Sonntag, 13. September 2026

சுவிட்சர்லாந்தின் நடுநிலைமை அவசியம் – ஆனால் நடுநிலைமை முன்முயற்சிக்கு ஏன் நான் இல்லை (Neutralität Nein) என்கிறேன் - 27.09.2026

சுவிட்சர்லாந்தின் நடுநிலைமை நமது நாட்டின் வரலாற்று அடையாளத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். ஆனால் இன்றைய அரசியல் விவாதத்தில் ஒரு தவறான புரிதல் உருவாகக்கூடாது:

Neutralitätsinitiative-க்கு எதிராக இருப்பது, சுவிட்சர்லாந்தின் நடுநிலைமைக்கு எதிராக இருப்பதல்ல.

நான் சுவிட்சர்லாந்தின் நடுநிலைமையை உறுதியாக ஆதரிக்கிறேன். அதேவேளையில் தற்போதைய நடுநிலைமை முன்முயற்சியை நிராகரிக்கிறேன்.

ஏன்?

நடுநிலைமைக்கு நீண்ட வரலாறு உள்ளது

சுவிட்சர்லாந்தின் நிரந்தர நடுநிலைமை 1815 ஆம் ஆண்டு சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டது. 1848 இல் உருவான கூட்டாட்சி அரசியலமைப்பில், நாட்டின் நடுநிலைமையைப் பாதுகாப்பது கூட்டாட்சி அரசு மற்றும் நாடாளுமன்றத்தின் பொறுப்புகளில் ஒன்றாக அமைந்தது.

1907 ஆம் ஆண்டு ஹேக் உடன்படிக்கைகள் மூலம் நடுநிலை நாடுகளின் முக்கிய உரிமைகளும் கடமைகளும் சர்வதேச சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டன.

அதன் அடிப்படை மிகவும் தெளிவானது:

சுவிட்சர்லாந்து மற்ற நாடுகளுக்கிடையிலான போரில் நேரடியாகப் பங்கேற்கக்கூடாது; போரில் ஈடுபட்டுள்ள ஒரு தரப்புக்கு இராணுவ உதவி வழங்கக்கூடாது; தனது நிலப்பரப்பை போர் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது.

இந்த அடிப்படை நடுநிலைமையில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் சுவிஸ் நடுநிலைமை வரலாற்றில் ஒருபோதும் முற்றிலும் உறைந்த கொள்கையாக இருந்ததில்லை. சர்வதேச சூழ்நிலைகள் மாறியபோது, சுவிட்சர்லாந்து தனது தேசிய நலன், பாதுகாப்பு மற்றும் சர்வதேசப் பொறுப்புகளை கருத்தில் கொண்டு தனது நடுநிலைக் கொள்கையின் நடைமுறையையும் மாற்றி வந்துள்ளது.

அதுவே அதன் பலம்.

இரண்டாம் உலகப் போர் நமக்கு என்ன கற்றுத்தந்தது?

1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப் போரில் சுவிட்சர்லாந்து அதிகாரபூர்வமாக நடுநிலையாக இருந்தது.

சுவிட்சர்லாந்து நேரடியாக போரில் இணையவில்லை. நாட்டைப் பாதுகாப்பதற்காக இராணுவம் முழுமையாக இயக்கப்பட்டது. மிகவும் ஆபத்தான புவியியல் சூழ்நிலையிலும் சுவிட்சர்லாந்து நேரடியாகப் போர்க்களமாக மாறாமல் இருந்தது.

இது சுவிஸ் நடுநிலைமையின் முக்கியமான வரலாற்று அனுபவமாகும்.

இதனால்தான் நானும் நடுநிலைமையை ஆதரிக்கிறேன்.

ஆனால் அந்த வரலாற்றை ஒரு பக்கம் மட்டும் பார்த்துவிட முடியாது.

போரின் போது சுவிட்சர்லாந்து போரில் ஈடுபட்ட நாடுகளுடன் பொருளாதார உறவுகளைத் தொடர்ந்தது. குறிப்பாக நாசி ஜெர்மனியுடனான சில வர்த்தக மற்றும் நிதி உறவுகள் பின்னர் கடுமையான வரலாற்று ஆய்வுகளுக்கு உட்பட்டன.

Swiss National Bank ஜெர்மனியின் Reichsbank-இலிருந்து தங்கத்தையும் வாங்கியது. பின்னர் அந்தத் தங்கத்தின் ஒரு பகுதியின் மூலத்தைச் சுற்றி கடுமையான விவாதங்கள் எழுந்தன.

இதிலிருந்து ஒரு முக்கியமான பாடம் கிடைக்கிறது:

ஒரு நாடு நடுநிலையாக இருப்பதால் அதன் எல்லா பொருளாதார நடவடிக்கைகளும் தானாகவே நியாயமானதாகிவிடாது.

ஒரு நடுநிலை நாடும் தனது பொருளாதார மற்றும் அரசியல் முடிவுகளின் விளைவுகளுக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

பொருளாதாரத் தடைகள் குறித்து நான் என்ன நினைக்கிறேன்?

நடுநிலைமை முன்முயற்சியை ஆதரிப்பவர்கள் கூறும் ஒரு முக்கியமான வாதத்தை நான் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன்:

பொருளாதாரத் தடைகள் சில நேரங்களில் அரசியல் தலைவர்களை விட சாதாரண மக்களை அதிகமாகப் பாதிக்கலாம்.

அது ஒரு உண்மையான கவலை.

உணவு, மருந்து, பணப்பரிமாற்றம், வேலைவாய்ப்பு, எரிசக்தி மற்றும் அத்தியாவசிய வசதிகள் பாதிக்கப்பட்டால், ஏழை மக்களே முதலில் அதன் விலையைச் செலுத்த வேண்டியிருக்கும்.

எனவே நான் அனைத்து தடைகளையும் தானாக ஆதரிப்பதில்லை.

EU அல்லது அமெரிக்கா ஒரு தடையை அறிவித்தால், அதை சுவிட்சர்லாந்து விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நான் கூறவில்லை.

ஒவ்வொரு தடையும் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட வேண்டும்:

  • அது யாருக்கு எதிராக?
  • எந்த சட்ட அடிப்படையில்?
  • அது உண்மையில் பயனுள்ளதா?
  • பொதுமக்களுக்கு என்ன விளைவு?
  • சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அது உதவுமா அல்லது பாதிக்குமா?

இவற்றை ஆராய்ந்த பின்னர் சுவிட்சர்லாந்தே முடிவு செய்ய வேண்டும்.

எல்லா தடைகளும் ஒன்றல்ல

“Sanktionen” என்று ஒரு வார்த்தையில் அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றாகக் கருதுவது சரியல்ல.

ஒரு முழு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் பரந்த தடைகள் இருக்கலாம். அவை பொதுமக்களை கடுமையாகப் பாதிக்கக்கூடும்.

மற்றொரு பக்கம் இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கைகள் இருக்கலாம்:

குறிப்பிட்ட நபர்களின் சொத்துகளை முடக்குதல்;

பயணத் தடை;

குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள்;

போருக்கு தேவையான குறிப்பிட்ட பொருட்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்துதல்.

இவை அனைத்தின் விளைவுகளும் ஒன்றல்ல.

எனவே “தடைகளுக்கு ஆம் அல்லது இல்லை?” என்பது போதுமான கேள்வி அல்ல.

எந்தத் தடை? யாருக்கு எதிராக? எந்த நோக்கத்திற்காக? என்ன விளைவு?

இதுதான் நாம் கேட்க வேண்டிய கேள்வி.

“தடையா அல்லது பேச்சுவார்த்தையா?” என்பது தவறான தேர்வு

சிலர் இந்த விவாதத்தை:

“Sanktionen oder Verhandlungen?” – “தடைகளா அல்லது பேச்சுவார்த்தையா?”

என்று முன்வைக்கிறார்கள்.

எனக்கு இது தவறான இருவழித் தேர்வு.

பேச்சுவார்த்தை, இராஜதந்திரம் மற்றும் மத்தியஸ்தம் எப்போதும் முக்கியமானவை. சுவிட்சர்லாந்து தனது நல்லெண்ணச் சேவைகளையும் சமாதானப் பணியையும் மேலும் வலுப்படுத்த வேண்டும்.

ஆனால் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு கடுமையான சர்வதேச சட்ட மீறலைப் புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை.

அதேபோல் ஒரு பொருளாதாரத் தடையை எடுத்துக்கொண்டால், பேச்சுவார்த்தைக்கு கதவு நிரந்தரமாக மூடப்பட்டுவிட வேண்டும் என்பதும் அவசியமில்லை.

Diplomatie மற்றும் Sanktionen கட்டாயமாக ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல.

ஒவ்வொரு சூழ்நிலையையும் தனித்தனியாக மதிப்பிட்டு, எந்த அரசியல் கருவி பயனுள்ளதாக இருக்கும் என்பதை சுவிட்சர்லாந்து சுயமாகத் தீர்மானிக்க வேண்டும்.

ரஷ்யா–உக்ரைன் போர் இந்த முரண்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியது

2022 ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது முழுமையான இராணுவத் தாக்குதலை ஆரம்பித்த பின்னர், சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பல பொருளாதாரத் தடைகளை ஏற்றுக்கொண்டது.

இது தற்போதைய Neutralitätsinitiative உருவாகிய முக்கிய அரசியல் பின்னணிகளில் ஒன்றாகும்.

முன்முயற்சியை ஆதரிக்கும் JA தரப்பினர் ஒரு நியாயமான கேள்வியை எழுப்புகின்றனர்:

“EU-வின் தடைகளை சுவிட்சர்லாந்து ஏற்றுக்கொண்ட பின்னர், அது எவ்வாறு நம்பகமான நடுநிலை மத்தியஸ்தராக இருக்க முடியும்?”

இந்தக் கேள்வியை நாம் அலட்சியம் செய்யக்கூடாது.

சுவிட்சர்லாந்து ஒரு மத்தியஸ்த நாடாக இரு தரப்புகளுடனும் பேசக்கூடிய நம்பகத்தன்மையைப் பாதுகாக்க வேண்டும்.

ஆனால் நான் ஒரு எதிர்க் கேள்வியையும் கேட்கிறேன்:

ஒரு நாடு மற்றொரு சுயாதீன நாட்டை இராணுவ ரீதியாகத் தாக்கி, அதன் எல்லைகளை பலவந்தமாக மாற்ற முயன்று, சர்வதேச சட்டத்தை கடுமையாக மீறும்போது, சுவிட்சர்லாந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதுதான் நடுநிலைமையா?

எனக்கு அதுதான் நடுநிலைமை அல்ல.

நடுநிலைமை என்பது தாக்குதல் நடத்திய தரப்புக்கும் தாக்குதலுக்குள்ளான தரப்புக்கும் இடையே உண்மையை மறைத்து செயற்கையான சமத்துவத்தை உருவாக்குவது அல்ல.

இங்கு ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது:

சுவிட்சர்லாந்து இராணுவ ரீதியாக போரில் பங்கேற்காமல் இருக்க முடியும்.

அதே நேரத்தில்:

“இங்கு சர்வதேச சட்டம் மீறப்பட்டுள்ளது”

என்று தெளிவாகக் கூறவும் முடியும்.

இந்த இரண்டு நிலைப்பாடுகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல.

இராணுவ ரீதியாக நடுநிலையாக இருப்பது ஒரு விடயம்.

சர்வதேச சட்டத்தைப் பாதுகாப்பது மற்றொரு விடயம்.

இவை இரண்டையும் சுவிட்சர்லாந்து ஒரே நேரத்தில் செய்ய முடியும்.

UNO மட்டும் முடிவு செய்ய வேண்டுமா?

சிலர் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தால் மட்டுமே சுவிட்சர்லாந்து பொருளாதாரத் தடைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள்.

நானும் UNO மற்றும் சர்வதேச சட்டத்தின் முக்கியத்துவத்தை உறுதியாக ஆதரிக்கிறேன்.

ஆனால் UNO Security Council அமைப்பில் ஒரு அடிப்படைப் பிரச்சினை உள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய ஐந்து நிரந்தர உறுப்பினர்களுக்கு veto அதிகாரம் உள்ளது.

ஒரு கடுமையான சர்வதேச சட்ட மீறல் நடந்தாலும், அந்த ஐந்து நாடுகளில் ஒன்று ஒரு தீர்மானத்தைத் தடுக்க முடியும்.

அப்போது கேள்வி எழுகிறது:

UNO Security Council நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பதற்காக சுவிட்சர்லாந்தும் எதுவும் செய்யக்கூடாதா?

எனது பதில்:

இல்லை.

ஒரு வல்லரசின் veto சுவிட்சர்லாந்தின் சுயாதீன வெளிநாட்டுக் கொள்கையை மறைமுகமாக நிர்ணயிக்கக் கூடாது.

சிறிய நாடான சுவிட்சர்லாந்திற்கு சர்வதேச சட்டம் ஏன் முக்கியம்?

சர்வதேச சட்டம் என்பது சுவிட்சர்லாந்து மற்ற நாடுகளுக்கு வழங்கும் ஒரு ஒழுக்கப் பாடம் அல்ல.

அது நமது சொந்த தேசிய நலனுக்கும் பாதுகாப்புக்கும் முக்கியமானது.

சுவிட்சர்லாந்து ஒரு சிறிய நாடு.

பெரிய நாடுகள் தங்களின் இராணுவ வலிமையைப் பயன்படுத்தி சிறிய நாடுகளின் எல்லைகளை மாற்றலாம் என்ற உலக ஒழுங்கு உருவானால், அது சுவிட்சர்லாந்திற்கும் பாதுகாப்பான உலகமல்ல.

சிறிய நாடுகளுக்கு:

“வலிமையானவன் சொல்வதே சட்டம்”

என்ற உலகத்தை விட,

“சட்டம் அனைவருக்கும் சமம்”

என்ற உலக ஒழுங்கே முக்கியம்.

எனவே சர்வதேச சட்டத்தைப் பாதுகாப்பது சுவிட்சர்லாந்தின் தேசிய நலனின் ஒரு பகுதியாகும்.

மத்தியஸ்தப் பங்கை மேலும் வலுப்படுத்த வேண்டும்

இந்த இடத்தில் JA தரப்புடன் எனக்கு முக்கியமான ஒற்றுமை உள்ளது.

சுவிட்சர்லாந்து தனது Good Offices பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

(Good Offices / Gute Dienste) நல்லெண்ணச் சேவைகள்)என்பது, சுவிட்சர்லாந்து போன்ற ஒரு நடுநிலை நாடு மோதலில் இருக்கும் நாடுகளுக்கு இடையில் நேரடி தரப்பாக மாறாமல், பேச்சுவார்த்தை, தொடர்பு, மத்தியஸ்தம் மற்றும் சமாதான முயற்சிகளுக்கு உதவுவதை குறிக்கிறது.)


Geneva சர்வதேச பேச்சுவார்த்தைக்கான மையமாகத் தொடர வேண்டும்.

போரில் ஈடுபட்டுள்ள தரப்புகளுடன் தொடர்புகளை திறந்தவையாக வைத்திருக்க வேண்டும்.

Ceasefire மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு உதவ வேண்டும்.

போர்க்கைதிகள், பொதுமக்கள், அகதிகள் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியை அதிகரிக்க வேண்டும்.

ஏனெனில் எந்தப் போரும் இறுதியில் ஒரு அரசியல் தீர்வையும் பேச்சுவார்த்தையையும் தேடும்.

ஆனால் அதற்காக சுவிட்சர்லாந்தின் மற்ற அரசியல் கருவிகளை அரசியலமைப்பின் மூலம் முன்கூட்டியே கைவிட வேண்டிய அவசியமில்லை.

நாளைய உலகம் எப்படி இருக்கும்?

இன்றைய பாதுகாப்பு என்பது டாங்கிகள், விமானங்கள் மற்றும் படைகள் மட்டுமல்ல.

Cyber attacks, மின்சார வலையமைப்பின் மீதான தாக்குதல்கள், மருத்துவமனைகள் மற்றும் வங்கிகளின் கணினி அமைப்புகளை முடக்குதல், தவறான தகவல் பரப்புதல், பொருளாதார அழுத்தம் மற்றும் hybrid threats ஆகியவை புதிய பாதுகாப்புச் சவால்களாக உள்ளன.

2040 அல்லது 2050 இல் உலகம் எப்படி இருக்கும் என்று இன்று யாராலும் நிச்சயமாகக் கூற முடியாது.

அதனால் எதிர்கால தலைமுறைகளின் அரசியல் நடவடிக்கைச் சுதந்திரத்தை இன்று அரசியலமைப்பில் தேவையற்ற வகையில் கட்டுப்படுத்தக் கூடாது.

ஒரு நல்ல அரசியலமைப்பு அடிப்படை மதிப்புகளைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் இன்னும் உருவாகாத ஒவ்வொரு எதிர்கால நெருக்கடிக்கும் ஒரே அரசியல் பதிலை இன்றே கட்டாயப்படுத்தக்கூடாது.

சுவிட்சர்லாந்தின் இறையாண்மை என்றால் என்ன?

  1. எனக்கு Souveränität – இறையாண்மை – என்றால்:
  2. Bern-இல் எடுக்க வேண்டிய முடிவை Brussels எடுக்கக்கூடாது.
  3. ஆனால் அதேபோல் Moscow தீர்மானிக்கக்கூடாது.
  4. Washington தீர்மானிக்கக்கூடாது.
  5. Beijing தீர்மானிக்கக்கூடாது.
  6. UNO Security Council-இல் ஒரு வல்லரசின் veto கூட நமது அனைத்து அரசியல் முடிவுகளையும் மறைமுகமாகத் தீர்மானிக்கக்கூடாது.
  7. சுவிட்சர்லாந்து தனது சட்டம், தனது நலன், சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமானப் பொறுப்பை மதிப்பிட்டு தானே முடிவு செய்ய வேண்டும்.
  8. அதுதான் எனக்கு சுயாதீன நடுநிலைமை.

நான் விரும்பும் சுவிஸ் நடுநிலைமை

எனக்கு வேண்டியது மௌனமான நடுநிலைமை அல்ல.

எனக்கு வேண்டியது எந்த ஒரு பெரிய வல்லரசையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் நடுநிலைமையும் அல்ல.

எனக்கு வேண்டியது:

  • போரில் ஈடுபடாத சுவிட்சர்லாந்து.
  • இராணுவக் கூட்டணியில் இணையாத சுவிட்சர்லாந்து.
  • சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பாலமாக இருக்கும் சுவிட்சர்லாந்து.
  • சர்வதேச சட்டத்தைப் பாதுகாக்கும் சுவிட்சர்லாந்து.
  • போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி செய்யும் சுவிட்சர்லாந்து.
  • அதே நேரத்தில் தனது அரசியல் மற்றும் பொருளாதார முடிவுகளைத் தானே எடுக்கக்கூடிய சுவிட்சர்லாந்து.

இதனால்தான் எனது நிலைப்பாடு தெளிவானது:

  • நடுநிலைமைக்கு – ஆம்.
  • போரில் பங்கேற்பதற்கு – இல்லை.
  • சமாதானம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு – ஆம்.
  • சர்வதேச சட்டத்திற்கு – ஆம்.
  • மனிதாபிமான உதவிக்கு – ஆம்.
  • பொருளாதாரத் தடைகளை கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதற்கு – இல்லை.
  • ஒவ்வொரு தடையையும் அதன் சட்ட அடிப்படை, பயன் மற்றும் மனிதாபிமான விளைவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்வதற்கு – ஆம்.

சுவிட்சர்லாந்தின் சுயாதீன முடிவெடுக்கும் உரிமைக்கு – ஆம்.

ஆனால் அந்த உரிமையை அரசியலமைப்பின் மூலம் தேவையின்றி கட்டுப்படுத்தும் Neutralitätsinitiative-க்கு – இல்லை.

நடுநிலைமை என்பது மௌனம் அல்ல.

நடுநிலைமை என்பது சர்வதேச சட்ட மீறலுக்கு முன்னால் கண்களை மூடுவது அல்ல.

நடுநிலைமை என்பது நமது கைகளைக் கட்டிக்கொள்வதும் அல்ல.

போரில் இணையாமல், சமாதானத்திற்காகச் செயல்பட்டு, சர்வதேச சட்டத்தை மதித்து, சுவிட்சர்லாந்தின் நலனுக்காக சுயமாக முடிவெடுக்கும் திறனே வலுவான சுவிஸ் நடுநிலைமை.

அதனால்தான் நான் Neutralitätsinitiative-க்கு NEIN சொல்கிறேன்.

சுதாகரன் கணபதிப்பிள்ளை

Sonntag, 16. Februar 2025

சுவிற்சர்லாந்தின் Solothurn மாகணசபைத்தேர்தலில் சோசலிச ஐனநாயககட்சி (SP) சர்பில் நான்கு தமிழர்கள்

சொலத்தூண் மாநிலத்தில் வருகின்ற 9. மார்ச் மாதம் மாகணசபைத்தேர்தல் நடைபெற உள்ளது.பின்வரும் உள்ளூர் ஆட்சி பிரதேசங்களில் 4 தமிழர்கள் போட்டி இடுகின்றனர். எமதுஇலக்கு ஒரு தமிழராவது கட்டாயம் அடுத்து அமைய இருக்கும் மாநில சபையில் இருக்க வேண்டும் என்பது.

Bucheggberg/Wasseramt -SP List 2

Arch, Biberist, Derendingen, Gerlafingen, Zuchwil, Deitingen, Subingen, Etzingen , Schnottwil Biezwil, Messen , unterramsen ,  Luterkofen-lchertswil ,Lüsslingen-Nennigkofen .Lutenbach ,ober gerlafingen ,Recherswil, Kriegstetten, oekingen, Horrwil, Hüniken, Drei Höfe, ,Etziken, Bolken

Olten/Gösgen - List  SP -6

Flulenbach ,Boningen , Gunzgen ,Kappel  , Hägendorf ,Rickenback , Hausenstein-lfenthal,Wangen bei Olten, Olten, Trimbach, Winznau, Starrkrichwill, Dulliken, Walterswil Däniken, Gretzenbach, Obergösgen, Niedergösgen, Schönenwerd, Eppenberg wöschanau, Wissen, Lostorf, Stüsslingen, Erlinsbach

Dorneck/Thierstein - List  SP -5

Rodersdorf, Metzerlen-Mariastein, Hofstetten-Flüh, Bättwil, Witterswil, Dornach, Gempen, Nuglar St Pantaleon, Hochwald, Büren, Seewen, Breitenbach

சுவிற்சர்லாந்து பிராஜா உரிமைபெற்ற அனைத்து தமிழர்களிற்கு வாக்களர் அட்டை வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தயவு செய்து உங்கள் வாக்குகளை பயன்படுத்தவும். Bucheggberg/Wasseramt பரிவில் போட்டி இடும் Gana Sutha List 2.09 வேட்பாளரிற்கு இரண்டு வாக்குகளை வழங்களாம். இரண்டாம் இலக்க பட்டியலில் ஒரு வேற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தில் இன்னும் ஒரு தடவை எழுதவும். அதே போல் Olten/Gösgen  பகுதியில் Sri Rasamanickam List 6:19 உம் Illadsika Sathiyaseelan List 6:20 போட்டி இடுகின்றனர். Dorneck/Thierstein பிரிவில் Shulojan Suntharalingam List-5.06  போட்டி இடுகின்றனர்.

இவர்களிற்கும் முறையே இரண்டு வாக்குகளை அளித்து வெற்றி வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கவும். ஒவ்வொரு உள்ளூராச்சி பிரிவில் சராசரி 500 தமிழ் வாக்குகள் இருப்பின் இரண்டு வாக்குகள் வழங்குவதால் 1000ஆக இரட்டிப்பாகும். 50000 அதிகமான தமிழர்கள் வாழும் இந்நாட்டில் இந்த சிறுபாண்மையினரின் பிரதிநிதித்துவம் அத்தியாவசியமானது, ஓவ்வோரு வாக்களரும் தமது தொழில்துறை நண்பர்கள் நண்பர்களிடமும் வாக்களிக்க ஊக்குவிப்பதனால் ஒரு தமிழ்பிரதநிதித்துவத்தினை பெற்று கொள்ள முடியும். வாக்களிப்பதில் சந்தேகம் இருப்பின் தயவு செய்துசிரமம் பாரதுவேட்பாளர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் சமூக வளைத்தளங்களில் வேட்பாளர்களை பற்றிய தகவல்களை பகிரச்செய்யுங்கள்.

உங்கள் வாக்கு வலிமையானதுஉங்கள் ஆதரவு முக்கியமானது!
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிநாம் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம்!

Sonntag, 13. Oktober 2024

புலத்தில் அலசும் "ஆய்வாளர்கள்" "புத்திஐீவிகள்" " செய்தியார்கள்", மந்தை சமுக உருவாக்கவும்- க.சுதாகரன்/13.10.2024

புலத்தில் பல ஆய்வாளர்கள் புத்திஜீவிகள் செய்தியார் என தமக்குதாமே பெய சூட்டிய பலர் புலத்து (Monopol) குத்தகை ஊடகங்களில் போலி, தீவிர தேசியவாத நஞ்சை விதைத்து வருகின்றனர். இந்த கும்பல் தமக்கு சாதகமாக இலங்கையில் தமிழ்மக்களிடம் செல்வாக்கு பெற்ற கடசிகளை தமது கட்டுப்பாட்டிற்குள் கெண்டுவருவதற்கு நிதி மூலமாகவும் பொய்பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றனர். தம்மால் கைப்பொம்மைகள் ஆக்கியவர்கள் மூலம் கடசிகளை கைபெற்ற முனைந்துள்ளனர். அதனை அந்த கட்சியில் உள்ள திறமைசாலிகளால் இனங்காணப்பட்டு காப்பற்றபட்டது. 

இதற்கு சான்றாக தமிழ் கட்சியின் தீர்மான தெரிவுகளின் போதும், தற்போதை பாராளுமன்ற தேர்தல்களிற்கான வேட்பாளர் தெரிவின் போதும் கண்கூடானது. இந்த கட்சிகளை கைப்பற்ற போராடின கைக்குலிகள் சிலர் தம்மை சங்கு சின்னத்தில் ஐக்கியமாக்கினர் மேலும் சிலர் தம்மை சுயேட்சை வேட்பாளர் ஆக்கினர். இந்த செயற்பாட்டின் முலம் தங்களின் கனவு பாராளுமன்ற கதிரை தவிர தமிழ்மக்களின் அரசியல் தீர்வ அல்ல என்பதனை அம்பலப்படுத்தி உள்ளனர். உண்மையாக தமிழ்மக்களின் தீர்வில் அக்கறை கொண்டவர்களாக இருப்பின் ஒரு கட்சியை பலப்படுத்தி அதன்முலம் தமிழ்மக்களின் பெரும்பாண்மையை பெற்றெடுக்க போராடி இருப்பார்கள் அல்லவா?


போலிகளிற்கு உந்து கொடுத்து அவர்களிற்கான ஆதரவு தளத்தினை புலத்து ஊதுகுழல் ஊடகங்கள். ஏற்படுத்தி கொடுக்கின்றனர். ஊடகங்களில் தம்மை ஆய்வார்கள், புத்திஐீவிகள்,செய்தியாளர்  எனக்கூறுபவர்கள் தாம் வாழும் நாடும் புலத்தில் எவ்வித இணைவாக்கம் (Integration)   அடையாத தரப்பாகவே பார்க்க முடிகின்றது. பல ஆண்டுகள் இந்த நாடுகளில் வாழ்ந்தாலும் அந்நாடுகளின் கட்சி சமூக சிவில் அமைப்புகளில் தம்மை ஈடுபடுத்தாதவர்களாகவே கணிக்க முடிகின்றது. அதன் வெளிப்பாடகவே இவர்களின் இலங்கை சம்பந்தபட்ட ஊடகபேட்டிகளில் மிகவும் மட்டமான அரசியல் பார்வைகளையும், புதிய மாற்றங்கள் பற்றிய எந்தவித ஞானமின்மையை  புலப்படுத்துகின்றனர். 

2024 இலங்கை பாராளுமன்ற தேர்தல் பற்றிய அலசல்களின் போது இந்த விண்ணர்களின் தரம் பற்றி அறியக்கூடியதாக இருந்தது. தமிழ்கட்சி ஒன்று பெண் இளையோர் வேட்பாளர்களை தேடிய விடயங்களை எள்ளி நகையாடினர். புலம்பெயர் தேசத்தில் தேர்தல்கள் நடைபெறும்போது வேட்பாளர்களை தேடும்படலம் நடைபெறுவது வழமை. கட்சி அரசியலில் நேரடியாக ஈடுபடுத்த முடியாத மன நிலையில் ஐரோப்பிய நாடுகிளில் உள்ள பல மக்கள் உள்ளனர். இதனால் வேட்பாளர் பட்டியலை தெரிவு செய்யும் போது அனைத்து கட்சிகளும் பாரிய சவால்களை சந்திக்கின்றனர். இந்த ஆய்வளர்கள் ஏன் இதனை அறிந்திருக்கவில்லை? இந்த நிலமையால் சுவிற்சர்லாந்தில் பல குடியேற்றவாதிகள் சுவிற்சர்லாந்து கட்சிகளில் அங்கத்துவம் பெற்று வேட்பாளராக கூடிய வாய்புக்கள் அதிகமாக உள்ளது. பல ஐரோப்பிய நாடுகளிலும் பல தமிழர்களும் ஏனைய குடியேற்றவாதிகளும் மக்களால் தெரிவு செய்யப்பட்டு அரசுகளில் ஓர் அங்கமாக உள்ளனர். 

மற்றும் கட்சி கூடடங்களில் தீர்மாணத்தினை நிறைவேற்றுவதற்கு கையை உயர்த்தி வாக்களிகுக்கும் நடமுறை இன்றும் ஐரோப்பிய கட்சிகளில் வழமையாக உள்ளது. ஒரு முறைதமிழ் அரசுக்கட்சியில் தீர்மாணம் நிறைவேற்றிய விடயம் சம்பந்தமாக இந்த ஆய்வாளர்களால் மயிர் பிழக்கும் விவாதங்கள் நடைபெற்றதை நாம் பலர் மறந்திருக்க மாட்டோம்.

இவ்வகை ஆய்வாளர்களை  கிணத்து தவளைகளும் கத்துகட்டிகள் என்றே வரையறை செ்யமுடியும் . இவர்கள் தாம் நினைக்கும் ஒரு விடயத்தினை நிறுவுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் குறிப்பிட்ட தரப்பினரால் கொண்டுவரப்பட்டுள்ள கையாட்களாகவும் ஏவலர்களாகவுமே பார்க்க முடிகின்றது.  


புலத்தில் பல சிறிய அரசியல், இலக்கிய, சஞ்சிகைகள் 80, 90 களில் ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு பட்ட தளங்களில் இருந்து வெளி வந்திருந்தது. மிக சிறுபாண்மையாக இருந்திருந்தாலும் ஓரு ஆரோக்கிய சமுகத்தின் ஆரம்பம் தென்பட்டது. புலத்து புலிகளது குத்தகை செயற்பாடுகள் ஆட்கொணட பொழுது பல சஞ்சிகைகள் காணாமல் ஆக்கபட்டன. இதனையும் மீறி ஒரு சில சஞ்சிகைகள் பத்திரிகைகள் ,இணைய பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆயத சாகச காதல் பல சுயாதின செயற்பாட்டை முடக்கின. இதன் புலம் பெயர் தமிழர் தாம் வாழும் நாட்டு சமுகத்துடன் இணைவாக்கம் (Integration) அடையாது தமக்குள்ளேயே ஓர் Parallel society 

The term “parallel society” describes the belief that “ethnic” or religious minorities develop their own infrastructures and separate themselves from a mainstream society that is considered to be homogenous.

உருவாக்கி கொண்டது. இதன் வெளிப்பாடகவே குறுகிய எண்ணம் கொண்ட இந்த ஆய்வாளராகது தோற்றமாக பார்க்க வேண்டி உள்ளது. புலத்தில் வாழும் எம்மவர்களில் எத்தனை பேர் இந்நாடுகளில் உள்ள சிவில் சமூக நிறுவனங்களில் அங்கத்துவத்தினை ஏற்படுத்தி பொதுவான மக்கள் நோக்கிற்காக இணைந்து இந்நாட்டு மக்களுடன் இணைந்து பயணிக்கின்றனர்?  இந்த Parallel society யினை முதலாம் தலைமுறையினரே தேற்றுவித்திருந்தனர். இருந்தாலும் துரதிஷ்ட வசமாக ஒரு சிறிய இரண்டாம் தலைமுறையிலும் தொடர்கின்றது.இது ஓர் ஆரோக்கிய சமுகத்திற்கு ஆபத்தானது.

I’m attracted to intelligence, not education. You could graduate from the best, most elite college, but if you’re clueless about the world and society, you don’t know anything

புலம்பெயர்மக்கள் இந்த Monopol ஊடகங்கள் மூலம் கிடைக்கும் தகவல்களையும் அலசல்களையும் சரியாக விமர்சனைப் பார்வையுடன் பகுத்தறிய கற்று கொள்ள வேண்டும். செய்தி ஊடகங்களில் தம்மை ஆய்வாளர் செய்தியாளர் என அடையாளப்படுத்துபவர்கள் தாம் வாழும் நாடுகளில் எப்படிசெயற்படுகின்றார்கள் என்பதை இனங்கண்டு கொள்வது அவசியம். மாக இந்த நஞ்சு களை அப்படியே உள்வாங்குவது ஓர் அறிவிலி ஆட்டு மந்தை சமுகத்தினைேயே தோற்றுவிக்கும்.


இலங்கை தமிழரசுக்கட்சியும் இரண்டுதோணியில்கால்வைத்ததலைவர்களும்! - மூ. சிவகுமாரன் / 13.10.2024

திர்வரும் 14 நவம்பர் இலங்கைத்தீவின் 17 வது நாடாளுமன்றத்திற்கான 225 மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெறவுள்ளது

தேசியமக்கள்சக்தி அநுரா அலை நாடாளுமன்றத்தில் அதிகப்படியான ஆசனங்களை கைப்பற்றுவார்கள் என்பது சந்தேகத்துக்கு இடமற்றது ஆனாலும் கடந்த நாடாளுமன்றத்தில் வெறும் 3 ஆசனங்களைமட்டுமே

பெற்றுக்கொண்ட மக்கள்சக்தி இம்முறை நாடாளுமன்றத்தில் தன் அசுரபல வளர்ச்சியை பெரும்பான்பை பலத்தை காட்டுமா என்ற வினாஎழுப்பும்அளவுக்கு அதன் மக்கள் ஈர்ப்பு அலை மோதுகிறது பெரும்பான்மைபலத்தை பெறுவதினூடாகத்தான் மக்கள் சக்தி அது விரும்பும் மாற்றத்தை கொண்டுவர முடியும்  அதேநேரம் இடது அநுராஅலையை தடுக்க பவ்வியமான பதுங்கலான பகட்டிலா முகங்களோடு பன்னாட்டு பின்னணயில் பாரம்பரிய வலது சஜித்அணி வெல்ல தன்தான தண்ட வியூகங்களை வகுப்பது வெட்ட வெளிச்சம்!

இத்தகைய சூழலில் எம் தமிழ் பரப்பின் தேர்தல் அரசியல் நிலைமைகள் என்ன குறிப்பாக  தமிழரசின் நிலை இதுகுறித்த என்அவதானமே இங்கே பதிவாகிறது செப்பரம்பர் ஜனதிபதிபதித்தேர்தல்வரை எம்மக்களை ஆட்கொண்ட தேசம் திரட்சி  மிரட்சி போன்ற அழகான வார்த்தைகளின் திரைவிலகி ஜனநாயகம் என்ற மக்கள் தேவை பெரும்பாலும் உணரப்படுகிறது சங்கோடு ஜனநாயக கூட்டணி தமிழரசில் விலகிய ஜனநாயக தமிழரசு  இன்னும் ஜனநாக முற்போக்கு கூட்டணிஎன ஜனநாயகம் எம்மக்களின் உதடுகளெல்லாம்இவ்வளவு உச்சரிக்கப்படுவது யுத்தத்திற்குப்பிந்திய தேர்தல்களில் இதுதான் முதல் முறை அந்தவகையில் மக்கள் சுதந்திரமாக

தம்வாக்குகளை அளிக்ககூடிய ஒருசூழல் கனிந்திருப்பதாகவே தெரிகிறது. இது ஆரோக்கியம் மற்றும் தமிழ்மொழி அமுலாக்க அமைச்சில் பணியாற்றிய இனப்பிரச்சனை அரச நிர்வாகப்பிரச்சனை போன்றவற்றில் பட்டறிவுள்ள முன்னாள் அரசதிகாரிகளும் இத்தேர்தலில் சுயாட்சையாக போட்டியிடுவது விரிந்த ஜனநாயக சூழலின் வீரியத்தை வெளிப்படுத்துகிறதென்று சொல்வது மிகையான கூற்றல்ல சென்ற தேர்தல்வரை எம்மக்களிடையே அதிக செல்வாக்கை செலுத்திய தமிழரசுக்கு இம்முறைத்தேர்தல் சவாலாகவே இருக்கப்போகின்றது என்பது திண்ணம். 

ஏனெனில் தீவில் எம்மக்களிடையே அது செல்லும் திசையை சொல்லும் முதல்தேர்தல் கட்சிக்குள் முட்டியமோதிய அணிகள் இணைந்தும் பிரிந்தும் தமிழரசாக ஜ. தமிழரசாக தேர்தலுக்கு முகம் கொடுக்க போகிறார்கள் என்பதால் இது முக்கியத்துவமுடையதாகவும் ஆகின்றது தமிழரசும் அதன் எதிர்காலமும்: இலங்கை தமிழர்களின் பாரம்பரியஜனநாயகத்தில் வளர்க்கப்பட்டதுதான் தமிழரசுக்கட்சி தந்தை செல்வா அண்ணன் அமிர்தலிங்கம் என்ற குடும்ப உறவுபாசம் கொட்டி எம்தந்தைதாய் ஆச்சி அப்புவால் போற்றிவளர்க்கப்பட்ட கட்சி தலைவர்பதவி இல்லாமலேயே தமிழ் மக்களின் ஏகோபித்த தலைவனாக தந்தைசெல்வா பிரகாசித்தார் தந்தைசெல்வாவும் தன்உடல் உழைப்பு சொத்து எல்லாம் கட்சிக்கென்றே அர்ப்பணித்து ஓர் ஜனநாயக தலைவராகவே வாழ்ந்தார் அதனால் அவர் இன்றுவரை ஈழத்தமிழர் தந்தையாகவே போற்றப்படுகிறார்!

ஆனாலும் ஒருகட்சியால்மட்டும் ஒருவரலாற்று சிக்கலான இனப்பிரச்சனையை தீர்க்கமுடியாதென்பதை அவர்தன் இறுதிவாழ்நாளில் நன்கு உணர்ந்துகொண்டார் சிங்களபேரினவாத த்தின் கொடுங்கோல்கண்டு கடவுள்தான் எம்மக்களைஇனிகாப்பாற்றவேண்டும் என்று தன்உள்ளக்குமுறலை வெளிப்படைய்கொட்டி எளிய மக்களின் மனங்களில்எல்லாம் ஒரு தலைவனாக மட்டுமன்றி ஓர் உன்னதமனிதனாகவும் உயர்ந்திருக்கிறார் தந்தை செல்வா இது வரலாறு!

பின்னர் தமிழர்விடுதலைக்கூட்டணியில் கரைந்துகொண்ட தமிழரசு அதன் செயலாளர்நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் கொலையோடு இருந்த இடம்தெரியாமல் எங்கோதொலைந்தது அதன்ஜனநாயகபண்புகளில் இருந்தும்! பிற்பாடு யுத்த போர்காலசூழலில் கூட்டமைப்பின் வீட்டுசின்னத்தோடு மாவைஅண்ணன் தலைவராக மறுபடி உயிர்த்தது. 

யுத்தத்திற்கு பிந்தி: யுத்தம் முடியும் இறுதிநாட்களின் நிலமைகள் குறித்து அறியமேற்கு ஐரோப்பிய பிரபல பத்திரிகைஒன்று அரசியல்அறிவியலாளர் கொழும்பு பாக்கியசோதி சரவணமுத்து அவர்களோடு நடாத்திய நீண்ட செவ்வியில் ஒரு கேள்வி: இனி  இலங்கைத்தமிழர் தலைமை எவ்வாறு அமையப்போகின்றது ?அதற்கு அவர்அளித்த பதில் இனி புதிய தமிழ்ஆளுமைகள்அரசியலுக்கு வர வாய்புக்கள் இருக்கின்றது என்றார்

தமிழரசில் சுமந்திரன்:

அந்தகாலகட்டத்தில்தான் கொழும்புவாழ் சட்டத்தரணி மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனும்தமிழரசுக்கட்சிக்குள் சம்பந்தன் ஐயாவால் அறிமுகம் செய்யப்பட்டார் தமிழ் சிங்கள மொழி சட்ட அறிவியல் புலமை யுத்தத்துக்கு பிந்திய சர்வதேச நாடுகளின் இன்றைய சட்டநியம புரிதல்களோடு கட்சிக்குள்பிரகாசிக்க தொடங்கினார் சுமந்திரன்!ஆனால் முப்பதுவருட யுத்தத்துள் மூச்சுவிடாமல் தவித்த ஜனநாயக சூழலிருந்து யுத்தம் முடிந்து மிரண்டு விழித்த ஜனநாய வெளிச்சம்!எமது தமிழ்சூழலில் கட்டமைக்கப்படும் பெரும்பான்மை கருத்தே ஜனநாயகமாகவும் ஏனையவை துரோகம் எனவும்அதுதன் யுத்தகால அகராதியை தூக்கிநிறுத்தியது! தேசம் மனித உரிமை என்பவையெல்லாவற்றையும் ஒற்றைப்பரிமாண வாய்ப்பாடாய் முப்பதுவருட யுத்தம் தின்றகாலம் கடந்தும்  இன்றும் ஒப்புவிக்கின்றது!

தமிழர்கூட்டமைப்பு:

எதிரிக்கு எதிரி நண்பன் எனக்குமூக்குபோனாலும் எதிரிக்குசகுனம் பிழைக்கவேண்டும் என்ற எம்தமிழ் பழையமொழிகளை அரசியல் கொள்கையாய் வரித்தது அன்றைய தமிழர்கூட்டமைப்பு ! யுத்தத்தை களத்தில் நின்றுநடாத்திய சிங்கள பேரினவாத இராணுவதளபதிக்கே  எம்மக்களை வாக்குபோட வைத்தது பிற்பாடு யுத்தத்தை நடாத்திய பாதுகாப்புமந்திரிக்கே  நல்லிணக்கம் என்று சொல்லி எம்மை நம்பசொல்லி மீண்டும் வாக்கு கேட்டார்கள் சந்தனம் பூச்சோடு இலங்கையின் முன்னாள் தமிழ்நீதி அரசரை எம் வடபுல முதலமைச்சராக்கினார்கள் இவைகள்தான் தமிழர்கூட்டமைப்புசெய்த தமிழ்தேசிய அரசியல்கள் யுத்தத்தால் அனைத்தும் இழந்த அபலைகளுக்கு அப்பாவி ஏழைமக்களுக்கு செய்தது என் பட்டியலிட

இந்த தலைமைகள்! தமிழ்தேசியம் வெல்லும்வரைமக்களுக்கான வாழ்வாதாரம் அபிவிருத்தி எதுவும்தொடவும்மாட்டோம் அண்டவும்மாட்டோம் என்றார்கள் சிங்களபேரினவாதம் தன்மனிதாபிமானத்தோடு மாகாணத்துக்கு கொடுத்த நிதிகளைக்கூட தொட்டால் தீட்டாக திருப்பிஅனுப்பினர் தேசியம்போற்றும் நிலத்துபுலத்து தலைவர்களுக்கோ அவர்கள் குடும்பம் உறவு ஏன் பரம்பரைசெல்வசெழிப்புக்குகுறைவேஇல்லாதபடி நிலம்புலம்குடிதோட்டம் ! மக்கள்பட்டினிவாழ்வை காணமறுத்து தேசிய அரசியல்குருடர்கள்ஆனார்கள் இந்ததலைவர்கள்! மக்களோ தம்தேவைகளுக்காக சுயமான அரசியல்சக்திகளுக்கு தம்வாக்குகளை வாரிவழங்க தொடங்க  கூட்டமைப்பு ஆணிவேரோடு ஆட்டம்கண்டது! இதில் யுத்தத்துக்கு பிந்திவந்த தமிழரசு சுமந்திரன் தமிழர் கூட்டமைப்பின் பேச்சாளர்மட்டுமல்ல தமிழரசின் மூச்சாளரும் என்ற உள்ளூர வெதும்பல்கள் வெடித்தெழத்தொடங்கின இத்தகைய சூழலில்தான் சென்றாண்டு முதுமைவாழ்வையெட்டும் மாவைஅண்ணாவின் தமிழரசு தலைவர் பதவிக்கு ஒரு தேர்தல் நடந்தது அப்படித்தான் வெளியே சொல்லவும்பட்டது ஆனால்பின்திரையில் நிலத்தில் புலத்திலுள்ள தேசிய பரப்பாளர்களின் பலத்தோடுதமிழரசில் சுமந்திரனை கழட்டி சிறிதரனை தலைவராக்கும் முயற்சிமேற்கொள்ளப்பட்டது புலத்திலுள்ள மீடியாக்கள்ஊத!

தமிழரசின் பெருமையையும் சிறிதரனின்  தேசியபரப்பையும் ஊதிஊதிக்காட்டினார்கள் அமெரிக்க அதிபர்தேர்தல்போல சிறிதரன்புகழ் பிரச்சாரம் புலத்தில் கொடிகட்டியது நிலத்தில் சந்தனப்பொட்டு நீதிஅரசர் சிறிதரன் நல்லதலைவர் எனசான்றிதழ் கொடுத்தார் ஆனால் பாவம் சிறிதரன் அந்தாள் நொந்துபோய் தமிழர்நாம் வெளிவிவகாரகொள்கைஎல்லாவற்றிலும் தோற்றுப்போனோம் என்று வெளிநாட்டில் நின்று அழுதது கைகெட்டியும் வாய்கெட்டாம்போனகதையா கட்சித்தலைவர்பதவியும்! புலத்து நிதிஊட்டோடு சிறிதரனைவைத்து கட்சியை கபளீகரம்செய்ய எடுத்த முயற்சி முடிவு என்னவோ நீதிமன்றத்தில் கட்சிஇப்போ! இதை தொடர்ந்து வந்த இலங்கைஅதிபர்தேர்தல் தமிழரசு சுமந்தரன்அணி தெளிவான முடிவு யாருக்கு ஆதரவு ஆனால் மாவைஅண்ணா சிறிதரன் சட்டத்தரணி தவராசா இவரகள்யாவரும் கட்சி முடிவுக்கு எதிராக பொதுவேட்பாளர் ஆதரவு இதில் தலைவர் மாவைஅண்ணா அதிபர் தேர்தல்முடியும்வரை அவருக்கே தெரியுமோ தெரியாது அவர் யாருக்கு ஆதரவு என்று  இப்போ கட்சியில் இருந்து கொளரவமாக ஓய்வுபெற்று  தன்கட்சியின் ஜனநாயக விழுமியத்துக்கு வலுச்சேர்த்திருக்கிறார் தேர்தலில் முதன்மை வேட்பாளராக சிறிதரன் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார் கடந்த காலங்களில் எல்லாம் எம் மக்கள் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை ஒன்றல்ல இரண்டல்ல கன்சாட் எடுத்துப்பார்த்தால் புரியும் எல்லாவற்றுக்கும் மேலாக கிளிநொச்சியில் அவர் ஆற்றிய உரை மிக மிக மிக்கியமானது!

ஜேவிதான்  வடக்கு கிழக்கை பிரித்தது இனக்கலவரத்தை நடாத்தியது இரவில் ஏறினால் எனக்குஎடுப்பார்கள் என்றுதன் அரசியல் புலமையையும் தன்ஆதரவாளர்களையும் புகழ்ந்தார் வடக்குகிழக்கை பிரித்தது

இலங்கை நீதித்துறை நீதிமன்றம் என்பதை மறந்தால் மறந்து பறவாயில்லை சிறிதரன் முன்னாள் எம்பி அந்த நீதியின்குடைக்குள்ளேதானே எம்பிபதவி அவருக்கு குளிராய் கிடைத்தது மீண்டும் ஆசைப்படுகிறார்!

ஆனால் இனக்கலவரத்தைநடாத்தியது ஜேஆரல்ல ஜேவிதான் என்று சொன்னார் ஒரு வரலாறு அப்பவே இவர் எம் ஈழத்தமிழ்தலைவரா என மக்கள் சிந்திக்கத்தொடங்கிவிட்டனர்! இதற்குபிற்பாடு அநுராவிடம் ஏன்போனார் எந்த நாடாளுமன்றத்துக்கு வேட்பாளராக போட்டியிட தேர்தலில் குத்தித்துள்ளார் என எம் தமிழ் மக்களே குழம்புகின்றனர் ஆனால் ஒன்று நிச்சயம் எம் மக்கள் இம்முறை தங்களுக்கான தலைவர்களை தாங்களே தேர்ந்தெடுக்க தயாராகிவிட்டார்கள் தமிழரசுக்கட்சிக்கும் கூடவே

இது ஜனநாயக தேர்தல் அது உலகளாவிய தன் தேர்தல் பண்பாட்டோடு கொண்டாடப்போகிறது பொறுத்திருந்து பார்ப்போமே மக்கள் தீர்ப்பைமகேசன் தீர்ப்பாய் ஏற்றிடும் ஜனநாயகத்தை போற்றும் மனத்திடத்தோடு!

Dienstag, 8. Oktober 2024

தமிழர்களின் கட்சி அரசியலும் தமிழ்மக்களின் துருப்பு சீட்டு பறிபோகும் ஆபத்தும் - 08.10.2024 / க. சுதாகரன்

லங்கையில் தமிழர்பகுதியிலும் தேர்தல் சூடுபடித்துள்ளதை யாவரும் அறிந்ததே. அதற்கு சாட்சியாக கட்சி தாவல்கள், விலகள்கள்,சின்னத்திற்கான அடிபிடிகள், போட்டியாளர்ளாக தெரிவுசெய்யப்படாதவர்களின் குமுறல்கள் என பல செய்திதாள்களையும் முகநுால்களையும் நிரப்பிவருகின்றது.  இவற்றை அவதானிக்கும் அல்லது நிதி வழங்கும் புலத்துதரப்பினரும் தமது மூலதனத்தினை காப்பாற்ற வாந்தி எடுக்கும் ஒற்றைபரிமாண ஊடகங்கள் தமது பங்குக்கு நச்சூட்டலையும் நடாத்திவருகின்றன. ஒரு சில ஊடகங்களும் தனிநபர்களும் ஊடகப்பண்போடு தமது ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர் என்பதனையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

நடைபெற இருக்கும் தேர்தலில் தமிழ்தரப்பினை பலவீனமாக்கும் பல சதிகள் நடைபெற்றுவருகின்றன. இதனை சதி என்று புரியாதும் பலர் உள்ளனர்.  இலங்கையில் உள்ள அதி தீவிர தேசியவாதிகளும் (ultra Nationalist) தேசியத்திற்கான விசிறிகளான (Fans) புலத்தில் உள்ள சில போலி தேசியவாதிகளும் உடந்தையாக உள்ளனர். இந்த சதியினை இலங்கையையும் தெற்காசிய பிராந்தியத்தினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இந்தியாவும்  ஒரு சிலபுலத்து முதலாளிகளும் இணைந்தே நடைமுறைப்படுத்திவருகின்றனர். 

NPP யினால் கொண்டு வரப்பட்ட இளையோர் பெண்கள் மற்றும் புத்திஐீவிகளின் படை எடுப்பு இலங்கையில் உள்ள அனைத்துதரப்பினருடமும் தாக்கம் செலுத்தி உள்ளது. இந்த அலை சிறுபாண்மை தரப்பினையும் விட்டுவைக்கவில்லை. அதால் பெண்களும் இளையோரும் தமிழ், இஸ்லாமிய, மலையக மக்களின் வேட்பாளர்கள் பட்டியலை நிரப்பி உள்ளது. 

NPP இனால் மூன்றில் இரண்டை பெற முடியவில்லை என்றால் ஏனைய வெற்றி பெற்ற கட்சிகளுடன் இணைந்தே ஆட்சியமைக்க முடியும். இது சிறுபாண்மையினரை பிரநிதிப்படுத்தும் கடசிகளிற்கு கிடைக்க இருக்கு வரப்பிரசாரம். அதன் மூலம் தமது அரசியல் உரிமை சட்டங்களை அமுல்படுத்துவதற்கு பெரிதும் உதவும். இதனால் தமிழ்மக்கள் சரியான அரசியலை நடாத்தும் கட்சிக்கு வாக்குளை வழங்கி தமது பிரதிநித்துவதினை தக்கவைக்க வேண்டும். அதற்கு தமிழ்மக்கள் யாதார்தமானதும் சாத்தியமானதும் படிப்படையாக உரிமைகளை பெற்றுகொள்ள தகுதி படைத்த கட்சியையும் தலைமையையும் இனங்காணல் வேண்டும். 

நடமுறையில் தற்போது சாத்தியமற்றதும் தற்போதைய அரசமுறமையை ஏற்று கொள்ள விரும்பாது தனியே பாராளுமன்ற கதிரைகளை சூடாக்க விரும்புவர்களை மக்கள் இனங்கண்டு அரியலில் இருந்து ஒதுக்க தாயாராக வேண்டும். சர்வதேசததிற்கு எடுத்துகாட்டவும் நாம் தேசிய இனம் என பறைசாற்றுவதற்கும் மட்டும் பாரளுமன்ற ஆசனங்களை வேண்டி வருபவர்களையும் தமிழ்மக்கள் இனம்கண்டு புறந்தள்ள வேண்டும்.

சிறுபாண்மைினர் தமது  பிரதிநிதித்துவத்தினை தக்கவைக்காது தவறவிடுமானால் தனது பேரம்பேசும் தகுதி எனும் துருப்பு சீட்டினை இழந்துவிடும் ஆபத்து உள்ளது. மீண்டும் உரிமைக்கான குரல்கள் அடுத்ததேர்தல்வரை காத்திருக்க நேரிடும். இக்கால இடைவெளியில் பல பாதக சாதக அம்சங்கள் நடைபெறலாம்.

சிறுபாண்மை கட்சிகள் தனிநபர் சேறு பூசல்களை நிறுத்தி தமது கொள்களை தீர்வு திட்டங்களை முன்வைத்து மக்களின் ஒப்புதல்களை பெற்றுகொள்ள முயற்சிக்க வேண்டும். புதிய அரசில்கலாச்சாரத்தினை கட்சிகளும் ஊடகங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும். 

ஒருவர்மீது சேறு பூசியும் அந்நபர் இன்னமும் எவ்வித ஊழல்களில் மாட்டாமல் இருக்கின்றார் எனில் குறித்த நபரின் கருத்துகளிலும் தனிப்பட்ட நேர்மை உள்ளதாக கருதவேண்டி உள்ளது. அனைத்து தரப்பும் ஒருவரை மட்டும் சுட்டி நிற்பது மற்றவர்களது ஆளுமை இயலாமை நேர்மையின்மை பற்றிய சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது.

ஒரு பாரிய சதி வலைகளில் இருந்து இருந்து மீள வேண்டியவர்களாக  இன்றைய இலங்கை வாழ் தமிழர்கள் உள்ளனர். இந்த வலையில் இருந்து புத்திசாதுரியமாக இந்த தேர்தல் வெற்றியை தமதாக்கி கொள்வதிலேயே தங்கி உள்ளது. மக்கள் மீண்டும் பொய்வாக்கு உறுதிகளையும் உணர்ச்சி அரசியலிற்கு (emotional politics) அடிமையாகள் ஆகாமல்  தம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும்.


Freitag, 27. September 2024

எமதுதீவின் புதியதிபரும் புலம்பெயர் ஊடகங்களும்… - மூ. சிவகுமாரன்/27.09.2024

லங்கைத்தீவின் அரசியல் அதிஉயர் அதிகாரபீடத்தை புரட்டிப்போட்ட ஒருசூறாவளி அதிபர் தேர்தல் நடந்துமுடிந்திருக்கிறது. சுதந்திர இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக தீவில்வாழும் பெரும்பான்மையான ஏழைமக்களின் வாழ்வுமேம்பாட்டை மட்டுமே அரசியல் சுலோகமாக கொண்டு  தேசியமக்கள்சக்திஎன்ற கட்சி அதிபர் பீடத்தை கைப்பற்றிஇருக்கிறது. இது தீவில் வாழும் ஏழைமக்களுக்கு  நம்பிக்கை கொடுக்கும் ஒரு வெற்றிதான் கொண்டாடப்படவேண்டிய வெற்றிதான். ஆனாலும் அன்றாட வாழ்வாதாரமே பெரும்திண்டாட்டமானஅந்த ஏழைமக்கள் தங்கள் மனங்களில்தான் அந்த கொண்டாட்டத்தை நிகழ்த்துகிறார்கள் ! புதிய அதிபர் பதவியேற்பும் மிகமிக எளிமையாகவே நடாத்திமுடிக்கப்பட்டது ஜேஆரிலிருந்து ரணில்வரை அநுராதபுர கோத்தா அதிபர் இராஜ்சிய பதவிஏற்பை கண்ட மக்கள் அருராவின் பதவி ஏற்புஎவ்வளவு எளிமை என்பதை உணர்வர்!

இரண்டுபுரட்சிகளைமூட்டி அரச அதிகார இயந்திரகொடூர பற்களால் வெறிகொண்டு கொன்றுதின்னப்பட்ட ஜேவிபி என்ற இயக்கத்தின் பல்லாயிரக்கணக்கான இளம் உயிர்களின் விடுதலைகனலை ஏந்தி ஒரு சோசலிச இயக்கத்தின் இளைஞர் அமைப்பின் தலைவராகி பிற்பாடு அந்த இயக்கத்தின்அரசியல்கட்சி தலைவராகி நாட்டின் எதிர்கட்சி தலைவராகி ஒரு முப்பது வருட அரசியல் போர் அநுபவங்களினூடாக அதிபராகி இருக்கிறார் அநுரா!

செயல் அதுவே சிறந்தசொல் என்பதை நிரூபிப்பதே தன் இலட்சியம் என்பதை அவர் மக்களுக்கு ஆற்றுகின்ற உரைகள் எல்லாவற்றிலும் இடித்துரைக்கிறார் தீவில் தெற்கில் ஒரு வார்த்தை கிழக்கில் இன்னொருவார்த்தை  தான்சார்ந்த சிங்கள மக்களுக்கு ஒருபேச்சு வடக்கு தமிழர்வாக்குப்பெற இன்னோர்பேச்சு

என்று அரசியல் வியாபார தலைவராகன்றி ஒன்றுபட்ட இலங்கைத்தீவுக்குமான இன மத பாகுபாடற்ற ஐனநாயகசமத்துவ ஆட்சியை கொண்டுவருவேன் குறிப்பாக ஏழைமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவேன் என்று நிதானமாக ஆணித்தரமாக உரைக்கும்  இலங்கை தீவின் முதல் அதிபர் இவர் !

முப்பதுவருடத்துக்கும்மேலான யுத்தத்தில் எல்லாம் இழந்து தேசம்விட்டுதப்பிஓடிக்கொண்டிருக்கும் கூட்டத்தின் பக்கம் எண்ணியே பார்க்க முடியாத எம் சொந்த உறவுகள் இந்த தலைவனை ஒருநம்பிக்கை நட்சத்திரமாக பார்ப்பதில் என்ன தவறு!

பண்டாரநாயக்கா சந்திரிகாவை நம்பி நல்லூரில் காப்புகூட வாங்கிய எங்கள் மக்கள்  ஏழைஅடிவயிற்று பசிபோக்குவேன் ஏழைப்பிள்ளைகளின் கல்வியை உறுதிசெய்வேன் என்ற அநுராவின் வார்த்தையை நம்பத்தானேசெய்வார்கள்?

ஆனால் எம்புலம்பெயர் ஊடகங்களும் பெரும்பாலான சர்வதேச ஊடகங்களும் புதியதிபரை புதிராகவே சித்தரிக்கிறார்கள் இன்னும் ஒருபடிமேலாக மார்க்ஸிட் சோசலிச கம்யூனிச தலைவர் இவரால் ஆட்சியை கொண்டுநடத்தமுடியாது இவரின் ஆட்சிஆயுள் அரைவருடமும் நீடிக்காது என்று மக்கள்மனங்களிலே எதிர்மறை எண்ணங்களை விழுந்தடித்து விதைக்க முனைவதேன்?

யுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்தில் லண்டனில் இருந்துவந்த ஒருமாத இதழுக்கு சிவதம்பிஅவர்கள் எம் தமிழ் ஊடகத்துறை குறித்த பேட்டியில் சிங்கள ஊடகத்துறை வளர்ந்தளவுக்கு தமிழ்ஊடகம் வளர்ச்சிஇல்லை என்ற பொருள்பட  குறிப்பிட்டார் அது யுத்தகாலம் யுத்தம்முடிந்து ஒரு பதினைந்துவருடம் கழிந்தும் பொதுசன ஊடகம் என்று சொல்லக்கூடியவைகள்கூட எம் இலங்கைத்தீவின் அரசியல் என்றாலே ஒரு சார்பாக உலகக்குருட்டுப்பார்வையோடு ஏனோசெயற்படுகிறார்கள்?இந்தபோக்கு எம்தீவின் தேர்தல்காலகட்டத்திலும் அநுராவின் வெற்றிக்குப் பிறகும் தொடர்வது எம்ஈழத்தமிழரின் அரசியல் சாபமோ என்று எண்ணத்தோன்றுகிறது.!

இந்த எண்ணப்பாட்டுத்தீக்கு எண்ணை விடுபவர்களாக எம் மக்களின் அரசியல்கட்சி தலைவர்களே இருக்கிறார்கள் அண்மையில் அப்புக்காத்துவாரிசு அரசியல்கட்சி கஜேந்திரன் அநுராவுக்கு  என்ன அருகதை இருக்கு என்று முழக்கமிடுகிறார்

தமிழரசுகட்சி ஜனநாயக தேர்தல் தலைவரோ அநுரா ஜேவிபி கட்சிதான் 83 இனக்கலவரத்தை நடாத்தியது என்று மிகமோசமான வரலாற்று பொய்யை புனிதநாள் பேச்சில் கட்டவிழ்க்கிறார்

இலங்கைதீவின் புவியியல் அமைப்பு அது இன்னும் எவ்வளவுகாலம் ஆயுள் உள்ளது என்று புவியியல் ஆய்வாளர்கள் அங்கலாய்க்கிறார்கள் மாலைதீவையும் ஒப்பிட்டு!

உலக மேலாதிக்கப்போட்டியில் முன்னணியில் ஓடும் சீனாவுக்கு ஆப்புவைக்க தாய்வான் யுத்தத்தைகொழுத்துவிடத்துடிக்கும் மேற்கு ஆதிக்க சக்திகளும் எம் ஆசியபிராந்தியமும்!

உலக சனத்தொகையில் முதன்மை்பெற்றதுமட்டுமல்ல வளர்ந்துவரும் சந்தைப்பொருளாதார போட்டியாளர்களிடையேயும் பலம்பொருந்தும் ஆதிக்கசக்தியாக கருதப்படும் இந்தியா எம் அண்டைநாடுமட்டுமல்ல பாலம்போட்டால் கொழும்பைவிட குறுகிய தூரத்தில் இருக்கும் எம் உறவுநாடு!

இலங்கையின் சனத்தொகையில் இரண்டாம் இடத்தில்இருந்த தமிழர்

மூன்றா நான்கா இடம் என்று தடுமாறும் அளவுக்கு ஈழத்தமிழ்இளைஞர் தப்பி ஓட வைக்கும் அரசியலே இதுவரை இலங்கைத்தீவில் இருந்துவந்த நிலையில் யுத்தத்தால் அனைத்தும்

இழந்தும் பதினைந்து வருடங்கள்கழிந்தும் முறையான எந்த புனர் மேம்பாடும் இன்றி தவிக்கும்எம் ஏழைசகோகதர மக்கள் வாழ்வு விடிவது எப்போ? ஒரு அரைநூற்றாண்டாய் அழிந்துபோன எம்தேச வளங்களை மீள்கட்டமைப்பு செய்வது எப்போ?அல்லது சர்வதேச அனுசரணையோடு வடக்கும் கிழக்கும் இணைந்த உள்ளக சுயாட்சி தீர்வு கிடைக்கும்வரை களத்திலும் புலத்திலும் திரண்டுபோராட புதுசக்திகள்தயாராகிறார்களா?

இந்த கேள்விகளை முன்னிறுத்தி ஆக்கபூர்வ அறிவுக்கண்களை திறக்க ஐனநாயகத்தின் ஒருமுக்கிய தூண் என்ற சமூக பொறுப்போடு  குறிப்பாக எம்புலம்பெயர் ஊடகங்கள் செயற்படுவார்களா என்று ஒரு ஈழத்தமிழனாக ஏங்குகிறேன்!

Montag, 23. September 2024

இலங்கை தமிழர்கள் தவறவிட்ட பல வாய்ப்புக்கள் பற்றியும் இன்றைய சூழல் பற்றிய ஓர் அலசல். -க.சுதாகரன் / 23.09.2024

இலங்கையில் தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளிற்காகவும் இனத்தின் இருப்பிற்காகவும் பல்வேறு முறையில் போராட்டத்தினை நடாத்திய சமூகம். அதுமட்டுமல்லது போராட்டங்கள் பல சரியான நோக்கி நகர்த்தபடாதினால்  வன்முறைகளால் மொளனிக்கபட்டுள்ளது. இவற்றிற்கு பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்தி உள்ளது.


1. நடைமுறைக்கு சாத்தியமற்ற உயர்ந்தபட்ச கோரிக்களை முன்வைப்பது

2. பிழமையான தலமைகள் போராட்டங்களை நடாத்துவது

3.பாராளுமன்ற கதிரைகளை கைப்பெற்றும்  நோக்காகத்திற்காக மக்களிடம் உணர்ச்சி கோரிக்களை முன்வைப்பது

4. படிப் படியாக சிறிய கோரிக்கைகளை முன்வைக்கும் அல்லது ஏற்கும் போராட்டங்களை நிராகரிப்பது

5. இலங்கை வாழ் ஏனைய தேசிய இனங்களின் போராட்டங்களிற்கு ஒத்துழைப்பு வழங்காது புறக்கணிப்பது

6. போராட்டங்கள் ஓரளவு சமரச நிலமைக்கு வரும்பொழுது ஏற்றுகொள்ள கூடிய விடயங்களை ஏற்க மறுப்பது

7.போராட்டங்களிற்கான நியாயத்தினை ஏனைய தேசிய இனங்களிற்கு புரிய வைக்காமையும் இலங்கை மக்களிற்கான பொது கோரிக்கைகளின் போராட்டங்களின் போது   அனைத்து சக்திகளையும் இணைக்க தவறுவது.

8.சிறிய சிவில் அமைப்புக்களின் பற்றாக்குறை

9. விடுதலை இயக்கங்ளிலும் அரசியல் கட்சிகளிற்குள் இந்திய உளவுகளும் புலம் பெயர் அமைப்புக்களின் தலையீடும்

10. புத்திஜீவிகள் என்ற போர்வையில் அதிதீவிர தேசியத்தினை மக்களிடம் விதைப்பது

11. ஏனை தேசிய இனங்களை எப்பவும் சந்தேகத்துடனும் இனவாத வெறுப்புனூடாக நோக்குவது. 

12. போராட்டங்களை ஒருகட்சியோ இயக்கமோ குத்தகைக்கு எடுக்கும் பண்பு. 

13. ஏனை தேசிய இனங்களுடன் தொடர்பற்ற நிலை, 

14. துரோகி அல்லது தேசியத்திற்கு ஆதரவு சக்தி என வகைபிரிப்பது, அதனை ஓர் சமூக நீதியாக உருவாக்குவது.

15. ஆட்சியில் அல்லது பொறுப்புக்களை ஏற்காது எதிர்கட்சி கதிரையில் இருந்து சகல அரச வசதிகளையும் அனுபவிபப்பது. 

மேற்குறிப்பிட்ட வாறு பல்வேறு காரணிகள் தமிழ் மக்களது உரிமைபோராட்டங்கள் வெற்றியை நோக்கி நகர்த்தாது முடக்கபட்டுள்ளது. மக்கள் உணர்ச்சி அரசியலிற்கும் இனவாத அரசியலை இனங்கண்டு புறம்தள்ள வேண்டும்.

இன்று ஜனாதிபதியான அனுர திசநாயக்கவின் தாய்க்கட்சியான ஓர் ஆயுத அமைப்பாக இருந்து அரச இயந்திரத்தின் கோர கரங்களால் ஒடுக்கபட்ட வரலாற்றினை இலங்கை வாழ்மக்கள் மறந்திருக் மாட்டார்கள். இன்று அவர்களின் மிதவாத அரசியலின் நீண்டகால உழைப்பின் பயனாக ஆட்சி அதிகாரம் இவர்களின் கைகளுக்குள் வந்துள்ளது. 

இதேபோல் புலிகள் கைகள் ஓங்கி இருந்த காலங்களில் நடைபெற்ற பேச்சு வார்த்தை காலங்களில் ஒப்பீட்டளவில் மிகசிறிய அளவினான அதிகாரபகிர்வு முன்மொழியப்பட்டிருந்து. கிடைத்தால் தமிழ்ஈழம் அல்லது வேறு  தீர்வுகள் வேண்டாம் என்ற அடிப்படையில் மற்றைய முன்மொழிவுகள் பல புலிகளால் நிராகரிக்கபட்டிருந்து. சிறிய தீர்வுகளை ஏற்று படிப்படியாக மிதவாத அரசியலில் கால் பதித்திருந்தால் மொளனிப்பும் இன அழிப்பும் நடைபெறாமல் தடுத்திருக்கலாம்.  மக்களிடம் தாம் தமிழ் ஈழத்தினை வலுயர்த்தி இருந்ததால்  தாம் ஒரு படி இறங்கிபோக இயலாது என்ற தரப்பும்., நிதிகளை வழங்கிய புலம்பெயர் அமைப்புககளின் அழுத்தமும். புலிகளை மாறுபட சிந்திக்க விடாமல் தடுத்திருக்லாம். அது மட்டுமல்லாது ஆயுதத்தினையே நம்பி வளர்ந்த இயக்கம் ஆயுத்தினை கீழே வைத்தவிட்டு முனனர் போன்று ஓர் கட்டுபாட்டிற்குள் உறுப்பினர்களை வைத்து கொள்ள முடியாது என தலமை எண்ணி இருக்கலாம். இவ்வகையான தெளிவற்ற முடிவுகளால் பல சந்தர்ப்பங்களை தமிழர் இழந்துள்ளனர்.

அதேபோன்ற தவறுகள் தமிழ் கட்சிகளிடமும் தொடருகின்றது. இன்றைய தேர்தலில் பல சிறுபாண்மை இன கட்சிகள் பல சஜித் பிரேமதாச வெல்லுவார் எனக் கணிப்பிட்டு அவரிற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்து இருந்தனர். இவர்களால் பெரும்பாண்மை மக்களின் மனோ நிலமையைபுரிந்து கொள்ள இயலாது போய்விட்டது. 

வெல்பவர்களுடன் ஐக்கியப்பட்டு பிரச்சாரம் செய்வது என்பது சாத்தியம் அற்றது. இன்று ஒரு சில புலம் பெயர்ந்தவர்கள் தமிழரசுகட்சி தோற்பவருக்கு ஆதரவாக ஏன் ஆதரவளித்தனர் என விமர்சிக்கின்றனர். இது ஓர் சுத்த முட்டால் தனமான விமர்சனம். எவ்வாறு வெற்றியாளரை முன்பே கணிப்பிடுவது?  இது ஓர் கணிப்பு மட்டுமே. ஆனால் தமிழரசு கட்சி வென்றால் தமது எதிர்கால ப்பை பற்றி ஆராயிந்து இருந்தனரா என்ற கேள்வி எழுகின்றது. 

மித வாத அரசியலில் நம்பிக்கை அற்றவர்கள் ஏன் பாராளுமன்ற கதிரைக்கான தேர்தலில் மட்டும் பங்கு பெறுகின்றனர். மக்களை ஏமாற்றி தமது நலனுக்காக மட்டுமே பாராளுமன்ற‍கதிரைகளை பயன்படுத்துகின்றனர். இதனை மக்கள் விரைவில் உணர்வார்கள். மேலும் சிலர், தமிழ் இனவாத கருத்துக்களை உணர்சியாக வாந்தி எடுத்து வாக்குகளாக மாற்றி பாரளுமன்ற கதிரைகளை ஆக்கிரமிக்கின்றனர். இவர்களை நம்பும் மக்களை ஏமாற்றுவது மட்டுமல்லாது பேரினவாத இனவாதிகளை உசுப்பேத்தி தமிழ்மக்கள் மீது வன்முறையைதூண்ட ஒத்தாசை புரிகின்றனர்.

மிக உண்மையாக சிறுபாண்மை மக்களின் உரிமைக்காக போராடும் கட்சிகள் பெரும்பாண்மை தேசிய இனங்களுடன் முதலில் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த முனைய வேண்டும். கொழும்பு வந்து பாராளுமன்றத்தில் தூள்பறக்க பேசிவிட்டு மீண்டும் தமிழ் பிரதேசத்தில் சென்று அடைகாக்காமல்.பரந்துபட்ட இலங்கையில் அனைத்து தரப்பினருடன் வேலை செய்யும் வேலை முறமைகளை உருவாக்கி கொள்ள வேண்டும. இல்லை தனிநாடுதான் உங்கள் தீரவாக இருந்தால் பாராளுமனற‍ரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு அதற்கான போராட்த்தில் குதிக்க வேண்டும்.

நிதிகளை வழங்கி உங்களை தலையாட்டி பொம்மைகளாக்கி தாம் குளிர்காய எண்ணும் சக்திகளை இனங்கண்டு நிராகரிக்க கற்றுகொள்ளல் வேண்டும்.

இன்றைய புதிய சூழலையாவது திட்டமிட்டு தமிழ் மககளின் அபிலாசைகளை வென்றெடுக்கும் திசை நோக்கிநகர்துங்கள். வழமைபொல் தனியே எதிர்கட்சி அரசியலில் மட்டும் நின்றுவிடாது இலங்கை மக்களின் சேகவர்களாக மாறுங்கள்.