Dienstag, 15. März 2016

புலம்பெயர் தமிழர்களும் பாராளுமன்ற அரசியலும்


இரண்டாவது தலைமுறை

புலத்தில் வாழும் இரண்டாவது தலைமுறை தமிழர்கள் பலர் தாம் வாழும் நாட்டு அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது. இவ் எண்ணம் ஆனது  தவறு அன்று. ஆனால் இவ்வகையில் அரசியலில் குதித்திருக்கும் பலரின் அரசியல் பின்னணியே பிரச்சினையாக உள்ளது. சுவிற்சர்லாந்தில் பெரும்பாண்மையான இளையோர் சோசலிச ஜனநாயக கட்சிக்குள்ளேயே தம்மை இணைத்துள்ளனர். இந்நாட்டில் வாழும் குடியேறிகளின் உரிமைகளிற்காகவும் மற்றும் மனிதாபிமானம் கருத்து சுதந்திரம் பெண்விடுதலை ஓரினபாலியல் வாதிகளின் உரிமை மற்றும் ஓர் கலப்பு பொருளாதார முறையை ஆதரிக்கும் இடதுசாரி நோக்கங்களை கொண்ட கட்சியாகும்.

புலம்பெயர் தமிழ் ஈழ ஆதரவாளர்களின் கனவு

இக்கட்சியில் உட்புகுந்துள்ள பல இளையதலை முறைத்தமிழர்களும் முதல் தலைமுறைத்தமிழர்களும் கடந்த காலத்தில் தமிழ் ஈழம் என்ற நோக்கத்துடன் தமிழ் ஈழம் விடுதலைப்புலிகளிற்கு ஆதரவாக செயற்பட்டோரே அதிகம். 2009 ஆம் ஆண்டு போராட்டம் முள்ளிவாய்க்களில் முடக்கபட்டபின்னர் இவர்கள் இந்நாடுகளில் தீவிரமாக புலத்து அரசியலில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர். இவர்களை புலத்து அரசியலில் ஈடுபடுமாறு ஊக்குவிப்பது பல துருவங்களாக புலத்தில் சிதறிப்போன பழைய தமிழ் ஈழம் விடுதலைப்புலிகளின் அமைப்புகளே. இவர்களின் கனவு புலம்பெயர்ந்து வாழ்ந்த யூதர்கள் புலத்தில் தமது அரசியல் பலத்தின் மூலம் இஸ்ரேல் என்ற நாட்டை எவ்வாறு உருவாக்கினார்களோ அதேபோல் தமது புலம்பெயர்ந்த நாட்டு அரசியலில் நுளைவது மூலம் தமிழீழம் என்ற நாட்டை உருவாக்கலாம் என கனவு காணுகின்றனர்.

வலதுசாரி அரசியலும் கலாச்சார காவலரும்

கடந்தகாலங்களில் வலதுசாரி அரசியல் எண்ணங்களையும் அதிதீவிர கலச்சார இறுக்கத்தினையும் தீவிர மத அடிப்படை வாதிகளாக இருந்துவந்துள்ளனர். எவ்வித சுயவிமர்சனமும் இன்றி ஓர் முற்போக்கான கலச்சார விழுமியங்களை ஆதரிக்கும் கட்சிக்குள் தம்மளவில் எவ்வித மாற்றங்களை ஏற்படுத்தாது தம்மை இணைத்துள்ளனர். ஓரினபாலியலையோ  ஓரினபால் திருமணங்களையோ கலப்பு திருமணங்களையோ இவர்கள் அங்கீகரிப்பார்களா? இன்றும் தமிழ் கலாச்சாரம் என்று கூறி ஓர் அதிதீவிர கலாச்சாரகாவலர்களாகவும் மதகாவலர்களாகவே வலம்வருகின்றனர்.
அரசியல் பிரவேசத்திற்கு பின்னராவது தம்மை அரசியல் சமூக விடயங்களை கற்றுகொள்வதில் அல்லது தேடலில் ஈடுபடுத்துகின்றனரா என்ற கேள்வி பலரிடம் எழுகின்றது. புலத்தில் உள்ள பல பெற்றோர் தமிழ் கல்வியாகட்டும் கலைகளாகட்டும் இவற்றை தமது பிள்ளைகளிடம் திணித்தே வழர்த்துள்ளனர். இதே போக்கு இன்று தமது பிள்ளைகளை அரசியலில் ஈடுபடுத்தி பிரபல்யம் ஆக்கலாம் என கனவு காண வைக்கின்றது. இவை எல்லவற்றிற்கும் உறுதுணையாக தமிழ் ஈழ விடுதலைபுலகளுக்கு ஆதரவழித்து வந்த இந்த பல ஓருபக்கபார்வை கொண்ட தமிழ் ஊடகங்கள் இவர்களை பிரமுகர்கள் ஆக்கும் பணியை செவ்வண செய்து வருகின்றது.

இலங்கை வாழ் தமிழர்களின் அபிலாசைகள்


உதைபந்தாட்ட அணிக்கு காலம் காலமாக ஆதரித்துவந்தவர்கள் இறுதி போட்டியின் போது ஓரு கோலையாவது போடாது தோற்று போன மனநிலையில் பல புலத்து தமிழர்கள் உள்ளனர். இதனால் இனியோர் போட்டி நிகழ்ச்சியினை ஓழுங்குசெய்து எப்படியாவது வெல்லவேண்டும் என்ற மனப்பாண்மையுடன் காணப்படுகின்றனர். இவர்கள்; இவ் எண்ணத்தினை விளையாட்டு போட்டியில் மட்டும் செலுத்தினால் குற்றம் ஏதும் இல்லை. இது ஓர் மக்களின் விடுதலைக்காண போரட்டம். விடுதலையை வேண்டி தமது சொந்த மண்ணில் வாழ்ந்து வரும் மக்களின் அபிலாசைகளே முக்கியமானது. புலத்தில் சுகபோக வாழ்கையை வாழ்ந்துவரும் எமது விருப்பமும் நோக்கமும் இலக்கும் அவர்களது அபிலாசைகள் பற்றி நாம் முடிவெடுப்பது அபத்தமானதாகும்.

இலங்கை வாழ் தமிழ்மக்களின் போராட்டங்களுக்கு எமது ஆதரவினையும் சொலிடாரிட்டியை வழங்குவதே புலத்தில் வாழும் தமிழர்களின் நோக்காக இருக்கமுடியும்.

வேண்டுகோள்

ஆரசியலில் ஈடுபட்டுள்ள முதலாம் தலைமுறை அரசியல் வாதிகளிற்கான எனது வேண்டு கோள் நீங்கள் வேட்பாளராக நிற்கும் முன் உங்களது இந்நாட்டு மொழி தறமையை வளர்த்து கொள்ளுங்கள். மக்கள் தொடர்பு மற்றும் பல சட்ட அமுலாக்க மசோதாவை புரிந்து விளங்கிகொண்டு உங்கள் தரப்பு விவாதங்களை முன்வைக்க உதவும்.

புலத்தில் புதிதாக உருவடுத்திருக்கும் இணர்டாவது தலைமுறை அரசியல்வாதிகளை நான் வேண்டிக்கொள்வது யாதெனில் நீங்கள் வாழும் நாட்டு அரசியலில் ஈடுபடுங்கள். ஆந்நாடுகளில் வாழும் அனைத்து மக்களிற்காக அரசியலில் ஈடுபடுங்கள். தனியே தமிழ்மக்களை பிரதிநிதித்துவ படுத்துவதை மாத்திரம் அரசியல் நோக்கமாக கொண்டு வேட்பாளர் ஆகாதீர்கள்;. முதலில் இந்நாட்டு கலாச்சாரங்கள் மக்களின் தேவை போன்றவற்றை சரி வர புரிந்து கொள்ளுங்கள். மக்களின் அனைத்து நீதியான போராட்டங்களுடன் உங்களை இணைத்து கொள்ளுங்கள். ஆரசியலை கற்று கொள்ளுங்கள் தேடுதலில் ஈடுபடுங்கள். பிள்ளையார் தந்தையையும் தாயையும் வலம்வந்து உலகத்தினையே வலம் வந்ததாக எண்ணி பெருமிதமடைந்தது போல் அல்லாது. தனித்தமிழ் ஊடகங்களில் உங்களின் பெயர்களையும் அறிக்கைகளை வெளியிட்டு பெருமையடைதீர்கள். இந்நடவடிக்கை உங்களிற்கு தமிழ் மக்கள் மத்தியில் ஓர் பிரபல்யத்தினை தரும். ஆனால் நீங்கள் பிரதிநிதித்துவப்போகும் ஏனை மக்களிற்கு என்ன செய்யப்போகின்றீர்கள்? உங்களுடைய அரசியல் நிலைப்பாடு என்ன?

சுவிற்சர்லாந்தை பொருத்தவரையில் நாடு éராகவும் குடியுரிமை பெற்ற தமிழர்கள் அண்ணளவாக 25000 பேர்கள். இந்ந 25000 தமிழர்கள் 26 மாநிலங்களில் சிதறி வாழ்கின்றனர். ஓர் மாநிலத்தில் அண்ணளவாக 1000 அல்லது 2000 தமிழர்களே இருப்பார்கள். இவர்களிற்கு ஓர் சுவிற்சர்லாந்து பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அவசியமா? நீங்கள் நடத்தும் அரசியல் இந்நாட்டு éர்விக குடிகளிற்கும் அனைத்து குடியேற்றவாதிகளிற்கானதாகவே இருத்தல் வேண்டும். சிறப்பு திறமையற்ற அரசியல் வாதிகள் பத்தில் ஓன்றாக இருக்க முடியுமே தவிர எதையும் சாதிக்கமுடியாது. இவ்வாறு தகமையற்ற அரசியல் வாதிகளால் அம்மக்களிற்கு எவ்வித பலனுமில்லை. இவ்வகையான அரசியல் அற்ற வெற்று வேட்டிஅரசியல்வாதிகளினாலே பல நாடுகளில் மக்கள் எவ்வித பயனுமின்றி தவிக்கின்றனர்.

உங்களுக்கு கிடைத்த இந்த சந்தர்பங்களை பயன்படுத்தி இன்று ஓங்கி வளர்ந்துவரும் இனவாதத்திற்கும் வலதுதீவிரவாத அரசியலிற்கு எதிராகவும் செயற்படுங்கள். உங்கள் செயற்பாடுகள் பெரும்பாண்மை மக்களை உங்கள் கருத்துகளிற்கு ஆதரவாக அணிதிரட்டுங்கள். மாறாக உங்கள் குறும் நோக்கங்களின் செயற்பாட்டால் இனவெறிக்கும் அதிதீவர வலது சாரி அரசியலிற்கு வித்திடாதீர்கள்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen