதியில் தங்கி இருந்த புலத்து புலிகள். இன்றும் இந்நிறுவனங்களை தனித்து இயங்கவிடமால் இன்றும் பெரும் முட்டுக்கட்டையாக இருந்து தமது பினாமிகளை கொண்டு வருமானங்களை கபழிகரம் செய்ய பல குறுக்கு வழிகளை கையாண்டு வருகின்றனர்.

இவற்றுக்கு சான்று பகிரும் வகையில் கடந்த செப்ரம்பர் மாதம் சுவிற்சர்லாந்து நலன்புரி சங்கம் Solothurn ஓர் பொது குழுவினை ஏற்பாடு செய்திருந்தது. சங்த்தினை ஓர் சுயாதினகரமான அமைப்பைமாற்றுவதற்கான அடிப்படையில் சந்திப்பிற்கான அழைப்பு விடுவிக்கப்பட்டது.

இச்சந்திப்பின் போது விடுதலைப்புலிகளின் சுவிற்சர்லாந்து கிளையில் செயற்பட்டு வருபவர்கள் ஓருசிலரும் இன்னும் பல ஆதரவாளர்களும் இணைந்து தமக்கு கீழ் அணிதிரளுங்கள் நாம் ஓர் புதிய நிர்வாகத்தினை நிறுவுவோம் என கோரிக்கை விடுத்திருந்தது. சந்திப்பிற்கான அழைப்பை விடுத்திருந்த பெரும்பான்மையான பழைய நிர்வாக சபை உறுப்பினர்களும் இவர்களை ஆதரிப்போரும் மற்றும் இச்சங்கத்தினை புலிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுப்பிக்க விரும்பியோர்களும் தனியே சந்திப்பினை ஓரே மண்டபத்தில் மேற்கொண்டனர். இதன் போது இருதரப்பினர்களாலும் வாக்குவாதங்கள்  இடம்பெற்ற மண்டபத்தினையே அதிரவைத்தது. பாதுகாவலிற்காக தனியார் பாதுகாப்பு சேவையாளர்களும் ஒன்றுகுவிக்கபட்டிருந்தனர். இதன் போது இரண்டு தரப்பினரும் இரண்டு புதிய செயற்குழுவினை தெரிவுசெய்தனர்.

சுயாதீனத்தினை விரும்புவர்கள் தமது சங்கத்தின் யாப்பிற்கு இணங்க தமது சங்த்தினை பதிவு செய்து கொண்டனர். இதனை கேள்விப்பட்ட மற்றைய தரப்பினரும் அதே சங்கத்தினை தமிழ் பெயரில் பதிந்துகொண்டனர். ஏன் இந்த சங்கத்தின் மேல் இவ்வளவு கரிசனை என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். நலன்புரி சங்கத்தினரே கடந்தகாலங்களில் பாரிய போட்டி சுவிற்சர்லாந்து தழுவிய நிகழ்ச்சியான நாட்டிய மயில் இசைக்குயில் போன்ற நிகழ்ச்சியை நடாத்தி வந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கிடைத்த அனைத்து வருமானங்களும் புலத்து புலிகளின் வேலைத்திட்டங்களிற்காக கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

இச்சங்கம் சுயாதீனமாக செயற்பட்டால் இவ்வகையான நிகழ்ச்சி மூலமாக கிடைக்கப்படும் பணத்தினை சங்கமே நிர்வகிக்கும் தமது கயான காலியாகிவிடும் என்ற உள்நோக்கமே இவ்வகையில் சங்கத்தின் பதிவிற்கு எதிரான எதிர்பதிவினை செய்து சுயாதீனமானவர்களை செயற்படவிடாமல் தடுக்கம் நடவடிக்கையாகும்.

சுவிற்சர்லாந்தில் இயங்கிவந்த புலிகள் கடந்த இறுதியுத்தத்தின் போது ஓவ்வொரு தமிழர்களிடம் இருந்து ஓரு இலட்சம் சுவிஶ் பிராங்குகளை சேகரித்தனர். யுத்த முடிவிற்கு பின்னர் தாம்  வாங்கிய ஓரு இலட்சம் வங்கி கடனை அடைக்கமுடியாது பல தமிழர்கள் இன்னலுக்கு உள்ளனர்.
யுத்த முடிவிற்கு பின்னர் பணத்தினை திருப்பி கொடுக்குமாறு புலி அமைப்பாளர்களிடம் கோரியிருந்தனர்.

ஆனால் புலி அமைப்பாளர்கள் நலன்புரி சங்கத்தினால் நடாத்தப்பட்ட நாட்டியமயில் அல்லது இசைக்குயில் வருமானத்தினை பெற்று கடனை அடைப்பதாக பிரச்சாரப்படுத்தி கொண்டு தமது தனிப்பட்ட அனுதாபிகளிற்கு மட்டும் பணத்தினை திருப்பி கொடுத்தனர். சமமான முறையில் பாதிக்கப்பட்ட முறையில் பகிர்ந்தளிக்க படவில்லை.

இச்சம்பவங்களினால் அதிருப்தி அடைந்ததின் விளைவாகவே பெரம்பான்மையான உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்ற அவசியத்தின் வெளிப்பாடே பொது குழுவின் சந்திப்பு நடைபெற்றது.

சுயாதீனத்தினை விரும்புவோர்  29.09.2015 அன்று Tamil Welfare Association Solothurn. எனபதிவு செய்து கொண்டனர்.  புலத்து புலிகளின் ஆதரவோடு பதிவு செய்யப்பட்ட சங்கம் Tamilar (ரமிலர்) Nalanpuri Association Solothurn என 13.10.2015 அன்று பதிவு செய்துள்ளனர். சங்கத்தின் நோக்கமும் ஈ அடிச்சான் கொப்பி போல் அதே வசனத்துடன் எழுதப்பட்டுள்ளது.

இன்று தமது அமைப்புக்களை அரசியல் கட்சி சார்பற்ற சுயாதீன அமைப்பாக வைத்து கொள்ளவே  பெரும்பாண்மையானவர்கள் விரும்புகின்றனர்.

இனிமேலும் எவ்வித வேலைத்திட்டங்கள் அற்று செயற்படும் புலி அமைப்பினரை மக்கள் நிரகரிக்கவேண்டும். இவர்களின் முக்கிய நோக்கம் பணம் சேகரப்பது மட்டுமே. புலத்தில் உள்ள புலிகளினால் முடக்கப்பட்ட பெரும் தொகையான பணம் யுத்ததினால் வாழ்வாதரங்ஙகளை இழந்த மக்களிற்கும் மேலும் பாதிக்கப்பட்ட அல்லது அங்கவீனமுற்ற போரளிகளிற்கு உதவுவதற்கு போதுமானது. ஆனால் கசப்பான உண்மையாதெனில் எந்த ஓரு புலம் பெயர் நாட்டிலும் செயற்பட்ட புலிகளும் தம்மால் சேகித்த அல்லது முதலீட்டால் பெறப்பட்ட வருமானங்கள் சரியான முறையில் பாதிக்கப்பட்டவர்களிற்கு கொடுக்கபடவில்லை மாறாக இப்பணங்கள் அந்தந்த நாடுகில் உறைந்த போனது.

ஆனால் மக்கள் விழிப்படைந்துவிட்டனர் அனைத்து நலன் விரும்பிகளும் புலத்து புலிகளின் இவ்வகையான சனநாயகவிரோதமான நடவடிக்கையை கண்டித்து அம்பலப்படுத்தல் வேண்டும். இரண்டு சங்க பதிவின் பத்திரங்களும் இணைக்கப்பட்டுள்ளது.


அனைத்து சங்கங்களையும் அரசியல் தலையீடு அற்று சுயாதீனமாக செயற்பட வழிவகுக்க வேண்டும்.
31.10.2015

Keine Kommentare:

Kommentar veröffentlichen