Montag, 5. Oktober 2020

ஏன் பெற்றோர் தமது குழந்தைகளை கொலை செய்கின்றனர்?

தா
ய்மார்கள் தங்கள் குழந்தைகளை கொல்லும்போது அல்லது குறைந்தபட்சம் கொல்ல முயற்சிக்கும்போது அவர்கள் பெரும்பாலும் மனநோயினால் பாதிக்கபட்டவர்களாக இருப்பார்கள். குற்றவியல் உளவியலாளர்களும் மற்றும் தடயவியல் மனநல மருத்துவர்களும் இக் கருத்தடன் உடன்பட்டுள்ளனர். மற்றைய குடும்ப உறுப்பினர்களால் குழந்தைகள் பாலியல் வன்முறையால் துன்புறுத்துவதும்  ஒரு காரணியாக அமைந்துள்ளது.


குடும்பங்களுக்குள் நடைபெறும் வன்முறைகள் பொதுவாக மூன்று சாத்தியமான தோற்றங்களைக் கொண்டிருக்கின்றன குற்றவியல் உளவியளாளர் மார்க்ஸ் விளக்குகின்றார். உதாரணமாக ஒரு தாய் மனநலம் பாதிக்கப்பட்டதால் குழந்தையை கொல்கிறாள். எந்தவொரு காரணத்திற்காகவோ விவாகரத்து செய்ய விரும்புகிறாள், தன் குழந்தைகளை உலகத்திலிருந்து பாதுகாக்கவோ அல்லது காப்பாற்றவோ விரும்புகிறாள், அவர்களை தனது மரணத்துடன் அழைத்துச் செல்கிறாள். குற்றவியல் உளவியலாளர் மேலும்அவர் குறிப்பிடுகையில்  இவவகையான  வன்முறை நிகழ்வுகளை  நீட்டிக்கப்பட்ட தொடர்  தற்கொலை என்று வரையறை செய்கின்றார். தாய் தற்கொலை செய்து கொள்வதும், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அவர்களது உயிரினை பறித்து தன்னுடன் அழைத்துச் செல்லும் நோக்கத்திலேயே செய்யப்படுகின்றது.

நீட்டிக்கப்பட்ட தொடர் கொலைகள்

இரண்டாவது வகையிவான  நீட்டிக்கப்பட்ட கொலைக்காரணம்  கணவன் மனைவிற்கு இடையிலான விவாகரத்து தகராறின் போது சட்டம் தனியே தாயிடமோ தந்தையிடம் மட்டும் குழந்தை பராமரிக்கும் உரிமைக்கான தீர்ப்பு வழங்கிவிடும் போது பாதிக்கபட்ட தாயோ தந்தையோ மற்றவரிற்கு வழங்கபட்ட குழந்தை பராமரிப்பிற்கான உரிமையை தடுக்கும் வகையில் தமது குழந்தையை தாமே காெலை செய்கின்றனர்.குற்றவியல் உளவியலாளரின் கூற்றுப்படி, பெண்களை விட ஆண்களே இவ்வகையான கொலைகளை பெரும்பாலும் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்னதாக குறிப்பிடுகின்றனர். இங்கும் மேல்குறிப்பிட்டது போல் குழந்தைகளின்  உயிரை முடிவுக்கு கொண்டுவருவதன்  முலம் தாயையோ தந்தையையோ தண்டிக்க முனைின்றனர்.

வயதான அல்லது  நோய்வாய்ப்பட்ட பெற்றோர் தமது குழந்தைகளை பராமரிக்க முடியாத இயலாமையில் கூட்டாக தமது உயிர்களை பறித்து கொள்கின்றனர். இவ்வகை கொலைகள் முன்றாவது வகைப்பட்ட நீடிக்கபட்ட தொடர் கொலைகள் ஆகும். முடிவு செய்கிறார்கள். ஒருவர் மற்றவரைக் கொன்று பின்னர் தற்கொலை செய்து கொள்கிறார்.


குழந்தை கொலைகள் மட்டுமல்ல

இவ்வகையில் திட்டமிட்ட நடைமுறையும் சாத்தியமாக்கின்றது என்று மார்க்ஸ் சுட்டிக்காட்டுகின்றார். வாழ்வில் ஏற்பட்ட அதிர்ச்சியும் கூட இவ்வகையில் ஓர் கொலையினை செய்யகூடிய  சாத்தியங்களை ஏற்படுத்தி கொடுக்கின்து. இதன் விளைவாக, ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிற்பாடு ஏற்படும் சில எதிர்வினைகள் எவ்வித தாயாரிப்பும் அற்ற  இயல்பான விடயமாக கொலை செய்யும் நிலைமைகளையும் மனோநிலமையையும் தோற்றுவிக்கின்றது.

உளவியல் பிரச்சினைகள் இருப்பதாக நீங்கள் கருதினால் பின்வரும் கேள்விகளை கேட்பதன் மூலம் உங்களை நீங்கள் புடம் போட்டு கொள்ள உதவக்கூடும்:

உங்களுக்கான கேள்விகள்:

ஆதாரம்: Rosemarie Piontek: Mut zur Veränderung. Methoden und Möglichkeiten der Psychotherapie. 2009.

  1. எனக்கு என்னைத் தெரியாதுஉள்ளது ! நான் வழக்கத்தை விட வித்தியாசமாக உணர்கிறேனா?
  2. இந்த மாற்றம் எனக்கு கவலை அளிக்கிறதா?
  3. மாற்றத்திற்ககான விளக்கம் உள்ளதா?
  4. எனனால் சில விடயங்களை ஏற்றுெகாள்ள முடியவில்லை ஆனாலும்  தீவிரத்தை உளுணர்வு நியாயப்படுத்த முனைகிறதா?
  5. எனது அன்றாட வேலைகளை சிரமத்துடன் செய்யகின்றீர்களா?
  6. நான் எப்போதும் கவலைப்படுகிறேனா, நான் மிகவும் பயப்படுகிறேனா?
  7. நான் உடல் வியாதிகளால் பாதிக்கப்படுகிறேனா?
  8. என் தூக்கம் தொந்தரவாக இருக்கிறதா, நான் மிகக் குறைவாக அல்லது அதிகமாக தூங்குகிறேனா?
  9. நான் அடிக்கடி ஆக்ரோஷமான, வெறுக்கத்தக்க, எரிச்சலை உணர்கிறேனா அல்லது நான் மிகவும் சகிப்புத்தன்மையற்றவனாக உள்ளேனா?
  10. நான் அடிக்கடி நோய்வாய்ப்பட்டவனை போன்று உணருகின்றேனா?
  11. எனக்கு தற்கொலை எண்ணங்கள் உள்ளதா?
  12. எனது பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு எவரும் இல்லை என்று உணருகின்றேனா?
  13. நண்பர்களுடனான உரையாடல்கள் உதவவில்லையா?
  14. எனது மாற்றம் மற்றவர்களால் தெளிவாக கவனிக்கப்படுகிறதா?
  15. மூன்று மாதங்களுக்கும் இவ்வகையான நிலை தொடர்கின்றதா?
  16. எனக்கு எவ்வடயத்திலும் அக்கறையற்றதும் விருப்பமற்ற போக்கினையும் உணரக்கூடியதாக உள்ளதா?

எமக்கான நண்பர்கள் உறவினர்களிடையே ஓர் திறந்த உரையாடல்களை தொடர்சியாக மேற்கொள்வதும் தொடர்புகளை தொடர்ந்து பேணுவதும் புலத்தில் வாழும் சூழலில் இருந்து அன்னியமாகாது எம்மை மகிழ்ச்சியாக வைத்துகொள்ள உதவும்.

- கணபதிப்பிள்ளை சுதாகரன்.  


Keine Kommentare:

Kommentar veröffentlichen