Sonntag, 20. März 2016

அகவிருப்பங்களும் கருத்துரிமை மறுப்பும்



ரு கூர் வாளின் நிழலில் என்ற தமிழனியின் போராட்ட அனுபவபகிர்வு நூல் பற்றி கடந்த 2 நாட்களாக முகநூலில் இரு வேறுபட்ட அணிகளின் வாதப்பிரதிவாதங்கள் முன்வைத்து  ஆக்கிரமித்துள்ளனர். 
ஓரு தரப்பு இடைச்செருகள் நடந்திருக்கலாம் எனவும் மற்றைய தரப்பு தமிழினியுடனான  இறுதிக்ககலங்களில் இருந்த தொடர்ரின் அடிப்படையில்  ஆதாரத்துடன் அந்நூலில் பதிவுசெய்த கருத்துடனே தமிழினி இறுதியில் இருந்தார் என தெரிவப்பது மட்டுமல்லாது தமது தரப்பில் தமிழினியுடன் உரையாடல் ஆதாரத்துடன் பேட்டிகளையும் பதிவுகளையும் ஆதாரப்படுத்தியுள்ளனர்.

பெரும்பாண்மையாக இடைச்செருகள் நடந்திருக்கலாம் என்று கூறும் தரப்பு தமிழினி தலைமைபற்றியும் இயக்கத்தின் அரசியல் முடிவுகள் பற்றிய விமர்சனங்களை அவர் முன்வைத்திருக்கமாட்டார் என மறுக்கின்றது.
தமிழினி விமர்சனத்துடனே தனது போராட்ட வாழ்வினை எதிர்கால சந்ததியின் நன்மை கருதி வெளியிட்டுள்ளார் என தமது உறுதியான கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளில் இறுதிப்போர்வரை இருந்தவர்கள் தமது தலைமைபற்றியும் போராட்டம் பற்றியும் ஓர் விமர்சன கண்ணோட்டத்துடன் பார்க்க முனையும் செயலே ஓர் ஆரோக்கியமான போக்கு. புலத்தில் வேலைசெய்த புலி ஆதரவாளர்களிற்கும் கண்மூடித்தனமான விசுவாசிகளிற்கும் தமிழனியின் விமர்சனம் கசப்பானதே. ஆனால் தமிழ் மக்களின் போராட்டத்தினை விமர்சனக் கண்ணோட்டத்தினுடாக பார்க்கும் தரப்பினர் தமிழமக்களின் உரிமைபோரட்டத்தினை சரியான பாதை ஊடக எதிர்காலத்தில் வழிநடத்துவதற்கு உதவும்; என்று கருதுகின்றனர்.
துரோகிகள் ஓத்தோடிகள் அரசாங்க ஆதரவாளர்கள் புலி எதிர்ப்பாளர்கள் என வகைப்படுத்தி கருத்து சுதந்திரத்திதை குரல்வழையில் நசுக்கும் நடவடிக்கையில் ஈடுபடாது. மேலும் இவ்வகையான சுயசரிதைகளே நடைபெற்ற உண்மை நிலைமைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும்.
விடுதலை புலிகளை கண்மூடித்தனமாக ஆதரித்தவர்களும் 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் புலிகளின் அரசியலிற்கு முண்டு கொடுப்பவர்களின்; அகவிருப்பத்திற்கு வெளியீட்டாளர்களின் அட்டைப்பட குழறுபடிகள் வழிவகுத்துள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவரின் அரசியலை விமர்சிப்பது ஓர் பெரிய குற்றமாகவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதுவது இவர்களின் குறுகிய அரசியல் பார்வையே மீண்.டும் உறுதுpப்படுத்துகின்றது.
சயந்தன் தமழினி தன்னுடன் முகநூலின் உட்தகவல் பெட்டியில் நடைபெற்ற உரையாடலையும் காரணம் காட்டி அவர் தனது சுயசரிதையில் குறிப்பிட்ட போன்று விடுலைப்புலிகளைபற்றுpயும் போராட்டம் பற்றியும் தன்னகத்தில விமர்;சனங்களை வைத்திருக்;கின்றார் என்பதனை தெளிவுபடுத்தியுள்ளார். அதேபோன்று அ.இராமசாமியும் மிக தெளிவாக தனக்கும் தமிழினியுடன் இடம்பெற்ற உரையாடலை காரணப்படுத்தி தமிழினியின் மனநிலையை தெளிவுபடுத்தியுள்ளார். என்னைப்பொறுத்த வரையில் இவர்களுடன் கருத்துக்களிற்கு பிற்பாடு இச்சந்தேகம் முற்றுபெற்றுள்ளது.

ஆனால் மேலும் சிலர் எப்படியாவது தமிழினி இப்படி எழுதியிருக்கமாட்டார் அல்லது எழுதியிருக்க கூடாது என்ற தமது அகவிருப்பங்களை நூலின் அட்டை சர்ச்சை மூலம் சாதிக்க முயலுகின்றனர். மேலும் ஓர் படிமேல் சென்று இன்னமும் தமது அனுபவ பதிவினை முன்iவாக்காத போராளிகளிற்கு ஓர் கட்டுப்பாட்டினை திணக்கமுயலுகின்றனர். ஓடுக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு இவரின் நூல் எவற்றை எடுத்து கூறுகின்றது என புலிகளுக்கு புலத்தில் பொறுப்பாக இருந்தவர் தனது கேள்வியை பதிவிடுகின்றார். வரலாற்று அனுபவங்களும் வேறுபட்ட பார்வைகளுமே நடைபெற்ற போராட்டத்தினை புடம்போட்டு பார்க்க உதவும் என்ற விடயம் இவர்களிற்கு புரயாமல் போனது ஆச்சரியமற்றதொன்றாகும்.

சந்தேகப்படல் வேண்டியது ஓர் அவசியமானது. எமது அகவிருப்பத்திற்கு அப்பால் ஓரு சில விடயங்கள் கசப்பாக இருப்பினும் ஏற்று கொள்ளல் வேண்டும்.

தமிழீழ விடுதலை போராட்;ட இயக்கங்கள் கடந்த காலத்தில் ஓரு நபரை துரோகிபட்டம் சூட்டுவதற்கு மூன்று மலிவான விவாதங்களை முன்வைப்பர். 1. பெண்தொடர்பு 2. நிதிமோசடி 3. காட்டிக்கொடுப்பு. இதே போன்று புலி எதிர்ப்பு அரசசார்பு ஓத்தோடிகள் என்ற சொற்கள் மூலம் முத்திரை குத்த முயலுகின்றது.

எல்லோருடனும் அனைத்து கருத்துகளுடனும் உடனபடமுடியாது. ஆனால் உடன்பட கூடிய பல விடயங்களுடன் கைகோர்த்து வேலைசெய்யமுடியும் என்பதனை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.
மேலும் இவ்வாறான போராட்த்தில் ஈடுபட்ட போராளிகள் தமது அனுபவ பகிர்வை வெளிப்படத்துவது மூலம் இலங்கைவாழ் தமிழ் சமுகம் தமது உரிமைபோராட்டங்களை சரியான பாதை ஊடாக வழிநடத்தி செல்ல உதவும் என நம்புகின்றேன்.

G.Suthakaran / 21.03.2016

Keine Kommentare:

Kommentar veröffentlichen