பாடல் வரிகள் கூடுதலாக உணர்ச்சி பூர்வமாக அமைந்திரிந்தது. நாம் எப்போதும் உணர்ச்சிகளிற்கு ஆட்பட்டு போவதால் யாதார்த்திற்கு சாத்தியமானதும் சாதிக்ககூடிய பல சந்தர்ப்பங்களை வரலாற்றில் இழந்த உதாரணங்கள் பல உள்ளன.
பாடல் வரிகளையும் இளையோரே எழுதி இருந்திருந்தால்அவர்களது எண்ணக்கருக்களும் புலப்பட்டிருக்கும். பாடல் காட்சிகள் புலத்தினை எவ்விதத்திலும் காட்சிப்படுத்தாது தனியே தாயக காட்சிகள் மட்டும் காட்சிப்படுத்தியதும், மயக்கத்தரும் வகையில் பெண்போராளிகள் கொடி பிடிப்பது போன்றகாட்சிகள் ஏதோ ஒரு அரசியல் சார்பினை தெள்ள தெளிவாக காட்சி மூலம் செய்தி சொல்லவைக்கின்றது. இளையோர் தமது கையில் அனைத்தையும் கையகப்படுத்தியிருந்தால் இன்னுமொரு பரிமாணத்துடன் வந்திருக்லாம் என்ற அவா என்னிடம் உள்ளது.
எமது இளைய இசைக்கலைஞர்களின் இசைதிறமைகள் ஐரோப்பிய நாடுகளின் இசை கலைஞர்களுடன் இணைந்து ஓர் பெரிய அங்கீகாரத்தினை பெற்று கொள்ள வேண்டும் என்ற அவாவினை எமது இளையோரிக்கான அன்பானவேண்டுகோளை தெரியப்படுத்திருந்தேன். பல இசை நிகழ்ச்சிகளில் ஒலியின் அளவினை அதிகரிப்பதே ஓர் பாரம்பரியமாக இருந்துவந்துள்ளது. இவைற்றை எல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில் இந்த பாடலின் ஒலி அமைப்பு துறை சார்ந்து ஒழுங்கு செய்ப்பட்டிருந்தது.
கோரனாவில் ஏற்பட்டுள்ள Lock
down வினால் பல இளைய தலை முறையினர் மன அழுத்திற்கு உள்ளாகி உள்ளனர். இவ் இளைஞர்களை கவனத்தில் கொண்டு அவர்களிந்கு ஓர் இசைவிருந்தினை வழங்கி மன அழுத்ததில்விடுபட செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தேன்.
மயா போன்ற பாடகிகள் அவரகளது அரசியல் நிலைப்பாட்டினால் எவ்வாறு இசைத்துறையிலிருந்து ஒதுக்கபட்டனர் என்பதையும் சுட்டிகாட்டியிருந்தேன்.
புலம்பெயர் தமிழ் சமூகம் பல துறைகளில் கால்பதித்திருந்தாலும் தமது சந்ததியினரின் நீண்டகால இருத்தலின் நலன் கருதி அரசியலிலும் கால்பதிக்க வேண்டும் என்ற தேவையையும் உணர்த்தி இருந்தேன். புலத்தில் அரசியலில் ஈடுபடும் எம்மவர்களை எந்தநாட்டி லும் உள்ள கட்சிகளும் செம்கம்பளம் இட்டு வரேவேற்கவில்லை. நாம் தான் இந்தேசமூகத்தில் ஓர் அங்கம் என்பதனை நிருபிக்க வேண்டும்என்பதற்காகவே அரசியலில் ஈடுபட வேண்டிய
தேவை உளளது.
கட்சியில் அங்கம் வகிக்கும் இனவாதிகள் எம்மை ஓர் துச்சமாக கருதுவதும் நாமும் இவ்வகை இனவாதிகளின் கழுகுபார்வைக்கு முன் நாம் ஏதோ உடை அணியாதது போல் உணர்ந்த சந்தர்ப்பங்களை சுருக்கமாக தெரியப்படுத்தியிருந்தேன்.
நிகழ்ச்சி ZOOM
வழியாக நடைபெற்றிருந்தது. ஆரம்பத்தில் எமக்கு ஓர் ID
கொடுக்கபட்டிருந்தது. அதில் ஒருசிலர் பிரச ண்மாகி இருந்தனர். நிகழ்ச்சி வேறு ஒர் ID
ஊடாக ஆரம்பித்ததாக ஒருவர் கூற இன்னும் ஓர் ID தரப்பட்டிருந்தது. மற்றொரு ID ஊடாக LOGIN செய்து கலந்து கொண்ட போது நிகழ்ச்சி ஏற்கனவே ஆரம்பமாகி நடைபெற்று கொண்டிருந்து. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வசந்திற்கு யார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவார்கள் என்ற விபரங்கள் அறியாது ஓர் ஒழுங்மைக்கபடாது நடைபெற்று கொண்டிருந்தது. இதனை நெறிப்படுத்த வந்த அறிவிப்பாளரை வசந் இணைத்து அவரை தம்முடன் இணைந்து
நிகழ்ச்சியை நடாத்துமாறு கோரிக்கை விட்டிருந்த போதும். அந்த அறிவிப்பாளரிடம் எவ்வித தாயரிப்பும் இருக்கவில்லை. இதனை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால். அறிவுப்பு துறையானது தனித்து அடுத்த அடுத்த நிகழ்ச்சிகளை அறிவிப்பதல்ல. நடைபெற இருக்கும் நிகழ்ச்சி பற்றி நன்கு அறிந்தும் நிகழ்ச்சியில் பேச இருப்பவர்கள் பற்றி ஓரளவாவது அிந்திருக்க வேண்டும்.
ஓர் மிகவும் சிறப்பாக தாயாரிக்கபட்ட இந்தபாடலை ஓர் சிறப்பு தேர்ச்சி அற்ற நிகழ்ச்சி ஒழுங்கீனத்தினால் நிகழ்ச்சி கவரப்படவில்லை. அல்லது இந்த இசையின் தாயாரிப்பில் ஈடுபட்ட கலைஞர்களுடனான கலந்துரையாடலாக சுருக்கி கொண்டிருக்கலாம்.
நிகழ்ச்சியை ஆளுமைப்படுத்தாதன் விளவாக யார் நிகழ்ச்சியை நடாத்தினார்கள் என்ற கேள்வியும் எமாற்றமும் என்னை ஆட்கொண்டது.
இந்த தவறுகள் நடைபெறாமல் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பிலும் அறிவிப்பு துறையிலும் கவனம் செலுத்தவேண்டும். இளையோரின் அனைத்து செயற்பாடுகளும் துறைசார்ந்து
சிறப்பு தேர்ச்சியுடன் நடைபெறவேண்டும் என வாழ்த்துகின்றேன்.
சுதாகரன் கணபதிப்பிள்ளை
31.01.2021
Keine Kommentare:
Kommentar veröffentlichen