Sonntag, 6. März 2022

புலம்பெயர் தமிழரின் யுத்தம் பற்றிய நிலைப்பாடும் உண்மை நிலமையும். - க.சுதாகரன்

புலம்பெயர் எமது உறவுகள் ஒரு சிலர் தாம் வாழும் நாடுகளில் இருந்து கொண்டு நன்றாக சுதந்திர காற்றினையும்  சவாசித்து வரியினையும் செலுத்தி சமூக உதவிகளையும் பெற்றுகொடு. தாம் வாழும் சக நாட்டவரின் யத்தபாதிப்பின் அச்சத்தினையும் கவனத்தில எடுக்காது. யுத்த்தினை தொடுத்த இன்னுமொரு ஆக்கிரமிப்பு அரசின் நியாயங்களை நியாயப்படுத்துவதன் அளவியல் புரியாத புதிராக உள்ளது.

புலம்பெயர்  தமிழரின் வெறுபட்ட நிலைப்பாடுகள்

ரசிய உக்ரேனிய யுத்தத்தில் புலம்பெயர் தமிழர்கள் நான்கு வித நிலைப்பாடுகளில் உள்ளனர்.

1. இவர்கள் ஈழப்போரில் உக்ரேன் தமிழ் மக்களிற்கு எதிராக இருந்ததால் தாமும் உக்ரேனிற்கு எதிராக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள்.

2. இவர்கள் ஈழப்போரில் உக்ரேன் தமிழ் மக்களிற்கு ஆதரவாக இருந்ததாக  கருதி  ரசியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளவர்கள்

3. இவர்கள் உலகத்தின் பாெலிஸ்கார அமெரிக்க ஏகாபத்திற்கு எதிரான போராட்டமாக ரசிய ஆக்கிரமிப்பை ஆதரிப்பவர்கள்.

4. இவர்கள் இரசியா உக்கிரேன் என்ற இறமையை மதிக்காது மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு யுத்தினை எதிர்ப்பவர்கள்.

நாட்டோவின் கிழக்கு விஸ்தரிப்பு பற்றி

நாட்டோவின் கிழக்கு நோக்கிய ஆக்கிரமிப்பினால் அச்சத்துக்குள்ளான ரசியா உக்கிரேன் மீது யுத்தம் தொடுக்கப்பட்டுள்ளது என்ற விவாதத்தினை எடுத்து கொண்டாலும். இந் நடவடிக்கைய இன்றைய நுாற்றாண்டில் சிறப்பாக பேச்சுவார்த்தையில் தீர்வு காண்பதற்கும் தமது பக்க நியாயங்களை கூறி நட்பு நாடுகளை வென்றெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு வசதிகள் அதிகம் உள்ளது. ஈடுபடுவதற்கான வாய்ப்பு வசதிகள் அதிகம் உள்ளது. குறைந்தபட்சம் ரசியா உக்கிரேனுடன் தமது நட்பு ரீதியான இராஜதந்திரத்தினை பேணுவதற்கான முன்முயற்சியினை ஆக்க பூர்வமாக மேற்கொண்டதா?

பல்கேரியா (Bulgarien), எஸ்டோனியா (Estland), லிதுவேனியா (Litauen), ருமேனியா (Rumänien), ஸ்லோவேனியா (Slowenien), ஸ்லோவாக்கியா (Slowake), அல்பேனியா (Albanien) மற்றும் குரோஷியா (Kroatien). ஆகியவை 2004 மற்றும் 2009 க்கு இடையில் பின்பற்றப்பட்டன. குறிப்பாக பல்கான் நாடுகள் நாட்டோ உறுப்பினராக சேர்வதற்கு தாமகவே அழுத்தம் கொடுத்தன. நாட்டோ  கூட்டணி வளர்ந்து கொண்டே வந்தது. 2017 இல் மாண்டினீக்ரோ(Montenegro) மற்றும் மிக சமீபத்தில் 2020 இல் வடக்கு மாசிடோனியா (Nord-Mazedonien) சேர்க்கப்பட்டது.

ஒரு அரச உரிமை உள்ளநாடு தனது நாட்டின் பாதுகாப்பில் கருசனை கொண்டு எந்த பாதுகாப்பு கூட்டணிக்குள் தம்மை இணைக்க வேண்டும் தாமே  தீர்மாிப்பதே சுயாதீனமனது. ஏன் ரசியாவிற்கு அருகாமைில் உள்ள நாடுகள் ஏன் ரசியாவுடன் சேராது நாட்டேவுடன் விரும்புகின்றனர் என்ற கேள்வியை கேட்டே ஆக வேண்டும். ரசியாவின் அரசியலில் நம்பிக்கை அற்றவர்கள் மாறாக ஐரோப்பிய அமைப்பில் தம்மை இணைத்துகொள்ள விரும்புவர்கள் என்ற பதில்களே எமக்கு கிடைக்கமுடியும். பல லொபிகள் இக்ககூட்டமைப்பு இணைவாக்கத்திற்கு காரணாமாக அமைந்திருப்பினும் ரசியா தனது தரப்பின் இராஜதந்திர தோல்வியாகவே கருத முடியும். தோல்வியாகவே கருத முடியும்.

புதிய நாஐிகளும் ரசியாவினால் யுத்திற்காக முன்வைக்கபடும் காரணமும்

அப்படியானால் ஏன் தனது யுத்தம் புதிய நாஜிகளிற்கு எதிரான நடவடிக்கை என காரணத்தினை முன் வைத்தது. சரி அதனையும் காரணமாக பார்த்தால். இவர்கள் உக்கிரெனில் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது புதிய நாஜிகள் மிக சிறுபாண்மையினரே இவ்வகையில் புதிய நாஜிகள் ஐரோப்பி அமெரிக்க நாடுகளில் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதலாக உள்ளனர். வலது அதிதீவிர தேசிய வாதம் இவ்வகையில் நாஜிய கருத்து உடைய ஆயத வன்முறையாளரை உருவாக்கும்.

ரசியாவில் வன்முறை வலதுசாரி தீவிரவாதிகள் பல ஆண்டுகளாக வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வலதுசாரி பயங்கரவாதத்தின் விளைவாக கடந்த பத்து ஆண்டுகளில் பல நூறு பேர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் தாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் மத்திய ஆசியா அல்லது காகசஸில் (Kaukasus) இருந்து வந்தவர்கள். , மற்றும் இடது தீவிரவாதிகளும், வீ டற்றவர்கள்,  ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் நீதிபதிகள் கூட தாக்கபட்டுள்ளனர். வேறு எந்த கிழக்கு ஐரோப்பிய நாட்டிலும் இதுபோன்ற வன்முறை நவ-நாஜிகள் பல்லாயிரக்கணக்கானதாக இருக்கவில்லை. குறைந்தது 150  தீவிரமான போராளி நவ-நாஜிக்குழுக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோவியத் யூனியனுக்கு எதிரான நாஜிய ஆட்சியின் அழிவுப் போரின் பின்னர் (நவ) தேசிய சோசலிசம் ரசியாவில் எல்லா இடங்களிலும் வலுவான ஈர்ப்பை உருவாகியது முரண்பாடாகத் தோன்றலாம். ஆனால் குறிப்பாக இளைஞர்களிடையே, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய முதல் தசாப்தங்களில் பாசிச அழகியல் நாகரீகமாகக் கருதப்பட்டது, மேலும் சோவியத் யூனியனின் விமர்சகர்கள் சில நேரங்களில் நாஜி ஆட்சியுடன் நாஜி சின்னங்களால் தங்களை அலங்கரித்துக் கொண்ட இரகசிய பாடசாலை பல நிகழ்வுகள் நடந்துள்ளன.

இதே போன்று உக்ரேனில் தீவிர வலதுசாரி இயக்கங்கள் உள்ளது, மேலும் அதன் ஆயுதமேந்திய தீவிர வலதுசாரி தேசியவாத போராளிக் குழுவான அசோவும் (AZOV) அதன் இராணுவ குழுவும் அடங்கும். இவர்கள் எல்லைப்புற ரசிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக உக்கரேனிய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டு வந்துள்ளன. இது புதிய நாஐிகளின் அதிதீவிர தேசியவாதத்தின் வெளிப்பாடு. உக்கரேனிய அரசு இவர்களிற்கான எதிர் அரசியலை முன்னெடுக்காதபட்சத்தில் உக்கரேனிய அரசுக்கும் மக்களிற்கும் ஆபத்தானவர்களாக மாறுவர் என்பதை முக்க முடியாது. இது உக்ரேனின் உள்விவகாரம். ரசியா முதலில் தன் பிரதேசத்தில் உள்ள நவ-நாஐிகளிற்கு எதிராக நடவடிக்கை எடாது பக்கத்து வீட்டில் உள்ள பிரச்சினைக்குள் மூக்கை நுளைப்பது எவ்விதத்தில் நியாயமாகும்?

ரசியா கடந்த காலத்தில் ஐரோப்பா முழுவதிலும் இருந்து வலதுசாரி தீவிரவாதிகளின் சந்திப்பு புள்ளியாக செயல்பட்டது. 2015 ஆம் ஆண்டில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் "சர்வதேச ரஷ்ய பழமைவாத மன்றம்" (International Russian Conservative Forum) நடத்தியது.  ஜேர்மன் தீவிர வலதுசாரி தேசிய ஜனநாயகக் கட்சியின் (NPD) முன்னாள் தலைவர் Udo Voigt, அத்துடன் இத்தாலியின் தீவிர வலதுசாரி Forza Nuova கட்சி, கிரேக்கத்தின் நவ-பாசிச கோல்டன் டான் கட்சி மற்றும் இத்தாலியின் தீவிர வலதுசாரி லீக் (Lega) ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

2017 ஆம் ஆண்டில், பிரான்சின் ஜனாதிபதித் தேர்தலுக்கு சற்று முன்பு, மரைன் லு பென் ( Marine Le Pen) - பின்னர் பிரெஞ்சு தீவிர வலதுசாரிக் கட்சியின் தேசிய முன்னணியின் தலைவர், இது 2018 இல் ராஸ்ஸெம்பிள்மென்ட் நேஷனல்(Rassemblement National) என மறுபெயரிடப்பட்டது - ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை மாஸ்கோவில் சந்தித்தார். லு பென் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளை ஆதரித்தார் மற்றும் நாட்டிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய தடைகளை விமர்சித்தார்.

இவை எல்லாம் நடைபெற்ற பொழுது ரசியா தனது நவ நாஜி அரசியலிற்கு எதிராக போராடாது தளம் அமைத்து ஏன் கொடுத்தது? தனை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?

வல்லரசுகளாலும், ஏகாதிபத்தியங்களாலும், பிராந்திய வல்லரசுகளாலும் மேற்கொள்ளப்படும் யுத்தங்கள் அதற்கு அவர்களால் முன்வைக்கப்படும் காரணங்கள். வில்லன் கதாநாயகன் அல்லது நல்லவன் கெட்டவன் என்று ஆக்கிரம சக்திகளினால் உருவாக்கபடும் கதைகள். இவை அனைத்து யுத்தங்ளின் போது முன்வைக்கப்படும் பொய்கள்.

இவற்றை கடந்து யாரையும் ஆக்கிரமிக்காது தாம் வாழும் பிதேசங்களில் யுத்தமற்ற மனிதவிழுமையங்களை அங்கீகரிக்கும் திசை நோக்கி மனித சமூகம் பயணிக்க வேண்டும். அதனை மறுதலித்து விட்டு எமது போராட்டத்திற்கு அந்தநாடு உதவியது இந்நாடு எதிர்த்து என்று நடைபறும் யுத்ததில் சார்பு நிலை எடுக்காது. நடைபெறும் யுத்தம் ஒர் சுயாதீன அரசிற்கு எதிரானது என்ற அடிப்படையில் பார்க்கவேண்டும். ஏற்கனவே பல சுயாதீன நாடுகளிற்கு எதிரான போர்கள் நடைபெற்றுள்ளன. அப் போர்களும் நியாயமற்றவையே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen