Sonntag, 31. Januar 2021

எழுந்து வா தமிழா பாடலும் இசையும் காட்சிப்படுத்தலும் - ஓர் விமர்சனம்


30.01.20021
 அன்று சோலோ மூவீஸினால்- (Solo Movies) Carnatic Cafe யின் அனுசரனையுடன் எழுந்து வாழ் தமிழா என்ற பாடல் இணையெவளியில் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது. சுவிற்சர்லாந்து வாழ் இளைய தலைமுறையினரின் இசை திறமைகளை ஒன்று இணைத்து டென்மார்க்கை சேர்ந்த இரண்டாம் தலைமுறயை சார்ந்த வசந் துரைரட்ணத்தின் இசை ஆளுமையில் உருவாக்கப்டட பாடல் இந்த தலைமுறையின் ஓர் மையில் கல்லாகும். இந்த நிகழ்வில் கலந்து சிறு உரை ஆற்றும் சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றது பெரு மகிழ்ச்சி. பாடலின் இசையிலும் ஒலி ஒளி அமைப்பை பற்றி விமர்சப்பிப்பதற்கான திறமையிடம் என்னிடம் இல்லை.

பாடல் வரிகள் கூடுதலாக உணர்ச்சி பூர்வமாக அமைந்திரிந்தது. நாம் எப்போதும் உணர்ச்சிகளிற்கு ஆட்பட்டு போவதால் யாதார்த்திற்கு சாத்தியமானதும் சாதிக்ககூடிய பல சந்தர்ப்பங்களை வரலாற்றில் இழந்த உதாரணங்கள் பல உள்ளன.

பாடல் வரிகளையும் இளையோரே எழுதி இருந்திருந்தால்அவர்களது எண்ணக்கருக்களும் புலப்பட்டிருக்கும். பாடல் காட்சிகள் புலத்தினை எவ்விதத்திலும் காட்சிப்படுத்தாது தனியே தாயக காட்சிகள் மட்டும் காட்சிப்படுத்தியதும், மயக்கத்தரும் வகையில் பெண்போராளிகள் கொடி பிடிப்பது போன்றகாட்சிகள் ஏதோ ஒரு அரசியல் சார்பினை தெள்ள தெளிவாக காட்சி மூலம் செய்தி சொல்லவைக்கின்றது. இளையோர் தமது கையில் அனைத்தையும் கையகப்படுத்தியிருந்தால் இன்னுமொரு பரிமாணத்துடன் வந்திருக்லாம் என்ற அவா என்னிடம் உள்ளது.

எமது இளைய இசைக்கலைஞர்களின் இசைதிறமைகள் ஐரோப்பிய நாடுகளின் இசை கலைஞர்களுடன் இணைந்து ஓர் பெரிய அங்கீகாரத்தினை பெற்று கொள்ள வேண்டும் என்ற அவாவினை எமது இளையோரிக்கான அன்பானவேண்டுகோளை தெரியப்படுத்திருந்தேன். பல  இசை நிகழ்ச்சிகளில் ஒலியின் அளவினை அதிகரிப்பதே ஓர் பாரம்பரியமாக இருந்துவந்துள்ளது. இவைற்றை எல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில் இந்த பாடலின் ஒலி அமைப்பு துறை சார்ந்து ஒழுங்கு செய்ப்பட்டிருந்தது.

கோரனாவில் ஏற்பட்டுள்ள Lock down வினால் பல இளைய தலை முறையினர் மன அழுத்திற்கு உள்ளாகி உள்ளனர். இவ் இளைஞர்களை கவனத்தில் கொண்டு அவர்களிந்கு ஓர் இசைவிருந்தினை வழங்கி மன அழுத்ததில்விடுபட செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தேன்.

மயா போன்ற பாடகிகள் அவரகளது அரசியல் நிலைப்பாட்டினால் எவ்வாறு இசைத்துறையிலிருந்து ஒதுக்கபட்டனர் என்பதையும்  சுட்டிகாட்டியிருந்தேன்.

புலம்பெயர் தமிழ் சமூகம் பல துறைகளில் கால்பதித்திருந்தாலும் தமது சந்ததியினரின் நீண்டகால இருத்தலின் நலன் கருதி அரசியலிலும் கால்பதிக்க வேண்டும் என்ற தேவையையும் உணர்த்தி இருந்தேன். புலத்தில் அரசியலில் ஈடுபடும் எம்மவர்களை எந்தநாட்டி லும் உள்ள கட்சிகளும் செம்கம்பளம் இட்டு வரேவேற்கவில்லை. நாம் தான் இந்தேசமூகத்தில் ஓர் அங்கம் என்பதனை நிருபிக்க வேண்டும்என்பதற்காகவே அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை உளளது.

கட்சியில் அங்கம் வகிக்கும் இனவாதிகள் எம்மை ஓர் துச்சமாக கருதுவதும் நாமும் இவ்வகை இனவாதிகளின் கழுகுபார்வைக்கு முன் நாம் ஏதோ உடை அணியாதது போல் உணர்ந்த சந்தர்ப்பங்களை சுருக்கமாக தெரியப்படுத்தியிருந்தேன்.

நிகழ்ச்சி ZOOM வழியாக நடைபெற்றிருந்தது. ஆரம்பத்தில் எமக்கு ஓர் ID கொடுக்கபட்டிருந்தது. அதில் ஒருசிலர் பிரச ண்மாகி இருந்தனர். நிகழ்ச்சி வேறு ஒர் ID ஊடாக  ஆரம்பித்ததாக ஒருவர் கூற இன்னும் ஓர் ID தரப்பட்டிருந்தது. மற்றொரு ID ஊடாக LOGIN  செய்து கலந்து கொண்ட போது நிகழ்ச்சி ஏற்கனவே ஆரம்பமாகி நடைபெற்று கொண்டிருந்து. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வசந்திற்கு யார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவார்கள் என்ற விபரங்கள் அறியாது ஓர் ஒழுங்மைக்கபடாது நடைபெற்று கொண்டிருந்தது. இதனை நெறிப்படுத்த வந்த அறிவிப்பாளரை வசந் இணைத்து அவரை தம்முடன் இணைந்து நிகழ்ச்சியை நடாத்துமாறு கோரிக்கை விட்டிருந்த போதும். அந்த அறிவிப்பாளரிடம் எவ்வித தாயரிப்பும் இருக்கவில்லை. இதனை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால். அறிவுப்பு துறையானது தனித்து அடுத்த அடுத்த நிகழ்ச்சிகளை அறிவிப்பதல்ல. நடைபெற இருக்கும் நிகழ்ச்சி பற்றி நன்கு அறிந்தும் நிகழ்ச்சியில் பேச இருப்பவர்கள் பற்றி ஓரளவாவது அிந்திருக்க வேண்டும்.

ஓர் மிகவும் சிறப்பாக தாயாரிக்கபட்ட இந்தபாடலை ஓர் சிறப்பு தேர்ச்சி அற்ற நிகழ்ச்சி ஒழுங்கீனத்தினால் நிகழ்ச்சி கவரப்படவில்லை. அல்லது இந்த இசையின் தாயாரிப்பில் ஈடுபட்ட கலைஞர்களுடனான கலந்துரையாடலாக சுருக்கி கொண்டிருக்கலாம்.

நிகழ்ச்சியை ஆளுமைப்படுத்தாதன் விளவாக யார் நிகழ்ச்சியை நடாத்தினார்கள் என்ற கேள்வியும் எமாற்றமும் என்னை ஆட்கொண்டது.

இந்த தவறுகள் நடைபெறாமல் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பிலும் அறிவிப்பு துறையிலும் கவனம் செலுத்தவேண்டும். இளையோரின் அனைத்து  செயற்பாடுகளும் துறைசார்ந்து சிறப்பு தேர்ச்சியுடன் நடைபெறவேண்டும் என  வாழ்த்துகின்றேன்.

சுதாகரன் கணபதிப்பிள்ளை

31.01.2021

Freitag, 22. Januar 2021

நண்பன் ஐெமினியும் ஐரோப்பிய தமிழரின் கருத்துகளமும்.

 

னக்கு சுவிற்சர்லாந்தின் வதிவிட அனுமதி கிடைத்து முதன் முதலில் சுவிற்சர்லாந்தை விட்டு முறையாக ஜேர்மனியில் இடம்பெற்ற இலக்கிய சந்திப்பிற்கு சென்றிருந்தேன். இந்த இலக்கிய சந்திப்பினை ஜெமினி மற்றும் காலம்சென்ற தோழர் பராவினால் ஒழுங்கு செய்பட்டிருக்பலாம் என நினைக்கின்றேன். என்னை அழைப்பதற்காக புகையிரத நிலையம் வந்திருந்த நண்பர் ஜெமினிஎன்னை தனேக்கே உரித்தான சிரித்த முகத்ததுடன் வரவேற்றார். 87, 88, 89, 90 அந்தகாலம் சிறு பத்திரிகைகளின் பொற்காலம். ஐேர்மனி, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், நோர்வே என பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து பல சஞ்சிகைகள் புற்றீசலாக பறந்து திரிந்த காலம்அன்று நடை பெற்ற சந்திப்பில் சுவிற்சர்லாந்தில் இருந்து நான் மட்டுமே கலந்து கொண்டிருந்தேன். மனிதம் தனது விடியோ சஞ்சிகையினை முடிவிற்கு கொண்டுவந்து தனது ஆக்கங்களை கை எழுத்து பிரதியாக கொண்டு வந்த காலம். நான் நண்பர் ஜெமனியிடம் கை எழுத்து பிரதி கொண்டுவருவதில் உள்ள சிக்கல்களை அலசி ஆராய்ந்தோம். தாம்மால் கொண்டுவரப்பட்ட அக்கினி சிறு பத்திரிகை கணணியில் தமிழ்  எழுத்துக்களால் எழுதி வடிமைக்கபட்ட சஞ்சிகையாக வெளிவந்திருந்தது. என்னை தனது வீட்டிற்கு அழைத்து சென்று தமிழ் உருக்களை எவ்வாறு கணணியியில் பதிவு செய்யமுடியும், அதற்கு தேவையான மென்பொருட்கள் பறறியும் சலிக்காமல் சொல்லித்தந்திருந்தார். அதே கனவுடன் வந்து முதலில் சுவிற்சர்லாந்தில் வெளிவந்த மனிதம் சஞ்சிகையை கணணி தமிழ் உருவில் வடிவமைத்திருந்தேன்

நான் ஜெமினியை சந்தித்ததன் விளைவாகவே எனக்கு கணணியில் ஆர்வம் ஏற்பட்டது. துறைசார்ந்த கணணி ஆர்வத்தை  ஏற்படுத்தியது நண்பர் ஜெமனி என்பது என் வாழ் நாளில் மறக்க முடியாத சம்பவமாகும். அதன் பின்னர் நான் கணணியை துறைசார்ந்துகற்றேன் பலரிற்கும் கற்பித்தேன்.

 90 களில் புலிகளின் இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்கள்அதிகரிக்க புலத்தில் புலிகளிற்குஆதரவாக பலர் செயற்பட ஆரம்பித்தனர். நாட்டில் விடுதலைப்புலிகள் ஜனநாயகத்தின் குரல்வைளயை நசித்த போது அதன் தாக்கம் புலத்திலும் தலைவிரித்தாட ஆரம்பித்தது. இதன் விளைவாக பல சிறு சஞ்சிகைகள் மீது அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது. மேலும் தனி ஆயுதகலாச்சாரம்மட்டுமே விடுதலைப்போரட்டத்தின் வடிவம் என நம்பி பலர் ஆதரவாளர்கள்ஆனார்கள். இவற்றின் விளைவாகவும் சிறு த்திரிகைகள் வாசகர் பரப்புமின்றி ,துணிச்சலின்றி ஆக்கங்களை எழுதமுடியாது முடங்கின. இக்காலகட்டத்தில் ஜனநாயாக மறுப்புக்களிற்கு எதிராகவும் ஆயுதகலாச்சாரத்திற்கு எதிராக குரல்கொடுக்க முன்வந்த பல சிறு சஞ்சிகை எழுத்தாளர்கள் தமது பதிவுகளை பிரசுரிக்க வாய்பில்லாமல் இருந்த காலம்.

 அவ் வேளையிலும் ஜெமினி  கணணித்துறையில் ஒருபடி முன்சென்று தேனி எனும் இணையத்தளம் மூலம் பலரிற்கு எழுதும் தளத்தினை இலவசமாக வழங்கியிருந்தார். ஆயுத மோகமும் அச்சுறுத்தல்களும் தலைவிரித்தாடிய காலப்பகுதியில் துணிச்சலோடு அனைத்து விமர்சன எதிர்ப்பு ஆக்கங்களை பிரசுரித்து வந்திரிந்தார்.

அன்றும் பெரும்பாண்மையினரால் சரி எனும் கருத்துக்கு  மாற்றாக ஓர் கருத்து பதிவு செய்தால் எழுதியவர்களும் பிரசுரித்தவர்களும் துரோகிகள், காட்டி கொடுப்பவர்கள், அரச உளவாளிகள், இன்னும் பல பட்டங்களையும் தூற்றல்களையும் முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இவற்றை எல்லாம் சகித்து தனியே முகம் கொடுத்த மாமனிதன். இவ்வகை ஒர் கருத்து களத்திற்கான இடம் மறுக்கபட்டிருந்தால் மாற்று கருத்து என்பதே வெற்றிடமாக அமந்திருக்கும். எனது பல கட்டுரைகள் தேனியில் பிரசுரிக்கபடடிருந்தமையும்குறிப்பிடதக்கது.

புலம்பெயர்ந்ததமிழர் வரலாற்றில் ஜெமினி ஓர் முக்கிய பாத்திரம் என்பது யாராலும் மறுக்க முடியாதது ஒன்றாகும்.

நன்று ஓய்வாக நீண்ட உறக்கத்திற்கு சென்ற நண்பனிற்கு எனது இதய பூர்வமான நன்றிகளும் வாழ்த்துக்களும். உன்னை பிரிந்தி தவிர்க்கும் அன்பு நெஞ்சங்களிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

கணபதிப்பிள்ளை சுதாகரன்

23.01.2021