Freitag, 9. November 2018

ஆபத்ததான சுவிற்சர்லாந்து மக்கள் கட்சியின் (SVP) சுயநிர்ணய உரிமை மசோதாவினை நிராகரிப்போம். - SELBSTBESTIMMUNGS INITIATIVE



சுவிற்சர்லாந்து மக்கள் கட்சியினால் கொண்டு வரப்பட்ட சுயநிர்ணய உரிமை என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட மசோதாவினை இல்லை என்று நிராகரிப்போம்.

உலகநாடுகளில் ஆதிக்கம் செலுத்திவரும் எதேச்சதிகார அரசியல்வாதிகள் தமது ஆதிக்கத்தினை நிலைநாட்டுவதற்கு தமது நாட்டின் இறைமை என்ற பெயரில் சர்வதேச உடன்படிக்கைளையும் ஓப்பந்தங்களையும் நிராகரித்து வருகின்றனர்.

அதே வகைக்பட்டு சுவிற்சர்ந்தில் வளர்ந்து வரும் சுவிற்சர்லாந்து மக்கள் கட்சி இந்நாட்டில் வாழும் வெளிநாட்டவர்களிற்கு எதிராகவும் அகதிகளிற்கு எதிராக கடுமையான சட்டமூலங்களை தொடர்ச்சியாக கொண்டு வருகின்றது.

பலர் இதன் தாற்பரியங்களை பற்றி அறிந்து கொள்ளாது நாட்டில் ஏற்படும் பிரச்சினைகளிற்கு தனியே வெளிநாட்டவர்களும் அகதிகளுமே காரணம் என முடிவுக்கு வர முற்படுகின்றனர். இவ்வகையான மிக மலிந்த அரசியலை செய்து சுவிற்சர்லாந்து மக்கள் கட்சி சுவிற்சர்லாந்து பிரiஐகளை மூளை சலவை செய்து வருகின்றது. இதற்கு ஓர் ஊன்று கோலாக தமது நாட்டின் இறைமையை கையில் எடுத்து கௌ;ளுகின்றனர். சுவிற்சர்லாந்து சர்வதேச அல்லது ஐரோப்பிய உடன்படிக்ககைளிலும் ஓப்பந்தங்களிலும் கையொப்பம் இட்டதனாலேயே 1970 ம் ஆண்டு சுவிற்சர்லாந்து பெண்களுக்கான வாக்குரிமை சாத்தியமானதிற்கு ஓர் காரணம். சுவிற்சர்லாந்து வாழ் பெண்களின் போராட்டமும் முக்கிய பங்காற்றியுள்ளதென்பதை மறுக்கவில்லை.

வேளிநாட்டு நீதிபதிகளின் தீப்புக்களிற்கு தாம் அடிபணிய போவதில்லை என சொல்லியே இம் மசோதாவினையும் சுவிற்சர்லாந்து மக்கள் கட்சி முன்மொழிந்துள்ளனர். ஐரோப்பிய  மனித உரிமை சட்டங்கள் ஓப்பந்தங்கள் முக்கியமற்றது என இந்த மசோதா நிராகிக்கின்றது.

1970 ளில் Asbest எனப்படும் கூரைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பல தொழிலாளர்கள் புற்று நோய்க்கு உட்பட்டனர். இத்தொழிற்சாலையினால் பாதிக்கபட்டு நோய்வாய்பட்ட பல தொழிலாளர்கள் இந்நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சுவிற்சர்லாந்து நீதிமன்றங்கள் தொழில்சாலை உரிமையாளர்களிற்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கியிருநதனர். மேலும் தொழிலாளர்கள் இவ் வழக்கினை ஐரோப்பிய நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஐரோப்பிய  நீதிமன்ற நீதிபதிகள் தொழிலாளர்களின் உண்மை நிலையை அறிந்து தொழிலாளர்களிற்கு நியாயமான நட்டஈடு வழங்க வேண்டுமெனவும் மேலும் இப்பொருள் தயாரிப்பு மனிதர்களின் சுகாதாரத்திற்கு உகந்தது அல்ல எனவும் தீப்பளிக்கபட்டது.

இவ்வகையில் வழக்கு தொடுப்பவர் தனக்கு சரியான நீதி கிடைக்கும் வரைக்கும் சர்வதேச ஐரோப்பிய நீதிமன்றில் மேல் முறையிடும் வாய்பை முற்றாக தடைசெய்வதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.

சிறிய நாடான சுவிற்சர்லாந்து சர்வதேச நட்புறவும் உடன்படிக்கையமற்று செயல்பட முடியாது. இம் மசோத இந்நாட்டில் முதலீடு செய்து வேலைவாய்ப்பினை கொடுக்கும் நிறுவனங்களிற்கு நெருக்கடிகளை கொடுக்கும் என்பது மறுப்பதற்கில்லை.

சுவிற்சர்லாந்தில் தஞ்சம் அடைந்அடைந் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என தீhமானம் எடுக்கப்பட்ட பொழுது. உண்மையில் திருப்பி அனுப்பட்டால் உயிருக்கு ஆபத்து என கருதிய தமிழ் அகதி ஐரோப்பிய  நீதிமன்றில் மேல்முறையிட்டு  சதாகமான தீர்ப்பு வழங்கப்பட்டு காப்பாற்ற பட்டார்கள்

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல்களை சர்வதேச நீதிமன்றங்களிற்கு எடுத்து செல்ல முடியாதுள்ளது. ஏனெனில் இலங்கை சர்வதேச ஓப்பந்தங்களில் கையொப்பமிடதாதினால் இவர்கள் விசாரணைகளில் இருந்து தப்பி வருகின்றனர்.
இலங்கையில் கலப்பு விசாரணையை சர்வதேசம் வலியுறுத்தி போது இலங்கை அரசு கூறிய பதில் இது எங்கள் நாடு எமது இறமை எமது நீதிமன்றங்கள் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைமீறல்களை விசாரிக்கும் என தெரிவித்து சர்வதேச அழுத்ததில் இருந்து தப்பித்து கொண்டது. 

அதே போல் இன்று பாரிய முதலீட்டில் செயற்படும் சுவிற்சர்லாந்து மக்கள் கட்சி இந்நாட்டு நீதிமன்றங்களே போதுமானது என இம் மசோதா மூலம் வலியுறுத்துகின்றது.

பெண்கள் சிறுவர்கள் மதங்கள் பாலியல்  சிறுபாண்மையினர் பிரதேசம் இனம் சாதி போன்ற பல்வேறு கூறுகளால் ஓடுக்கப்படும் மக்களிற்கு பாதுகாப்பளிக்கும் வகையிலும் உயரிய மனித விழுமியங்களை பாதுகாக்கும் வகையிலுமே ஐரோப்பிய சர்வதேச சட்டங்கள் இயற்றபட்டுள்ளன. சுவிற்சர்லாந்து அரசியல் யாப்பிலும் இவ்விடயங்கள் மிக அழுத்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மேல்முறையிடு செய்யும் உரிமையினை மறுப்பதினால் இம் மசோதா சுவிற்சர்லாந்தின் உயரிய மனித உரிமை விழுமியங்களுக்கு எதிரானதாக மனித உரிமையை மதிக்கும் சிவில் அமைப்புக்கள் விமர்சிக்கின்றன.

இந்நாட்டில் பிரசைகள் உரிமையினை பெற்ற தமிழர்கள் தயவு செய்து உங்களிற்கு கிடைத்துள்ள வாக்குரிமையை பயன்படுத்தி இந்த மசோதாவிற்கு எதிராக இல்லை என வாக்களியுங்கள். சுவிற்சர்லாந்தில் வாக்களிக்கும் விகிதம் கடந்த சில ஆண்டுகளாக வீழ்ச்சி அடைந்து வந்துள்ளது. இதனால் அக்கறையுடன் வாக்குரிமையை பெற்ற அனைவரும் வருகின்ற 25 ம் திகதி  நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அபிப்பிராய வாக்கெடுப்பில் கலந்துகொண்டு இல்லை என வாக்களிக்குமாறு சோசலிச ஐனநாயக கட்சியின் சார்பில் கேட்டு கொள்கின்றோம்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen