Sonntag, 27. März 2022

27.03.2022 அன்று சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தேர்தல்களும் புலம்பெயர தமிழர்களும்

 

இன்று 27.03.2022 சுவிற்சர்லாந்தில் பல உள்ள கன்ரோன்களிலும் (மாநிலங்கள்), உள்ளுர் ஆட்சி மன்றுகளில்(கிராம,நகர சபை) தேர்தல்கள் நடைபெறுகின்றன. வழமைபோல் பல புலம்பெயர்ந்து இந்நாட்டில் பிரஜா உரிமைபெற்ற பல வேட்பாளர்கள் தத்தமது பிரதேசங்களில் தேர்தலில் போட்டி இடுகின்றனர்.அவ்வகையில் தமிழ் வேட்பாளர்களும் போட்டி பங்குபெற்றுகின்றனர். பேர்ண் மாநகரின்

Bern மாநில உறுப்பினர்களிற்கான(  Grossrat, BE) தேர்தலில் சோமசுந்தரம் சந்துரு சோசலிச ஐனநாககட்சி சார்பில் (SP) போட்டி இடுகின்றார். இவர் இரண்டாம் தலை முறையை சேர்ந்தவரும் ப்கலைக்கழக வரலாற்று விஞ்ஞானத்தில் கலாநிதிப்பட்டம் பெற்றவர் Master of Arts - MA, Historische Wissenschaften).



Adliswil நகரத்தில் நகர ஆட்சி உறுப்பினுக்கான தேர்தலில் முத்துதம்பி கண்ணதாசன் சோசலிச ஐனநாககட்சி சார்பில் (SP) போட்டி இடுகின்றார். இவர் இரண்டு முறைகள் மக்களால் தெரிவுசெய்யப்பட்வர் என்பது குறிப்பிடதக்கது. இவர் சூறிச் சமுக ஐனநாக கட்சியின் குடியேற்ற வாதிகள் பிரிவின் தலைவர்களிலும் ஒருவர். மேலும் இவரது இலவச சமூகசேவை பணிகைள இந்த நகராட்சியில் நீண்டகாலமாக செய்து வருகி்றார்.


இதே நகர சபையில் இரண்டாம் சந்தினை சார்ந்த முத்துதம்பி முதல் தடவையாக சோசலிச ஐனநாககட்சி சார்பில் (SP)  தேர்லில் போட்டி இடுன்றார்,





Biel எனும் இரண்டு மொழிபேசும் நகரசபை உறுப்பினர்களிற்கான தேர்தலில் கந்தசுவாமி சுஐீவன் எவங்கலிச மக்கள் கட்சி (Evangelische Volkspartei EVP) சார்பில் போட்டி இடுகின்றார். இவரும் இரண்டாம் சந்தியினரை சேர்ந்த இளைஞன் என்பது குறிப்பிட தக்கது. 







புபாலபிள்ளை சாம்பவி இவரும் இரண்டாம் தலைமுறையை சேர்ந்தவர். இவர் இளையோரிற்கான லிபரல் (FDP- Jungfreisinnige) கட்சியின் சார்பில் Emmenthal பகுதியில் இருந்து மாநில சபைக்கான தேர்தலில் போட்டி போடுகின்றார்.



சிவராசா சண் சிவன் Emmenthal பகுதியில் மாநில சபைக்கான  சேசலிச ஐனநாயக கட்சியின் (SP) சார்பில் தேர்தலில்போட்டி இடுகின்றார். இவரும் இரண்டாம்  தலை  முறையைசேர்ந்த மாணவன் என்பது குறிப்பிடதக்கது.



இவர்கள் அனைவரது பெறுபெறுகள் 27.03.2022 மாலை வெளியாகி விடும். இவர்கள் வெற்றி பெற வழ்த்துக்கள்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen