Sonntag, 13. Oktober 2024

புலத்தில் அலசும் "ஆய்வாளர்கள்" "புத்திஐீவிகள்" " செய்தியார்கள்", மந்தை சமுக உருவாக்கவும்- க.சுதாகரன்/13.10.2024

புலத்தில் பல ஆய்வாளர்கள் புத்திஜீவிகள் செய்தியார் என தமக்குதாமே பெய சூட்டிய பலர் புலத்து (Monopol) குத்தகை ஊடகங்களில் போலி, தீவிர தேசியவாத நஞ்சை விதைத்து வருகின்றனர். இந்த கும்பல் தமக்கு சாதகமாக இலங்கையில் தமிழ்மக்களிடம் செல்வாக்கு பெற்ற கடசிகளை தமது கட்டுப்பாட்டிற்குள் கெண்டுவருவதற்கு நிதி மூலமாகவும் பொய்பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றனர். தம்மால் கைப்பொம்மைகள் ஆக்கியவர்கள் மூலம் கடசிகளை கைபெற்ற முனைந்துள்ளனர். அதனை அந்த கட்சியில் உள்ள திறமைசாலிகளால் இனங்காணப்பட்டு காப்பற்றபட்டது. 

இதற்கு சான்றாக தமிழ் கட்சியின் தீர்மான தெரிவுகளின் போதும், தற்போதை பாராளுமன்ற தேர்தல்களிற்கான வேட்பாளர் தெரிவின் போதும் கண்கூடானது. இந்த கட்சிகளை கைப்பற்ற போராடின கைக்குலிகள் சிலர் தம்மை சங்கு சின்னத்தில் ஐக்கியமாக்கினர் மேலும் சிலர் தம்மை சுயேட்சை வேட்பாளர் ஆக்கினர். இந்த செயற்பாட்டின் முலம் தங்களின் கனவு பாராளுமன்ற கதிரை தவிர தமிழ்மக்களின் அரசியல் தீர்வ அல்ல என்பதனை அம்பலப்படுத்தி உள்ளனர். உண்மையாக தமிழ்மக்களின் தீர்வில் அக்கறை கொண்டவர்களாக இருப்பின் ஒரு கட்சியை பலப்படுத்தி அதன்முலம் தமிழ்மக்களின் பெரும்பாண்மையை பெற்றெடுக்க போராடி இருப்பார்கள் அல்லவா?


போலிகளிற்கு உந்து கொடுத்து அவர்களிற்கான ஆதரவு தளத்தினை புலத்து ஊதுகுழல் ஊடகங்கள். ஏற்படுத்தி கொடுக்கின்றனர். ஊடகங்களில் தம்மை ஆய்வார்கள், புத்திஐீவிகள்,செய்தியாளர்  எனக்கூறுபவர்கள் தாம் வாழும் நாடும் புலத்தில் எவ்வித இணைவாக்கம் (Integration)   அடையாத தரப்பாகவே பார்க்க முடிகின்றது. பல ஆண்டுகள் இந்த நாடுகளில் வாழ்ந்தாலும் அந்நாடுகளின் கட்சி சமூக சிவில் அமைப்புகளில் தம்மை ஈடுபடுத்தாதவர்களாகவே கணிக்க முடிகின்றது. அதன் வெளிப்பாடகவே இவர்களின் இலங்கை சம்பந்தபட்ட ஊடகபேட்டிகளில் மிகவும் மட்டமான அரசியல் பார்வைகளையும், புதிய மாற்றங்கள் பற்றிய எந்தவித ஞானமின்மையை  புலப்படுத்துகின்றனர். 

2024 இலங்கை பாராளுமன்ற தேர்தல் பற்றிய அலசல்களின் போது இந்த விண்ணர்களின் தரம் பற்றி அறியக்கூடியதாக இருந்தது. தமிழ்கட்சி ஒன்று பெண் இளையோர் வேட்பாளர்களை தேடிய விடயங்களை எள்ளி நகையாடினர். புலம்பெயர் தேசத்தில் தேர்தல்கள் நடைபெறும்போது வேட்பாளர்களை தேடும்படலம் நடைபெறுவது வழமை. கட்சி அரசியலில் நேரடியாக ஈடுபடுத்த முடியாத மன நிலையில் ஐரோப்பிய நாடுகிளில் உள்ள பல மக்கள் உள்ளனர். இதனால் வேட்பாளர் பட்டியலை தெரிவு செய்யும் போது அனைத்து கட்சிகளும் பாரிய சவால்களை சந்திக்கின்றனர். இந்த ஆய்வளர்கள் ஏன் இதனை அறிந்திருக்கவில்லை? இந்த நிலமையால் சுவிற்சர்லாந்தில் பல குடியேற்றவாதிகள் சுவிற்சர்லாந்து கட்சிகளில் அங்கத்துவம் பெற்று வேட்பாளராக கூடிய வாய்புக்கள் அதிகமாக உள்ளது. பல ஐரோப்பிய நாடுகளிலும் பல தமிழர்களும் ஏனைய குடியேற்றவாதிகளும் மக்களால் தெரிவு செய்யப்பட்டு அரசுகளில் ஓர் அங்கமாக உள்ளனர். 

மற்றும் கட்சி கூடடங்களில் தீர்மாணத்தினை நிறைவேற்றுவதற்கு கையை உயர்த்தி வாக்களிகுக்கும் நடமுறை இன்றும் ஐரோப்பிய கட்சிகளில் வழமையாக உள்ளது. ஒரு முறைதமிழ் அரசுக்கட்சியில் தீர்மாணம் நிறைவேற்றிய விடயம் சம்பந்தமாக இந்த ஆய்வாளர்களால் மயிர் பிழக்கும் விவாதங்கள் நடைபெற்றதை நாம் பலர் மறந்திருக்க மாட்டோம்.

இவ்வகை ஆய்வாளர்களை  கிணத்து தவளைகளும் கத்துகட்டிகள் என்றே வரையறை செ்யமுடியும் . இவர்கள் தாம் நினைக்கும் ஒரு விடயத்தினை நிறுவுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் குறிப்பிட்ட தரப்பினரால் கொண்டுவரப்பட்டுள்ள கையாட்களாகவும் ஏவலர்களாகவுமே பார்க்க முடிகின்றது.  


புலத்தில் பல சிறிய அரசியல், இலக்கிய, சஞ்சிகைகள் 80, 90 களில் ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு பட்ட தளங்களில் இருந்து வெளி வந்திருந்தது. மிக சிறுபாண்மையாக இருந்திருந்தாலும் ஓரு ஆரோக்கிய சமுகத்தின் ஆரம்பம் தென்பட்டது. புலத்து புலிகளது குத்தகை செயற்பாடுகள் ஆட்கொணட பொழுது பல சஞ்சிகைகள் காணாமல் ஆக்கபட்டன. இதனையும் மீறி ஒரு சில சஞ்சிகைகள் பத்திரிகைகள் ,இணைய பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆயத சாகச காதல் பல சுயாதின செயற்பாட்டை முடக்கின. இதன் புலம் பெயர் தமிழர் தாம் வாழும் நாட்டு சமுகத்துடன் இணைவாக்கம் (Integration) அடையாது தமக்குள்ளேயே ஓர் Parallel society 

The term “parallel society” describes the belief that “ethnic” or religious minorities develop their own infrastructures and separate themselves from a mainstream society that is considered to be homogenous.

உருவாக்கி கொண்டது. இதன் வெளிப்பாடகவே குறுகிய எண்ணம் கொண்ட இந்த ஆய்வாளராகது தோற்றமாக பார்க்க வேண்டி உள்ளது. புலத்தில் வாழும் எம்மவர்களில் எத்தனை பேர் இந்நாடுகளில் உள்ள சிவில் சமூக நிறுவனங்களில் அங்கத்துவத்தினை ஏற்படுத்தி பொதுவான மக்கள் நோக்கிற்காக இணைந்து இந்நாட்டு மக்களுடன் இணைந்து பயணிக்கின்றனர்?  இந்த Parallel society யினை முதலாம் தலைமுறையினரே தேற்றுவித்திருந்தனர். இருந்தாலும் துரதிஷ்ட வசமாக ஒரு சிறிய இரண்டாம் தலைமுறையிலும் தொடர்கின்றது.இது ஓர் ஆரோக்கிய சமுகத்திற்கு ஆபத்தானது.

I’m attracted to intelligence, not education. You could graduate from the best, most elite college, but if you’re clueless about the world and society, you don’t know anything

புலம்பெயர்மக்கள் இந்த Monopol ஊடகங்கள் மூலம் கிடைக்கும் தகவல்களையும் அலசல்களையும் சரியாக விமர்சனைப் பார்வையுடன் பகுத்தறிய கற்று கொள்ள வேண்டும். செய்தி ஊடகங்களில் தம்மை ஆய்வாளர் செய்தியாளர் என அடையாளப்படுத்துபவர்கள் தாம் வாழும் நாடுகளில் எப்படிசெயற்படுகின்றார்கள் என்பதை இனங்கண்டு கொள்வது அவசியம். மாக இந்த நஞ்சு களை அப்படியே உள்வாங்குவது ஓர் அறிவிலி ஆட்டு மந்தை சமுகத்தினைேயே தோற்றுவிக்கும்.


இலங்கை தமிழரசுக்கட்சியும் இரண்டுதோணியில்கால்வைத்ததலைவர்களும்! - மூ. சிவகுமாரன் / 13.10.2024

திர்வரும் 14 நவம்பர் இலங்கைத்தீவின் 17 வது நாடாளுமன்றத்திற்கான 225 மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெறவுள்ளது

தேசியமக்கள்சக்தி அநுரா அலை நாடாளுமன்றத்தில் அதிகப்படியான ஆசனங்களை கைப்பற்றுவார்கள் என்பது சந்தேகத்துக்கு இடமற்றது ஆனாலும் கடந்த நாடாளுமன்றத்தில் வெறும் 3 ஆசனங்களைமட்டுமே

பெற்றுக்கொண்ட மக்கள்சக்தி இம்முறை நாடாளுமன்றத்தில் தன் அசுரபல வளர்ச்சியை பெரும்பான்பை பலத்தை காட்டுமா என்ற வினாஎழுப்பும்அளவுக்கு அதன் மக்கள் ஈர்ப்பு அலை மோதுகிறது பெரும்பான்மைபலத்தை பெறுவதினூடாகத்தான் மக்கள் சக்தி அது விரும்பும் மாற்றத்தை கொண்டுவர முடியும்  அதேநேரம் இடது அநுராஅலையை தடுக்க பவ்வியமான பதுங்கலான பகட்டிலா முகங்களோடு பன்னாட்டு பின்னணயில் பாரம்பரிய வலது சஜித்அணி வெல்ல தன்தான தண்ட வியூகங்களை வகுப்பது வெட்ட வெளிச்சம்!

இத்தகைய சூழலில் எம் தமிழ் பரப்பின் தேர்தல் அரசியல் நிலைமைகள் என்ன குறிப்பாக  தமிழரசின் நிலை இதுகுறித்த என்அவதானமே இங்கே பதிவாகிறது செப்பரம்பர் ஜனதிபதிபதித்தேர்தல்வரை எம்மக்களை ஆட்கொண்ட தேசம் திரட்சி  மிரட்சி போன்ற அழகான வார்த்தைகளின் திரைவிலகி ஜனநாயகம் என்ற மக்கள் தேவை பெரும்பாலும் உணரப்படுகிறது சங்கோடு ஜனநாயக கூட்டணி தமிழரசில் விலகிய ஜனநாயக தமிழரசு  இன்னும் ஜனநாக முற்போக்கு கூட்டணிஎன ஜனநாயகம் எம்மக்களின் உதடுகளெல்லாம்இவ்வளவு உச்சரிக்கப்படுவது யுத்தத்திற்குப்பிந்திய தேர்தல்களில் இதுதான் முதல் முறை அந்தவகையில் மக்கள் சுதந்திரமாக

தம்வாக்குகளை அளிக்ககூடிய ஒருசூழல் கனிந்திருப்பதாகவே தெரிகிறது. இது ஆரோக்கியம் மற்றும் தமிழ்மொழி அமுலாக்க அமைச்சில் பணியாற்றிய இனப்பிரச்சனை அரச நிர்வாகப்பிரச்சனை போன்றவற்றில் பட்டறிவுள்ள முன்னாள் அரசதிகாரிகளும் இத்தேர்தலில் சுயாட்சையாக போட்டியிடுவது விரிந்த ஜனநாயக சூழலின் வீரியத்தை வெளிப்படுத்துகிறதென்று சொல்வது மிகையான கூற்றல்ல சென்ற தேர்தல்வரை எம்மக்களிடையே அதிக செல்வாக்கை செலுத்திய தமிழரசுக்கு இம்முறைத்தேர்தல் சவாலாகவே இருக்கப்போகின்றது என்பது திண்ணம். 

ஏனெனில் தீவில் எம்மக்களிடையே அது செல்லும் திசையை சொல்லும் முதல்தேர்தல் கட்சிக்குள் முட்டியமோதிய அணிகள் இணைந்தும் பிரிந்தும் தமிழரசாக ஜ. தமிழரசாக தேர்தலுக்கு முகம் கொடுக்க போகிறார்கள் என்பதால் இது முக்கியத்துவமுடையதாகவும் ஆகின்றது தமிழரசும் அதன் எதிர்காலமும்: இலங்கை தமிழர்களின் பாரம்பரியஜனநாயகத்தில் வளர்க்கப்பட்டதுதான் தமிழரசுக்கட்சி தந்தை செல்வா அண்ணன் அமிர்தலிங்கம் என்ற குடும்ப உறவுபாசம் கொட்டி எம்தந்தைதாய் ஆச்சி அப்புவால் போற்றிவளர்க்கப்பட்ட கட்சி தலைவர்பதவி இல்லாமலேயே தமிழ் மக்களின் ஏகோபித்த தலைவனாக தந்தைசெல்வா பிரகாசித்தார் தந்தைசெல்வாவும் தன்உடல் உழைப்பு சொத்து எல்லாம் கட்சிக்கென்றே அர்ப்பணித்து ஓர் ஜனநாயக தலைவராகவே வாழ்ந்தார் அதனால் அவர் இன்றுவரை ஈழத்தமிழர் தந்தையாகவே போற்றப்படுகிறார்!

ஆனாலும் ஒருகட்சியால்மட்டும் ஒருவரலாற்று சிக்கலான இனப்பிரச்சனையை தீர்க்கமுடியாதென்பதை அவர்தன் இறுதிவாழ்நாளில் நன்கு உணர்ந்துகொண்டார் சிங்களபேரினவாத த்தின் கொடுங்கோல்கண்டு கடவுள்தான் எம்மக்களைஇனிகாப்பாற்றவேண்டும் என்று தன்உள்ளக்குமுறலை வெளிப்படைய்கொட்டி எளிய மக்களின் மனங்களில்எல்லாம் ஒரு தலைவனாக மட்டுமன்றி ஓர் உன்னதமனிதனாகவும் உயர்ந்திருக்கிறார் தந்தை செல்வா இது வரலாறு!

பின்னர் தமிழர்விடுதலைக்கூட்டணியில் கரைந்துகொண்ட தமிழரசு அதன் செயலாளர்நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் கொலையோடு இருந்த இடம்தெரியாமல் எங்கோதொலைந்தது அதன்ஜனநாயகபண்புகளில் இருந்தும்! பிற்பாடு யுத்த போர்காலசூழலில் கூட்டமைப்பின் வீட்டுசின்னத்தோடு மாவைஅண்ணன் தலைவராக மறுபடி உயிர்த்தது. 

யுத்தத்திற்கு பிந்தி: யுத்தம் முடியும் இறுதிநாட்களின் நிலமைகள் குறித்து அறியமேற்கு ஐரோப்பிய பிரபல பத்திரிகைஒன்று அரசியல்அறிவியலாளர் கொழும்பு பாக்கியசோதி சரவணமுத்து அவர்களோடு நடாத்திய நீண்ட செவ்வியில் ஒரு கேள்வி: இனி  இலங்கைத்தமிழர் தலைமை எவ்வாறு அமையப்போகின்றது ?அதற்கு அவர்அளித்த பதில் இனி புதிய தமிழ்ஆளுமைகள்அரசியலுக்கு வர வாய்புக்கள் இருக்கின்றது என்றார்

தமிழரசில் சுமந்திரன்:

அந்தகாலகட்டத்தில்தான் கொழும்புவாழ் சட்டத்தரணி மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனும்தமிழரசுக்கட்சிக்குள் சம்பந்தன் ஐயாவால் அறிமுகம் செய்யப்பட்டார் தமிழ் சிங்கள மொழி சட்ட அறிவியல் புலமை யுத்தத்துக்கு பிந்திய சர்வதேச நாடுகளின் இன்றைய சட்டநியம புரிதல்களோடு கட்சிக்குள்பிரகாசிக்க தொடங்கினார் சுமந்திரன்!ஆனால் முப்பதுவருட யுத்தத்துள் மூச்சுவிடாமல் தவித்த ஜனநாயக சூழலிருந்து யுத்தம் முடிந்து மிரண்டு விழித்த ஜனநாய வெளிச்சம்!எமது தமிழ்சூழலில் கட்டமைக்கப்படும் பெரும்பான்மை கருத்தே ஜனநாயகமாகவும் ஏனையவை துரோகம் எனவும்அதுதன் யுத்தகால அகராதியை தூக்கிநிறுத்தியது! தேசம் மனித உரிமை என்பவையெல்லாவற்றையும் ஒற்றைப்பரிமாண வாய்ப்பாடாய் முப்பதுவருட யுத்தம் தின்றகாலம் கடந்தும்  இன்றும் ஒப்புவிக்கின்றது!

தமிழர்கூட்டமைப்பு:

எதிரிக்கு எதிரி நண்பன் எனக்குமூக்குபோனாலும் எதிரிக்குசகுனம் பிழைக்கவேண்டும் என்ற எம்தமிழ் பழையமொழிகளை அரசியல் கொள்கையாய் வரித்தது அன்றைய தமிழர்கூட்டமைப்பு ! யுத்தத்தை களத்தில் நின்றுநடாத்திய சிங்கள பேரினவாத இராணுவதளபதிக்கே  எம்மக்களை வாக்குபோட வைத்தது பிற்பாடு யுத்தத்தை நடாத்திய பாதுகாப்புமந்திரிக்கே  நல்லிணக்கம் என்று சொல்லி எம்மை நம்பசொல்லி மீண்டும் வாக்கு கேட்டார்கள் சந்தனம் பூச்சோடு இலங்கையின் முன்னாள் தமிழ்நீதி அரசரை எம் வடபுல முதலமைச்சராக்கினார்கள் இவைகள்தான் தமிழர்கூட்டமைப்புசெய்த தமிழ்தேசிய அரசியல்கள் யுத்தத்தால் அனைத்தும் இழந்த அபலைகளுக்கு அப்பாவி ஏழைமக்களுக்கு செய்தது என் பட்டியலிட

இந்த தலைமைகள்! தமிழ்தேசியம் வெல்லும்வரைமக்களுக்கான வாழ்வாதாரம் அபிவிருத்தி எதுவும்தொடவும்மாட்டோம் அண்டவும்மாட்டோம் என்றார்கள் சிங்களபேரினவாதம் தன்மனிதாபிமானத்தோடு மாகாணத்துக்கு கொடுத்த நிதிகளைக்கூட தொட்டால் தீட்டாக திருப்பிஅனுப்பினர் தேசியம்போற்றும் நிலத்துபுலத்து தலைவர்களுக்கோ அவர்கள் குடும்பம் உறவு ஏன் பரம்பரைசெல்வசெழிப்புக்குகுறைவேஇல்லாதபடி நிலம்புலம்குடிதோட்டம் ! மக்கள்பட்டினிவாழ்வை காணமறுத்து தேசிய அரசியல்குருடர்கள்ஆனார்கள் இந்ததலைவர்கள்! மக்களோ தம்தேவைகளுக்காக சுயமான அரசியல்சக்திகளுக்கு தம்வாக்குகளை வாரிவழங்க தொடங்க  கூட்டமைப்பு ஆணிவேரோடு ஆட்டம்கண்டது! இதில் யுத்தத்துக்கு பிந்திவந்த தமிழரசு சுமந்திரன் தமிழர் கூட்டமைப்பின் பேச்சாளர்மட்டுமல்ல தமிழரசின் மூச்சாளரும் என்ற உள்ளூர வெதும்பல்கள் வெடித்தெழத்தொடங்கின இத்தகைய சூழலில்தான் சென்றாண்டு முதுமைவாழ்வையெட்டும் மாவைஅண்ணாவின் தமிழரசு தலைவர் பதவிக்கு ஒரு தேர்தல் நடந்தது அப்படித்தான் வெளியே சொல்லவும்பட்டது ஆனால்பின்திரையில் நிலத்தில் புலத்திலுள்ள தேசிய பரப்பாளர்களின் பலத்தோடுதமிழரசில் சுமந்திரனை கழட்டி சிறிதரனை தலைவராக்கும் முயற்சிமேற்கொள்ளப்பட்டது புலத்திலுள்ள மீடியாக்கள்ஊத!

தமிழரசின் பெருமையையும் சிறிதரனின்  தேசியபரப்பையும் ஊதிஊதிக்காட்டினார்கள் அமெரிக்க அதிபர்தேர்தல்போல சிறிதரன்புகழ் பிரச்சாரம் புலத்தில் கொடிகட்டியது நிலத்தில் சந்தனப்பொட்டு நீதிஅரசர் சிறிதரன் நல்லதலைவர் எனசான்றிதழ் கொடுத்தார் ஆனால் பாவம் சிறிதரன் அந்தாள் நொந்துபோய் தமிழர்நாம் வெளிவிவகாரகொள்கைஎல்லாவற்றிலும் தோற்றுப்போனோம் என்று வெளிநாட்டில் நின்று அழுதது கைகெட்டியும் வாய்கெட்டாம்போனகதையா கட்சித்தலைவர்பதவியும்! புலத்து நிதிஊட்டோடு சிறிதரனைவைத்து கட்சியை கபளீகரம்செய்ய எடுத்த முயற்சி முடிவு என்னவோ நீதிமன்றத்தில் கட்சிஇப்போ! இதை தொடர்ந்து வந்த இலங்கைஅதிபர்தேர்தல் தமிழரசு சுமந்தரன்அணி தெளிவான முடிவு யாருக்கு ஆதரவு ஆனால் மாவைஅண்ணா சிறிதரன் சட்டத்தரணி தவராசா இவரகள்யாவரும் கட்சி முடிவுக்கு எதிராக பொதுவேட்பாளர் ஆதரவு இதில் தலைவர் மாவைஅண்ணா அதிபர் தேர்தல்முடியும்வரை அவருக்கே தெரியுமோ தெரியாது அவர் யாருக்கு ஆதரவு என்று  இப்போ கட்சியில் இருந்து கொளரவமாக ஓய்வுபெற்று  தன்கட்சியின் ஜனநாயக விழுமியத்துக்கு வலுச்சேர்த்திருக்கிறார் தேர்தலில் முதன்மை வேட்பாளராக சிறிதரன் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார் கடந்த காலங்களில் எல்லாம் எம் மக்கள் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை ஒன்றல்ல இரண்டல்ல கன்சாட் எடுத்துப்பார்த்தால் புரியும் எல்லாவற்றுக்கும் மேலாக கிளிநொச்சியில் அவர் ஆற்றிய உரை மிக மிக மிக்கியமானது!

ஜேவிதான்  வடக்கு கிழக்கை பிரித்தது இனக்கலவரத்தை நடாத்தியது இரவில் ஏறினால் எனக்குஎடுப்பார்கள் என்றுதன் அரசியல் புலமையையும் தன்ஆதரவாளர்களையும் புகழ்ந்தார் வடக்குகிழக்கை பிரித்தது

இலங்கை நீதித்துறை நீதிமன்றம் என்பதை மறந்தால் மறந்து பறவாயில்லை சிறிதரன் முன்னாள் எம்பி அந்த நீதியின்குடைக்குள்ளேதானே எம்பிபதவி அவருக்கு குளிராய் கிடைத்தது மீண்டும் ஆசைப்படுகிறார்!

ஆனால் இனக்கலவரத்தைநடாத்தியது ஜேஆரல்ல ஜேவிதான் என்று சொன்னார் ஒரு வரலாறு அப்பவே இவர் எம் ஈழத்தமிழ்தலைவரா என மக்கள் சிந்திக்கத்தொடங்கிவிட்டனர்! இதற்குபிற்பாடு அநுராவிடம் ஏன்போனார் எந்த நாடாளுமன்றத்துக்கு வேட்பாளராக போட்டியிட தேர்தலில் குத்தித்துள்ளார் என எம் தமிழ் மக்களே குழம்புகின்றனர் ஆனால் ஒன்று நிச்சயம் எம் மக்கள் இம்முறை தங்களுக்கான தலைவர்களை தாங்களே தேர்ந்தெடுக்க தயாராகிவிட்டார்கள் தமிழரசுக்கட்சிக்கும் கூடவே

இது ஜனநாயக தேர்தல் அது உலகளாவிய தன் தேர்தல் பண்பாட்டோடு கொண்டாடப்போகிறது பொறுத்திருந்து பார்ப்போமே மக்கள் தீர்ப்பைமகேசன் தீர்ப்பாய் ஏற்றிடும் ஜனநாயகத்தை போற்றும் மனத்திடத்தோடு!

Dienstag, 8. Oktober 2024

தமிழர்களின் கட்சி அரசியலும் தமிழ்மக்களின் துருப்பு சீட்டு பறிபோகும் ஆபத்தும் - 08.10.2024 / க. சுதாகரன்

லங்கையில் தமிழர்பகுதியிலும் தேர்தல் சூடுபடித்துள்ளதை யாவரும் அறிந்ததே. அதற்கு சாட்சியாக கட்சி தாவல்கள், விலகள்கள்,சின்னத்திற்கான அடிபிடிகள், போட்டியாளர்ளாக தெரிவுசெய்யப்படாதவர்களின் குமுறல்கள் என பல செய்திதாள்களையும் முகநுால்களையும் நிரப்பிவருகின்றது.  இவற்றை அவதானிக்கும் அல்லது நிதி வழங்கும் புலத்துதரப்பினரும் தமது மூலதனத்தினை காப்பாற்ற வாந்தி எடுக்கும் ஒற்றைபரிமாண ஊடகங்கள் தமது பங்குக்கு நச்சூட்டலையும் நடாத்திவருகின்றன. ஒரு சில ஊடகங்களும் தனிநபர்களும் ஊடகப்பண்போடு தமது ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர் என்பதனையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

நடைபெற இருக்கும் தேர்தலில் தமிழ்தரப்பினை பலவீனமாக்கும் பல சதிகள் நடைபெற்றுவருகின்றன. இதனை சதி என்று புரியாதும் பலர் உள்ளனர்.  இலங்கையில் உள்ள அதி தீவிர தேசியவாதிகளும் (ultra Nationalist) தேசியத்திற்கான விசிறிகளான (Fans) புலத்தில் உள்ள சில போலி தேசியவாதிகளும் உடந்தையாக உள்ளனர். இந்த சதியினை இலங்கையையும் தெற்காசிய பிராந்தியத்தினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இந்தியாவும்  ஒரு சிலபுலத்து முதலாளிகளும் இணைந்தே நடைமுறைப்படுத்திவருகின்றனர். 

NPP யினால் கொண்டு வரப்பட்ட இளையோர் பெண்கள் மற்றும் புத்திஐீவிகளின் படை எடுப்பு இலங்கையில் உள்ள அனைத்துதரப்பினருடமும் தாக்கம் செலுத்தி உள்ளது. இந்த அலை சிறுபாண்மை தரப்பினையும் விட்டுவைக்கவில்லை. அதால் பெண்களும் இளையோரும் தமிழ், இஸ்லாமிய, மலையக மக்களின் வேட்பாளர்கள் பட்டியலை நிரப்பி உள்ளது. 

NPP இனால் மூன்றில் இரண்டை பெற முடியவில்லை என்றால் ஏனைய வெற்றி பெற்ற கட்சிகளுடன் இணைந்தே ஆட்சியமைக்க முடியும். இது சிறுபாண்மையினரை பிரநிதிப்படுத்தும் கடசிகளிற்கு கிடைக்க இருக்கு வரப்பிரசாரம். அதன் மூலம் தமது அரசியல் உரிமை சட்டங்களை அமுல்படுத்துவதற்கு பெரிதும் உதவும். இதனால் தமிழ்மக்கள் சரியான அரசியலை நடாத்தும் கட்சிக்கு வாக்குளை வழங்கி தமது பிரதிநித்துவதினை தக்கவைக்க வேண்டும். அதற்கு தமிழ்மக்கள் யாதார்தமானதும் சாத்தியமானதும் படிப்படையாக உரிமைகளை பெற்றுகொள்ள தகுதி படைத்த கட்சியையும் தலைமையையும் இனங்காணல் வேண்டும். 

நடமுறையில் தற்போது சாத்தியமற்றதும் தற்போதைய அரசமுறமையை ஏற்று கொள்ள விரும்பாது தனியே பாராளுமன்ற கதிரைகளை சூடாக்க விரும்புவர்களை மக்கள் இனங்கண்டு அரியலில் இருந்து ஒதுக்க தாயாராக வேண்டும். சர்வதேசததிற்கு எடுத்துகாட்டவும் நாம் தேசிய இனம் என பறைசாற்றுவதற்கும் மட்டும் பாரளுமன்ற ஆசனங்களை வேண்டி வருபவர்களையும் தமிழ்மக்கள் இனம்கண்டு புறந்தள்ள வேண்டும்.

சிறுபாண்மைினர் தமது  பிரதிநிதித்துவத்தினை தக்கவைக்காது தவறவிடுமானால் தனது பேரம்பேசும் தகுதி எனும் துருப்பு சீட்டினை இழந்துவிடும் ஆபத்து உள்ளது. மீண்டும் உரிமைக்கான குரல்கள் அடுத்ததேர்தல்வரை காத்திருக்க நேரிடும். இக்கால இடைவெளியில் பல பாதக சாதக அம்சங்கள் நடைபெறலாம்.

சிறுபாண்மை கட்சிகள் தனிநபர் சேறு பூசல்களை நிறுத்தி தமது கொள்களை தீர்வு திட்டங்களை முன்வைத்து மக்களின் ஒப்புதல்களை பெற்றுகொள்ள முயற்சிக்க வேண்டும். புதிய அரசில்கலாச்சாரத்தினை கட்சிகளும் ஊடகங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும். 

ஒருவர்மீது சேறு பூசியும் அந்நபர் இன்னமும் எவ்வித ஊழல்களில் மாட்டாமல் இருக்கின்றார் எனில் குறித்த நபரின் கருத்துகளிலும் தனிப்பட்ட நேர்மை உள்ளதாக கருதவேண்டி உள்ளது. அனைத்து தரப்பும் ஒருவரை மட்டும் சுட்டி நிற்பது மற்றவர்களது ஆளுமை இயலாமை நேர்மையின்மை பற்றிய சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது.

ஒரு பாரிய சதி வலைகளில் இருந்து இருந்து மீள வேண்டியவர்களாக  இன்றைய இலங்கை வாழ் தமிழர்கள் உள்ளனர். இந்த வலையில் இருந்து புத்திசாதுரியமாக இந்த தேர்தல் வெற்றியை தமதாக்கி கொள்வதிலேயே தங்கி உள்ளது. மக்கள் மீண்டும் பொய்வாக்கு உறுதிகளையும் உணர்ச்சி அரசியலிற்கு (emotional politics) அடிமையாகள் ஆகாமல்  தம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும்.