Samstag, 6. November 2021

ஐெய் பீம் திரைப்படமும் கம்யுனிச இய்கங்களின் போரட்டங்களும் - க.சுதாகரன் (06.11.2021)

கம்யனிசம் மார்க்சிசம் தோற்று விட்டது என்று முதலாளித்துவம் கொக்கரிக்கின்றது. ஆனால் வரலாறுகள் இச்சமூக விஞ்ஞானத்தின் அடிப்படையில் செயற்பட்ட கட்சிகளும் இயக்கங்களும் சிறுபாண்மை மக்களிற்கானதும் மனித உரிமை மீறல்களிற்கு எதிராக போராட்டங்களையும் செய்து ஒடுக்கபட்ட மக்களிற்கு ஆதராவாக இருந்துள்ளனர். இவற்றை வரலாறுகளும் திரைப்படங்களும் மீளபதிவு செய்வது காலத்தின் தேவையாகும். இந்த வகையில் ஐெய்பீம் Jai Bhim (https://en.wikipedia.org/wiki/Jai_Bhim) கதை சினிமாவிற்காக பல மாற்றங்களை செய்த போதும் ஒரு சிறுபாண்மை சமுகத்திற்கு நடந்த அநீதியை உணர்வு பூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளது. பொலிஸ் அரச இயந்திரத்தின் அராஐகத்தினை அம்பலப்படுத்த போராடிய கம்யூனிஸ்கட்சித்தோளர்களிற்கு ஒரு சலூட். இதற்கு ஒத்துளைத்த மார்க்சிச கருத்துக்களில் ஈடுபாடு கொண்டுள்ள வழக்கறிஞர் சந்துருவிற்கும் ஓர் சலுட். இதே போல் பல வழக்குகளை மனிதம் சாகது இருக்கின்ற சட்ட  நுணுக்கங்களை பயன்படுத்தி பாதிக்க பட்டவர்களிற்கு நிாயங்களை வழக்கறிஞர் பெற்று கொடுத்துள்ளார்.

இதேபால் பல சிறுபாண்மை சமுகங்களை பெரும்பாண்மை சமுகங்ளும் ஆதிக்க சமூகமும் திருடர்கள் சமூகவிரோதிகள் என குற்றம்சாட்டிய வரவாறுகள் உலக நாடுகளில் பல உள்ளன. புலம் பெயர் தமிழர்கள் பலர் தாம தஞ்சம் அடைந்த நாட்டிலும் ஆரம்பத்தில் ஊத்தை தமிழன் ஆடுகளவெடுப்பவர்கள் என மேடியாக்களும் வலது சாரிகளும் முத்திரைபதிக்க முயன்றத. அனாலும் 90 களில் குறைந்த ஊதிய தொழிலாளர்களின்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தொழில்வாய்ப்புக்களும் நிரந்தர இருப்பிட வசததிகளும் வழங்கப்பட்டது. இவ்வகைில் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்து தமது நிரந்தர இருப்பினை தமிழர்கள் உறுதிப்படுத்தி கொண்டனர்.

இன்றும் பல நுற்றுகணக்கான வருடங்களிற்கு முன்னர் இந்தியாவில் இருந்து நிர்ப்பந்தித்தின் பெயரில் புலம் பெயர்ந்த ஐராப்பிய அமெரிக்க நாடுகளில் நாடோடிகளாக தமது வாழ்வை ஆரம்பித்த சிந்தி அல்லது ஐிப்சி அல்லது றோனிய சிறுபாண்மை சமுகம்.  ஐெய் பீம் திரப்படத்தில் காண்பிக்க பட்ட இருளர் அல்லது ஆதிவாசி சமுகம் போன்று சொல்லணாத்துயரத்தினை அனுபவித்து வருகின்றது. இவர்களிற்கும் ஐராப்பிய பெரும்பாண்மை ஆதிக்க சமுகம் திருடர் ஊத்தயர்கள் வன்முறையாளர்கள என்றே வகைப்படுத்தி உள்ளனர்.

பிரான்சில் வாழும் நான்கு மில்லியன் வெளிநாட்டவர்களில் சிந்து றொமானியர்கள் 15000 இருந்து 20000 வாழ்விடமின்றி தெரக்கில் பிச்சை எடுத்து வாழ்கின்றனர். இதேபோன்று உங்கான் பல்கேரியா றுமேனியா என்று பல கிழக்கு  ஐராப்பிய நாடுகளில் ஒதுக்கப்பட்டு அடிப்படை வசதி இன்றி வாழுகின்றனர்.  இத்துடன் இணைக்கப்ட்டுள்ள காணொலியில் இலர்களின் அவலவாழ்வினை புரிந்து கொள்ளலாம். ஐேர்மன் மொழி தெரிந்தவர்கள் மொழி குறிப்பின் மூலமாகபுரிந்து கொள்ளமுடியும்.

https://www.youtube.com/watch?v=buLf3h4YktI


இருளர் அல்லது ஆதிவாசிகள் ஆதிக்க சமூகத்தினால் தரப்படும் கடினமானதும் சுகாதரமற்ற தொழில்களே வழங்கப்படுகின்றது.அவ்வகையிலேயே சிந்து றேமானிய சமூகமும் ஐரோப்பிய மேலாதிக்க சமூகத்தினால் ஒடுக்கபடபடுகின்றது. 1971 ம் தம்மை ஒர் றோனிய தேசிய இனமாகவும் தமக்கான தேசியகொடியுடன் பிரகடனப்படுத்தியதாலும் எவ்வித முன்னேற்றங்களை அடையவில்லை.

கிழக்கு ஐரோப்பவில் கமயூனிசகட்சியின் அரசு இருந்தபோது தமக்கு தொழில்களும் உணவுபற்றாக்குறையும் இருக்கவில்லை என கூறுகின்றனர். எப்பொழுது ஐனநாயகம் என்ற போர்வையில் ஆட்சி மாற்றத்திற்கு தமது வாழ்நிலை அதள பாதளத்தில் விழுந்துள்ளதாக குப்பிடுகின்றனர்.

இன்றும் உலகம் பூராகவும் ஒடுக்கபட்ட சமூகங்களிற்கானதும் மனித உரிமைகளிற்கான உரிமைக்ககுரலும் இடது சாரி அரசியல் பாரம்பரியத்திலிரிந்தே ஒலிக்கின்றது.

 

Sonntag, 3. Oktober 2021

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று முடிந்த திருமணம் அனைவரிற்குமானது என்ற அபிப்பிரயா வாக்கெடுப்பும் «EHE FÜR ALLE» புலம் பெயர்சமுகத்தில் இடம்பெற்ற ஓரினபால் திருமணமும் ஓர் கட்டுடைப்பும்.

தமிழ் சமுகத்தில் பாலியல் ஒரு வெளிப்பையான பேசுபொருளாக இருக்கவில்லை. ஆனாலும் முப்பது நாற்பது வருடங்களாக  புலம்பெயர்ந்து ஐரோப்பிய அமெர்க்கா அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வரும் சமூங்களும் இன்னமும் எவ்விததயக்கமும் இன்றி குடும்ப உறுப்பினர்களிடையோ அல்லது நண்பர் உறவினர்களிடையே பேசுபொருளாக்குவற்க்கு தயங்கியே வருகின்றது. இது இவர்களின் மற்றைய சமூகங்களிற்கிடையான இணைவாக்கத்தின் அளவு கோளாக அமைகின்றது.

ஓரினபால் பால் உறவு என்பது மனித சமூகத்தில் புதிய விடமில்லை. மனித சமுகத்தில் பெரும்பாண்மையாக ஆண் பெண் உறவு முறை மனித சமுகத்தில் பெரும்பாண்மையாகவும் இனப்பெருக்கத்திற்கான மூலமாக இருந்ததினால் அங்கீகரிக்கபட்ட உறவுமுறையாக இருந்து வந்துள்ளது. ஆனாலும் ஓரினபாலியல் உறவு முறைகளும் சமகாலங்களில் சிறுபாண்மையாக நிலவியே வந்துள்ளது. இதற்கு பல மனித வாழ்வியல் ஆய்வுகள் சாான்று பகிர்கின்றன. தெற்காசி அரண்மனை வரலாறுகளும் இந்து கோயில் கோபுர சிற்பங்களும் இதற்கு ஆதாரம் தருகின்றது.


பாலியல் விடயங்கள் எவ்வித கூச்சமும் தயக்கமும்  இன்றி எல்லா சமூக உறவுகள் மத்தியில் பேசுபொருளாக மாறும் கலாச்சாரம் வலுப்படல் வேண்டும். கடந்த வாரத்தில் கனடாவில் இந்து முறைப்படி நடைபெற் ஓரினபால் திருமணம் ஓர் புலம் பெயர் சமுகத்தில் ஓர் கட்டுடைப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் இவ்விடயம் பற்றி பலபேசவும் கருத்து கூறமறுத்ததும் ஓர் ஆரேக்கியமான விடயமாக அமையவில்லை. இவ்வகை புதிய அல்லது சிறுபாண்மை உறுவு முறைக்குள் எமது இரண்டாவது தலைமுமறைகள் சிலர் அங்கீகாரத்துடன் கூடிய ஓர் உறவுக்கு தயாராகலாம். இதனை அநாககரிகமாக கருதும் பெரும்பாண்மை சமுகம் எவ்வாறு இவ்விடயங்களை கையளப்போகின்றது என்ற கேள்விகள் மேலேங்குகின்றன.

இவ்வகையில் ஒரின உறவுமுறையின அங்கீகரிக்கும் மனேபாங்கிற்கான போராட்டம் தனியே தமிழ் சமூகத்திற்கானது மட்டுமல்ல வளர்ந்து வந்த சமூகங்கிற்கிடையிலேயே நடைபெறும் உட்போராட்டமாகும். இவ்விடயங்களை சரியான முறையில் கையாளத்தவறியதின்விளைவாக ஐரோப்பிய சமூகத்திலே யே பல தற்கொலைகள் கொலைகள் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டில்  ஓர் பன்மவயதடைந்த இளைஞனை ஒரின பாலியல் உறவுமுறையை ஏற்றுகொள்ளாத தந்தை தனதுமகனை கொடூரமாக தாக்கிய சம்பவங்களும் நடைபெற்றிருந்து.

ஒரினபாலியலுடன் வாழும் உறவுகள் பெரும்பாண்மைசமூகத்தினால் பல வன்முைகளை அனைத்து உலகநாடுகிலும் சந்தித்து வந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் இச்சமூகம் அமைப்புவடிவம் பெற்றது. தமது உறவுமுறையின் அங்கீகாரததிற்கான போரட்டங்களை தெருவுக்கு கொண்டுவந்து தமக்கு ஆதரவு சக்தியிை ஒன்றுதிரட்டி பலம்பெற்றனர். அவ்வகையல் சுவிற்சர்லாந்திலும் பெண் பெண் பாலர் உறவு சமுகத்தினான அமைப்பு (LOS) ஆண் ஆண் (PIN CROSS) பாலர் அமைப்பு (PIN CROSS)..திருநம்பி திருநங்கையர் அமைப்புக்கள் (TGNS) ஒருங்கினைந்து தமது அங்கீகரிப்பிற்கான பல போராட்டங்களை நடாத்தி வந்துள்ளன.

பல ஐரோப்பிய நாடுகள் திருமணம் தனியே ஆண் பெண்களிற்கானதல் ஓரின பாலினரு்கும் உரித்தனது எனும் சட்ட அங்கீகாரத்தினை பல நாடுகள் ஏற்கனவே வளங்கி உள்ளது. சுவிற்சர்லாந்தில் செப்டம்பர்

2021 இல் நடைபெற்ற அனைவருக்குமான திருமணம் என்ற அபிப்பிராய வாக்கெடுப்பு 64.1வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. இச்சட்ட மூலத்தினை சட்டமூலமாக்கிய  17வது  ஐரோப்பிய நாடாக சுவிற்சர்லாந்து அமைகின்றது.

இணைந்து வாழும் சட்டமூலததிற்கும் திருமணசட்ட மூலத்திற்கும் இடைடயில் பினவரும் வேறுபாடுகள் உள்ளன. 

இணைந்து வாழும் சட்மூலத்தில் தனியே தான் இணைந்து வாழும் தம்பதி/தம்பதரின் குழந்தையை மட்டுமே தத்தெடக்கமுடியும்.திருமண ஒப்பந்தத்தில் மூலமாக எந்தகுழந்தையையும் தத்தெடுக்க முடியும்

பெண் பெண் உறவு தம்பதிகள் விந்துதாணத்தின் மூலம் விந்தினை பெற்றுகருத்தரிக்கும் உரிமையை வழங்குகின்றது

இவ்வகையில் கருத்தரிக்கபட்ட பிள்ளைகளிற்கு விந்துதானம் செய்த தந்தையை அறிந்துகொள்ள விரும்பினால் 18 வயதிற்குபின்னர் அந்த குழந்தை பெற்று கொள்ளலாம்.

 திருமணம் அனைவரிற்குமாது என பலர் ஆதரித்திருந்தாலும் இவ்வகைில் தத்தெடுக்க போகும் பி்ளைகளதும் விந்து தாணம் மூலம் பெறப்பட்ட பிள்ளைகள் சமூகத்தில் எதிர் நோக்கப்போகும் நெருக்கடிகள் பற்றியே பெரிதும் விவாதிக்கபட்டது. இவ்விடயங்களை கடந்து செல்ல வேண்டுமானால் பல கருத்தாடலுடன் கூடிய சமுகசிந்தனைகளில் மாற்றம் ஏற்படல்வேண்டும்.

சுவிற்சர்லாந்தில் கட்டாய திருமணங்கள் தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்லகையி எவ்வித ஓரின பாலியல் உறவு முறையிலான திருமணங்கள் அங்கீகரிக்கபட்டதினால் புலம்பெயர் தமிழ்சமூகத்தில் இவ்வகையான திருமணங்கள் எதிர்காலங்களில் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. இவற்று எவ்வாறு வன்மறை அற்று சுமூகமாக இது ஒரு தனிநபர்களின் விருப்பத்தடன் கூடிய முடிவு என்ற மனநிலைக்கு எவ்வாறு எம்மை மாற்றி கொள்ள போகின்றோம்?. புலத்தில் வாழ் சமூகம் இன்னமும் திருமண உறவுகளில் சாதி என்ற விடயத்தில் இருந்து இன்னமும் விடுபெறவில்லை. ஆகவே புதிய சாவால்களை எவ்வாறு எதிர்கொள்ள போகின்றது?

கத்தோலிக்க கடும்போக்களர்கிடம் இவ்விடயம் நீண்டகாலம் ஏற்று கொள்ள படாத விடயமாக இருந்த போதும் பாப்பரசர் பரிான்சிஸ்குஸ் அவர்களும் கடவுளின் குழந்தைகளும் எமது குடும்பத்தில் ஒருவர்கள் எனறு ஏற்றுகெகாண்ட போது எதிர்ப்பு அலைகளின் ஆக்ரோசம் தணிந்தது. அவ்வகையில் ஒவ்வொரு சமுகத்தின் திறவுகோள் சக்திகளலே சமூக கருததுக்களில் மாற்று சிந்தனையை பெரும்பாண்மை கருத்தாக்க முடியம்.




Sonntag, 14. März 2021

முகத்தினை மறைப்பதிற்கான தடை - Das Verhüllungsverbot

 


கடந்த 7ம் திகதி சுவிறசர்லாந்தில் நடந்து முடிந்த அபிப்பிராய வாக்கெடுப்பும் அத் முடிவுகளும்.இம்முறை பின்வரும் மூன்று அபிப்பிராய வாக்கெடுப்பு சுவிறசர்லாந்தின் அனைத்து கன்ரோன்களில் நடைபெற்றது.

 

1. முகத்தினை மறைப்பதிற்கான தடை Das Verhüllungsverbot

2.இலத்திரன் அடையாள அட்டை «E-ID lektronischer Pass

3. இந்தோனேசியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் Das Freihandelsabkommen mit Indonesien

 

முகத்தினை மறைப்பதிற்கான தடைக்கான அபிப்பிராய வாக்கெடுப்பினை முன்வைத்தவர்கள் Egerkinger Komitee இஸ்லாமியர்களிற்கு எதிரானதும் வெளிநாட்டவர்களிற்கு எதிரான அதி வலதுசாரி அமைப்பாகும். இவ்வமைப்பானது சுவிற்சர்லாந்து இஸ்லாமியமாகி விடும் என்ற அதி கூடிய பயத்தினால் உருவாக்கபட்ட மனித உரிமைகளை மறுக்கும் ஓர் அமைப்பாகும். 2009ஆண்டு  இஸ்லாமிய மசுதிகளை கூம்பு கோபுரதடதுடன் நிறுவுவதற்கான அனுமதிகள் மறுப்பதற்கான அபிப்பிராய வாக்கெடுப்பினை முன்னெடுத்து 57.5 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றது.

 

சுவிற்சர்லாந்தின் அரச சாசனத்தின்பிரகாரம் எந்த ஒரு சமுகத்தினதும் உடைகளை தீரமானிப்பதற்கான அதிகாரம் கிடையாது. இவ்வகையில் ஒரு சமூகத்தின் மீது வலோத்காரமான கலாச்சார தடையை அனுமதிப்பது மற்றைய கலாச்சார உடைகளிலும் தமது அதிகாரத்தினை திணிப்பதற்கான வழிவகைகளை செய்வது போன்றதாகிடும். இதனை புரியாத பலர் முகத்தை மறைத்து முட்டாக்கு அணிவது பெண்அடிமைத்தனம் என விடயத்தை குறுகிய பார்வை கொண்டு பார்க்கின்றனர். முகத்தை மூடி முக்காடு போடும் இஸ்லாமிய பெண்கள் இவ்வகையில் ஓர் கருத்தினை வைத்து போராடும் போது அந்த கருத்திற்கு சார்பாக குரல் கொடுப்பது வேறுவிடயம்.

 

இந்த அபிப்பிராய வாக்கெடுப்பானது கருத்து சுதந்திரத்தனையும் கலாச்சார சுதந்திரத்தினையும் மத சுதந்திரத்தினையும் மறுதலிக்கின்றது. இந்நாட்டில் Fastnacht  இன்போது முகமூடி அணிந்து செல்லும் விழாக்களை எப்படிப்பார்ப்பது? தமது கலாச்சார விழாக்களிற்கு வேறுஒரு நீதியும் இன்னும் ஒருசமூகத்திற்கு வேறு நியாயம் வழங்குவது ஒரு வகை அடக்கு முறையாகவே பார்க்க முடியும். Egerkinger Komitee தமது நாடு இஸ்லாமிமயமாகி விடும் என பயந்து ஒரு மதத்திற்கு எதிராக பல தடைகளை மேற்கொண்டு வருகின்றது. இதேபோல் பல மத மாற்றங்களை நிர்ப்பந்தித்துவரும் பல மதக்குழுக்களின் நடவடிக்கைகளை எவ்வாறு பார்ப்பது? இத்தார்மிக மற்றநடவடிக்கைகளை தனிேய பெண் உரிமை மீதான அக்கறையதக காட்டி வலது சாரிகள் தம்மை முற்போக்கு முகமூடிக்குள் போர்த்து மூடும் நாடகம் கண்டிக்க தக்கது.

 

சிறுபாண்மையாக வாழும் சமூகங்கள் இவ்வகையில் மேற்கொள்ளப்படும் சுதந்திர மறுப்புக்களை இது எமக்கல்லஎனைய சமுகத்திற்கானது என கருதி இவ்வகை மனித உரிமைமறுப்பிற்கு ஆதரவாக வாக்களிப்பது ஆபத்தானது.

 

51,2 %ஆம் எனவும்:48,8 % இல்லை என்ற விகிதாசார அடிப்படையில் Egerkinger Komitee முன்வைக்கட்ட நியாயமற்ற கோரிக்கை வெற்றி பெற்றது. 18 கன்ரோன்கள் பெரும்பாண்மையாக ஆம் 5 கன்ரோன்கள் இல்லை ெபரம்பாண்மையாக வாக்களித்தது குறிப்பிட தக்கது எனவும் இதே சட்ட முலம் எப்பொழுது எமது பாரம்பரிய உடைகள மீதும் மற்றைய சமூகங்களின் உடை கள் மீது ஆதிக்ககரத்தினன வைக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Montag, 15. Februar 2021

சொலத்துாண் மாநிலத்தில் வாழும் சுவிறசர்லாந்து பிராஜா உரிமைபெற்ற தமிழர்காளிற்கான வேண்டுகோள

 

இம் மாநிலத்தில் 100 மாநில சபை உறுப்பினரிற்கான தேர்தல் நடைபெறுகின்றது. இம் மாநிலத்தேர்தல் 5 பிரதேச பிரதேச பிரிவில் வாக்களார்கள் நிறுத்தபட்டுள்ளனர். பின்வரும் நான்கு பிரிவில் 4 தமிழர்கள் வேட்பாளர்களாக களம் இறங்கி உள்ளனர். சாதரணமாக போட்டிபோடும் வேட்பாளர்களிற்கு துணைநிக்கும் பொருட்டு ஓர் ஒத்துழைப்பு குழு உள்ளது. இவர்கள் குறிப்பிட்ட வெட்பாளரின் தேர்தல் பிரச்சார வேலைகளை பொறுப்பெடுத்து கொள்கின்றனர். இதனால் வெற்றியும் சாத்தியமாகின்றது. எம்வர்களில் இவ்வகையான மும்முயற்சி ஒரு விகிதம் கூட இல்லாதுள்ளது கவலை அளிக்கின்றது.

இந்நாட்டில் பல சந்ததிகளாகவாழப்போகும் சமுகம் அரசியலிலும் தம்மை பிரதிநிதித்துவதற்கான தேவை உள்ளது. இந்நாட்டில் நிறவாத ஒடுக்குமுறைகள் ஒனறும் குறைந்துவிடவில்லை. சாதரணமாக ஓர் தொழில் கல்வியை மேற்ெகாள்ள விரும்பும் மாணவர்கள் அவர்களின் பெயரை கொண்டு இனங்கண்டு வாய்ப்புக்கள் பின்தள்ளபடுகின்றது. அதே போல் தொழில் செய்யும் இடங்களில் எம்மவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலைக்கமர்த்தபடுகின்றனர். அயலவர்கள் வெளிநாட்டவர் அல்லது இரண்டாம் தர  பிஜைகளாக பார்க்கும் பல உதாரணங்கள் எம்மிடத்தில் உள்ளன. இவற்றிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமாயின் எமதுஅரசியல் அங்த்துவம் முக்கியமானது. எதற்கும் தமிழ் தமிழ் என்று குரல் கொடுப்பவர்கள் மேடைகளில் உணர்சிவசப்படுகின்றனர். ஆனால் தாம் வாழும் பகுதியில் ஒர் அடையாளத்திற்கேனும் அரசியல் அங்கத்துவத்திற்காக போட்டி போடும் வேட்பாளர்களிற்கு எவவித ஒத்தாசையும் புரியமால் வேடிக்கைபார்ப்பது ஆச்சரியம் தருகின்றது.

எனது தேர்தல் அரசியலை ஏப்பிரல் மாதத்துடன் முடிவிற்கு கொண்டு வருகின்றேன். என்னுடன் பயணிக்கும் அரசியல் நண்பர்களிற்கும் இனி வர இருக்கும் புதிய தலைமுறை அரசியல் வாதிகளிற்கு தங்களால் இயன்ற ஒத்துழைப்பை  வழங்கி எமது அங்கத்துவங்களை தக்கவைத்து கொள்ளுங்கள். அதனடிப்படையில் இத்துடன் இணைக்கபட்டுள்ள விடியேவை பார்த்து நீங்கள் தெரிவு செய்யும் வேட்பாளரிற்கு இரண்டு வாக்குகளை அளித்து அவர்களின் வெற்றிவாய்ப்புக்கு வழிசமையுங்கள்.

தேர்தல் அரசியலானது தனக்கே உரித்தான பல குறைபாடுகளுடன் கூடியதே அதனை மறுப்பதற்கல்ல. என்னுடன் பயணிக்கும் பல தமிழ் அரசியல்வாதிகள் கட்சிக்கு உள்ளும் வெளியிலும் இனவாதரீதியில் பல்வேறுபட்ட தடைகளின் மத்திலேயே வேலை செய்துருகின்றனர். இவைபற்றியும் எமது நாட்டு கட்சி அரசியலிற்கும் சுவிற்சர்லாந்து கட்சிஅரசியற்கும் என்ன வெறுபாடுகள் உள்ளன ஒற்றுமைகள் உள்ளன பற்றி தேர்தல் முடிந்த பின்னர் விளக்காமான கட்டுரையுடன் சந்துக்கின்றேன். தயவு செய்த நான் குறிப்பிட்ட விடயத்தினை பகிர்ந்து தமிழ் வேட்பாளர்களிற்கு தங்களது ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டு கொள்கின்றேன்.


Sonntag, 31. Januar 2021

எழுந்து வா தமிழா பாடலும் இசையும் காட்சிப்படுத்தலும் - ஓர் விமர்சனம்


30.01.20021
 அன்று சோலோ மூவீஸினால்- (Solo Movies) Carnatic Cafe யின் அனுசரனையுடன் எழுந்து வாழ் தமிழா என்ற பாடல் இணையெவளியில் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது. சுவிற்சர்லாந்து வாழ் இளைய தலைமுறையினரின் இசை திறமைகளை ஒன்று இணைத்து டென்மார்க்கை சேர்ந்த இரண்டாம் தலைமுறயை சார்ந்த வசந் துரைரட்ணத்தின் இசை ஆளுமையில் உருவாக்கப்டட பாடல் இந்த தலைமுறையின் ஓர் மையில் கல்லாகும். இந்த நிகழ்வில் கலந்து சிறு உரை ஆற்றும் சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றது பெரு மகிழ்ச்சி. பாடலின் இசையிலும் ஒலி ஒளி அமைப்பை பற்றி விமர்சப்பிப்பதற்கான திறமையிடம் என்னிடம் இல்லை.

பாடல் வரிகள் கூடுதலாக உணர்ச்சி பூர்வமாக அமைந்திரிந்தது. நாம் எப்போதும் உணர்ச்சிகளிற்கு ஆட்பட்டு போவதால் யாதார்த்திற்கு சாத்தியமானதும் சாதிக்ககூடிய பல சந்தர்ப்பங்களை வரலாற்றில் இழந்த உதாரணங்கள் பல உள்ளன.

பாடல் வரிகளையும் இளையோரே எழுதி இருந்திருந்தால்அவர்களது எண்ணக்கருக்களும் புலப்பட்டிருக்கும். பாடல் காட்சிகள் புலத்தினை எவ்விதத்திலும் காட்சிப்படுத்தாது தனியே தாயக காட்சிகள் மட்டும் காட்சிப்படுத்தியதும், மயக்கத்தரும் வகையில் பெண்போராளிகள் கொடி பிடிப்பது போன்றகாட்சிகள் ஏதோ ஒரு அரசியல் சார்பினை தெள்ள தெளிவாக காட்சி மூலம் செய்தி சொல்லவைக்கின்றது. இளையோர் தமது கையில் அனைத்தையும் கையகப்படுத்தியிருந்தால் இன்னுமொரு பரிமாணத்துடன் வந்திருக்லாம் என்ற அவா என்னிடம் உள்ளது.

எமது இளைய இசைக்கலைஞர்களின் இசைதிறமைகள் ஐரோப்பிய நாடுகளின் இசை கலைஞர்களுடன் இணைந்து ஓர் பெரிய அங்கீகாரத்தினை பெற்று கொள்ள வேண்டும் என்ற அவாவினை எமது இளையோரிக்கான அன்பானவேண்டுகோளை தெரியப்படுத்திருந்தேன். பல  இசை நிகழ்ச்சிகளில் ஒலியின் அளவினை அதிகரிப்பதே ஓர் பாரம்பரியமாக இருந்துவந்துள்ளது. இவைற்றை எல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில் இந்த பாடலின் ஒலி அமைப்பு துறை சார்ந்து ஒழுங்கு செய்ப்பட்டிருந்தது.

கோரனாவில் ஏற்பட்டுள்ள Lock down வினால் பல இளைய தலை முறையினர் மன அழுத்திற்கு உள்ளாகி உள்ளனர். இவ் இளைஞர்களை கவனத்தில் கொண்டு அவர்களிந்கு ஓர் இசைவிருந்தினை வழங்கி மன அழுத்ததில்விடுபட செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தேன்.

மயா போன்ற பாடகிகள் அவரகளது அரசியல் நிலைப்பாட்டினால் எவ்வாறு இசைத்துறையிலிருந்து ஒதுக்கபட்டனர் என்பதையும்  சுட்டிகாட்டியிருந்தேன்.

புலம்பெயர் தமிழ் சமூகம் பல துறைகளில் கால்பதித்திருந்தாலும் தமது சந்ததியினரின் நீண்டகால இருத்தலின் நலன் கருதி அரசியலிலும் கால்பதிக்க வேண்டும் என்ற தேவையையும் உணர்த்தி இருந்தேன். புலத்தில் அரசியலில் ஈடுபடும் எம்மவர்களை எந்தநாட்டி லும் உள்ள கட்சிகளும் செம்கம்பளம் இட்டு வரேவேற்கவில்லை. நாம் தான் இந்தேசமூகத்தில் ஓர் அங்கம் என்பதனை நிருபிக்க வேண்டும்என்பதற்காகவே அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை உளளது.

கட்சியில் அங்கம் வகிக்கும் இனவாதிகள் எம்மை ஓர் துச்சமாக கருதுவதும் நாமும் இவ்வகை இனவாதிகளின் கழுகுபார்வைக்கு முன் நாம் ஏதோ உடை அணியாதது போல் உணர்ந்த சந்தர்ப்பங்களை சுருக்கமாக தெரியப்படுத்தியிருந்தேன்.

நிகழ்ச்சி ZOOM வழியாக நடைபெற்றிருந்தது. ஆரம்பத்தில் எமக்கு ஓர் ID கொடுக்கபட்டிருந்தது. அதில் ஒருசிலர் பிரச ண்மாகி இருந்தனர். நிகழ்ச்சி வேறு ஒர் ID ஊடாக  ஆரம்பித்ததாக ஒருவர் கூற இன்னும் ஓர் ID தரப்பட்டிருந்தது. மற்றொரு ID ஊடாக LOGIN  செய்து கலந்து கொண்ட போது நிகழ்ச்சி ஏற்கனவே ஆரம்பமாகி நடைபெற்று கொண்டிருந்து. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வசந்திற்கு யார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவார்கள் என்ற விபரங்கள் அறியாது ஓர் ஒழுங்மைக்கபடாது நடைபெற்று கொண்டிருந்தது. இதனை நெறிப்படுத்த வந்த அறிவிப்பாளரை வசந் இணைத்து அவரை தம்முடன் இணைந்து நிகழ்ச்சியை நடாத்துமாறு கோரிக்கை விட்டிருந்த போதும். அந்த அறிவிப்பாளரிடம் எவ்வித தாயரிப்பும் இருக்கவில்லை. இதனை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால். அறிவுப்பு துறையானது தனித்து அடுத்த அடுத்த நிகழ்ச்சிகளை அறிவிப்பதல்ல. நடைபெற இருக்கும் நிகழ்ச்சி பற்றி நன்கு அறிந்தும் நிகழ்ச்சியில் பேச இருப்பவர்கள் பற்றி ஓரளவாவது அிந்திருக்க வேண்டும்.

ஓர் மிகவும் சிறப்பாக தாயாரிக்கபட்ட இந்தபாடலை ஓர் சிறப்பு தேர்ச்சி அற்ற நிகழ்ச்சி ஒழுங்கீனத்தினால் நிகழ்ச்சி கவரப்படவில்லை. அல்லது இந்த இசையின் தாயாரிப்பில் ஈடுபட்ட கலைஞர்களுடனான கலந்துரையாடலாக சுருக்கி கொண்டிருக்கலாம்.

நிகழ்ச்சியை ஆளுமைப்படுத்தாதன் விளவாக யார் நிகழ்ச்சியை நடாத்தினார்கள் என்ற கேள்வியும் எமாற்றமும் என்னை ஆட்கொண்டது.

இந்த தவறுகள் நடைபெறாமல் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பிலும் அறிவிப்பு துறையிலும் கவனம் செலுத்தவேண்டும். இளையோரின் அனைத்து  செயற்பாடுகளும் துறைசார்ந்து சிறப்பு தேர்ச்சியுடன் நடைபெறவேண்டும் என  வாழ்த்துகின்றேன்.

சுதாகரன் கணபதிப்பிள்ளை

31.01.2021