Montag, 22. Januar 2024

தமிழ் அரசு கட்சியின் தேர்தலும் விசிறி தேசியவாதமும் (Fans Nationalism)

G. Suthakaran / 23.01.2024

தமிழ் அரசுக்கட்சி தனது தலைவரிற்கான தெரிவினை தேர்தல் மூலமாக நடாத்தியது பாராட்டதக்கது. இது ஓர் முனமாதிரியான செயல். மற்றும் இலங்கை இந்திய அரசியல் கட்சிகளிற்கும் முன்மாதிரியாக அமைந்தள்ளது என்பதனை மறுக்கமுடியாது.

ஆனால் தமது கட்சி சக வேட்பாளர்கள் மீது அதே கட்சியை சேர்ந்த அங்கத்தவர்களும் வேட்பாளர்களும் சுமந்திரன் மீது ஆதாரமற்ற குற்றசாட்டுக்ளை அள்ளி வீசியது அருவருக்கத்தக்தும் ஏற்றுக்கொள்ளமுடியாத செயற்பாடுகளாக அமைந்திருந்தது. ஆனாலும் சுமந்திரன் தரப்பிலிருந்து தன்னுடன் இருந்த சக வேட்பாளர்களிற்கு எதிராக எந்த ஒரு மலிவான பிரச்சாரங்கள் இடம்பெறவில்லை. தேர்தல் முடிவுகளை மதித்து வெற்றி பெற்ற வேட்பாளரை உட்சாகப்படுத்தி தனது தோல்வியை கெளரவமாக ஏற்றுக்கொண்டது அவரது தலைமைத்துவ பண்பின் சிறப்பினை எடுத்துரைக்கின்றது.


புலத்தில் உள்ள தமிழ்தேசியம் என்ற போர்வையில் தமது விசிறி தமிழ் தேசியவாதிகள் (Fans Nationalism) சுமந்திரனை தமிழ் தேசியத்திற்கு எதிரானவர் சித்தரித்து இருந்தனர். தமது வித்தைகளிற்கும் தாம்போடும் தாளத்திற்கு தலை அசைப்பவராக சிறிதரன் இருப்பார் என்பதனை புலத்து விசிறிகள் கணிப்பிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் வாக்களிற்கும் தகுதிபெற்ற தமிழ் அரசுக்கட்சியுடன் தமது விருப்பு வேட்பாளரை தெரிவு செய்வதற்கான அளுத்தங்களை கொடுத்திருந்தனர். இச்செயற்பாடுகளை பல்வேறுபட்ட சமூகவலைத்தளங்களில் பார்க்கூடியதாக இருந்தது.

ஒரு ஆளுமையான ஒருவரை தம்மால் நிர்வாகிக்க முடியாது என்பதனை புலத்து விசிறிகளும் மற்றும் உணர்ச்சி பேச்சுக்களிற்கு காலம் காலமாக அடிமையாக இருந்த இலங்கை வாழ் தமிழர்களும் நன்கு அறிந்து இருந்தனர். இவர்களிற்கு இரத்தபொட்டு வேண்டி நிற்கும் தலையாட்டி பொம்மை தேவைப்பட்டது. இதற்கு நன்கு பொருத்தமானவர் சிறீதரன். இவ்வகையாக பல பொம்மைகள் மற்றைய தமிழ் கட்சியிலும் உள்ளனர். இவ்வகையில் உதாரணபுத்திரராக உள்ளவர்கள் ஐயா விக்கினேஸ்வரன், கயேந்திரன், சிவாஜிலிங்கம்......போன்றோர் உள்ளனர்.

தமிழ் சமுகமூம் தலைமைகளும் பல தடவைகள் தமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை தாம் நம்பும் மற்றும் தமக்கே உரித்தான விசிறி தேசியத்தினால் (Fans Nationalism) பயன்படுத்தாது விட்டு்ளனர்.

தமிழ் அரசுகட்சி வருகின்ற தேர்தலில் மீண்டும் தமக்கு இரத்த பொட்டினையையும் வாக்குகளை தமதுபக்கம் குவிப்பதற்கு தகுதியான தலைவரையே தெரிவு செய்துள்ளனர். இந்த தலைமைக்கு சுமந்திரனை தெரிவு செய்து இருந்தால் மற்றைய தமிழ்கட்சிகளின் வாக்குவங்கி தானாகவே நிரம்பி இருக்கும். அதுமட்டுமல்லாது தமிழரசுகட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பல விழுக்காடுகளை காணவேண்டி நிலை ஏற்பட்டிருக்கும். வரப்போகின்ற நெருக்கடியில் இருந்து தமிழ் அரசு கட்சி தன்னை பாதுகாத்து கொண்டதாகவும் பார்க்க வேண்டி உள்ளது. மேலும் வருகின்ற தேர்தலில் சுமந்திரன் வெல்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாகவும் எதிர்வு கூறலாம்.

வாய்வீச்சு வீரர்களிற்கு வழங்கப்பட்ட ஓர் வாய்பாகவும் பார்க்கலாம். அல்லாது விடில் இது அழகான கனவாக மட்டும் இருந்துவிடும். வசிறிகளின் கனவு நனவாகி உள்ளது. இனி எந்த மேடை சரி இல்லை என்று கூறப்போகின்றனர்? ஆனால் இவர்களிற்கு ஓர் சிறீதரனையும் தேசியத்திற்கு எதிரானவர் என முத்திரை குத்தி தப்பிப்பதற்கான பென்னாண வாய்ப்பு மட்டும் எஞ்சி உள்ளது.

இலங்கையில் எப்போது  தமிழ்தரப்பபில் அதிதீவிர தேியவாதிகள் ஆளுமை பெறுகினறன்றதோ, அது சிங்கள பேரின தேசியவாதிகிற்கு பால்சோறு கிடைக்கின்ற மாதிரியான சம்பவங்களாகவே வரலாற்று ரீதியில் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தல் சிங்கள தேசியத்தினை இன்னும் பல ஆண்டுகள் வலுவூட்டவே செய்யும். இதனையே புலத்து விசிறிகளும் யாகம் செய்து காத்துள்ளனர்.

ஏன் புலத்தில் உள்ளவர்கள் நாட்டில் வாழ்பவர்களை விட ஒருபடி மேல் தம்மை கலாச்சார, தேசிய காவளராக அடையாளப்படுத்துகின்றனர்?

இது புலம் பெயர்ந்து வாழும் பல சமூகங்களிற்கு உரிய பொது பண்பாக உள்ளது. குறிப்பிட்ட கலாச்சாரத்தில் வாழ்ந்த மனிதன் பிறிதொரு கலச்சார சமூகத்துடன் வாழும் போது தனக்காண அடையாளம் இழப்பதாக உணர்கின்றான். இதனாலேயே தமது சொந்த நாட்டில் வாழ்பவர்களை விட இறுக்கமான கலாச்சார காவலர்களாகவும் தேசியவாதிகளாகவும் வாழ முனைகின்றனர். அத்துடன் இவர்கள் நின்றுகொள்ளாமல் தமது சொந்தநாட்டின் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றனர்.

புலம்பெயர் தமிழர்கள் பலர் இன்னமும் தனி நாட்டு கோரிக்கையில் உறுதியாக உள்ளனர். இவர்கள் தமது சொந்த நாட்டிற்கு போய் வாழப்போவதில்லை. அங்கு வாழும் மக்கள் தமது அரசியலை தீரமாணிக்கட்டும் என விட்டுவிடும் மனோபவமும் அற்றவர்களாகவே உள்ளனர். இதனால் இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைகளிற்கு முட்டுகட்டையாக சிங்கள தேசியம் உள்ளதோ அதேபோன்று புலத்தில் உள்ள விசிறி தேசியமும் ( Fans Nationalism) விடாப்பிடியாக இருக்கப்போகின்றது. இது ஓர் கசப்பான தொடர் வரலாறு.

நெல்சன் மண்டலா போன்ற ஓர் தமிழ் தலமை எப்பெழுது உருவாகும்?

Samstag, 20. Januar 2024

தமிழ் தேசியமும் தலைமத்துவ அவலங்களும்

தேசியம் பற்றிய புரிதல் அற்று இலங்கை தமிழர் அரசியல்வாதிகள் பலர்  இருப்பதை பார்க்கும் பொழுது கவலை அளிக்கின்றது. முதலில் தேசியம்பற்றி பேசுபவர்கள் மற்றைய தேசிய இனங்களை ஏற்றுக்கொள்ளவும் அங்கீகரிக்கவும் பக்குவப்படல் வேண்டும். தனியே தனது இனமே பல சிறப்பு அம்சங்களை கொண்டதாக தாமே நினைத்து பெருமை கொள்வது முட்டாள் தனமாது. தேசியம் கற்பிதமானதும் காலத்துக்கு ஏற்ப மாறுபாடுகளை கொண்டது என்பதனை மார்க்சிலிருந்து பல அரசியல் புத்தியீவிகள் விவாதித்து வந்துள்ளனர். இலங்கைத்தமிழரிடம் விடுதலைப்புலிகளும் தமிழ் மிதவாத கட்சிகளும் இந்தியாவில் சீமான் போன்ற அரசியல்வாதிகளும் தாம் சார்ந்த இலக்குகளை அடைவதற்கும் தேசியத்தினை ஆயுதமாக பயன்படுத்தி மக்களை அணிதிரட்ட பயன்படுத்த பட்டுள்ளது. இதனையே சிங்களத்தேசியமும் செய்கின்றது.


இன்று புலத்தில் தமிழர்கள் இடம் விடுதலைப்புலிகளால் விதைக்கபட்ட தமிழ்தேசியம் அவர்களின் இலக்கை நோக்கி மக்களை அணிதிரட்டவும் நிதிசேகரிக்கவும் நன்கு பயன்பட்டது. விடுதலைப்பபுலிகள் தளத்தில் இல்லாதபோதும் பலர் புரளிகளை பரப்பி விடுதலைப்புலிகளின் தேசியத்தினை உயிர்பித்து பணம்பறிப்பதில் பல பிரிவுகள் புலத்தில் உலாவருகின்றனர்.


இலங்கையில் உள்ள மிதவாத தமிழ்கடசியின் தலைவருக்கான தேர்தலில் மீண்டும் ஓர் தமிழ்தேசியம் பேசுபொருளாக எழுந்துள்ளது. தமிழ் அரசுகட்சி மூன்று வேடபாளர்களை கட்சித்தலைவர் தேர்வில் நிறுத்தி உள்ளனர். இந்த வேட்பாளர்களில் இருவர் சைவசமயத்தவரகள். ஒருவர் கிறுஸ்துவ மதத்தினை சார்ந்தவர். இப்பொழுது சில தமிழ் தேசியம் பேசும் அறப்படித்ததுகள் தாம் ஆதரிக்கும் சைவசமய வேட்பாளரிற்கு ஆதரவாக தமிழ் தேசியம் வரையறுக்கபடுகின்றனர்.


தலைமைத்துவம் என்பது இலகுவானதல்ல. வழிநடத்தல்களிற்காண பண்பும் அனைத்து விவாதங்களயும் பல்வேறுபட்ட விடயங்களை கூர்ந்து செவி சாய்க்கும் பண்புகளகொண்ட ஒருவராக இருக்கவேண்டும்.


இலங்கை இந்திய நாடுகளில் தலைமைத்துவம்பற்றிய விவாதங்கள் குறைவாகவே உள்ளது. இராணுவம்போல் மறுபேச்சு அற்று பின்தொடர்வது மட்டுமே தலைமை என்ற பழமைவாத சிந்தனை முறையே உள்ளது.


ஓர் சமூகம் எப்பொழுது ஆராக்கியமான கருத்துபரிமாற்றங்களையும் புதிய கருத்துக்களையும் மாற்றங்களையும் ஏற்க மறுக்கினறாதோ அந்த சமூகம் இந்த புதிய புவியியல் மாற்ற அரசியலில் இரையாகிவிடும் வாய்ப்பே அதிகமாக உள்ளது.


முதலில் இலங்கையில் வாழும் தமிழர்களும் புலத்தில் வாழும் தமிழர்களும் நடந்துமுடிந்த ஆயுதபோராட்டம் ,மற்றும் அரசியல் நகர்வுகளில் நடைபெற்ற தவறுகள் சரிகள் பற்றி பக்க சார்பற்ற விமர்சனங்களிற்கு தயாராக வேண்டும். அதற்கான அரசியல் புவியியல் சூழல்பற்றிய அறிவை வளர்த்து கொள்ளல் வெண்டும்.மாறாகா நாம் பிறப்பிலையே அறிவுயீவிகள் உலகத்தினையே ஆணடவர்கள் என்ற மமதையில் இருந்தால் இலங்கைத்தமிழர்கள் காணாமல் ஆட்கப்படுவர் என்பது நிட்சயமானதாக மாறிவிடும்.


அதுமட்டுமல்லாது உணர்ச்சிகளிற்கும் தம்பட்ங்களிற்கும் அடிமையாகாது கசப்பாண உண்மைகளை அறிந்துகொள்வதற்கும் ஏற்றுகொள்வதற்கு தயார் ஆகவேண்டும்.