Sonntag, 3. Oktober 2021

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று முடிந்த திருமணம் அனைவரிற்குமானது என்ற அபிப்பிரயா வாக்கெடுப்பும் «EHE FÜR ALLE» புலம் பெயர்சமுகத்தில் இடம்பெற்ற ஓரினபால் திருமணமும் ஓர் கட்டுடைப்பும்.

தமிழ் சமுகத்தில் பாலியல் ஒரு வெளிப்பையான பேசுபொருளாக இருக்கவில்லை. ஆனாலும் முப்பது நாற்பது வருடங்களாக  புலம்பெயர்ந்து ஐரோப்பிய அமெர்க்கா அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வரும் சமூங்களும் இன்னமும் எவ்விததயக்கமும் இன்றி குடும்ப உறுப்பினர்களிடையோ அல்லது நண்பர் உறவினர்களிடையே பேசுபொருளாக்குவற்க்கு தயங்கியே வருகின்றது. இது இவர்களின் மற்றைய சமூகங்களிற்கிடையான இணைவாக்கத்தின் அளவு கோளாக அமைகின்றது.

ஓரினபால் பால் உறவு என்பது மனித சமூகத்தில் புதிய விடமில்லை. மனித சமுகத்தில் பெரும்பாண்மையாக ஆண் பெண் உறவு முறை மனித சமுகத்தில் பெரும்பாண்மையாகவும் இனப்பெருக்கத்திற்கான மூலமாக இருந்ததினால் அங்கீகரிக்கபட்ட உறவுமுறையாக இருந்து வந்துள்ளது. ஆனாலும் ஓரினபாலியல் உறவு முறைகளும் சமகாலங்களில் சிறுபாண்மையாக நிலவியே வந்துள்ளது. இதற்கு பல மனித வாழ்வியல் ஆய்வுகள் சாான்று பகிர்கின்றன. தெற்காசி அரண்மனை வரலாறுகளும் இந்து கோயில் கோபுர சிற்பங்களும் இதற்கு ஆதாரம் தருகின்றது.


பாலியல் விடயங்கள் எவ்வித கூச்சமும் தயக்கமும்  இன்றி எல்லா சமூக உறவுகள் மத்தியில் பேசுபொருளாக மாறும் கலாச்சாரம் வலுப்படல் வேண்டும். கடந்த வாரத்தில் கனடாவில் இந்து முறைப்படி நடைபெற் ஓரினபால் திருமணம் ஓர் புலம் பெயர் சமுகத்தில் ஓர் கட்டுடைப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் இவ்விடயம் பற்றி பலபேசவும் கருத்து கூறமறுத்ததும் ஓர் ஆரேக்கியமான விடயமாக அமையவில்லை. இவ்வகை புதிய அல்லது சிறுபாண்மை உறுவு முறைக்குள் எமது இரண்டாவது தலைமுமறைகள் சிலர் அங்கீகாரத்துடன் கூடிய ஓர் உறவுக்கு தயாராகலாம். இதனை அநாககரிகமாக கருதும் பெரும்பாண்மை சமுகம் எவ்வாறு இவ்விடயங்களை கையளப்போகின்றது என்ற கேள்விகள் மேலேங்குகின்றன.

இவ்வகையில் ஒரின உறவுமுறையின அங்கீகரிக்கும் மனேபாங்கிற்கான போராட்டம் தனியே தமிழ் சமூகத்திற்கானது மட்டுமல்ல வளர்ந்து வந்த சமூகங்கிற்கிடையிலேயே நடைபெறும் உட்போராட்டமாகும். இவ்விடயங்களை சரியான முறையில் கையாளத்தவறியதின்விளைவாக ஐரோப்பிய சமூகத்திலே யே பல தற்கொலைகள் கொலைகள் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டில்  ஓர் பன்மவயதடைந்த இளைஞனை ஒரின பாலியல் உறவுமுறையை ஏற்றுகொள்ளாத தந்தை தனதுமகனை கொடூரமாக தாக்கிய சம்பவங்களும் நடைபெற்றிருந்து.

ஒரினபாலியலுடன் வாழும் உறவுகள் பெரும்பாண்மைசமூகத்தினால் பல வன்முைகளை அனைத்து உலகநாடுகிலும் சந்தித்து வந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் இச்சமூகம் அமைப்புவடிவம் பெற்றது. தமது உறவுமுறையின் அங்கீகாரததிற்கான போரட்டங்களை தெருவுக்கு கொண்டுவந்து தமக்கு ஆதரவு சக்தியிை ஒன்றுதிரட்டி பலம்பெற்றனர். அவ்வகையல் சுவிற்சர்லாந்திலும் பெண் பெண் பாலர் உறவு சமுகத்தினான அமைப்பு (LOS) ஆண் ஆண் (PIN CROSS) பாலர் அமைப்பு (PIN CROSS)..திருநம்பி திருநங்கையர் அமைப்புக்கள் (TGNS) ஒருங்கினைந்து தமது அங்கீகரிப்பிற்கான பல போராட்டங்களை நடாத்தி வந்துள்ளன.

பல ஐரோப்பிய நாடுகள் திருமணம் தனியே ஆண் பெண்களிற்கானதல் ஓரின பாலினரு்கும் உரித்தனது எனும் சட்ட அங்கீகாரத்தினை பல நாடுகள் ஏற்கனவே வளங்கி உள்ளது. சுவிற்சர்லாந்தில் செப்டம்பர்

2021 இல் நடைபெற்ற அனைவருக்குமான திருமணம் என்ற அபிப்பிராய வாக்கெடுப்பு 64.1வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. இச்சட்ட மூலத்தினை சட்டமூலமாக்கிய  17வது  ஐரோப்பிய நாடாக சுவிற்சர்லாந்து அமைகின்றது.

இணைந்து வாழும் சட்டமூலததிற்கும் திருமணசட்ட மூலத்திற்கும் இடைடயில் பினவரும் வேறுபாடுகள் உள்ளன. 

இணைந்து வாழும் சட்மூலத்தில் தனியே தான் இணைந்து வாழும் தம்பதி/தம்பதரின் குழந்தையை மட்டுமே தத்தெடக்கமுடியும்.திருமண ஒப்பந்தத்தில் மூலமாக எந்தகுழந்தையையும் தத்தெடுக்க முடியும்

பெண் பெண் உறவு தம்பதிகள் விந்துதாணத்தின் மூலம் விந்தினை பெற்றுகருத்தரிக்கும் உரிமையை வழங்குகின்றது

இவ்வகையில் கருத்தரிக்கபட்ட பிள்ளைகளிற்கு விந்துதானம் செய்த தந்தையை அறிந்துகொள்ள விரும்பினால் 18 வயதிற்குபின்னர் அந்த குழந்தை பெற்று கொள்ளலாம்.

 திருமணம் அனைவரிற்குமாது என பலர் ஆதரித்திருந்தாலும் இவ்வகைில் தத்தெடுக்க போகும் பி்ளைகளதும் விந்து தாணம் மூலம் பெறப்பட்ட பிள்ளைகள் சமூகத்தில் எதிர் நோக்கப்போகும் நெருக்கடிகள் பற்றியே பெரிதும் விவாதிக்கபட்டது. இவ்விடயங்களை கடந்து செல்ல வேண்டுமானால் பல கருத்தாடலுடன் கூடிய சமுகசிந்தனைகளில் மாற்றம் ஏற்படல்வேண்டும்.

சுவிற்சர்லாந்தில் கட்டாய திருமணங்கள் தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்லகையி எவ்வித ஓரின பாலியல் உறவு முறையிலான திருமணங்கள் அங்கீகரிக்கபட்டதினால் புலம்பெயர் தமிழ்சமூகத்தில் இவ்வகையான திருமணங்கள் எதிர்காலங்களில் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. இவற்று எவ்வாறு வன்மறை அற்று சுமூகமாக இது ஒரு தனிநபர்களின் விருப்பத்தடன் கூடிய முடிவு என்ற மனநிலைக்கு எவ்வாறு எம்மை மாற்றி கொள்ள போகின்றோம்?. புலத்தில் வாழ் சமூகம் இன்னமும் திருமண உறவுகளில் சாதி என்ற விடயத்தில் இருந்து இன்னமும் விடுபெறவில்லை. ஆகவே புதிய சாவால்களை எவ்வாறு எதிர்கொள்ள போகின்றது?

கத்தோலிக்க கடும்போக்களர்கிடம் இவ்விடயம் நீண்டகாலம் ஏற்று கொள்ள படாத விடயமாக இருந்த போதும் பாப்பரசர் பரிான்சிஸ்குஸ் அவர்களும் கடவுளின் குழந்தைகளும் எமது குடும்பத்தில் ஒருவர்கள் எனறு ஏற்றுகெகாண்ட போது எதிர்ப்பு அலைகளின் ஆக்ரோசம் தணிந்தது. அவ்வகையில் ஒவ்வொரு சமுகத்தின் திறவுகோள் சக்திகளலே சமூக கருததுக்களில் மாற்று சிந்தனையை பெரும்பாண்மை கருத்தாக்க முடியம்.