சீமானின் தமிழ் தேசிய இனவாதம் உச்சத்தைதொட்டுள்ளது. தனது அரசியல் பிழைப்பிற்காக விடுதலைப்புலிகளின் ஆதரவு அலையை குத்தைகக்கு எடுத்து அரசியல் செய்யும் ஓர் நடிகன்.நடைபெறஇருக்கும் தேர்தல் பிரச்சாரங்களின் போது எவ்வித அரசியல் தெளிவும் அற்று கிட்லரின் அகங்கார தேசிய வெறி பேச்சுக்களை கோட்பாடாக எடுத்து பேசுகின்றார். அதுமட்டுமல்லாது நாஜிகளது சின்னத்தையும் தனது கட்சியின் அடையாளமாக பயன்படுத்துகின்றார். இதனை வேடிக்கை பார்க்கும் புலத்திலுள்ள ஈழத்து தம்பிகளும் மொளனம் சாதிக்கின்றனர். வடக்கிலிருந்து குறைந்த கூலிக்கு தமிழ் நாட்டிற்கு வேலைக்குவரும் வறுமைகாட்டிற்கு கீழுள்ள மக்கள் மீது அவிழ்துவிட்ட தீ. இன்று வெளி மாநிலங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களிற்கு இனவாத தீ திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த பெருமை இவ்வகையில் தேசியம் என்ற பெயரில் அரசியல் நடத்தும் அறிவிலி சீமானுக்கே உரித்தாகும். எத்தனை பொய்களையும் தான் முன்வைத்த விடயங்களை மறுதலிக்கும் வகையில் எத்தனை பேச்சுக்களை எவ்வித கூச்சமும் இன்றி பேசுகிறாரே? தமிழ் அரசியலிற்கு ஓர் மாற்று அரசியல் தரப்பு வேண்டும் என்பதில் எனக்கு கருத்து இல்லை. ஆனால் இவர் அல்ல அந்த மாற்று என்பதனை தமிழ் நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தான் ஆட்சிக்கு வந்தவுடன் அதை மாற்றுவேன் என்பது அனைத்து தமிழ்நாட்டு அரசியல் வாதிகளினால் வழங்கப்படும்ெவற்று வாக்குறுதிகள். ஆனால் இந்த அறிவிலி தமிழ்நாடு ஒரு தனி நாடு என்ற மமதையில் மாநில அரசிற்கு அதிகாரமற்ற பல விடயங்களைமாற்றுவேன் என வெடிக்காத வாணவேடிக்கை காட்டுகின்றார். இவரை தமிழ் நாட்டுமக்கள் நிராகரிக்க வேண்டும் அல்லது மிகப்பெரும்பாண்மை வாக்குகளை கொடுத்து ஆட்சிக்கட்டிலில் அமர்த்தவேண்டும். அதன் பின்னர் சென்ன வாக்குறுதிகளில் எதனை நமுறைப்படுத்தினார் என்பதைன பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டும்.இவர் பல நச்சுக்களை மனித சமுதாயம் மீது வீசுகின்றார். மிக ஆபத்தானது.
புலம்பெயர் நாடுகளில் இவரைப்போல் பல இனவாத வலதுசாரிகள் பலம் குன்றி இருந்ததால் புலத்தில் அகதிகள் வெளிநாட்டவர்கள் இந்நாடுகளில் உயிர்வாழக்கூடியதாக உள்ளது. இதனை மறந்து இந்த அறிவிலியின் பேச்சுக்களை பார்த்து புள்ளரிக்கும் தம்பிகையும் பார்த்துள்ளேன். தமிழ்நாட்டுமக்களே இந்த அறிவிக்கு எதிராக குரல் எழுப்பும் நேரம் வந்துவிட்டது. இதனை அனுமதுப்பீர்களானால் மற்றைய மாநிலங்களல் உள்ள இனவாதிகளை தட்டி எழுப்பி உங்கள் சுதந்திரங்களை பதம்பார்க்கும் நிலை மிகவிரைவில் ஏற்படும்.