Samstag, 18. März 2017

சுவிற்சர்லாந்தல் ஓர் மாநிலமான சொலத்தூணில் நடைபெற்று முடிந்த தேர்தலும் வேட்பாளாராகிய நான் பெற்ற அனுபவங்களும்.


கடந்த 12 ம் திகதி சொலத்தூண் மாநிலத்திற்கான தேர்தல் நடந்து முடிந்தது. சொலத்தூண் மாநிலத்தில் உள்ள 10 பிரதேசங்கள் 5 தொகுதிகளாக்க பட்டு 5 தொகுதிலிலும் தொகுதிவாரியாக வேட்பாளர்கள் நிறுத்தபட்டிருந்தனர். இம் முறை மூன்று தொகுதிகளில் 4 தமிழ் வேட்பாளர்கள் சோசலிச ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்டிருந்தனர். ஓரு தமிழ் வேட்பாளாகளும் வெற்றிபெறவில்லை. இது ஒன்றும் ஆச்சரியப்படக்குடிய விடயமில்லை. சொலத்தூண் மாநிலம் ஓர் வலதுசாரி அரசியலை கொண்ட ஓர் மாநிலமாகவே பல காலமாக இருந்து வந்துள்ளது. இம் முறை சொசலிச ஜனநாயக கட்சி மாநிலத்தில் இரண்டாவது பலம் பொருந்திய கட்சியாக மாற்றம் பெற்றுள்ளது. இது சோசலிச ஜனநாயக கட்சிக்கு கிடைக்கபெற்ற மாபெரும் வெற்றியாகும்.

மாநில பாராளுமன்றில் 100 ஆசனங்களிற்காக நடைபெற்ற தேர்தலில் வௌ;வேறு கட்சிகளில் இருந்து 505 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இவர்களில் 364 ஆண்களும் 141 பெண்களும் போட்டியிட்டிருந்தனர். கடந்த 4 வருடங்களிற்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் பெண் வேட்பாளர்கள் 29.8 விகிதமாக  அமைந்திருந்தது. இவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் பெண்வேட்பாளர்கள் (27.9) 2 விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

சோலிச ஜனநாயக கட்சி 2013 ம் ஆண்டு நடைபெற்ற மாநில அவை தேர்தலில் 19 இடங்களை மட்டுமே கைப்பற்றி இருந்தது. இம் முறை 4 இடங்களை மேலதிகமாக பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. வலது சாரிகட்சிகளான சுவிற்சர்லாந்து மக்கள் கட்சி 1 இடத்தினையும் கத்தோலிக்க மக்கள்கட்சி 2 ஆசனங்களையும் பசுமை லிபரல் கட்சி 1 இடத்தினை இழந்துள்ளனர். தேர்தலில் 35.35 விகிதமான மக்களே கலந்துகொண்டுள்ளனர் என்பது ஓர் வருத்தக்க நிகழ்வு.
தேர்தலில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களின் வாக்கு விபரங்கள்.

இராசமாணிக்கம் சிறீ (Olten-Gösgen)
பெற்ற மொத்த வாக்குகள் 2646
விருப்பு வாக்குகள் 135
SP சொசலிச ஜனநாயககட்சிக்கு கிடைக்கபெற்ற மொத்த ஆசனம் 7
கட்சிக்கு கிடைத்த மொத்த வாக்குகள்: 98953
பிரதேசத்திற்கான மொத்த ஆசனங்கள்: 29


சித்தம்பரம் தனுஜா (Olten-Gösgen)

பெற்ற மொத்த மொத்த வாக்குகள் 630
விருப்பு வாக்குகள் 236
JUSO இளையோர் சொசலிச ஜனநாயககட்சிக்கு கிடைக்கபெற்ற மொத்த ஆசனம் 1
கட்சிக்கு கிடைத்த மொத்த வாக்குகள்: 22493
பிரதேசத்திற்கான மொத்த ஆசனங்கள்: 29



சுந்தரலிங்கம் சுலோஜன் (Dorneck-Thierstein)
பெற்ற மொத்த வாக்குகள் 1384
விருப்பு வாக்குகள் 71
JUSO
சொசலிச ஜனநாயககட்சிக்கு கிடைக்கபெற்ற மொத்த ஆசனம் 3
கட்சிக்கு கிடைத்த மொத்த வாக்குகள்: 18402
பிரதேசத்திற்கான மொத்த ஆசனங்கள்: 13



கணபதிப்பிள்ளை சுதாகரன் (Bucheggb.-Wasseramt)
எடுக்கபட்ட மொத்த வாக்குகள் 2629
விருப்பு வாக்குகள் 350
சொசலிச ஜனநாயககட்சிக்கு கிடைக்கபெற்ற மொத்த ஆசனம் 6
கட்சிக்கு கிடைத்த மொத்த வாக்குகள்: 69333
பிரதேசத்திற்கான மொத்த ஆசனங்கள்: 22



தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது சொந்த நிதியின் அடிப்படையில் தத்தமது தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொண்டிருந்தனர். சோசலிச ஜனநாயக கட்சி வேட்பாளர்களிடமே தத்தமது தேர்தல் பிரச்சாரத்தினை ஓப்படைத்திருந்தது. எந்த வித நிதிப்பங்களிப்பினையோ செலவுகளையோ கட்சி பொறுப்பெடுக்கவில்லை.
நான் இத்தேர்தலில் வெல்வதற்கான சந்தர்பம் குறைவு என்பதனை முன் கூட்டியே கணிப்பிட்டிருந்தேன். என்னால் வழங்கப்பட்ட செவ்விகளிலும் இதனை பதிவு செய்திருந்தேன். தனியே முகநூல்கள் முலமாகவும் டிவிட்டர் முலமாகவும் இணையத்தள மூலமாகவே எனது அதிகமான தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொண்டிருந்தேன.;
கட்சியால் ஏற்பாடுசெய்து கொடுக்காட்ட தொiபேசி பிரச்சாரத்தில் தவறாது கலந்து கொண்டிருந்தேன். மேலும் மக்களை சந்தித்து நேரடியாக பிரசுரங்களை விநியோகித்திருந்தேன். இவ்வகை செயற்பாடுகள் மட்டுமே எனக்கு 2629 வாக்குகளையும் 350விருப்பு வாக்குகளை பெற்றுதந்திருந்தது. 



ஓரு தரப்பினரால் எனது தேர்தல் பணிகளை முடக்கும் வகையில் பல முகநூல் பதிவுகள் இடப்பட்டன. எனது தேர்தல் பிரச்சாரத்திற்கு ஓத்துழைத்த சுவிற்சர்லாந்து பாராளுமன்ற உறுப்பினருக்கு மின் அஞ்கல்கள் மூலாமாக எனக்கு வழங்கும் ஆதரவினை திரும்பப்பெறுமாறு அழுத்தம் கொடுத்தனர். மேலும் மாநில கட்சிகளிற்கும் என்னைபற்றி பொய்யான தகவல்களை வழங்கியிருந்தனர். அப்படி இருந்தும் இத்தேர்தல் எனக்கு முதல் தேர்தல் ஆயினும் பல அனுபவங்களையும் புதிய பரிமாணங்களையும் அறியத்தந்திருந்தது. தமிழின துரோகி என்ற அடையாளத்தினை அதிதீவிர தமிழ் தேசியவாதிகள் எனக்கு வழங்கியிருந்தனர். இலங்iயில் தமிழினம் ஆயுதபோராட்டத்தில் தமது கல்வி வாழ்வாதரம் சொந்த நிலங்கள் என பல்வேறுபட்ட விடயங்களை இழந்து ஓர் அங்கவீனமான சமூகமாக்கபட்டுள்ளது. ஓர் மிக குறைந்த எண்ணிக்கையை கொண்ட ஓர் இனத்தினால் மேற்கொள்ளபடும் ஆயுதப்போராட்டங்கள் போராட்டம் ஆரம்பிக்கபட்ட காலத்தில் இருந்த நிலைமையை விட பி;னோக்கியே எடுத்துசெல்லும் என்பதற்கு தமிழர் போராட்டம் ஓர் சான்றாகும். புலம்பெயர் அதிதீவிரதமிழ் தேசியவாதிகளின் யுத்தம்மீதான காதலுக்கும் அதிதீவிரவாத அரசியலுக்கு என்றும் எதிரானவன். எனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பலர் என்னிடம் கேட்ட கேள்வி ஈழப்போராட்டம் பற்றிய நிலைப்பாடு என்ன? இந்த கேள்வி எழுப்பட்டதன் நோக்கம் எனது பிரதிநிதித்துவத்தால் ஈழப்போரட்டத்திற்கு என்ன இலாபம் என்பதிலிருந்தே தோற்றம் பெறுகின்றது.

நான் சுவிற்சர்லாந்தில் உள்ள 26 மாநிலங்களில் உள்ள ஓர் மாநிலமான சொலத்தூண் போட்டிபோடும் ஓர் சாதாரண வேட்பாளாரக மட்டுமே என்னைபார்த்தேன். நான் போட்டியிடும் பிரதேசத்தில் உள்ள சுவிற்சர்லாந்து பிரஜைகள் என்னைப்போன்று அகதிதஞ்சம் கோரி இன்று பிராஜா உரிமைபெற்ற அனைத்து வெளிநாட்வர்கள் எதிர்நோக்கும் அரசியல் சமூக பிரச்சினைகளில் எனது பங்கு என்ன என்பதனை பற்றியே கவனம்செலுத்தினேன். தேர்தலில் நான் ஈழத்தமிழர்களிற்காக குரல் கொடுக்கப்போகின்றேன் அதற்காகவே வேட்பாளர்களாகியுள்ளேன் என அறிவித்திருந்தால் அதிதீவிர தேசியவாதிகள் எனக்கு வாக்களியுங்கள் என தன்னிச்சையாகவே பிரச்சாரத்தினை மேற்கொண்டிருப்பர். அது மட்டுமல்லாது பல தமிழ் மேடியாக்கல் என்னை முன்நிலைப்படுத்தி இருக்கும். இவ்வகையில் சார்த்தியமற்றதை கூறி வாக்கு குவிக்கு அரசியலை உடைக்க விரும்பினேன் அதனை நேர்மையாக செய்துள்ளேன்.

ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டமற்ற அரசியல் சமூக போராட்டங்களிற்கு என்றும் ஆதரவாளனாகவே இருப்பேன். ஆனால் தேசியம் என்ற போர்வையில் எமது மக்களை படுகுழியில் தள்ளும் எவ்வித போராட்டங்களிற்கு என்றும் எதிரானவனகவே இருப்பேன். இதேபோன்று இலங்கையில் நிலவும் பொளத்த பேரினவாத அரசியலுக்கு என்றம் எதரிரானவனகாவே இருப்பேன் என்பதனையும் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன்.

ஜரோப்பிய ஜனநாயகத்திற்கு ஏற்றவகையில் நடைமுறைக்கு சாத்தியமானதினையே எனது கோரிக்ககையாக முன்வைத்ததேன். இலங்கை வாழ் தமிழ்மக்களின் அரசியலை போட்டு குழப்பவில்லை. பொப்புலாரிட்டி அரசியல் செய்வதை நான் தனிப்பட்ட முறையிலும் விரும்பவில்லை. பலவித எதிர்ப்புக்களில் மத்pயியும் நான் யாதார்த்தமான கோரிக்கைகளையே முன்வைத்தேன்.

நான்கு தமிழர்கள் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்று போட்டி போட்டபோது சுவிற்சர்லாந்து மக்களிடம் இருந்து எவ்வித எதிர்ப்புகளும் கிளம்பவில்லை. மாறாக தமிழர்கள் மீதான நன்மதிப்பு இன்னமும் ஓர் படி கூடுதலாக வளர்ந்துள்ளதேயே அவதானிக்க கூடியதாக உள்ளது.
ஓவ்வொரு வேட்பாளர்களும் இந்த மாநில அரசின் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளை கவனத்திற்கு எடுத்து Smartvote என்ற இணையத்தளம் 54 வினாக்களை வேட்பாளர்களிடம் முன்வைத்து இருந்தது.; இதற்கான பதில்கள் தொகுக்கபட்டு ஓர் சிலந்திவலை வடிவமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
வெளிநாட்டு அரசியல் சமூக அரசியல் நிதி கல்வி போன்ற பல்வேறு விடயங்களில் உங்களது நிலைப்பாடுகளை தொகுத்து ஓர் வரைபடத்தின் மூலம் இலதுவாக வெளிப்படுத்தபட்டிருந்தது. வாக்காளர்களும் தமக்கான கேள்விகளுக்கு பதில்களை அளிப்பதன் மூலம் தமது நிலைப்பாடுகளிற்கு சார்பான வேட்பாளர்களை இலகுவில் இனம்கண்டுகொள்ள இவ் இணையத்தளம் உதவியுள்ளது. சுவிற்சர்லாந்தில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிற்கான வினாக்கால் இவ் இணையத்தளத்தில் தொகுக்கபட்டுள்ளது. பல வாக்களர்கள் எனது அரசியல் நிலைப்பாடுகளை இனங்கண்டு கொண்ட நிகழ்வுகள் நடந்துள்ளது. கீழே காணப்படும் சிலந்தி வரைபடத்தின் மூலம் எனது அரசியல்நிலைப்பாட்டினை புரிந்து கொள்ளலாம். 
வளர்ந்து வரும் கணணிமயமாக்கலில் எதிர்காலத்தில் தமது அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான வேட்பாளர்களையும் கட்சிகளையும் இனம்காணுவதற்கு இவ்வகை இணையத்தள நடவடிக்கைகள் மேலும் உதவும்.
போட்டியிட்ட 21 பேரில் நான் 14வது இடத்தினை பெற்றுகொண்டேன். தமிழர்கள் பற்றி சுவிற்சர்லாந்து மக்களிடம் இருந்த ஓர் அங்கீகார மனோபாவமும் எனக்கு கணிசமான வாக்குகளை கொடுத்துள்ளது. மிக சொற்பமான தமிழ் மக்களிற்கே வாக்களிக்கும் உரிமை இருந்ததினை எனது தொலைபேசி பிரச்சாரம் மூலம் அறிந்துகொண்டேன். நான் தொலைபேசி மூலம் பிரச்சரம் செய்த போது பல தமிழர்கள் தமது வாக்குகள் எனக்கு என உறுதிப்படுத்தியிருந்தனர்.


பல பொய் பிரச்சார நடவடிக்கைளின் போது எனக்கு மனமார வாக்களித்த எனது பகுதி வாழ் தமிழ்மக்களிற்கு இத்தருணத்தின் போது எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்ள விரும்புகி;னனறேன். எனது தொலைபேசி பிரச்சாரத்திற்கு ஓத்துழைத்த பேர்ண் சொலத்துண் வாழ் தமிழ் நண்புர்களிற்கு ஓர் மிகப்பெரிய நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.  
க.சுதாகரன்
18.03.2017