1983-1984 களிலேயே பல தமிழர் சுவிற்சர்லாந்தில் தஞ்சம் அடைந்திருந்தனர். கன்ரோன் பேர்ணிலேயே பெரும்பாண்மையான தமிழர்கள் தமது தஞ்சக்கோரிக்கையை பதிவு செய்திருந்தனர்.
இத்தஞ்சப்படையெடுப்பு இந்நாட்டு பிரஜைகளுக்கு ஓர் அதிர்ச்சியையும் ஆத்திரத்தினையும் கொடுத்திருந்தது. எமது நிறம் மொழி அனைத்தையும் இவர்கள் எம்மை ஓர் வேற்றுகிரகவாதிகள் பார்த்தார்கள். இதன் வெளிப்பாடாக இனவாதக்கருத்துக்களும் வெறுப்பு நடவடிக்ககைளையும் பொதுவெளியில் தமிழர்களிற்கு எதிராக நடைபெற்றது. உங்கள் நாட்டுக்கு திரும்பிப்போங்கள் என உமிழ்நீரால் துப்பிய சம்பவங்கள் பல நடந்தேறியது.
ஆனால் இச்சந்தப்பர்த்தில் உயர்ந்த பட்ச மனிதாபிமான பண்புடையோர் பலர் தமிழருக்கு உதவும் வகையிலும் ஆதரவு தர தஞ்சம் அடைந்த தமிழர்களை தேடிவந்தனர். அதேபோல் பின்வரும் கட்சிகளும்
SAP (Die Sozialistische Arbeiterpartei),
PDA( Partei der Arbeit der Schweiz),
POCH (Die Progressiven Organisationen der Schweiz), SP(Sozialdemokratische Partei der Schweiz )
தஞ்சம் அடைந்த தமிழரின் இருப்புக்கு ஆதரவாக பல போராட்டங்களை செய்தனர்.
பல உதவிநிறுவனங்களும் தமிழர்களின் இருப்புக்கான பல போராட்டங்களில் இணைத்துக்கொண்டனர். ஆந்தவகையில் பின்வரும் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றின.
CFD (Christlicher Friedensdienst)
AAA (Aktion für Ausgewiesene Asylbewerber)
HEKS (Das Hilfswerk der Evangelischen Kirchen Schweiz)
CARITAS
Red Cross Schweiz
Freiplatzaktion Basel, Zürich
இவை மட்டுமல்லாது ஓவ்வொரு கிராம நகரங்களில் இருந்த கத்தோலிக்க கிறுஸ்தவ தேவலாயங்களும் தமது ஆதரவினையும் ஓத்துழைப்புக்களையம் தமிழர்களிற்கு வழங்கி இருந்தனர்.
இவ்வகையில் இலங்கையில் ஆயுதப்போராட்டம் ஆண்டடிற்கு ஆண்டு வலுபெற்று வளர்ந்து வந்தது. அதேற்கேற்ப தளத்திலிருந்த அனைத்து விடுதலை இயக்கங்களிற்கான கிளைகளும் தஞ்சம் அடைந்த தமிழர்களினால் உருவாக்கபட்டது. தளத்தில் அவ் இயக்கங்கள் ஓருங்கிணைந்த வேலைத்திட்டத்தில் வேலை செய்யாத போதும் இந்நாட்டில் செயற்பட தொடங்கிய அனைத்து இயக்க அமைப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தஞ்சம் அடைந்த தமிழர்களை திருப்பி அனுப்புவதற்கு எதிராக போராடவேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் பரஸ்பர புரிந்துணர்வு அனைத்து இயக்க அமைப்பாளரிடமும் காணப்பட்டது மட்டுமல்லாது எல்லோரும் ஓன்றிணைந்து பல ஆர்பட்டங்கள் உண்ணவிரத போராட்டங்களை முன்னெடுக்கப்பட்டிருந்தது இருந்தது. இவற்றில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழக (PLOT) சுவிற்சர்லாந்து கிளை இந்நாட்டு பல அமைப்புக்களுடனும் கட்சிகளுடனும் தனது தொடர்புகளை வலுப்படுத்திகொண்டிருந்தது. இவ்வகையில் இந்நாட்டு மக்களிற்கான தமிழர்கள் ஏன் தஞ்சம் அடைந்தோம் இலங்கையில் எவ்வாறு திட்டமிட்ட இன ஓடுக்குமுறை நடைபெறுகின்றோம் என்பதனை பாடசாலைகள் பல்கலைக்கழங்கள் தேவாலயங்களில் இயக்க பாரபட்சமற்று பல தகவல்களும் விளக்கங்களும் வழங்கப்பட்டது.
இவ் வரலாற்றில் இன்றைய தமிழர்களின் இருப்பிற்காக தமது வாழ்கையை அர்பணித்தவர் தான் டாக்டர் சூபரும் அவர் மனைவியுமான கைடி (Dr. Peter Zuber, Heidi Zuber) 1984 களில் சுவிற்சர்லாந்து அரசு 300 தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கைகளை எடுத்தது. டாக்டர் சூபர் 300 அகதிகளையும் தனக்கு தெரிந்த குடும்பங்களுடன் தொடர்புகொண்டு பொலிசாரின் கண்களிற்கு புலப்படுத்தாது ஓளித்து வைக்கபட்டனர். அதன் பின்னர் அப்போது இருந்த நீதித்துறை அமைச்சராக இருந்த எலிசபத் கொப் 300 தமிழர்களின் திருப்பி அனுப்பும் விடயத்தினை மறுபரிசீலனை செய்வதற்கு உடன்பட்டார்.
அக்காலப்பகுதியில் பல தமிழர்கள் பேர்ண் புகையிரத நிலையத்திலேய நீண்;ட நேரத்தினை செலவளித்தனர். இவ்விடயத்ததை வைத்து தமிழர்கள்மீது வெறுப்பினை உண்டாக்கும் வகையில் சுவிற்சர்லாந்து தொலைக்காட்சியினால் ஓர் நேரடி நிகழ்ச்சி ஓழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த தகவலையும் நிகழ்ச்சியின் கபட நோக்கத்தினையும் டாக்டர் சூபர் எமக்கு அறிவித்திருந்தார். அந்த நிகழ்ச்சியின் பெயர் இன்று பிற்பகலில் தமிழர்கள் பேர்ண் புகையிரத நிலையத்தில். அன்று சற்று பலமாக இருந்நு சுவிற்சர்லாந்து தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் புகையிரத நிலைத்திற்குள் தமிழர்கள் செல்லாது தடுத்திருந்தனர். அவ்வகையில் அந்த நிகழ்ச்சியில் படு தோல்வி அடைந்து இறுதியாக இன்று தமிழர்கள் இன்று
பிற்பகல் புகையிரதநிலையத்தில் இல்லை என்று முடித்திருந்தது.
அதேபோன்று பேர்ண் பத்திரிகையில் (Berner Zeitung) வேலை செய்த ஓர் நிருபர் எம்முடன் நல்ல தொடர்பில் இருந்திருந்தார். அவர் சுவிற்சர்லாந்திலிருந்து திருப்பி அனுப்புவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடபடுவதற்கு அக்காலகட்டத்தில் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சாராக இருந்த ஹமீத் வந்திருந்தார். வந்த அமைச்சர் எங்கு தங்குகின்றார் எப்பொழுது Hotel இல் இருந்து வெளியில் வருகின்றார் என்ற செய்திகளும் எமக்கு தெரிவிக்கபட்டடிருந்தது. இந்தகவலை நாம் தஞ்சம் அடைந்திருந்த தமிழர் விடுதிகளிற்கு அறிவித்து 60 பேரை திரட்டி இருந்தோம். Hotel Bellevue Bern இலே அமைச்சர் தங்கியிருந்தார். அவர் விடுதியைவிட்டு வெளியில் வரும்போது 60 தமிழர்கள் கண்டன அட்டைகளுடனும் வாயை மூடியவண்ணம் பாதையை ஓரத்தில் காத்திருந்தோம். இதன் போது 20 க்கு மேற்பட்ட பத்திரிகை நிருபர்களும் தொலைக்காட்சியும் சமுகம் அளித்திருந்தனர். இப்போராட்டம் திடீரென ஏற்பாடு செய்ததினால் எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை. எமது கண்டனங்களையும் இலங்கை அரசின் அடாவடி இன ஓடுக்குமுறையையும் அம்பலப்படுத்தியிருந்தோம். பேர்ண் பொலிசார் எமது போரட்டத்தினை தடுக்க எம்மை பலோத்காரமாக இழுத்து பெரிய பொலிஸ் வாகனத்தில் அடைத்து நாய்களை போல் இழுத்து அடைத்து சென்றனர். நாம் போரட்டத்திற்கு முன்னதாகவே பல நிறுவனங்களிற்கு அறிவித்து சென்றதினால் ஓரு சில மணித்தியாலங்களிற்கு பின்னர் எம்மை விடுதலை செய்தனர். ஆனால் அடுத்த நாள் அனைத்து சுவிற்சர்லாந்து தொலைக்காட்சியிலம் பத்திரிகைகளிலும் தலைப்பு செய்தி ஆனது.
இதே போன்று பல ஆர்பட்ட ஊர்வங்கள் சுவிற்சர்லாந்து மக்களின் கவனத்தினையும் அனுதாபத்தினையும் பெறும் வகையில் நடைபெற்றது. ஆக்காலப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பல தமிழர் போரட்டங்களில் (SAP, PDA, POCH) கலந்து கொண்டு எமது போராட்டங்களிற்கு வலு சேர்த்தனர். நடைபெற்ற போராட்டங்கள் தனியே திருப்பி அனுப்புவதற்கு எதிராக மட்டும் இருக்கவில்லை மாறாக இலங்கை அரசின் இன ஓடுக்குமுறையை அம்பலப்படுத்துவதாகவும் சுவிற்சர்லாந்து அரசின் அகதி கொள்கைக்கு எதிராகவும் அமைந்திருந்தது.
இதேகாலகட்டங்களில் இனவாதமும் மேலோங்கி இருந்தது. இதனால் இனவாதத்திற்கும் எதிராக அதிதீவிர இடதுசாரிகளின் போராட்டங்களிலும் கலந்து போராடினோம். அந்தவகையில் 1987 ளில் பல தீவிர இடதுசாரிகள் சட்டத்திபற்கு முரணாக தமது வசிப்பிடங்களை தமது விருப்பத்திற்கு இணங்க பழைய வாகனங்களில் அமைத்து கொண்டடிருந்தனர். அவர்களின் போராட்டம் மக்களின் சுயாதீனமான வாழ்வுக்கான போராட்டமாக அமைந்திருந்தது. இவர்களை அகற்றும் வகையில் பேர்ண் பொலிசாரின் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. இதனை தடுக்குமுகமாக முற்போக்கு சக்திகளால் பாரிய போராட்டம் ஓர் புரட்சியாக
Zaffaraya என்ற பெயரில் வெடித்தது. இப்போரட்டத்திலும் எம்மை இணைத்து கொண்டோம். இப்போராட்டத்தில் ஏற்பட்ட தொடர்புகளினால் தற்பொழுது அமைந்திருக்கும் Reithalle Bern இல் அக்காலகட்டத்தில் பல கூட்டங்கள் சந்திப்புக்களை அங்கேயே நடாத்தி வந்தோம். நிக்கரகாவுவா மற்றும் தென் ஆபிரிக்கா பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் ஈடுபட்ட பல போரட்ட சக்திகளுடனான சந்திப்புக்களிலும் கலந்து கொண்டோம். அங்கு அமைக்கப்ட்டிருந்த உணவு விடுதியில் தமிழ் உணவும் முக்கியாமானது. அதற்கு பிற்பட்ட காலப்பகுதியில் அங்கு அமைக்கபட்ட திரையரங்கில் ஓரு சில தமிழ்திரைப்படங்களையும் திரையிட்டோம்.
ஆனால் சாதரணமாக தமிழர்கள் இதனை கட்டுக்காய்
பார்க் என்பர் அல்லது தூள்காரார் என்பார்கள். ஆனால் உள்ளே இருந்த அதிதீவிர இடதுசாரிகள் பெரும்பாண்மையினரால் ஏற்றகொண்ட இந்த அமைப்புமுறையினர் முற்றாக எதிhத்தனர். ஆனாலும் அகதிகளை திருப்பி அனுப்புதல் மற்றும் வலது தீவிர வாதிகளின் இனவாத வன்முறைக்கு பதில் கொடுப்பவார்களாக இருந்தனர். பெரும்பாலும் இவ்விடத்திற்கு வர பல தமிழர்கள் பயந்தனர். ஆனால் பேர்ண் பொலிசாரினால் மேற்கொள்ளபட்ட கடுமையான தாக்குதலின் போது நான் அவர்களிடம் கூடியிருந்த ஞாபகங்கள் பசுமையாகவும் விளிப்பாகவும் உள்ளது.
பார்க் என்பர் அல்லது தூள்காரார் என்பார்கள். ஆனால் உள்ளே இருந்த அதிதீவிர இடதுசாரிகள் பெரும்பாண்மையினரால் ஏற்றகொண்ட இந்த அமைப்புமுறையினர் முற்றாக எதிhத்தனர். ஆனாலும் அகதிகளை திருப்பி அனுப்புதல் மற்றும் வலது தீவிர வாதிகளின் இனவாத வன்முறைக்கு பதில் கொடுப்பவார்களாக இருந்தனர். பெரும்பாலும் இவ்விடத்திற்கு வர பல தமிழர்கள் பயந்தனர். ஆனால் பேர்ண் பொலிசாரினால் மேற்கொள்ளபட்ட கடுமையான தாக்குதலின் போது நான் அவர்களிடம் கூடியிருந்த ஞாபகங்கள் பசுமையாகவும் விளிப்பாகவும் உள்ளது.
இனவாதத்தின் உச்சக்கட்டத்தில் தமிழர்கள் உதவிப்பணத்தினை தவறாக பயன்படுத்துவதாக கூறி தூண் மாநகர சபை தமிழருக்கான தனியான நாணயத்தினை தமிழ் அகதிகளிற்கு விநியோகித்திருந்தனர். இது அப்பட்டமான இரண்டாம்தர பிரசைகளாக இனங்கானுவதற்கான நடவடிக்கை. இவ்வகையில் தென் ஆபிரிக்காவில் இனவெறி அரசினால் நடைமுறைப்படுத்தபட்ட Apartheid க்கு ஓப்பனாது என பலர் விமர்சித்து இருந்தனர். இவ்விடயத்ததை எடுத்துகாட்டி இப்புதிய நாணயத்தினை சுவிற்சர்லாந்து பாராளுமன்றத்தில் துக்கி எறிந்த வரலாறுகளும் நடைபெற்றன.
80, 90 களில் நடைபெற்ற பல வரலாறுகள் பதிவு செய்யப்படாதினால் தற்பொழுது மேடைகளில் புத்திஜீவிகளாவும் வரலாற்று நாயர்களாகவும் கலைஞர்களாக பவணிவரும் பலருக்கு இந்த வரலாறுகள் தெரியாது போயுள்ளது. இவ்வகையில் அன்றைய பல புத்திஜீவிகள் இன்றைய தமிழர் இருப்புக்கு காரணமானவர்கள் தம்மைபற்றிய பதிவுகள் அற்று காணாமல் போயுள்ளனர் அல்லது காலம் அடைந்துள்ளனர். ஆதலால் அன்றைய காலப்பகுதியில் ஆரம்பிக்கபட்ட தமிழ் கல்விக்கூடங்கள் கலைநிகழ்வுகள் மற்றும் வானொலிகள் பத்திரிகைகள் சஞ்சிகைகள் இவற்றில் பங்கெடுத்த வரலாற்று நாயகர்கள் பற்றி குறிப்புக்களை பதிவு செய்யலாம் என நினைத்துள்ளேன். யாரவது சுவிற்சர்லாந்து தமிழ்மக்களின் வராலாற்றினை தொகுப்பார்கள் தானே என்று நீண்டகாலம் காத்து இருந்துவிட்டேன்.
அன்றைய காலப்பகுதியில் எவ்வித செயற்பாடும் அற்று தமது வாழ்கையை பார்த்து கொண்டிருந்த இன்றைய சில பிரமுகர்கள் உச்சக்கட்ட வெற்றிகர ஆயுதபோராட்டம் நடைபெற்ற போது அடித்துபிடடித்து LTTE,TELO,PLOT,EPRLF,EROS தம்மை அடையாளப்படுத்தி கொண்டனர். ஆனால் வரலாற்றில் பலரின் தன்னலமற்ற செயற்பாடுகள் மறைக்கப்பட்டுவிடக்கூடாது என்ற ஆர்வத்தினால் சில சம்பவங்களை பதிவிட்டுள்ளேன். இதை வாசித்த வரலாற்று கதாநாயகர்கள் என்னுடன் தொடர்பு கொண்டால் பல சம்பவங்களை நாம் இரண்டாவது மூன்றாவது சுவிற்சர்லாந்து சந்ததிக்கு விட்டுசெல்லாம்.
வரலாற்று பதிவு தொடரும்…..
Ganapathipillai Suthakaran 04.02.2019
Ganapathipillai Suthakaran 04.02.2019
Keine Kommentare:
Kommentar veröffentlichen