Donnerstag, 14. April 2016

சுவிற்சர்லாந்தின் தமிழ் ஏடு பத்திரிகை ஆசிரியர் பாலா காலமானார்.

தமிழ் ஏடு பத்திரிகை  1992 இலிருந்து 1994 வரையும் வெளிவந்த ஓர் கட்சிசார்பற்ற சுயாதீன பத்திரிகையின் ஆசிரியர். இவர் தனது பதிவுகளை தீமணி என்ற புனைப்பெயரிலேயே எழுதி வந்துள்ளார். இப்பத்திரிகை சுவிற்சர்லாந்து வாழ் மக்களின் வதிவிட விடயங்களையும் மற்றும் இலங்கை இந்திய அரசியல் கலாச்சார இலக்கிய பதிவுகளையும் தன்னகத்தில் கொண்டு வெளிவந்தது. வழமைபோல் இப்பத்திரிகையையும் சுவிற்சர்லாந்து விடுதலை புலிகளால் விற்பதற்கும் வாங்குவதற்கும் தடைகள் போடப்பட்டது மட்டுமன்றி இதற்கு எதிராக இன்னுமொரு பத்திரகையை புலிகள் தரப்பு கொண்டுவந்தது. வழமை போல் இப்பத்திரிகையும் நிதி, கூட்டு வேலை என பல காரணிகளினால் சாத்தியமற்று 1994 ல் நின்று போனது.
ஆனால் பாலா தனது சமூகபணியை தொடர்ந்தார். அகதி தஞ்ச கோரிக்கையாளர்களிற்கான சட்ட ஆலோசனைகளை சுவிற்சர்லாந்து சமூக நிறுவனங்களுடன் இணைந்து இலவசமாக வழங்கி வந்துள்ளார். அதன் பிற்பாடு இணையபத்திரிகைகள் துளிர்விட்ட பொழுது «ஈழஅணல்»; என்ற இணைய சஞசிகையை கொண்டு வந்துள்ளார். புலிகளின் ஆயுத போராட்டம் முள்ளி வாய்காளில் முடக்கப்பட்ட பின்னர் இவரும் மக்களை இத்துயரில் இருந்து வடுவிக்கவேண்டும் என ஆர்வப்பட்ட ஓர் மனிதன்.

இவரின் இழப்பு இச்சமூகத்திற்கு தெரியாமல் போனது எனக்கு ஆச்சரியத்தினையும் கவலையும் கொடுத்துள்ளது. இவ்வகையில் இந்நாட்டில் வாழும் பல தமிழர்களின் இருப்புக்கு அத்திவாரம் இட்ட சமூகப்போராளிகள் பலர் எவ்வித பதிவு இன்றி காணாமல் போயுள்ளனர். பாலா தன்னை சுவிற்சர்லாந்தில் முதலில் பதிவு செய்த தமிழ் பத்திரிகையாளன் என தன்னை அறிமுகப்படுத்துவிதில் என்றும் பெருமைகொள்ளுவார்.

இவரின் இழப்பு சுவிற்சர்லாந்து வாழ்தமிழர்களின் ஓர் வரலாற்றின் அத்திவாரத்தின் இழப்பாக கருதமுடிகின்றது. இவரின் செயற்பாடுகள் இன்று மொளனித்ததாலும். அவருடன் இணைந்து வலம்வந்தவர்கள் அவரைப்பற்றி நினைவு கூறுவது அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen