Sonntag, 27. Oktober 2019

புலத்து தமிழர்களின் வியர்வைதுளியில் இருந்து சேகரிக்கபடும் உதவி தொகை சரியான முறையில் பாதிக்கபட்டவர்களிற்கு சென்றடைகின்றதா?

Ganapathipillai Suthakaran 27.10.2019

புலம்பெயர் தமிழரின் உதவிதிட்டங்களும் துஸ்பிரயோகங்களும்.

கடந்த மாதம் நான் சார்ந்த உதவிநிறுவனத்தின் வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் நேரடியாக கண்காணிப்பதற்குமாக இலங்கைக்கு பயணம் செய்திருந்தேன். பல புலம்பெயர் உதவிநிறுவனங்களினதும் பிழையான நடைமுறைகளாலும் சரியான திட்டமிடலின்றி செயற்படுவதால் நாட்டில் செய்ப்படும் உதவிகள் பாதிக்கபட்டவர்களிற்கு சென்றடையாது மாறாக ஓரு சிலர் தமக்குள் சுருட்டிக்கொள்ளும் பல நிகழ்வுகள் நடைபெறுகின்றது. வாசகர்களின் வசதிகருதி புலம்பெயர் உதவிநிறுவனங்களின் அமைப்பு வடிவங்களை கீழ்காணும் வகையில் பிரித்துள்ளேன்.

1. சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்கள். (World Vision, US Aid)

2. புலம்பெயர் வாழ் தமிழர்களின் கிராமம் அல்லது ஊர்சார்ந்த உதவி நிறுவனங்கள்.

3. விடுதலை அரசியல் இயக்கங்கள் தமது அரசியல் தொடச்சி நோக்கி உருவாக்கபட்ட உதவிநிறுவனங்கள்

4. நல்ல நோக்கில் தோற்றுவிக்க பட்ட நிறுவனங்கள் நாட்டில் தமது கிளை நிறுவனங்களை பிழையான முறையில் தோற்றுவித்து பின்னர் அந்நிறுவனம் உள்ளுர் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டிற்குள்ளும் அல்லது ஓர் குறிப்பிட்ட நபர்களின் நலனுக்குள் முடக்கபட்hடுபவை

5. தமிழ் தேசியம் பேசி வளர்ந்த புலம்பெயர் மேடியயாக்கள் நாட்டில் பாரிய முதலீடுகளை செய்து பூதாகரமாக வளர்ந்த நிறுவனங்கள் தமது பொது நலனை வெளிப்படுத்துவதற்காக அங்குள்ள மக்களின் இன்னல்களை வெளிக்கொண்டு வந்து புலம்பெயர் தமிழர்களின் நன்மதிப்பபை பெற்று மீண்டும் புலத்து தமிழர்களை தமது வாடடிக்கையாளர்களாக வைத்து கொள்ளும் முயற்சி.

6. ஓரு சில வழிபாட்டு நிறுவனங்களால் நடாத்தபடும் உதவி நிறுவனங்கள்.

7. நேர் வழியில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நேரடி உதவிகளை வழங்கிவரும் சிறிய உதவி அமைப்புக்கள். இவர்கள் தம்மால் சேகரிக்கபடும் 100% விகித நிதியையும் எவ்வித அலுவலக செலவுமின்றி பாதிக்கப்பட்டவர்களிறு;கு நேரடியாக உதவிசெய்யும் நிறுவனங்கள் 

சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் தம்மால் சேகரிக்கும் நிதியில் பாதிக்கப்பட்டவர்களிற்கு 20% அல்லது 30% விகிதமே கொடுக்கின்றனர். ஏனைய 80% 70% விகித நிதிகள் அலுவலக செலவிற்கும் அவர்களால் நியமிக்கபட்ட அதிகாரிகளிற்கான சம்பளங்களிற்குமே பயன்படுததுகின்றன. இவ்வகையான பல நிறுவனங்னள் இலங்கையில் வன்னி பிரதேசங்களில்செயற்படுகின்றன. இவர்கள் கணக்கு காட்டுவதற்காக ஓருசில உதவிகளை செய்துகொண்டு பல உள்ளுர்வாசிகளை உள்வாங்கி பயிற்சி பட்டறை வகுப்புக்களை இப்பிரதேசங்களில் உள்ள விடுதிகளில் ஓழுங்கு செய்து நாடாத்துகின்றனர். இதற்கான செலவுகள் அனைத்தும் சேகரிக்கப்படும் உதவியில் இருந்தே பெறப்படுகின்றது. இவர்களின் இவ்வேலைத்திட்டத்திற்காக வேலைசெய்யும் பல உள்ளுர் முகவர்கள் பலனை பெற்றுகொள்ளுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் மிக அரிதாகவே பயன்பெறுகின்றனர். மேலும் இவர்களின் பெரும் நிதியில் உருவாக்கப்படும் பயன்பெறா பல செயற்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய தாங்கியை ருளு யனை எனும் நிறவனத்தினால் கிளிநொச்சில் ஓரு சில வீடுகளிற்கு அமைத்து கொடுக்கபபட்டுள்ளது. எவ்வித பயனுமின்றி காட்சி அளிக்கின்றது. US AID அமெரிக்க உளவுபிரிவான CIA இன் நேரடிக்கட்டுப்பாட்டிற்குள் இயங்கும் ஓர் நிறுவனம் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

விடுதலை அல்லது அரசியல் இக்கங்கள் தமது நலன் கருதியும் உள்நோக்கமும் கொண்டு ஓரு சில உதவிகளை செய்து பெரிதாக விளம்பரத்தினை தேடிக்கொள்கின்றன. இவர்களால் செய்யப்படும் உதவிகள் யுத்ததினால் நேரடியாக பாதிக்கப்பட்ட போராளிகளிற்கோ அல்லது மக்களிற்கோ சரிவரசென்றடையவிதில்லை என்பதனை பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசியபோது அறியக் கூடியதாக இருந்தது. பெரும்பாலான இவ்வகை உதவி நிறுவனங்கள் பாடசாலை உபகரணங்கள் போன்ற சிறு உதவிகளை செய்து புகைப்படங்களை எடுத்து பிரபல்ய படுத்திகொள்ளுகின்றனர். ஆனால் இவ்வகையில் செயற்படும் ஓரு சில நிறுவனங்கள் கைதிகளை விடுவிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு பல கைதிகளையும் விடுவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

நல்ல நோக்கில் ஆரம்பிக்கபட்ட ஓரு சில நிறுவனங்கள் நாட்டில் கிளை அமைக்கின்றோம் என்ற பெயரில் இந்நாட்டில் உள்ள அதே பெயரில் அங்கு ஓர் அமைப்பினை நிர்மாணித்துள்ளனர். இவ்வமைப்பக்ளும் நாட்டில் ஓர் நிர்வாக கட்டமைப்பினை கொண்ட ஓர் சுயாதீன அமைப்பாகவே உள்ளன. புலத்தில் உள்ள அமைப்பு ஓர் நிதியை வழங்கும் அமைப்பாகவே மட்டுமே உள்ளது. புலத்தில் உளள அமைப்பின் நோக்கத்திற்கும் மாறாக தன்னிச்சிiயாக செயற்கட்டு புலத்தில் சேகரக்கபட்ட நிதிகள் ஓரு சிலரின் தனிப்பட்ட சொத்துக்கள் ஆக்கப்பட்டதிற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. ஓரு சில கிளைகள் உள்ளுர் அரசியல் வாதிகளின் விளம்பரத்திற்கும் ஆதிக்கத்தனை நிலை நிறுத்த தமது உதவிதிட்டம் என விளம்பரப்படுத்துகின்றனர். புலத்தில் இருந்து நிதி சேகரிக்கும் தாய் நிறுவனங்கள் தமது கட்டுப்பாட்டினை இழந்து செய்வது அறியாது தவிர்க்கின்றனர். துஸ்பிரயோகம் செய்யும் நிறுவனங்களின் பெயர்களை தேவை கருதி தவிர்த்துள்ளேன்.

தமிழ் தேசியம் பேசியும் ஆதரவும் அளித்து தமது மூலதனத்தினை பெருக்கிய பாரிய தமிழ் மேடியா நிறுவனங்கள் தமது வயிற்றினை மேலும் வளர்ப்பதற்கு நாட்டில் உள்ள துயரங்களை காட்சியாக்கி புலத்தில் நிதியை சேகரித்து பாதிக்கபட்டவர்களிற்கு உதவி செய்து ஓரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கின்றனர். உதவி திட்டங்களை திட்டடிடாமல் செய்வாதால் நாட்டில் புலத்து உதவி நிதியில் தங்கிநிற்கும் கலச்சாரத்தினை உருவாக்குகின்றனர்.

நேரடியான கண்காணிப்பும் அற்றும் தனியே அங்குள்ள ஓருசில தனிநபர்களின் கோரிக்கையை நிறைவேற்றும்வகையில் செய்யப்படும் நிறுவனங்கள். வழங்கப்படும் உதவிகள் சரியான முறையில் பயன்படுத்தாது பிழையான முறையில் துஸ்பிரயோகம் செய்யப்படும் நிகழ்வுகள் பல இடம்பெறுகின்றன. புலத்து சமூகம் தனது வியர்வைத்துளியை சிந்தி கொடுக்கப்படும் நிதிகள் சரியான முறையில் பாதிக்கபட்டவளிற்கு சென்ற அடையாவில்லை என்றால் அதைப்போன்ற ஓரு கொடுமை இருக்கமுடியாது.

புலம்பெயர் மக்கள் சிறிய உதவிகளை தனிப்பட்ட முறையில் செய்யாது நீண்ட காலத்திற்கு பாதிக்கபட்டவர்கள் தமது சொந்த காலில் நிற்பதற்கான வழிமுறையை தேர்ந்தெடுத்து அதற்கான ஓர் கூட்டு நிதியை வழங்குதே ஓர் சிறந்த தீர்வாக இருக்கமுடியும். குறுகிய காலத்திட்டங்கள் புலத்து நிதியில் தங்கி நிக்கும் ஓரு வித கலாச்சாரத்தினை உருவாக்குகின்றது. இவ்வகை கலாச்சார பண்பினை பல இடங்களில் அறிந்துகொள்ள கூடியதாக இருந்தது.

பல நிறுவனங்கள் உண்மையாக பாதிக்கபட்ட பிரதசேங்களிற்கு நேரடியாக சென்றுபார்ப்பது குறைவு. பல நிறுவனங்கள் மெயின் வீதிக்கு அண்மை பிரதேசங்களிற்கு சென்று விட்டு ஓரு சில தகவல்களை சேகரித்து தமது உதவிதிட்டங்களை திட்டமிடுகின்றனர். மாறாக இவர்கள் பல குக் கிராமங்களிற்கு சென்று நிலைமைகளை அவதானிக்கவேண்டும்.

இம்முறை எனது பயணத்தின் போது ஓர் போராளி இன்று வரைக்கும் தொடர்ச்சியாக சிறிலங்கா அரசின் உளவுபடையினரால் கண்காணிக்கபடுபவரும் சித்திரைவதைக்கு உட்பட்டு வருபவரும் ஓருவரை சந்தித்தேன். அவரிற்கு இன்று வரை எவ்வித புலம்பெயர் அமைப்பின் உதவிதிட்டங்களும் சென்றடையவில்லை. அவரிடம் ஓருசில புலம்பெயர் அமைப்புக்கள் தமது செயற்பாட்டிற்கு உள்வாங்கும் வகையில் உரையாடி அவரை இன்னமும் மேலதிக நெருக்கடிளிற்கு முகம் கொடுப்பதற்கான வாய்ப்புக்களை உருவாக்கி கொடுத்துள்ளனர். எந்த வித உதவிதிட்டமும் இன்றி ஓர் தகர கொட்டகைக்குள் 5 பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார். இவர் புலத்தில் இருந்து வரும் எவ்வித தொலைபெசி தொடர்பினையும் தனது பாதுகாப்பு கருதி ஏற்று கொள்ள மறுக்கின்றார்.

ஓர் சரியான இறுக்கமான அமைப்புமுறையை  தன்னகத்தில் கொண்டு செயற்படும் மற்றும் நேரடியாக பாதிக்கமக்களுடன் தொடர்புடன் இருக்கும் அத்துடுன் வேலைத்திட்டங்களை நேரடி கண்காணிப்பில் நிறைவேற்றிகொடுக்கும் நிறுவனங்களை இனங்கண்டு அவர்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே நாட்டில் உதவிகளற்று தவிர்க்கும் மக்களின் அன்றாட நிரந்தர வாழ்வாதரத்தினை தமது சொந்த காலில் நிவாத்திசெய்வதற்கான வழிவகைகளை செய்து கொடுக்க முடியும். 

Samstag, 19. Oktober 2019

சாதிய ஆதிக்க கருத்துக்குள் ...

நேற்றைய தினம் எனது முகநூலில் வாசகராக இருந்த M.P என்பவர் எனது சாதியத்திற்கு எதிரான கருத்துக்களை கேட்டு (சிவா சின்னப்பொடியின் நூல் வெளியிட்டின் போது) மண்புழுபோல் நெழிந்தவர். ஏன் எமது புண்ணை நோண்டுகின்றீர்கள் என தனது சாதிய ஆதிக்க கருத்துக்குள் குழிர் காய முற்பட்ட போது என்னுடன் உட்பெட்டியில் விவாதித்த விடயங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

இந்த நபர் பற்றிய தகவல்

மிக அண்மைக்காலத்தில் சுவற்சர்லாந்து பிராஐh உரிமைக்கு விண்ணப்பித்தவர். இலங்கையில் தமிழ் அரசுக்கட்சியின் முக்கியத்துவர். மேலும் வெளிநாட்டவர்களின் இருப்புக்கு (தமிழர்களின் இருப்புக்கும்) அச்சுறுத்தலாக இருக்கும் அதிதீவிர இனவாத SVPக்கு ஆதரவாக செயற்பட முற்படுபவர். Aarau மாநிலத்தில் வசிப்பவர்