Freitag, 27. September 2024

எமதுதீவின் புதியதிபரும் புலம்பெயர் ஊடகங்களும்… - மூ. சிவகுமாரன்/27.09.2024

லங்கைத்தீவின் அரசியல் அதிஉயர் அதிகாரபீடத்தை புரட்டிப்போட்ட ஒருசூறாவளி அதிபர் தேர்தல் நடந்துமுடிந்திருக்கிறது. சுதந்திர இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக தீவில்வாழும் பெரும்பான்மையான ஏழைமக்களின் வாழ்வுமேம்பாட்டை மட்டுமே அரசியல் சுலோகமாக கொண்டு  தேசியமக்கள்சக்திஎன்ற கட்சி அதிபர் பீடத்தை கைப்பற்றிஇருக்கிறது. இது தீவில் வாழும் ஏழைமக்களுக்கு  நம்பிக்கை கொடுக்கும் ஒரு வெற்றிதான் கொண்டாடப்படவேண்டிய வெற்றிதான். ஆனாலும் அன்றாட வாழ்வாதாரமே பெரும்திண்டாட்டமானஅந்த ஏழைமக்கள் தங்கள் மனங்களில்தான் அந்த கொண்டாட்டத்தை நிகழ்த்துகிறார்கள் ! புதிய அதிபர் பதவியேற்பும் மிகமிக எளிமையாகவே நடாத்திமுடிக்கப்பட்டது ஜேஆரிலிருந்து ரணில்வரை அநுராதபுர கோத்தா அதிபர் இராஜ்சிய பதவிஏற்பை கண்ட மக்கள் அருராவின் பதவி ஏற்புஎவ்வளவு எளிமை என்பதை உணர்வர்!

இரண்டுபுரட்சிகளைமூட்டி அரச அதிகார இயந்திரகொடூர பற்களால் வெறிகொண்டு கொன்றுதின்னப்பட்ட ஜேவிபி என்ற இயக்கத்தின் பல்லாயிரக்கணக்கான இளம் உயிர்களின் விடுதலைகனலை ஏந்தி ஒரு சோசலிச இயக்கத்தின் இளைஞர் அமைப்பின் தலைவராகி பிற்பாடு அந்த இயக்கத்தின்அரசியல்கட்சி தலைவராகி நாட்டின் எதிர்கட்சி தலைவராகி ஒரு முப்பது வருட அரசியல் போர் அநுபவங்களினூடாக அதிபராகி இருக்கிறார் அநுரா!

செயல் அதுவே சிறந்தசொல் என்பதை நிரூபிப்பதே தன் இலட்சியம் என்பதை அவர் மக்களுக்கு ஆற்றுகின்ற உரைகள் எல்லாவற்றிலும் இடித்துரைக்கிறார் தீவில் தெற்கில் ஒரு வார்த்தை கிழக்கில் இன்னொருவார்த்தை  தான்சார்ந்த சிங்கள மக்களுக்கு ஒருபேச்சு வடக்கு தமிழர்வாக்குப்பெற இன்னோர்பேச்சு

என்று அரசியல் வியாபார தலைவராகன்றி ஒன்றுபட்ட இலங்கைத்தீவுக்குமான இன மத பாகுபாடற்ற ஐனநாயகசமத்துவ ஆட்சியை கொண்டுவருவேன் குறிப்பாக ஏழைமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவேன் என்று நிதானமாக ஆணித்தரமாக உரைக்கும்  இலங்கை தீவின் முதல் அதிபர் இவர் !

முப்பதுவருடத்துக்கும்மேலான யுத்தத்தில் எல்லாம் இழந்து தேசம்விட்டுதப்பிஓடிக்கொண்டிருக்கும் கூட்டத்தின் பக்கம் எண்ணியே பார்க்க முடியாத எம் சொந்த உறவுகள் இந்த தலைவனை ஒருநம்பிக்கை நட்சத்திரமாக பார்ப்பதில் என்ன தவறு!

பண்டாரநாயக்கா சந்திரிகாவை நம்பி நல்லூரில் காப்புகூட வாங்கிய எங்கள் மக்கள்  ஏழைஅடிவயிற்று பசிபோக்குவேன் ஏழைப்பிள்ளைகளின் கல்வியை உறுதிசெய்வேன் என்ற அநுராவின் வார்த்தையை நம்பத்தானேசெய்வார்கள்?

ஆனால் எம்புலம்பெயர் ஊடகங்களும் பெரும்பாலான சர்வதேச ஊடகங்களும் புதியதிபரை புதிராகவே சித்தரிக்கிறார்கள் இன்னும் ஒருபடிமேலாக மார்க்ஸிட் சோசலிச கம்யூனிச தலைவர் இவரால் ஆட்சியை கொண்டுநடத்தமுடியாது இவரின் ஆட்சிஆயுள் அரைவருடமும் நீடிக்காது என்று மக்கள்மனங்களிலே எதிர்மறை எண்ணங்களை விழுந்தடித்து விதைக்க முனைவதேன்?

யுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்தில் லண்டனில் இருந்துவந்த ஒருமாத இதழுக்கு சிவதம்பிஅவர்கள் எம் தமிழ் ஊடகத்துறை குறித்த பேட்டியில் சிங்கள ஊடகத்துறை வளர்ந்தளவுக்கு தமிழ்ஊடகம் வளர்ச்சிஇல்லை என்ற பொருள்பட  குறிப்பிட்டார் அது யுத்தகாலம் யுத்தம்முடிந்து ஒரு பதினைந்துவருடம் கழிந்தும் பொதுசன ஊடகம் என்று சொல்லக்கூடியவைகள்கூட எம் இலங்கைத்தீவின் அரசியல் என்றாலே ஒரு சார்பாக உலகக்குருட்டுப்பார்வையோடு ஏனோசெயற்படுகிறார்கள்?இந்தபோக்கு எம்தீவின் தேர்தல்காலகட்டத்திலும் அநுராவின் வெற்றிக்குப் பிறகும் தொடர்வது எம்ஈழத்தமிழரின் அரசியல் சாபமோ என்று எண்ணத்தோன்றுகிறது.!

இந்த எண்ணப்பாட்டுத்தீக்கு எண்ணை விடுபவர்களாக எம் மக்களின் அரசியல்கட்சி தலைவர்களே இருக்கிறார்கள் அண்மையில் அப்புக்காத்துவாரிசு அரசியல்கட்சி கஜேந்திரன் அநுராவுக்கு  என்ன அருகதை இருக்கு என்று முழக்கமிடுகிறார்

தமிழரசுகட்சி ஜனநாயக தேர்தல் தலைவரோ அநுரா ஜேவிபி கட்சிதான் 83 இனக்கலவரத்தை நடாத்தியது என்று மிகமோசமான வரலாற்று பொய்யை புனிதநாள் பேச்சில் கட்டவிழ்க்கிறார்

இலங்கைதீவின் புவியியல் அமைப்பு அது இன்னும் எவ்வளவுகாலம் ஆயுள் உள்ளது என்று புவியியல் ஆய்வாளர்கள் அங்கலாய்க்கிறார்கள் மாலைதீவையும் ஒப்பிட்டு!

உலக மேலாதிக்கப்போட்டியில் முன்னணியில் ஓடும் சீனாவுக்கு ஆப்புவைக்க தாய்வான் யுத்தத்தைகொழுத்துவிடத்துடிக்கும் மேற்கு ஆதிக்க சக்திகளும் எம் ஆசியபிராந்தியமும்!

உலக சனத்தொகையில் முதன்மை்பெற்றதுமட்டுமல்ல வளர்ந்துவரும் சந்தைப்பொருளாதார போட்டியாளர்களிடையேயும் பலம்பொருந்தும் ஆதிக்கசக்தியாக கருதப்படும் இந்தியா எம் அண்டைநாடுமட்டுமல்ல பாலம்போட்டால் கொழும்பைவிட குறுகிய தூரத்தில் இருக்கும் எம் உறவுநாடு!

இலங்கையின் சனத்தொகையில் இரண்டாம் இடத்தில்இருந்த தமிழர்

மூன்றா நான்கா இடம் என்று தடுமாறும் அளவுக்கு ஈழத்தமிழ்இளைஞர் தப்பி ஓட வைக்கும் அரசியலே இதுவரை இலங்கைத்தீவில் இருந்துவந்த நிலையில் யுத்தத்தால் அனைத்தும்

இழந்தும் பதினைந்து வருடங்கள்கழிந்தும் முறையான எந்த புனர் மேம்பாடும் இன்றி தவிக்கும்எம் ஏழைசகோகதர மக்கள் வாழ்வு விடிவது எப்போ? ஒரு அரைநூற்றாண்டாய் அழிந்துபோன எம்தேச வளங்களை மீள்கட்டமைப்பு செய்வது எப்போ?அல்லது சர்வதேச அனுசரணையோடு வடக்கும் கிழக்கும் இணைந்த உள்ளக சுயாட்சி தீர்வு கிடைக்கும்வரை களத்திலும் புலத்திலும் திரண்டுபோராட புதுசக்திகள்தயாராகிறார்களா?

இந்த கேள்விகளை முன்னிறுத்தி ஆக்கபூர்வ அறிவுக்கண்களை திறக்க ஐனநாயகத்தின் ஒருமுக்கிய தூண் என்ற சமூக பொறுப்போடு  குறிப்பாக எம்புலம்பெயர் ஊடகங்கள் செயற்படுவார்களா என்று ஒரு ஈழத்தமிழனாக ஏங்குகிறேன்!

Montag, 23. September 2024

இலங்கை தமிழர்கள் தவறவிட்ட பல வாய்ப்புக்கள் பற்றியும் இன்றைய சூழல் பற்றிய ஓர் அலசல். -க.சுதாகரன் / 23.09.2024

இலங்கையில் தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளிற்காகவும் இனத்தின் இருப்பிற்காகவும் பல்வேறு முறையில் போராட்டத்தினை நடாத்திய சமூகம். அதுமட்டுமல்லது போராட்டங்கள் பல சரியான நோக்கி நகர்த்தபடாதினால்  வன்முறைகளால் மொளனிக்கபட்டுள்ளது. இவற்றிற்கு பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்தி உள்ளது.


1. நடைமுறைக்கு சாத்தியமற்ற உயர்ந்தபட்ச கோரிக்களை முன்வைப்பது

2. பிழமையான தலமைகள் போராட்டங்களை நடாத்துவது

3.பாராளுமன்ற கதிரைகளை கைப்பெற்றும்  நோக்காகத்திற்காக மக்களிடம் உணர்ச்சி கோரிக்களை முன்வைப்பது

4. படிப் படியாக சிறிய கோரிக்கைகளை முன்வைக்கும் அல்லது ஏற்கும் போராட்டங்களை நிராகரிப்பது

5. இலங்கை வாழ் ஏனைய தேசிய இனங்களின் போராட்டங்களிற்கு ஒத்துழைப்பு வழங்காது புறக்கணிப்பது

6. போராட்டங்கள் ஓரளவு சமரச நிலமைக்கு வரும்பொழுது ஏற்றுகொள்ள கூடிய விடயங்களை ஏற்க மறுப்பது

7.போராட்டங்களிற்கான நியாயத்தினை ஏனைய தேசிய இனங்களிற்கு புரிய வைக்காமையும் இலங்கை மக்களிற்கான பொது கோரிக்கைகளின் போராட்டங்களின் போது   அனைத்து சக்திகளையும் இணைக்க தவறுவது.

8.சிறிய சிவில் அமைப்புக்களின் பற்றாக்குறை

9. விடுதலை இயக்கங்ளிலும் அரசியல் கட்சிகளிற்குள் இந்திய உளவுகளும் புலம் பெயர் அமைப்புக்களின் தலையீடும்

10. புத்திஜீவிகள் என்ற போர்வையில் அதிதீவிர தேசியத்தினை மக்களிடம் விதைப்பது

11. ஏனை தேசிய இனங்களை எப்பவும் சந்தேகத்துடனும் இனவாத வெறுப்புனூடாக நோக்குவது. 

12. போராட்டங்களை ஒருகட்சியோ இயக்கமோ குத்தகைக்கு எடுக்கும் பண்பு. 

13. ஏனை தேசிய இனங்களுடன் தொடர்பற்ற நிலை, 

14. துரோகி அல்லது தேசியத்திற்கு ஆதரவு சக்தி என வகைபிரிப்பது, அதனை ஓர் சமூக நீதியாக உருவாக்குவது.

15. ஆட்சியில் அல்லது பொறுப்புக்களை ஏற்காது எதிர்கட்சி கதிரையில் இருந்து சகல அரச வசதிகளையும் அனுபவிபப்பது. 

மேற்குறிப்பிட்ட வாறு பல்வேறு காரணிகள் தமிழ் மக்களது உரிமைபோராட்டங்கள் வெற்றியை நோக்கி நகர்த்தாது முடக்கபட்டுள்ளது. மக்கள் உணர்ச்சி அரசியலிற்கும் இனவாத அரசியலை இனங்கண்டு புறம்தள்ள வேண்டும்.

இன்று ஜனாதிபதியான அனுர திசநாயக்கவின் தாய்க்கட்சியான ஓர் ஆயுத அமைப்பாக இருந்து அரச இயந்திரத்தின் கோர கரங்களால் ஒடுக்கபட்ட வரலாற்றினை இலங்கை வாழ்மக்கள் மறந்திருக் மாட்டார்கள். இன்று அவர்களின் மிதவாத அரசியலின் நீண்டகால உழைப்பின் பயனாக ஆட்சி அதிகாரம் இவர்களின் கைகளுக்குள் வந்துள்ளது. 

இதேபோல் புலிகள் கைகள் ஓங்கி இருந்த காலங்களில் நடைபெற்ற பேச்சு வார்த்தை காலங்களில் ஒப்பீட்டளவில் மிகசிறிய அளவினான அதிகாரபகிர்வு முன்மொழியப்பட்டிருந்து. கிடைத்தால் தமிழ்ஈழம் அல்லது வேறு  தீர்வுகள் வேண்டாம் என்ற அடிப்படையில் மற்றைய முன்மொழிவுகள் பல புலிகளால் நிராகரிக்கபட்டிருந்து. சிறிய தீர்வுகளை ஏற்று படிப்படியாக மிதவாத அரசியலில் கால் பதித்திருந்தால் மொளனிப்பும் இன அழிப்பும் நடைபெறாமல் தடுத்திருக்கலாம்.  மக்களிடம் தாம் தமிழ் ஈழத்தினை வலுயர்த்தி இருந்ததால்  தாம் ஒரு படி இறங்கிபோக இயலாது என்ற தரப்பும்., நிதிகளை வழங்கிய புலம்பெயர் அமைப்புககளின் அழுத்தமும். புலிகளை மாறுபட சிந்திக்க விடாமல் தடுத்திருக்லாம். அது மட்டுமல்லாது ஆயுதத்தினையே நம்பி வளர்ந்த இயக்கம் ஆயுத்தினை கீழே வைத்தவிட்டு முனனர் போன்று ஓர் கட்டுபாட்டிற்குள் உறுப்பினர்களை வைத்து கொள்ள முடியாது என தலமை எண்ணி இருக்கலாம். இவ்வகையான தெளிவற்ற முடிவுகளால் பல சந்தர்ப்பங்களை தமிழர் இழந்துள்ளனர்.

அதேபோன்ற தவறுகள் தமிழ் கட்சிகளிடமும் தொடருகின்றது. இன்றைய தேர்தலில் பல சிறுபாண்மை இன கட்சிகள் பல சஜித் பிரேமதாச வெல்லுவார் எனக் கணிப்பிட்டு அவரிற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்து இருந்தனர். இவர்களால் பெரும்பாண்மை மக்களின் மனோ நிலமையைபுரிந்து கொள்ள இயலாது போய்விட்டது. 

வெல்பவர்களுடன் ஐக்கியப்பட்டு பிரச்சாரம் செய்வது என்பது சாத்தியம் அற்றது. இன்று ஒரு சில புலம் பெயர்ந்தவர்கள் தமிழரசுகட்சி தோற்பவருக்கு ஆதரவாக ஏன் ஆதரவளித்தனர் என விமர்சிக்கின்றனர். இது ஓர் சுத்த முட்டால் தனமான விமர்சனம். எவ்வாறு வெற்றியாளரை முன்பே கணிப்பிடுவது?  இது ஓர் கணிப்பு மட்டுமே. ஆனால் தமிழரசு கட்சி வென்றால் தமது எதிர்கால ப்பை பற்றி ஆராயிந்து இருந்தனரா என்ற கேள்வி எழுகின்றது. 

மித வாத அரசியலில் நம்பிக்கை அற்றவர்கள் ஏன் பாராளுமன்ற கதிரைக்கான தேர்தலில் மட்டும் பங்கு பெறுகின்றனர். மக்களை ஏமாற்றி தமது நலனுக்காக மட்டுமே பாராளுமன்ற‍கதிரைகளை பயன்படுத்துகின்றனர். இதனை மக்கள் விரைவில் உணர்வார்கள். மேலும் சிலர், தமிழ் இனவாத கருத்துக்களை உணர்சியாக வாந்தி எடுத்து வாக்குகளாக மாற்றி பாரளுமன்ற கதிரைகளை ஆக்கிரமிக்கின்றனர். இவர்களை நம்பும் மக்களை ஏமாற்றுவது மட்டுமல்லாது பேரினவாத இனவாதிகளை உசுப்பேத்தி தமிழ்மக்கள் மீது வன்முறையைதூண்ட ஒத்தாசை புரிகின்றனர்.

மிக உண்மையாக சிறுபாண்மை மக்களின் உரிமைக்காக போராடும் கட்சிகள் பெரும்பாண்மை தேசிய இனங்களுடன் முதலில் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த முனைய வேண்டும். கொழும்பு வந்து பாராளுமன்றத்தில் தூள்பறக்க பேசிவிட்டு மீண்டும் தமிழ் பிரதேசத்தில் சென்று அடைகாக்காமல்.பரந்துபட்ட இலங்கையில் அனைத்து தரப்பினருடன் வேலை செய்யும் வேலை முறமைகளை உருவாக்கி கொள்ள வேண்டும. இல்லை தனிநாடுதான் உங்கள் தீரவாக இருந்தால் பாராளுமனற‍ரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு அதற்கான போராட்த்தில் குதிக்க வேண்டும்.

நிதிகளை வழங்கி உங்களை தலையாட்டி பொம்மைகளாக்கி தாம் குளிர்காய எண்ணும் சக்திகளை இனங்கண்டு நிராகரிக்க கற்றுகொள்ளல் வேண்டும்.

இன்றைய புதிய சூழலையாவது திட்டமிட்டு தமிழ் மககளின் அபிலாசைகளை வென்றெடுக்கும் திசை நோக்கிநகர்துங்கள். வழமைபொல் தனியே எதிர்கட்சி அரசியலில் மட்டும் நின்றுவிடாது இலங்கை மக்களின் சேகவர்களாக மாறுங்கள்.


Montag, 2. September 2024

எனது இலங்கை பயணமும் நடைபெற போகும் ஜனாதிபதி தேர்தல் பற்றிய எனது பார்வையும், புலத்து அதிதீவிர தேசிய வாதமும் யதார்ததமும் - க.சுதாகரன் / 02.09.2024

 

இலங்கை மக்கள் இம்முறை தேர்தலில் மும்முனையாக போட்டி இடும் மூன்று வேட்பாளர்களை சந்திக்க உள்ளனர் என்பது உறுதியாகிவிட்டது. ஆனாலும் இலங்கையில் காலம் கலமாக தேர்தல் காலங்களில் நடைபெறும் வன்முறைகளும் சூழ்சிகளும் அனைத்தையும் தலைகீளாக மாற்றும் என்பதையும் எதிர்பார்த்தே ஆகவேண்டும். சிங்கள தமிழ் முஸ்லீம் மக்களிடம் அலசிய பொழுதும் மூன்று வேறுபட்ட வேட்பாளர்ளின் பெயர்களையே முன் மொழிந்திருந்தனர். கிழக்கில் தமிழ் பல்கலைக்கழக தரப்பினைரும் அரச உத்தியோக பிரிவினரும் NPP யின் அனுரவிற்கு குமார திசாநாயக்க ஆதரவாகவே கருத்துளை தெரவித்திருந்தனர். இந்த விடயம் ஆச்சரியத்தினை தந்திருந்து. ஆனால் யாழ்பாணத்தில் அனைத்து வேட்பாளர்கள் மீதும் ஓர் சந்தேகத்தின் கூடிய பார்வையே காணப்பட்டது. கிழக்கில் உள்ள ஒரு சில புத்திஐீவிகளுடன் பேசிய பொழுது. அனுர தரப்புடன் பல துறைசார் புத்திஐீவிகளை ஒண்றினைத்து உள்ளதாகவும் திறமையான ஊழல் அற்ற தலமையை கொடுக்கமுடியும் என வாதிட்டனர்.

ஆனால் வடக்கில் ரணில் அணியும் சஜித் அணியுமே கண்ணுக்குள் புலப்பட்டன.

முன்னால் போரளிகளும் இலங்கையின் உளவுத்துறையும்

மகிந்த தரப்பு யுத்ததினை கொடூரங்கொண்டு நசுக்கிய பின்னர். தன்னால் கைது செய்யப்ட்ட பல போராளிகளிற்கு புனர் வாழ்வளிப்பதாக கூறி அனைத்து போராளிகளையும் மூளை சலைவை செய்துள்ளனர். அது மட்டுமல்லது அவர்களது வறுமைக்கு ஊதியமளிக்கும் போர்வையில் அவர்களை தமது உளவுறையில் அரச உத்திகோத்தர்களாக ஆக்கி உள்ளனர். Diaspora தமிழர்கள் விடுதலைப்புலிகளின் உளவுதிறனை எப்பவும் பெருமையாக பேசுவதை நான் கண்டுள்ளேன். இம்முறை எனது பயணத்தின் இலங்கை அரசின் நரித்தனமான உளவை எண்ணி வியந்தேன். முன்னாள் போராளிகள் என்ற அமைப்பினை தோற்றுவித்து தமிழ் கட்சிகளிடையே பல பிளவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனர். எவ்வாறு புலிகள் காலத்தில் புலிகளால் விரட்டபட்ட அமைப்புக்கள் அரசிடம் மண்டியிட்டு தம்மையும் தமது உறுப்பிணர்களை எவ்வாறு காப்பாற்றினார்களோ, அதைவகையில் தான் இன்றைய முன்னாள் போராளிகளின் நிலையும். முன்னால் போராளிகள் மகிந்தவின் கையாளான ரணிலை ஆதரிப்பது என்பதனை வெளிப்படரயாகவே கூறி உள்ளனர்.

நாடு திவாலான நேரம்

ரணில் மகிந்த கொள்ளைக்கூட்டத்தினை காப்பாற்ற வந்த துதூவன் என்பதை பலர் மறந்து. நாடு வங்குரோத்தில் இருந்த போது நாட்டைகாப்பாற்றிய தேவ தூதுவனாக பார்ப்பதே கவலைதருகின்றது. நாட்டை திவாலாக்கிய கும்பல் முற்றும் அதிகாரம் இழந்து இருக்கவில்லை. அவர்களின் சாகாக்களே அன்றும் இன்றும் பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவ படுத்தகின்றனர். திவாலகி போன நாட்டின் ஆட்சியை ஏற்க மறுத்தவர்கள் கெகள்ளைக் கூட்டத்தினை காப்பாற்றுவதே மறைமுக நிபந்தனையாக இருந்தது. இதனாலே இன்றைய மற்றைய ஜனாதிபதி வேட்பாளர்கள் (சஜித், அனுர) ஏற்றுகாள்ளவில்லை என்றகருத்தும் வலுமைபெறுகின்றது.

 

தமிழர் தரப்பு

தமிழர் தரப்பு பல அரசியல் இராணுவ தோல்விகளை சந்தித்த போதும் இன்னமும் எவற்றையும் கற்று கொள்ளவில்லை என்பதை தமிழர் தரப்பின் நகர்வுகள் நிரூப்பிகின்றது. எனது கணிப்பின்படி தேசியம் என்ற மந்திரமும் புலம்பெயர்ந்தவர்பளின் தலையீடுகளும் மற்றும் இலங்கை அரசின் உளவுமே தமிழ் தரப்புக்களை கோமாளிகளாக முடிவுகளை எடுக்க தள்ளுகின்றது. இலங்கை அரசின் உளவின் காய் நகர்த்தலாகவே தமிழ் பொது வேட்பாளர் செயற்பாட்டை பார்க்க முடிகின்றது. இதற்கு ஆதாரமாக இதை இச்செற்பாட்டை மும்மொழிந்த தமிழ் தலமையின் பின்புலம் சாட்சியாக உள்ளது. தமிழ்மக்களின் வாக்குகளை சிதறடித்து மகிந்த தரப்பு தன்னை பாதுகாத்து கொள்ள ரணிலை வெற்றிகொள்ள முனைகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நாமல் ராஜபக்ச  தனது பேட்டியில் தமிழ் பொது வேட்பாளர் முனைப்பு வரவேற்கதக்து என்று குறிப்பிட்டுள்ளார். முன்பே குறிப்பிட்டது உளவின் பிடியில் சிக்கி உள்ள முன்னால் போராளிகள் ரணிலிற்கும் தமிழ் பொது வேட்பாளர்களிற்கு ஆதரவளிக்க உள்ளனர்.

அதிதீவிர தமிழ்தேசியம் பேசுபவர்கள் மக்களின் உணர்வுகளை உசுப்பேத்தி வாக்குகளாக்க நினைப்பவர்கள் தமிழ்மக்களிற்கான அரசியல் தீர்வுபற்றி எவ்வித அக்கறையும் அற்று தங்கள் வாக்கு வங்கியை காப்பாற்றி அடுத்ததேர்தலில் எத்தனை கதிரைகளை பெறலாம் என்பது அவர்களின் கனவு. இந்த தரப்பு பகிஸ்கரிப்பு அல்லது பொது வேட்பாளர் என்ற தெரிவின் முலம் பேரினவாத வலைக்குள் சிக்கி உள்ளனர்.

 

புலத்து விசிறி அரசியல்

புலிகளின்காலத்தில் வெற்றித்தாக்குதலிற்கும் தனிநாட்டு கனவிற்கும் விசிறியாக இருந்த புலம்பெயர் தரப்பு. இன்றும் தமிழ் அரசியல்தலமைகளிற்கு நிதியை வழங்கி அவர்களை தமது தலையாட்டு பொம்மைகளாக செயற்படுத்தின்றனர். இந்த அரசியல்வாதிகளும் தேர்தல் காலத்தில் பிரச்சாரத்திற்கான நிதியை கருத்தில் கொண்டு தலையாட்ட சம்மதித்துள்ளனர். தாம் தோற்றுப்போன பந்தையத்தினை மீண்டும் இந்த தலையாட்டி பொம்மைகளை கொண்டு தாம் பார்வையாளராக இருந்து உண்டியல்களுடன் வலம் வரலாம் என கனவு காண்கின்றது.

எனக்கு ஓரு பிரச்சினையை தீர்க்க ஒரு மணித்தியாலயங்கள் கிடைத்தால் 55 நிமிடங்கள் பிரச்சினை என்ன என்பதை ஆராய எடுத்து கொள்வேன் தீர்விற்கு 5 நிமிடங்கள் தீர்வைபற்றி யேசிப்பதற்கு எடுத்துகொள்வேன் என  ஐன் ஸ்ரைன் கூறி உள்ளார். பிரச்சினையை புரிந்து கொள்வதே கடினமானது,

ஆனால் எமது தமிழ் அரசியல் வாதிகள் தமது இருப்புக்ளிற்கும் உணர்வுகளை ஊட்டி ஆதரவு தளத்தினை மட்டுமே சிந்திப்பவர்கள். இவர்கள் எவ்வாறு தமிழ் மக்களின் தீர்வை பற்றி சிந்திப்பார்கள்?

 

பொது வெட்பாளர்

ஜனாதிபதி தேர்தலில் ஓர் சிறுபாண்மை இனத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தனது வேட்பாளரை நிறுத்தி எதனை சாதிக்க விரும்புகின்றனர்? பொது வேட்பாளரை தீர்மானித்ததரப்பு கூறும் விவாதங்கள்.

1. நாம் ஒருகுறியீடாக செயற்ட முனைகின்றோம்

2. சிறுபாண்மை தமிழரிகளின் ஒற்றைமயை காண்பித்தல்

3. தமிழர்பிரச்சினையை சர்வதேசமயப்படுத்தல்

4.மற்றைய வேட்பாளர்களிற்கு தமிழர் வாக்கு செல்லாது தடுப்பது

 எவ்வித யாதர்த்தமும் அற்ற விவாதங்களை முன் வைக்கின்றனர். இலங்கையை முழுதாக பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய கட்சியில் சிறுபாண்மை இனத்தை சார்ந்தவர் போட்டி போடுவது என்பது வேறு. சர்வதேசம் அறியாத இன முரண்பாட்டை தமிழ் பொது வெட்பாளர் மூலம் காட்ட முனைவதாக கூறுவது சுத்த முட்டாள்தனம். மேலும் ஒற்றுமையை காட்டுவதற்காக பொது வேட்பாளரினால் கிடைக்கும் சில ஆயிரம் வாக்குகளை வைத்து எதனை நிருபிக்க போகின்றனர் ?  இலங்கை பேரினவாதிகளின் கணிப்பின்படி தமிழ்மக்களது வாக்குகளை தீர்மாணகரமான அற்ற வாக்குகளாக மாற்றுவது மட்டுமே நடைபெற போகின்றது.

புலத்து தமிழ் அரசியலும் Monopol ஊடகமும்

இலங்கையில் ஒருவருக்கு வயிற்று வலி என்றால் புலத்திலிருந்து வைத்தியம் பார்ப்பதாக படங்காட்டும் பன்முகைத்தன்மையற்ற ஒருபக்கசர்பான புலத்து ஊடகங்கள். அரசியல் ஆய்வுகளும் கணிப்புகளும் எந்த தரப்பின் அட்டவணையின் அனுகூலத்திற்கான செயற்படுகின்றனர் என்பது ஓர் பெருத்த சந்தேகமே. இந்த Monopol ஓர் பன்முகத்தன்மைுடன் பயணிக்க விரும்பும் சமூகத்தினை முற்றிலும் தடைசெய்யும்.

மற்றும் புலத்து அதிதீவிர தேசிய விரும்பிகள் இலங்கையில் சிறப்பு தேர்ச்சி பெற்றதும் தனித்தன்மை உள்ள தலமைகளை விரும்புவதில்லை. அவ்வகை தலமைகளை இவர்களால் தமது கைபொம்மைகளாக வைத்து கொள்ள இயலாது. துரோகி அல்லது தேசியவாதி என  தமது ஆதரவு அல்லது எதிரி என தமேக்கே உரிய வடிதட்டி  முலம் வடி தட்டி வைத்துள்ளனர் .ஆளுமையற்ற தனிதன்மையற்றவர்கள் மிக இலகுவில் புலத்தில் உள்ள நிதிகளிற்கு அடிமையகி தலையாட்டி பொம்மைகளாக மாறி உள்ளனர்.

மூன்று வேட்பாளர்கள்

ஐனாதிபதி தேர்தலில் போட்டி இடும் ரணிலை ஆதரிப்பதன் மூலம் மகிந்த குடும்பத்தினை  குற்றசாட்டுக்களில் இருந்து காப்பாற்றுவதற்கும் ஊழல்வாதிகளை காப்பாற்றுவதற்குமே பயனாக அமையும் .சஜித் பிரமேதாசாவின் கட்சியிலும் இனவாதத்தினையும் சிறுபாண்மை மக்களின் அரசியல் உரிமைகளை மறுத்தவர்களே பலர் அங்கம் வகிக்கின்றனர். அனுரவின் NPP இயிலும் பல இனவாதிகள் இடதுசாரி சிவப்பு அங்கிகளை அணிந்த வண்ணமே உள்ளனர். இந்த கட்சியில் ஊழலிற்கு எதிரான குரல்கள் வலுப்பெற்றுள்ளது. புதிய கரங்களாக இருப்பதால் ஊழல் கறை படியவில்லை. இனவாதிகளின் ஆதிக்கம் உள்ளதாலும் தேர்தல் வெற்றியை கருத்தில் கொள்வதாலும் வெளிப்படையாக சிறுபாண்மை மக்களிற்கான அரசியல் தீர்வுதிட்டம் முன் வைக்வில்லை. இவர்கள்பு திய அரசியல் அமைப்பை பற்றி பேசுகின்றனர். இது எந்தளவிற்கு சாத்தியம் என்பது கேள்விக்குறி. ரணில் தரப்பும் சஜித்தரப்பும் மட்டுமே இலகுவில் அமுல் படுத்த கூடிய 13 வது சட்ட மூலத்தினை அமுல்படுத்தலாம் என கூறி வருகின்றனர் . இங்கிருந்து ஆரம்பிப்பதே சாத்தியமானது.

தமிழ் அரசுகட்சி

தமிழ் அரசுகட்சி இருதலைக்கொள்ளி எறும்புபோல் அதிதீவிர தேசியம் பேசும் அரசியல்வாதிகளையும் யதார்த்த அரசியல் பேசுபவர்களையும் தன்னகத்தில் வைத்துள்ளனர். தேர்தலின் போது உணர்ச்சி அரசியலிற்கு வாக்களர்களின் வாக்கு வங்கி தேவை என்று கருதி அவர்களிற்கும் கட்சியின் ஐனநாயகம் போன்ற மாயையில் மூடி மறைத்து வைத்துள்ளனர். இது தமிழ் அரசுகட்சி கட்சியின் மறைவிற்கு  இந்த நிலைப்பாடே ஓர் முக்கியகாரணியாக அமைய போகின்றது.

எனது அவதாணிப்பின்படி மக்கள் தாம் சார்ந்த கட்சிகளின் முன்மொழிவினை கருத்தில் கொள்ளாமல் தாமே தன்னிச்சையாக வேட்பாளர்களை தெரிவு செய்வார்கள். வெற்றிபெறும் வேட்பாளரிற்கு வாக்களிப்பதன் மூலம் சிறுபாண்மை தேசிய இனங்கள் தமது உரிமை போராட்டங்களை தொடர்வதற்கு ஆரம்ப புள்ளியாக அமைய வாய்ப்புள்ளது. முஸ்லீம் மலையக வடக்கு கிழக்கு மக்கள் வாக்குகள் ஒரு ஜனாதிபதி வேட்பாளரின் பக்கம் ஒருங்கிணையும் போது அந்த வேட்பாளரிற்கான வெற்றிவாய்ப்பு அதிகமாகும்.

சிறுபாண்மை மக்களின் வாக்குகள் சிதையும் போது புதிதாக பெரும்பாண்மையினரின் ஆதரவை பெற்று வரும் கட்சிக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும். இந்த காய்கள் எப்பவும் எதிர்பாராத திசைநோக்கி நகர இறுதி நேரம் வரைக்கும் வாய்ப்புக்கள் உள்ளது.

ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்பு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பாண்மையாக புதிய தரப்பினரே பல கதிரைகளை கைப்பற்றவர் என எதிர்வு கூற முடிகின்றது.